முத்துராசா குமார்: Difference between revisions
No edit summary |
(<nowiki/> tag removed) |
||
Line 37: | Line 37: | ||
* கட்டுரைக்காக ஊடகத்துறையில் வழங்கப்பட்ட 'LAADLI' விருது (2018) | * கட்டுரைக்காக ஊடகத்துறையில் வழங்கப்பட்ட 'LAADLI' விருது (2018) | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
====== | ====== https://www.hindutamil.in/news/literature/793985-book-release-3.html</nowiki> ====== | ||
====== | ====== https://www.vikatan.com/arts/literature/interview-with-tamil-poet-muthurasa-kumar</nowiki> ====== | ||
{{being created}} | {{being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 18:02, 5 July 2022
பெயர்
முத்துராசா குமார் , (1992) தமிழில் சிறுகதை, கவிதை, கட்டுரைகள் எழுதிவரும் எழுத்தாளர்.
பிறப்பு,கல்வி
· முத்துராசா குமார் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள தென்கரை கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் பெயர் : K.அமுதா, A.குமார்.பத்தாம் வகுப்பு வரை அரசு உயர்நிலைப்பள்ளி, முள்ளிப்பள்ளம் ,பிறகு உயர்நிலைக்கல்வியை அரசஞ்சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி, சோழவந்தானில் பயின்றார்.
சென்னை பல்கலை கழகத்தில் இதழியல் & தொடர்பியல் துறையில் முதுகலை பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
படைப்புலகம்
தனது இலக்கிய பங்களிப்பில் முன்னோடிகளாக கி.ராஜநாராயணன், வைக்கம் முகமது பஷீர் ஆகியோரை குறிப்பிடுகிறார்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு'பிடி மண் ' 2019ல் சால்ட் & தன்னறம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியது.இரண்டாவது தொகுப்பு ' நீர்ச்சுழி ' 2020 இல் சால்ட் & தன்னறம் பதிப்பகத்தின் மூலம் வெளியானது.சிறுகதைகள் ,கவிதைகள் மட்டுமல்லாமல் சூழலியல் கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்.
இலக்கிய இடம்
முத்துராசாகுமாரின் கவிதைகள் பெரும்பாலும் பால்யம் சார்ந்தவைகளாகவும், நீருடனான வெவ்வேறு வகை உறவுகளையும் பற்றியவைகளாகவும் உள்ளன.மண்ணின் வாழ்க்கை சார்ந்த சொல்வளம், உள்ளூர்ப் பண்பாட்டு அனுபவங்கள் என்று வளமிக்க கவிதைகளை முத்து ராசா குமாரின் கவிதை தொகுப்புகள் கொண்டிருக்கின்றன என்று கவிஞர் ,பத்திரிக்கையாளர் ஆசை குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
சிறுகதைகள்
· ஈத்து(2022)-சால்ட் & தன்னறம் வெளியீடு
கவிதைகள்
· நீர்ச்சுழி (2020)- சால்ட் & தன்னறம் வெளியீடு
· பிடிமண் (2019)- சால்ட் & தன்னறம் வெளியீடு
விருதுகள்
பிடிமண்( கவிதைகள்)
- எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது - 2019
(தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை)
- தோழர் சுப்புராயலு நினைவு விருது - 2019
(மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்)
- சௌமா இலக்கிய விருது - 2020
(சௌமா கல்வி & சமூக நல அறக்கட்டளை)
- திருப்பூர் இலக்கிய விருது - 2021
(திருப்பூர் இலக்கிய விருது அமைப்பு)
நீர்ச்சுழி (கவிதைகள்)
- திருப்பூர் இலக்கிய விருது (2021)
(திருப்பூர் இலக்கிய விருது அமைப்பு)
- கட்டுரைக்காக ஊடகத்துறையில் வழங்கப்பட்ட 'LAADLI' விருது (2018)
உசாத்துணை
https://www.hindutamil.in/news/literature/793985-book-release-3.html</nowiki>
https://www.vikatan.com/arts/literature/interview-with-tamil-poet-muthurasa-kumar</nowiki>
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.