சிவக்கொழுந்து தேசிகர்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 3: | Line 3: | ||
(பார்க்க : [[சிவக்கொழுந்து சிவாச்சாரியார்]]) | (பார்க்க : [[சிவக்கொழுந்து சிவாச்சாரியார்]]) | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
கும்பகோணம் என அழைக்கப்படும் திருகுடந்தைக்கு அருகில் உள்ள கொட்டையூரில் பிறந்தார். தந்தை தண்டபாணி தேசிகர். வைத்தியநாத தேசிகரின் வழிவந்தோரிடம் கல்வி பயின்றார். கொட்டையூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். இரு மனைவியர். ஏழு குழந்தைகள். 96-ம் வயதில் இறந்தார். | கும்பகோணம் என அழைக்கப்படும் திருகுடந்தைக்கு அருகில் உள்ள கொட்டையூரில் பிறந்தார். தந்தை தண்டபாணி தேசிகர். வைத்தியநாத தேசிகரின் வழிவந்தோரிடம் கல்வி பயின்றார். கொட்டையூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். இரு மனைவியர். இரு ஆண்மக்கள் ஐந்து பெண்மக்கள் என ஏழு குழந்தைகள். 96-ம் வயதில் இறந்தார். இவருடைய முதல் மனைவிக்குப் பிறந்த வடுகநாத தேசிகரின் பெயரரான சிவக்கொழுந்து தேசிகரின் மகன்தான் திருப்பனந்தாள் காசிமடத்தின் தலைவர் காசிவாசி சுவாமிநாத தேசிகர். உ.வே.சாமிநாதையருக்கு நிதியுதவி செய்து சிவக்கொழுந்து தேசிகரின் நூல்களை பதிப்பித்தவர் சுவாமிநாத தேசிகர்தான். | ||
இவரது பிறப்பு மறைவு வருடங்கள் தெளிவாக அறியப்படவில்லை. | இவரது பிறப்பு மறைவு வருடங்கள் தெளிவாக அறியப்படவில்லை. |
Revision as of 08:14, 29 June 2022
சிவக்கொழுந்து தேசிகர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். பதிப்பாசிரியர். இவர் காலத்தில் திருவாசகம் முதன் முறையாக அச்சில் பதிப்பிக்கப்பட்டது
(பார்க்க : சிவக்கொழுந்து சிவாச்சாரியார்)
வாழ்க்கைக் குறிப்பு
கும்பகோணம் என அழைக்கப்படும் திருகுடந்தைக்கு அருகில் உள்ள கொட்டையூரில் பிறந்தார். தந்தை தண்டபாணி தேசிகர். வைத்தியநாத தேசிகரின் வழிவந்தோரிடம் கல்வி பயின்றார். கொட்டையூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார். இரு மனைவியர். இரு ஆண்மக்கள் ஐந்து பெண்மக்கள் என ஏழு குழந்தைகள். 96-ம் வயதில் இறந்தார். இவருடைய முதல் மனைவிக்குப் பிறந்த வடுகநாத தேசிகரின் பெயரரான சிவக்கொழுந்து தேசிகரின் மகன்தான் திருப்பனந்தாள் காசிமடத்தின் தலைவர் காசிவாசி சுவாமிநாத தேசிகர். உ.வே.சாமிநாதையருக்கு நிதியுதவி செய்து சிவக்கொழுந்து தேசிகரின் நூல்களை பதிப்பித்தவர் சுவாமிநாத தேசிகர்தான்.
இவரது பிறப்பு மறைவு வருடங்கள் தெளிவாக அறியப்படவில்லை.
இலக்கியப் பங்களிப்பு
தஞ்சையில் சரபோஜி மன்னரின் ஆட்சியின் போது, அமைக்கப்பட்ட நூலாராய்ச்சிக்குழுவில் பணியாற்றினார். பின்னர் சென்னையில் தாண்டவராய முதலியார் தலைமையில் அமைந்த சென்னை கல்வி சங்கத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றினார்.
உ.வே.சாமிநாதர் ஐயர் பதிப்பித்த சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய பிரபந்தங்கள் தொகுப்பில் கோடீச்சுரக்கோவை, சரபேந்திரர் பூபால குறவஞ்சி நாடகம், தஞ்சைப் பெருவுடையார் உலா ஆகியவை இடம்பெற்றுள்ளன. கொட்டையூர் உலா கிடைக்கவில்லை.
நூல் பட்டியல்
- கொட்டையூர் உலா
- சரபேந்திரர் வைத்திய முறைகள்
- சரபேந்திரர் சன்னிரோக சிகிச்சைகள்
- சரபேந்திரர் வைத்தியம்
- சரபேந்திரர் பூபாலக் குறவஞ்சி நாடகம்
- கோடீச்சுரக்கோவை
- திருவிடைமருதூர்ப் புராணம்
- தஞ்சைப் பெருவுடையார் உலா
- ஆச்சாபுரத் தலபுராணம்
உசாத்துணை
- தமிழ்ப் புலவர் வரிசை எட்டாம் புத்தகம், சு அ இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1955
- திருவாசகம், மாணிக்கவாசகர், தேசாபிமானி அச்சுக்கூடம்,1845
- கொட்டையூர் ஸ்ரீ சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய பிரபந்தங்கள், கேசரி அச்சுக்கூடம் சென்னை, 1932
- திருமணநல்லூர்ப் பெருமண மென்னும் ஆச்சாபுரத் தலபுராணம், மீனாட்சி அம்மை கலாநிதி அச்சகம், சென்னை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.