ப.முத்துக்குமாரசுவாமி: Difference between revisions
(Corrected the links to Disambiguation page) |
(Corrected Category:தமிழறிஞர்கள் to Category:தமிழறிஞர்) |
||
Line 80: | Line 80: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:தமிழறிஞர்]] |
Latest revision as of 14:04, 17 November 2024
- முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்துக்குமாரசுவாமி (பெயர் பட்டியல்)
ப.முத்துக்குமாரசுவாமி (மார்ச் 11, 1936 - அக்டோபர் 29, 2020) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர்.
(பார்க்க ப.முத்துக்குமாரசுவாமி )
பிறப்பு
ப. முத்துக்குமாரசுவாமி திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறையில் மு. பஞ்சநாதம், மாரியம்மாள் இணையருக்கு மார்ச் 11, 1936 அன்று பிறந்தார். வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு முத்துக்குமாரசுவாமி தாய்வழியில் உறவினர். தருமபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலை (புலவர்) இடைநிலைப் பட்டம் பெற்றார். சித்தாந்த சிரோமணி முத்துமணிவாசக முதலியார், பேராசிரியர் குருசாமி தேசிகர், சொ. சிங்காரவேலனார் ஆகியோரிடம் சைவசித்தாந்தம், தமிழிலக்கணம் ஆகியவற்றைக் கற்றார்.
இலக்கியப் பணி
1963 முதல் நூல்களை எழுதத் தொடங்கிய ப.முத்துக்குமாரசாமி இலக்கியம், சைவம், திருக்கோயில்கள், சுயமுன்னேற்றம் ஆகியவை சார்ந்து 170 நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் 'இலக்கியவளம்', 'திருவாசகத்தேன்', 'மெய்ப்பாட்டியல்' ஆகிய நூல்கள் புகழ்பெற்றவை.
மறைவு
ப முத்துக்குமாரசுவாமி அக்டோபர் 29, 2020 அன்று கோவிட் தொற்றால் சென்னையில் தன் மகள் கமலாவின் இல்லத்தில் உயிரிழந்தார்.
விருது
- தமிழ் வளர்ச்சித் துறை விருது. (செந்தமிழ் முருகன் நூலுக்காக,(மார்ச் 11, 1936 )
- தமிழக அரசின் மறைமலையடிகள் விருது
- கம்போடிய தமிழ்ச்சங்க விருது
நூல்கள்
- கவியரசர்
- பன்முகப்பார்வையில் திருநாவுக்கரசர்
- அங்கோர் உலகப்பெருங்கோயில்
- காசி - இராமேசுவரம்
- திருமுறைகள் வழங்கும் வாழ்வியல்
- ஆன்மாவின் பயணங்கள்
- உலகச் சாதனையாளர்கள் 101
- சிவதரிசனம்
- தென்னாட்டு சிவத்தலங்கள் - I
- அமுதம் பருகுவோம்
- திருவள்ளுவரும் அப்பரடிகளும்
- நீங்களும் இராமனாகலாம்
- சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை
- செந்தமிழ் முருகன்
- அம்பிகை
- அஹிம்சையின் சுவடுகள்
- இந்திய நாட்டின் இனிய விழாக்களும்-விரதங்களும்
- இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள்
- கங்கைக் கரையினிலே
- கவிஞர்களின் பார்வையில் காரிகைகள்
- கவிதைக்களத்தில்...முப்பெருங்கவிஞர்கள்
- சிகரம் தொடுவோம்
- சிவன்
- தமிழ் இலக்கிய தோற்றமும் வளர்ச்சியும்
- தமிழ்ச்செல்வம்
- திறனாய்வு நோக்கில் திருவாசகம்
- தென்னாட்டு சிவத்தலங்கள் (இருபகுதிகள்)
- தேவாரத்தில் சமுதாய சிந்தனைகள்
- நகரக் கோயில்கள் ஒன்பது
- நாயன்மார் கதைகள்
- புலம்பெயர் தமிழரும் தமிழும்
- பைந்தமிழ் பூம்பொழில்
- வடநாட்டு சிவத்தலங்கள்
- இந்திய வரலாற்றில் வ.உ.சி
- காலம் எழுதிய கவிதை
- நகரக் கோயில்கள் ஒன்பது
- பாரதி-பாரதிதாசன்-கண்ணதாசன் ஒரு பார்வை
- திருவள்ளுவரும் அப்பரடிகளும்
- சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை
- பஞ்சபூதத் தலங்கள்
- நவக்கிரகத் திருத்தலங்கள்
- அட்டவீரட்டத் திருத்தலங்கள்
- முக்திதரும் தலங்கள் 13
- அம்பிகை
- சிவதரிசனம்
- வேதம் கண்ட விஞ்ஞானம்
- வடநாட்டு சிவத்தலங்கள்
- காலத்தை வெல்லும் காலபைரவர்
- புலம்பெயர் தமிழரும் தமிழும்
- உலகமொழிகளில் தமிழ்
தொகுப்புகள்
- சுதேசமித்திரன் இதழ் தொகுப்பு (கலைஞன் பதிப்பகம்)
- பிரசண்டவிகடன் இதழ் தொகுப்பு (கலைஞன் பதிப்பகம்)
உசாத்துணை
- தமிழறிஞர் ப. முத்துக்குமாரசாமி மறைவு செய்தி, தினமணி
- ப.முத்துக்குமாரசாமி தினமணி வைத்தியநாதன் இரங்கல்குறிப்பு
- ப முத்துக்குமாரசுவாமி திருப்பூர் கிருஷ்ணன் அஞ்சலி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Dec-2022, 09:22:31 IST