ஆரணி குப்புசாமி முதலியார்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
தமிழின் முன்னணி துப்பறியும் கதாசிரியர்களும் ஒருவர் ஆரணி குப்புசாமி முதலியார். துப்பறியும் நாவலாசிரியராக மட்டுமில்லாமல் | தமிழின் முன்னணி துப்பறியும் கதாசிரியர்களும் ஒருவர் ஆரணி குப்புசாமி முதலியார். துப்பறியும் நாவலாசிரியராக மட்டுமில்லாமல் பத்திரிகை ஆசிரியராகவும் இயங்கியவர். ரெயினால்ட்ஸ், வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமாஸ், எட்கார் வாலஸ், கானன் டாயில் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்களைத் தழுவி தமிழில் எழுதினார். | ||
பிறப்பு, கல்வி | |||
தனி வாழ்க்கை | தனி வாழ்க்கை | ||
== இதழியல் வாழ்க்கை == | |||
ஸ்ரீகரப்பாத்திரம் சிவப்பிரகாச சுவாமிகளின் சீடரான நாகவேடு முனிசாமி முதலியார் ஜூன், 1915ல் சுவாமிகளின் ஆசியோடு ‘ஆனந்தபோதினி’ என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆரணி குப்புசாமி முதலியார் அதற்கு ஆசிரியரானார். ஆரணி குப்புசாமி முதலியாரின் பல்துறைத் திறமை, ஆர்வம், கடின உழைப்பு போன்றவை ஆனந்தபோதினி இதழ் வளர்ச்சிக்கு உதவியது. | |||
தமிழ்நாடு மட்டுமல்லாமல் அக்காலத்தில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ரங்கூன் என தமிழர்கள் வாழ்ந்த பல பகுதிகளிலும் ஆனந்தபோதினி வரவேற்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே பத்திரிகையின் சந்தாதாரர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியது. | |||
‘ஆனந்தபோதினி’ இதழின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு பிற்காலத்தில் “ஆனந்த குண போதினி”, “ஆனந்த விகடன்” உள்பட பல இதழ்கள் தோன்றின. ஆரணி குப்புசாமி முதலியாரின் ஆசிரியத்துவத்தில், ஆனந்த போதினி இதழ், மாதர் பகுதி, சிறுவர்கள் பகுதி, வேதாந்த விளக்கம், சமயக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், பொதுவான குறிப்புகள் என பல்வேறு விஷயங்களைத் தாங்கி வந்தது. ஆரணி குப்புசாமி முதலியாரின் துப்பறியும் தொடர்கதைகள் மாதந்தோறும் வெளியானது. துப்பறியும் நாவல்களோடு “சீடன்” என்ற புனைபெயரில் ”ஸ்ரீபகவத் கீதை வசனம்”, “கைவல்ய நவநீத வசனம்” போன்ற தலைப்புகளில் தொடர்களையும் ஆரணி குப்புசாமி முதலியாr எழுதி வந்தார். | |||
== மறைவு == | |||
ஆனந்தபோதினி” இதழின் ஆசிரியராக டிசம்பர், 1924வரை பணியாற்றிய குப்புசாமி முதலியார், தனக்கேற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஜனவரி 24, 1925 அன்று காலமானார். மறைவிற்குப் பின்னரும் கூட அவர் எழுதிய தொடர்கள் ஆனந்தபோதினியில் வெளியாகி வந்தன. | |||
ஆவணம் | |||
இலக்கிய இடம் | |||
நூல்கள் | |||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 13:26, 27 July 2022
தமிழின் முன்னணி துப்பறியும் கதாசிரியர்களும் ஒருவர் ஆரணி குப்புசாமி முதலியார். துப்பறியும் நாவலாசிரியராக மட்டுமில்லாமல் பத்திரிகை ஆசிரியராகவும் இயங்கியவர். ரெயினால்ட்ஸ், வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமாஸ், எட்கார் வாலஸ், கானன் டாயில் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் நாவல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.
பிறப்பு, கல்வி
தனி வாழ்க்கை
இதழியல் வாழ்க்கை
ஸ்ரீகரப்பாத்திரம் சிவப்பிரகாச சுவாமிகளின் சீடரான நாகவேடு முனிசாமி முதலியார் ஜூன், 1915ல் சுவாமிகளின் ஆசியோடு ‘ஆனந்தபோதினி’ என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆரணி குப்புசாமி முதலியார் அதற்கு ஆசிரியரானார். ஆரணி குப்புசாமி முதலியாரின் பல்துறைத் திறமை, ஆர்வம், கடின உழைப்பு போன்றவை ஆனந்தபோதினி இதழ் வளர்ச்சிக்கு உதவியது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் அக்காலத்தில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ரங்கூன் என தமிழர்கள் வாழ்ந்த பல பகுதிகளிலும் ஆனந்தபோதினி வரவேற்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே பத்திரிகையின் சந்தாதாரர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியது.
‘ஆனந்தபோதினி’ இதழின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு பிற்காலத்தில் “ஆனந்த குண போதினி”, “ஆனந்த விகடன்” உள்பட பல இதழ்கள் தோன்றின. ஆரணி குப்புசாமி முதலியாரின் ஆசிரியத்துவத்தில், ஆனந்த போதினி இதழ், மாதர் பகுதி, சிறுவர்கள் பகுதி, வேதாந்த விளக்கம், சமயக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், பொதுவான குறிப்புகள் என பல்வேறு விஷயங்களைத் தாங்கி வந்தது. ஆரணி குப்புசாமி முதலியாரின் துப்பறியும் தொடர்கதைகள் மாதந்தோறும் வெளியானது. துப்பறியும் நாவல்களோடு “சீடன்” என்ற புனைபெயரில் ”ஸ்ரீபகவத் கீதை வசனம்”, “கைவல்ய நவநீத வசனம்” போன்ற தலைப்புகளில் தொடர்களையும் ஆரணி குப்புசாமி முதலியாr எழுதி வந்தார்.
மறைவு
ஆனந்தபோதினி” இதழின் ஆசிரியராக டிசம்பர், 1924வரை பணியாற்றிய குப்புசாமி முதலியார், தனக்கேற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஜனவரி 24, 1925 அன்று காலமானார். மறைவிற்குப் பின்னரும் கூட அவர் எழுதிய தொடர்கள் ஆனந்தபோதினியில் வெளியாகி வந்தன.
ஆவணம்
இலக்கிய இடம்
நூல்கள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.