under review

தசாங்கம் (நூல்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 34: Line 34:
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0007847_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, தமிழ் இணைய மின்னூலகம்]
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0007847_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.pdf செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, தமிழ் இணைய மின்னூலகம்]


{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:53, 26 September 2024

தசாங்கம் (12-ம் நூற்றாண்டு) செங்குந்தர்களைச் சிறப்பித்து இயற்றப்பட்ட நூல். இந்நூலை இயற்றியவர், ஸ்ரீ சத்தியசந்தர்.

நூல் அமைப்பு

தசாங்கம், செங்குந்தர்களைப் புகழ்ந்து பத்து வெண்பாப் பாடல்களால் இயற்றப்பட்ட நூல். ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பறவையை முன்னிலைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பு. ஸ்ரீ சத்தியசந்தர் என்பவரால் இயற்றப்பட்டதாக அறியப்படுகிறது. தசாங்கம் என்னும் சிற்றிலக்கிய வகைமையச் சேர்ந்தது. பெயர், மலை, ஆறு, நாடு, ஊர், வாகனம், படை, கொடி, முரசு, மாலை(தார்) போன்ற அரசனுக்குரிய பத்து அங்கங்களை(சிறப்புகள்) ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு நேரிசை வெண்பாவால் பாடுவது தசாங்கத்தின் இலக்கணம்.

உள்ளடக்கம்

நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து செங்குந்தர்களது மலை, ஆறு, காடு, நகர், மாலை, குதிரை, யானை, முரசு, கொடி, செங்கோல் ஆகியன புகழ்ந்து பாடப்பட்டுள்ளன இவற்றில் செங்கோல் தவிர்த்து மற்ற ஒன்பதும் இரண்டாக, ஒன்று விண்ணரசுக்கும் மற்றொன்று மண்ணரசுக்குமாகப் பாடப்பட்டுள்ளது. செங்குந்தர்களது சிறப்பு பலவாறாக இந்நூலில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.

பாடல்

ஆறு

செம்பொற் சிறையனமே செல்வச்செங் குந்தமனனர்
அம்பொன் கொழித்திடுநல் லாறியம்பா - யெம்பரையைத்
தங்கையெனக் கொண்டுவிணைத் தாங்கிமணைப் போற்றுசிவ
கங்கையுமொண் காவிரியுங் காண்

குதிரை

தாலக் கிழங்கிற் றழைவாய்க் குருகேசெங்
கோலக்கை வேலரூர் கொக்கிசையாய் -- ஞாலமிசை
மைச்சிரவர்க் கெட்டாத வானவர்கோ னூர்தருமுச்
சைச்சிரவங் கோரமெனச் சாற்று

கொடி

நங்கையர்வேய்த் தோள்பழகு நாகணவா யேகுந்த
வங்கையர்தங் கேதனநீ யாய்ந்தறையாய் - துங்கமிகு
காவலொடு வைகித்தங் காவலர்மெய் காக்குமெழிற்
சேவலொடு வேங்கையுமாந் தேர்

உசாத்துணை


✅Finalised Page