ராஜம் கிருஷ்ணன்: Difference between revisions
(Created page with "ராஜம் கிருஷ்ணன் (1925-2014 ) தமிழில் நாவல்கள் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். இடதுசரிப்பார்வையும் பெண்ணியப்பார்வையும் கொண்டிருந்தார். வெவ்வேறு களங்களுக்குச் சென்று களஆய்வு செய்து த...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
[[File:Writer rajam krishnan 1.jpg|thumb|ராஜம் கிருஷ்ணன்]] | |||
ராஜம் கிருஷ்ணன் (1925-2014 ) தமிழில் நாவல்கள் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். இடதுசரிப்பார்வையும் பெண்ணியப்பார்வையும் கொண்டிருந்தார். வெவ்வேறு களங்களுக்குச் சென்று களஆய்வு செய்து தன் நாவல்களை எழுதுவது அவருடைய வழக்கம். கோவா விடுதலைப்போர், ஊட்டி படுகர்களின் வாழ்க்கை, தூத்துக்குடி உப்பளம் என மாறுபட்ட வாழ்க்கைச்சூழல்களை எழுதியவர் | ராஜம் கிருஷ்ணன் (1925-2014 ) தமிழில் நாவல்கள் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். இடதுசரிப்பார்வையும் பெண்ணியப்பார்வையும் கொண்டிருந்தார். வெவ்வேறு களங்களுக்குச் சென்று களஆய்வு செய்து தன் நாவல்களை எழுதுவது அவருடைய வழக்கம். கோவா விடுதலைப்போர், ஊட்டி படுகர்களின் வாழ்க்கை, தூத்துக்குடி உப்பளம் என மாறுபட்ட வாழ்க்கைச்சூழல்களை எழுதியவர் | ||
பிறப்பு, கல்வி | == பிறப்பு, கல்வி == | ||
திருச்சி மாவட்டம் முசிறியில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். பெற்றோர்கள் யஞ்ஞ நாராயணன், மீனாட்சி. இவரது பூர்வீகம் நெல்லை மாவட்டம். ராஜம் கிருஷ்ணன் முறையான பள்ளிக்கல்வி பெறவில்லை. 15 வயதிலேயே மணம்செய்து வைக்கப்பட்டார். தானாகவே ஆங்கிலம், தமிழ், இந்தி கற்றுக்கொண்டார். நூல்களை வாசிக்கும் வழக்கத்தையும் மேற்கொண்டார். | |||
== தனிவாழ்க்கை == | |||
ராஜம்கிருஷ்ணனின் கணவர் மின்வாரியப் பொறி யாளரான முத்துகிருஷ்ணன். தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. 2002-ம் ஆண்டு தன் கணவர் கிருஷ்ணனை இழந்தார். அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிட மிருந்த பணத்தையும், இழந்தார். எண்பது வயதில் கைவிடப்பட்டு நின்றவரை சில நண்பர்களும் அவரது ஒரு சகோதரரும் பாதுகாக்க முயற்சி செய்து ‘விச்ராந்தி’ என்ற முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். முதுமையை அங்கே கழித்தார்.இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டு மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது அவருக்கு உதவியாக அமைந்தது. | |||
== இலக்கியவாழ்க்கை == | |||
ராஜம் கிருஷ்ணன் கூட்டுக்குடும்பச்சூழலில் போராடி எழுத்துலகுக்கு வந்தார். ராஜம் கிருஷ்ணனின் முதல் சிறுகதையான ‘வெள்ளி டம்ளர்’ 1946 ல் வெளிவந்தது. 1948-இல் ‘சுதந்திர ஜோதி’ என்ற நாவல் மூலம் எழுத்துலகில் நாவலாசிரியராக அறிமுகமானார். தன் கணவர் மின்வாரிய பொறியாளராகப் பணியாற்றியமையால் அவருடன் வெவ்வேறு ஊர்களுக்கு செல்வதும், அங்குள்ள வாழ்க்கையை ஆராய்ந்து நாவல்களாக எழுதுவதும் அவருடைய வழக்கம். கோவா சுதந்திரப்போராட்டத்தின் பின்னணியில் 1969ல் வளைக்கரம் என்னும் நாவலை எழுதினார். உப்புகாய்ச்சும் மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து கரிப்புமணிகள் என்னும் நாவலை எழுதினார். நீலகிரி படுகர் இன பழங்குடிகளின் வாழ்க்கையை குறிஞ்சித்தேன் என்னும் நாவலில் ஆராய்ந்தார் இடதுசாரி இயக்கங்களோடும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தோடும் நெருங்கிய உறவினை கொண்டவர். | |||
இலக்கியவாழ்க்கை | |||
ராஜம் கிருஷ்ணன் 1948-இல் ‘சுதந்திர ஜோதி’ என்ற நாவல் மூலம் எழுத்துலகில் நாவலாசிரியராக | |||
இடதுசாரி இயக்கங்களோடும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தோடும் நெருங்கிய உறவினை | |||
== இறப்பு == | |||
தொண்ணூறு வயதில் உடல்நலக் குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு 21 - அக்டோபர்- 2014 அன்று ராஜம் கிருஷ்ணன் உயிர் துறந்தார். தான் இறந்துவிட்டால் தன் உடலை ராமச்சந்திரா மருத்துவமனைக்குத் தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி அவரின் உடல் அந்த மருத்துவமனைக்கே தானம் செய்யப்பட்டது | தொண்ணூறு வயதில் உடல்நலக் குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு 21 - அக்டோபர்- 2014 அன்று ராஜம் கிருஷ்ணன் உயிர் துறந்தார். தான் இறந்துவிட்டால் தன் உடலை ராமச்சந்திரா மருத்துவமனைக்குத் தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி அவரின் உடல் அந்த மருத்துவமனைக்கே தானம் செய்யப்பட்டது | ||
== விவாதங்கள் == | |||
தி. ஜானகிராமனின் ‘சக்தி வைத்தியம்’என்னும் சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டபோது பெண்களை இழிவாகச் சித்தரிக்கும் பகுதிகள் அந்நூலில் இருப்பதாக கருதிய ராஜம் கிருஷ்ணன் தன் எதிர்ப்பை பதிவுசெய்தார் | |||
தினமணி ’97 தீபாவளி மலரில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி, விதவைப் பெண் ‘ஒன்றும் விளையாத தரிசு நிலம்’ என்று கருத்து வெளியி ட்டபோது அதைக் கடுமையாக விமரிசித்து ‘தரிசுக்கோட்பாடு’என்ற தலைப்பில் ராஜம் கிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதி தினமணி நடுப்பக்கத்திலேயே அது வெளியானது | |||
== வாழ்க்கை வரலாறு,நினைவகங்கள் == | |||
ராஜம் கிருஷ்ணன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) என்னும் நூல் எஸ்.தோதாத்ரி எழுதி சாகித்ய அக்காதமி வெளியீடாக வந்துள்ளது. | |||
== நூல்கள் == | |||
சிறுகதைகள் | சிறுகதைகள் | ||
Line 100: | Line 87: | ||
# காலம் 2014 | # காலம் 2014 | ||
== விருதுகள் == | |||
*1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது | |||
* 1953—கலைமகள் விருது (நாவல் : பெண் குரல்) | |||
* 1973— சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்) | |||
* 1975—சோவியத் லாண்ட் நேரு விருது | |||
* 1991—திரு.வி.க. விருது | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
Line 106: | Line 100: | ||
* [http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-78.htm ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - தமிழ் இணையக் கல்விக்கழகம்] | * [http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-78.htm ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - தமிழ் இணையக் கல்விக்கழகம்] | ||
* [https://www.loc.gov/acq/ovop/delhi/salrp/rajamkrishnan.html ராஜம் கிருஷ்ணன் - ஐக்கிய அமெரிக்க நாடுகளின் காங்கிரஸ் நூலக இணையக் குறிப்]பு | * [https://www.loc.gov/acq/ovop/delhi/salrp/rajamkrishnan.html ராஜம் கிருஷ்ணன் - ஐக்கிய அமெரிக்க நாடுகளின் காங்கிரஸ் நூலக இணையக் குறிப்]பு | ||
*https://www.hindutamil.in/news/supplements/penn-indru/188164--4.html | |||
*[https://solvanam.com/2014/12/06/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2/ ராஜம் கிருஷ்ணந் எம்.ஏ.சுசீலா] |
Revision as of 07:51, 30 January 2022
ராஜம் கிருஷ்ணன் (1925-2014 ) தமிழில் நாவல்கள் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். இடதுசரிப்பார்வையும் பெண்ணியப்பார்வையும் கொண்டிருந்தார். வெவ்வேறு களங்களுக்குச் சென்று களஆய்வு செய்து தன் நாவல்களை எழுதுவது அவருடைய வழக்கம். கோவா விடுதலைப்போர், ஊட்டி படுகர்களின் வாழ்க்கை, தூத்துக்குடி உப்பளம் என மாறுபட்ட வாழ்க்கைச்சூழல்களை எழுதியவர்
பிறப்பு, கல்வி
திருச்சி மாவட்டம் முசிறியில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். பெற்றோர்கள் யஞ்ஞ நாராயணன், மீனாட்சி. இவரது பூர்வீகம் நெல்லை மாவட்டம். ராஜம் கிருஷ்ணன் முறையான பள்ளிக்கல்வி பெறவில்லை. 15 வயதிலேயே மணம்செய்து வைக்கப்பட்டார். தானாகவே ஆங்கிலம், தமிழ், இந்தி கற்றுக்கொண்டார். நூல்களை வாசிக்கும் வழக்கத்தையும் மேற்கொண்டார்.
தனிவாழ்க்கை
ராஜம்கிருஷ்ணனின் கணவர் மின்வாரியப் பொறி யாளரான முத்துகிருஷ்ணன். தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. 2002-ம் ஆண்டு தன் கணவர் கிருஷ்ணனை இழந்தார். அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிட மிருந்த பணத்தையும், இழந்தார். எண்பது வயதில் கைவிடப்பட்டு நின்றவரை சில நண்பர்களும் அவரது ஒரு சகோதரரும் பாதுகாக்க முயற்சி செய்து ‘விச்ராந்தி’ என்ற முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். முதுமையை அங்கே கழித்தார்.இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டு மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது அவருக்கு உதவியாக அமைந்தது.
இலக்கியவாழ்க்கை
ராஜம் கிருஷ்ணன் கூட்டுக்குடும்பச்சூழலில் போராடி எழுத்துலகுக்கு வந்தார். ராஜம் கிருஷ்ணனின் முதல் சிறுகதையான ‘வெள்ளி டம்ளர்’ 1946 ல் வெளிவந்தது. 1948-இல் ‘சுதந்திர ஜோதி’ என்ற நாவல் மூலம் எழுத்துலகில் நாவலாசிரியராக அறிமுகமானார். தன் கணவர் மின்வாரிய பொறியாளராகப் பணியாற்றியமையால் அவருடன் வெவ்வேறு ஊர்களுக்கு செல்வதும், அங்குள்ள வாழ்க்கையை ஆராய்ந்து நாவல்களாக எழுதுவதும் அவருடைய வழக்கம். கோவா சுதந்திரப்போராட்டத்தின் பின்னணியில் 1969ல் வளைக்கரம் என்னும் நாவலை எழுதினார். உப்புகாய்ச்சும் மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து கரிப்புமணிகள் என்னும் நாவலை எழுதினார். நீலகிரி படுகர் இன பழங்குடிகளின் வாழ்க்கையை குறிஞ்சித்தேன் என்னும் நாவலில் ஆராய்ந்தார் இடதுசாரி இயக்கங்களோடும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தோடும் நெருங்கிய உறவினை கொண்டவர்.
இறப்பு
தொண்ணூறு வயதில் உடல்நலக் குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு அங்கு 21 - அக்டோபர்- 2014 அன்று ராஜம் கிருஷ்ணன் உயிர் துறந்தார். தான் இறந்துவிட்டால் தன் உடலை ராமச்சந்திரா மருத்துவமனைக்குத் தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி அவரின் உடல் அந்த மருத்துவமனைக்கே தானம் செய்யப்பட்டது
விவாதங்கள்
தி. ஜானகிராமனின் ‘சக்தி வைத்தியம்’என்னும் சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டபோது பெண்களை இழிவாகச் சித்தரிக்கும் பகுதிகள் அந்நூலில் இருப்பதாக கருதிய ராஜம் கிருஷ்ணன் தன் எதிர்ப்பை பதிவுசெய்தார்
தினமணி ’97 தீபாவளி மலரில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி, விதவைப் பெண் ‘ஒன்றும் விளையாத தரிசு நிலம்’ என்று கருத்து வெளியி ட்டபோது அதைக் கடுமையாக விமரிசித்து ‘தரிசுக்கோட்பாடு’என்ற தலைப்பில் ராஜம் கிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதி தினமணி நடுப்பக்கத்திலேயே அது வெளியானது
வாழ்க்கை வரலாறு,நினைவகங்கள்
ராஜம் கிருஷ்ணன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) என்னும் நூல் எஸ்.தோதாத்ரி எழுதி சாகித்ய அக்காதமி வெளியீடாக வந்துள்ளது.
நூல்கள்
சிறுகதைகள்
- அழுக்கு 1990, தாகம் சென்னை
- அவள் (புதினம்)
- அல்லி (சிறுகதை)
- அலைகள், 1965 மார்ச், கலைமகள் காரியாலயம். சென்னை-4
- அலை வாய்க்கரையில் (புதினம்)
- அன்னையர்பூமி (புதினம்)
- இடிபாடுகள் (புதினம்)
- உத்தரகாண்டம் (புதினம்)
- உயிர் விளையும் நிலங்கள் (புதினம்)
- ஊசியும் உணர்வும் (சிறுகதை)
- கதைக்கனிகள்
- கரிப்பு மணிகள் (புதினம்)
- கல்வி (சிறுகதை)
- களம் (சிறுகதை), 1985, பாரி புத்தகப்பண்ணை, சென்னை.
- கனவு (சிறுகதை)
- காக்கானி
- கிழமைக்கதைகள் (சிறுகதை)
- குறிஞ்சித் தேன் (புதினம்)
- கூடுகள் (புதினம்) 1990, தாகம் சென்னை
- கூட்டுக் குஞ்சுகள் (புதினம்)
- கைவிளக்கு 1966, மங்கள நூலகம், சென்னை
- கோடுகளும் கோலங்களும் (புதினம்)
- சிவப்பு ரோஜோ (சிறுகதை)
- சுழலில் மிதக்கும் தீபங்கள் (புதினம்)
- சேற்றில் மனிதர்கள் (பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)'
- நித்திய மல்லிகை (சிறுகதை)
- பச்சைக்கொடி (சிறுகதை)
- பாதையில் பதிந்த அடிகள் பொதுவுடைமை இயக்கபோராளி மணலூர் மணியம்மை குறித்து எழுதிய நூல்
- புதியதோர் உலகம் செய்வோம் (புதினம்)
- புதிய கீதம்
- புதிய சிறகுகள் (புதினம்)
- பெண்குரல் (புதினம்) 1953
- மலர்கள் (புதினம்)
- மலைரோஜா (சிறுகதை)
- மாணிக்க கங்கை (புதினம்)
- மாறி மாறி பின்னும் (புதினம்)
- மின்னி மறையும் வைரங்கள் (சிறுகதை)
- முள்ளும் மலர்ந்தது (புதினம்)
- வண்ணக்கதைகள் (சிறுகதை)
- வளைக்கரம் (புதினம்)
- வனதேவியின் மைந்தர்கள் (புதினம்)
- விலங்குகள், 1975, பாரி புத்தகப்பண்ணை, சென்னை.
- வேருக்கு நீர் (புதினம்) - சாகித்ய அகாதெமி விருதுபெற்றது
- ரோஜா இதழ்கள் (புதினம்)
- சத்திய வேள்வி
பெண்ணியக்கட்டுரைகள்
- காலம்தோறும் பெண்
- காலம்தோறும் பெண்மை
- யாதுமாகி நின்றாய்
- இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
வாழ்க்கை வரலாறு
- டாக்டர் ரங்காச்சாரி, 1965 ,
- பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி
- சத்திய தரிசனம்
தன்வரலாறு
- காலம் 2014
விருதுகள்
- 1950—நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது
- 1953—கலைமகள் விருது (நாவல் : பெண் குரல்)
- 1973— சாகித்திய அகாதமி விருது (நாவல் : வேருக்கு நீர்)
- 1975—சோவியத் லாண்ட் நேரு விருது
- 1991—திரு.வி.க. விருது