ஐங்குறுநூறு: Difference between revisions
(Created page with "Ready for Review ஐங்குறுநூறு சங்க இலக்கிய நூல்களில் எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. == பொருண்மை == ஐங்குறுநூறு நூலில் ...") |
No edit summary |
||
Line 2: | Line 2: | ||
ஐங்குறுநூறு சங்க இலக்கிய நூல்களில் எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. | ஐங்குறுநூறு சங்க இலக்கிய நூல்களில் எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. | ||
== பொருண்மை == | == பொருண்மை == | ||
ஐங்குறுநூறு நூலில் அன்பின் ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. | ஐங்குறுநூறு நூலில் அன்பின் ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. | ||
== பெயர்க் காரணம் == | == பெயர்க் காரணம் == | ||
ஐங்குறுநூறு நூலில் ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்ட பாடல்களின் தொகுப்பாக விளங்குகிறது. குறைந்த அடியெல்லை கொண்ட பாக்களால் அமைந்தமையால் ஐங்குறுநூறு என இந்நூல் பெயர் பெற்றது. | ஐங்குறுநூறு நூலில் ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்ட பாடல்களின் தொகுப்பாக விளங்குகிறது. குறைந்த அடியெல்லை கொண்ட பாக்களால் அமைந்தமையால் ஐங்குறுநூறு என இந்நூல் பெயர் பெற்றது. | ||
== புலவர்கள் == | == புலவர்கள் == | ||
ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த 100 பாடல்களையும் ஒவ்வொரு புலவர் இயற்றியுள்ளார். அவ்வகையில் இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் வெண்பாவைக் கீழ்க்காண்போம். | ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த 100 பாடல்களையும் ஒவ்வொரு புலவர் இயற்றியுள்ளார். அவ்வகையில் இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் வெண்பாவைக் கீழ்க்காண்போம். | ||
Line 25: | Line 22: | ||
ஐங்குறுநூறு நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார். | ஐங்குறுநூறு நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார். | ||
== நூலின் அமைப்பு == | == நூலின் அமைப்பு == | ||
எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். இதில் திணைப்பாடல்கள் அமைவுமுறையை, "''மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே''" | எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். இதில் திணைப்பாடல்கள் அமைவுமுறையை, "''மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே''" | ||
Line 32: | Line 28: | ||
தெளிவுபடுத்துகின்றன. இந்நூலில் நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அப்பாடல்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ ஒவ்வொரு பத்துப் பாடல்களும் சிறப்பான தலைப்புப் பெயர்கள் பெற்றுள்ளன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, தெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன. மேலும் தொண்டிப்பத்து (பாடல் 171-180) என்ற தலைப்பின் கீழ் அமைந்த பத்துப் பாடல்களும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. இதனைப் பாடியவர் நெய்தல் திணையைப் பாடிய அம்மூவனார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாய்ப்பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. ஐந்திணைக் கருப்பொருட்களான விலங்குகளையும் பறவைகளையும் அடிப்படையாகக் கொண்டு எருமைப்பத்து, கேழற்பத்து (கேழல்-பன்றி), குரக்குப்பத்து, கிள்ளைப்பத்து (கிள்ளை-கிளி), மஞ்ஞைப்பத்து (மஞ்ஞை-மயில்), போன்ற பெயர்களும் பாடல்களின் தொகுப்புப் பெயர்களாக அமைந்துள்ளன. | தெளிவுபடுத்துகின்றன. இந்நூலில் நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அப்பாடல்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ ஒவ்வொரு பத்துப் பாடல்களும் சிறப்பான தலைப்புப் பெயர்கள் பெற்றுள்ளன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, தெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன. மேலும் தொண்டிப்பத்து (பாடல் 171-180) என்ற தலைப்பின் கீழ் அமைந்த பத்துப் பாடல்களும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. இதனைப் பாடியவர் நெய்தல் திணையைப் பாடிய அம்மூவனார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாய்ப்பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. ஐந்திணைக் கருப்பொருட்களான விலங்குகளையும் பறவைகளையும் அடிப்படையாகக் கொண்டு எருமைப்பத்து, கேழற்பத்து (கேழல்-பன்றி), குரக்குப்பத்து, கிள்ளைப்பத்து (கிள்ளை-கிளி), மஞ்ஞைப்பத்து (மஞ்ஞை-மயில்), போன்ற பெயர்களும் பாடல்களின் தொகுப்புப் பெயர்களாக அமைந்துள்ளன. | ||
== தலைப்புகள் == | == தலைப்புகள் == | ||
ஐங்குறுதூறு நூலில் ஒவ்வொரு பத்துப் பாடல்களும் ஒரு தலைப்பின்கீழ் பாடப்பட்டுள்ளன.அதன் அமைப்பு கீழ்காணுமாறு அமைந்துள்ளது; | ஐங்குறுதூறு நூலில் ஒவ்வொரு பத்துப் பாடல்களும் ஒரு தலைப்பின்கீழ் பாடப்பட்டுள்ளன.அதன் அமைப்பு கீழ்காணுமாறு அமைந்துள்ளது; | ||
===== மருதம் ===== | ===== மருதம் ===== | ||
ஓரம்போகியார் எழுதிய மருதத்திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன. | ஓரம்போகியார் எழுதிய மருதத்திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன. | ||
* வேட்கைப் பத்து | * வேட்கைப் பத்து | ||
* வேழப் பத்து | * வேழப் பத்து | ||
Line 49: | Line 42: | ||
* புலவி விராய பத்து | * புலவி விராய பத்து | ||
* எருமைப் பத்து | * எருமைப் பத்து | ||
===== நெய்தல் ===== | ===== நெய்தல் ===== | ||
அம்மூவனார் எழுதிய நெய்தல் திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன. | அம்மூவனார் எழுதிய நெய்தல் திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன. | ||
* தாய்க்கு உரைத்த பத்து | * தாய்க்கு உரைத்த பத்து | ||
* தோழிக்கு உரைத்த பத்து | * தோழிக்கு உரைத்த பத்து | ||
Line 63: | Line 54: | ||
* நெய்தல் பத்து | * நெய்தல் பத்து | ||
* வளைப் பத்து | * வளைப் பத்து | ||
===== குறிஞ்சி ===== | ===== குறிஞ்சி ===== | ||
கபிலர் எழுதிய குறிஞ்சித் திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன. | கபிலர் எழுதிய குறிஞ்சித் திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன. | ||
இந்நூலிலுள்ள 10 பத்துகள் | இந்நூலிலுள்ள 10 பத்துகள் | ||
* அன்னாய் வாழிப் பத்து | * அன்னாய் வாழிப் பத்து | ||
* அன்னாய்ப் பத்து | * அன்னாய்ப் பத்து | ||
Line 79: | Line 68: | ||
* கிள்ளைப் பத்து | * கிள்ளைப் பத்து | ||
* மஞ்ஞைப் பத்து | * மஞ்ஞைப் பத்து | ||
===== பாலை ===== | ===== பாலை ===== | ||
ஓதலாந்தையார் எழுதிய பாலைத் திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன. | ஓதலாந்தையார் எழுதிய பாலைத் திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன. | ||
* செலவு அழுங்குவித்த பத்து | * செலவு அழுங்குவித்த பத்து | ||
* செலவுப் பத்து | * செலவுப் பத்து | ||
Line 92: | Line 79: | ||
* உடன்போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்து | * உடன்போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்து | ||
* மறுதரவுப் பத்து | * மறுதரவுப் பத்து | ||
===== முல்லை ===== | ===== முல்லை ===== | ||
பேயனார் எழுதிய முல்லைத் திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன. | பேயனார் எழுதிய முல்லைத் திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன. | ||
* செவிலி கூற்றுப் பத்து | * செவிலி கூற்றுப் பத்து | ||
* கிழவன் பருவம் பாராட்டுப் பத்து | * கிழவன் பருவம் பாராட்டுப் பத்து | ||
Line 106: | Line 91: | ||
* தேர் வியங்கொண்ட பத்து | * தேர் வியங்கொண்ட பத்து | ||
* வரவுச்சிறப்பு உரைத்த பத்து | * வரவுச்சிறப்பு உரைத்த பத்து | ||
== சிறப்பு == | == சிறப்பு == | ||
ஐங்குறுநூறு குறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் இந்நூல் பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி பொருட்கள் மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளதோடு உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்களும் நிறைந்துள்ளன. | ஐங்குறுநூறு குறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் இந்நூல் பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி பொருட்கள் மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளதோடு உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்களும் நிறைந்துள்ளன. | ||
== பதிப்பு வரலாறு == | == பதிப்பு வரலாறு == | ||
ஐங்குறுநூற்றின் பாடல்கள் கடைச்சங்க காலம் முதலாகச் சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர்த் தமிழறிஞர் பலரும் இந்நூலுக்கு உரைகள் எழுதி வெளியிட்டுள்ளனர். | ஐங்குறுநூற்றின் பாடல்கள் கடைச்சங்க காலம் முதலாகச் சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர்த் தமிழறிஞர் பலரும் இந்நூலுக்கு உரைகள் எழுதி வெளியிட்டுள்ளனர். | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
தமிழ் இணையக் கல்விக் கழகம் | தமிழ் இணையக் கல்விக் கழகம் <nowiki>http://www.tamilvu.org/ta/library-l1230-html-l1230ind-124040</nowiki> | ||
ஐங்குறுநூறு பாடல்கள் தொகுப்பு <nowiki>https://ilakkiyam.com/iyal/1771-</nowiki> | ஐங்குறுநூறு பாடல்கள் தொகுப்பு <nowiki>https://ilakkiyam.com/iyal/1771-</nowiki> |
Revision as of 18:25, 31 May 2022
Ready for Review
ஐங்குறுநூறு சங்க இலக்கிய நூல்களில் எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை.
பொருண்மை
ஐங்குறுநூறு நூலில் அன்பின் ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.
பெயர்க் காரணம்
ஐங்குறுநூறு நூலில் ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்ட பாடல்களின் தொகுப்பாக விளங்குகிறது. குறைந்த அடியெல்லை கொண்ட பாக்களால் அமைந்தமையால் ஐங்குறுநூறு என இந்நூல் பெயர் பெற்றது.
புலவர்கள்
ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த 100 பாடல்களையும் ஒவ்வொரு புலவர் இயற்றியுள்ளார். அவ்வகையில் இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் வெண்பாவைக் கீழ்க்காண்போம்.
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சிக் கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லைப் பேயனே
நூலையோ தைங்குறு நூறு.
இந்த வெண்பா மூலம் மருதத்திணை பாடியவர் ஓரம்போகியார், நெய்தல் திணை பாடியவர் அம்மூவனார், குறிஞ்சித் திணை பாடியவர் கபிலர், பாலைத்திணை பாடியவர் ஓதலாந்தையார் மற்றும் முல்லைத் திணை பாடியவர் பேயனார் என்பதை அறியலாம்.
இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். அந்தப் பாடல் சிவபெருமானின் விரிவாக்கத் தன்மையை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐங்குறுநூறு நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார்.
நூலின் அமைப்பு
எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். இதில் திணைப்பாடல்கள் அமைவுமுறையை, "மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே"
என்ற அடிகள்
தெளிவுபடுத்துகின்றன. இந்நூலில் நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அப்பாடல்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ ஒவ்வொரு பத்துப் பாடல்களும் சிறப்பான தலைப்புப் பெயர்கள் பெற்றுள்ளன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, தெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன. மேலும் தொண்டிப்பத்து (பாடல் 171-180) என்ற தலைப்பின் கீழ் அமைந்த பத்துப் பாடல்களும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. இதனைப் பாடியவர் நெய்தல் திணையைப் பாடிய அம்மூவனார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாய்ப்பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. ஐந்திணைக் கருப்பொருட்களான விலங்குகளையும் பறவைகளையும் அடிப்படையாகக் கொண்டு எருமைப்பத்து, கேழற்பத்து (கேழல்-பன்றி), குரக்குப்பத்து, கிள்ளைப்பத்து (கிள்ளை-கிளி), மஞ்ஞைப்பத்து (மஞ்ஞை-மயில்), போன்ற பெயர்களும் பாடல்களின் தொகுப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.
தலைப்புகள்
ஐங்குறுதூறு நூலில் ஒவ்வொரு பத்துப் பாடல்களும் ஒரு தலைப்பின்கீழ் பாடப்பட்டுள்ளன.அதன் அமைப்பு கீழ்காணுமாறு அமைந்துள்ளது;
மருதம்
ஓரம்போகியார் எழுதிய மருதத்திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன.
- வேட்கைப் பத்து
- வேழப் பத்து
- களவன் பத்து
- தோழிக்கு உரைத்த பத்து
- புலவிப் பத்து
- தோழி-கூற்றுப் பத்து
- கிழத்தி-கூற்றுப் பத்து
- புனலாட்டுப் பத்து
- புலவி விராய பத்து
- எருமைப் பத்து
நெய்தல்
அம்மூவனார் எழுதிய நெய்தல் திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன.
- தாய்க்கு உரைத்த பத்து
- தோழிக்கு உரைத்த பத்து
- கிழவர்க்கு உரைத்த பத்து
- பாணற்கு உரைத்த பத்து
- ஞாரல் பத்து
- வெள்ளாங்குருகுப் பத்து
- சிறுவெண்காக்கைப் பத்து
- தொண்டிப் பத்து
- நெய்தல் பத்து
- வளைப் பத்து
குறிஞ்சி
கபிலர் எழுதிய குறிஞ்சித் திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன.
இந்நூலிலுள்ள 10 பத்துகள்
- அன்னாய் வாழிப் பத்து
- அன்னாய்ப் பத்து
- அம்ம வாழிப் பத்து
- தெய்யோப் பத்து
- வெறிப் பத்து
- குன்றக் குறவன் பத்து
- கேழற் பத்து
- குரக்குப் பத்து
- கிள்ளைப் பத்து
- மஞ்ஞைப் பத்து
பாலை
ஓதலாந்தையார் எழுதிய பாலைத் திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன.
- செலவு அழுங்குவித்த பத்து
- செலவுப் பத்து
- இடைச்சுரப் பத்து
- இளவேனிற் பத்து
- வரவு உரைத்த பத்து
- முன்னிலைப் பத்து
- மகட் போக்கியவழித் தாய் இரங்கு பத்து
- உடன்போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்து
- மறுதரவுப் பத்து
முல்லை
பேயனார் எழுதிய முல்லைத் திணை பாடல்கள் கீழ்காணும் தலைப்புகளில் பத்து பத்து பாடல்களாக அமைந்துள்ளன.
- செவிலி கூற்றுப் பத்து
- கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
- விரவுப் பத்து
- புறவணிப் பத்து
- பாசறைப் பத்து
- பருவம் கண்டு கிழத்தி உரைத்த பத்து
- தோழி வற்புறுத்த பத்து
- பாணன் பத்து
- தேர் வியங்கொண்ட பத்து
- வரவுச்சிறப்பு உரைத்த பத்து
சிறப்பு
ஐங்குறுநூறு குறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் இந்நூல் பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி பொருட்கள் மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளதோடு உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்களும் நிறைந்துள்ளன.
பதிப்பு வரலாறு
ஐங்குறுநூற்றின் பாடல்கள் கடைச்சங்க காலம் முதலாகச் சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர்த் தமிழறிஞர் பலரும் இந்நூலுக்கு உரைகள் எழுதி வெளியிட்டுள்ளனர்.
உசாத்துணை
தமிழ் இணையக் கல்விக் கழகம் http://www.tamilvu.org/ta/library-l1230-html-l1230ind-124040
ஐங்குறுநூறு பாடல்கள் தொகுப்பு https://ilakkiyam.com/iyal/1771-