மகரிஷி: Difference between revisions

From Tamil Wiki
Line 31: Line 31:
உடல்நலக்குறைவால், செப்டம்பர், 28, 2019 அன்று சேலத்தில் காலமானார், மகரிஷி.
உடல்நலக்குறைவால், செப்டம்பர், 28, 2019 அன்று சேலத்தில் காலமானார், மகரிஷி.
[[File:Makarishi novelkal 1.jpg|thumb|மகரிஷி நாவல்கள்-1]]
[[File:Makarishi novelkal 1.jpg|thumb|மகரிஷி நாவல்கள்-1]]
[[File:Maharishi novelkal 2.jpg|thumb|மகரிஷி நாவல்கள்-2]]


== நூல்கள் ==
== நூல்கள் ==

Revision as of 21:14, 2 August 2022

எழுத்தாளர் மகரிஷி (இளம் வயதுப் படம்)

பொது வாசிப்புக்குரிய படைப்புகள் பலவற்றைத் தந்தவர் மகரிஷி. (டி.கே. பாலசுப்ரமணியம்; பிறப்பு: மே 1, 1932; இறப்பு: செப்டம்பர், 28, 2019) இந்து மதத்தின் மீது கொண்ட பற்றாலும், ஞானிகளின் மீது கொண்ட மதிப்பாலும் ‘மகரிஷி’ என்ற புனைபெயரில் எழுதினார். மின்சாரவாரியத்தில் பணியாற்றியவர். இவரது படைப்புகள் சில, திரைப்படங்களாக வெளியாகியுள்ளன.

பிறப்பு, கல்வி

மகரிஷி, தஞ்சாவூரை அடுத்த ஒரத்தநாட்டில், மே 1, 1932 அன்று டி.என்.கிருஷ்ணசாமி-மீனாட்சி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பி.யூ.சி. பயின்றார்.

தனி வாழ்க்கை

பி.யூ.சி. யை முடித்ததும் சில வருடங்கள் கொடைக்கானலில் சார்நிலைக் கரூவூலத்தில் அலுவலராகப் பணியாற்றினார். பின் சேலம் மின்சாரவாரியத்தில் பணி கிடைத்தது. சேலத்தில் நூலகம் ஒன்றில் பணிபுரிந்த பத்மாவதியுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களது மகனின் பெயர் ராமகிருஷ்ணன். மகள் காயத்ரி.

மகரிஷி

இலக்கிய வாழ்க்கை

மின்சாரவாரியத்தில் பணிபுரிந்துகொண்டே ஓய்வுநேரத்தில் எழுதினார் மகரிஷி. இந்து மதத்தின் மீது கொண்ட பற்றாலும், ஞானிகளின் மீது கொண்ட மதிப்பாலும் ‘மகரிஷி’ என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டு எழுதினார். முதல் படைப்பான “பனிமலை” என்னும் நாவல், 1962-ல் வெளியானது. மதுரையைச் சேர்ந்த மீனாட்சி புத்தகநிலையம் இதனை வெளியிட்டது. தொடர்ந்து கல்கி, தினமணிகதிர், ஆனந்தவிகடன் போன்ற இதழ்களில் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல் தொடர்கள் என்று நிறைய எழுதினார்.

காந்தியக் கொள்கைகளின் பெருமையைப் பேசும் மகரிஷியின் குறுநாவல் ‘ஸ்படிகம்.' இதனை பிரபல மொழிபெயர்ப்பாளரான ஆன்டி சுந்தரேசன் “Pure As a Crystal" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவரே, தெலுங்கிலும் அந்தக் குறுநாவலை மொழிபெயர்த்துள்ளார்.

பஞ்சபூதத் தத்துவங்களின் பின்னணியைத் தலைப்பாகக் கொண்டு “மண்ணின் மாண்பு” (நிலம்), “மகாநதி” (நீர்), “அக்னி வளையம்” (நெருப்பு), “எதிர்காற்று” (காற்று), “மேக நிழல்” (ஆகாயம்) போன்ற படைப்புகளைத் தந்திருக்கிறார்.

இவரது சில படைப்புகள் கல்லூரி, பல்கலைககழக மாணவர்களுக்குப் பாட நூல்களாக வைக்கப்பட்டன. இவரது படைப்புகளை ஆய்வு செய்து பல மாணவர்கள் பிஹெச்.டி பட்டம் பெற்றுள்ளனர். அகில இந்திய எழுத்தாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனை எழுத ஊக்குவித்தவர், அவரது வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் மகரிஷி. பல இளம் எழுத்தாளர்களுக்கு உந்துசக்தியாக இருந்திருக்கிறார்.

நூற்றிற்கும் மேற்பட்ட நாவல்கள், ஐந்து சிறுகதை தொகுப்புகள், அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார் மகரிஷி.

திரைப்படப் பங்களிப்புகள்

மகரிஷியின் முதல் படைப்பான “பனிமலை”, “என்ன தான் முடிவு?” என்ற தலைப்பில் திரைப்படமாக வெளியாகி ஜனாதிபதிப் பரிசு பெற்றது. “பத்ரகாளி” திரைப்படத்தின் கதையும் மகரிஷியுனுடையதுதான். நடிகர் ரஜினிகாந்திற்குத் திருப்புமுனை ஏற்படுத்திய படமான “புவனா ஒரு கேள்விக்குறி”யும் இவருடையதே!. ஜெயலலிதா நடித்த கடைசி படமான ‘நதியைத் தேடிவந்த கடல்’ மகரிஷியின் கதைதான். ‘வட்டத்துக்குள் சதுரம்’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ போன்ற திரைப்படங்களும் இவரை கதையின் திரை வடிவமே!

வானொலி, தொலைக்காட்சிப் பங்களிப்புகள்

மகரிஷியின் நாவலான ‘பூர்ணிமா’ தொலைக்காட்சித் தொடராக வெளியாகிப் புகழ்பெற்றது. ’அண்ணா’, ‘பட்டுக்குடை’, ‘செல்லியம்மன் திருவிழா’, ‘சத்தியசோதனை’ போன்றவை இவரது பிற தொலைக்காட்சித் தொடர்களாகும். ‘சூரியப் பாதை’, ’வீரசுந்ததிரம்’ போன்றவை மகரிஷியின் குறிப்பிடத்தகுந்த வானொலித் தொடர்கள்.

விருதுகள்

  • கவியோகி சுத்தானந்த பாரதியார், மகரிஷிக்கு, “நாவல் மகரிஷி” என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்துள்ளார்.
  • Salem Metro Jaycees என்ற அமைப்பு, இவருக்கு Man of Excellence of Salem என்ற விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.
  • எழுத்துச் சித்தர் விருது
  • நாவல் திலகம்
  • நாவல் மணி

இலக்கிய இடம்

பொதுவாசிப்பிற்குரிய பல படைப்புகளைத் தந்தவர் மகரிஷி. மத்தியதரக் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளையும், காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் தனது நாவல்கள் பலவற்றில் முன்வைத்தவர். “ஆன்மீகமும், அன்பும், மனித நேசமும் இழையோடும் அவருடைய படைப்புகள் மனதுக்கு ஆசுவாசத்தையும், நம்பிக்கையையும், நிம்மதியையும் அளிக்கக் கூடியவை.” [1] என்கிறார் எழுத்தாளர் இரா.முருகன்.

மறைவு

உடல்நலக்குறைவால், செப்டம்பர், 28, 2019 அன்று சேலத்தில் காலமானார், மகரிஷி.

மகரிஷி நாவல்கள்-1
மகரிஷி நாவல்கள்-2

நூல்கள்

நாவல்கள்
  • பனிமலை
  • பூர்ணிமா
  • பச்சை வயல்
  • ஜோதி வந்து பிறந்தாள்
  • நதியைத் தேடிவந்த கடல்
  • வட்டத்துக்குள் சதுரம்
  • யாகம்
  • சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
  • மகாநதி
  • உயிர்த்துடிப்பு
  • மேகநிழல்
  • எதிர்காற்று
  • புழுதிப் புயல்
  • இலையுதிர்காலம்
  • காந்தமுனை
  • அக்கினி வளையம்
  • அண்ணா
  • ஒன்றுக்குள் ஓராயிரம்
  • துயரங்கள் உறங்குவதில்லை
  • ஒரு முன்பனிக்காலம்
  • பனிப்போர்
  • புதிய பூ
  • நிழலைத் தேடியவர்கள்
  • வண்டிச்சக்கரம்
  • பாடிப் பறந்தவள்
  • தேர்க்கால்
  • விட்டில் அணைத்த விளக்கு
  • புதிய அர்த்தங்கள்
  • வேதமடி நீ எனக்கு
குறுநாவல்கள்
  • சுயரூபம்
  • வெண்சங்கு
  • வாழ்ந்து காட்டுவோம்
  • இப்படியே ஒரு வாழ்க்கை
  • அந்தப்பூனை
  • ஸ்படிகம்
சிறுகதைத் தொகுப்புகள்
  • பார்வையிலே சேவகனாய்
  • தேர்ந்நெடுத்த முத்துக்கள் (அம்ருதா தொகுத்த மகரிஷியின் 10 சிறுகதைகள் தொகுப்பு)
கட்டுரைகள்

ஒரத்தநாட்டிற்குச் சமர்ப்பணம்

உசாத்துணை

இணைப்புக் குறிப்புகள்