தாமரைச்செல்வி ஞானகுமார்: Difference between revisions
No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 14: | Line 14: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|14-Jul-2024, 07:28:37 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 11:03, 14 July 2024
தாமரைச்செல்வி ஞானகுமார் (பிறப்பு: மார்ச் 11, 1978) ஈழத்துப் பெண் எழுத்தாளர். கவிதைகள் எழுதி வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
தாமரைச்செல்வி ஞானகுமார் இலங்கையின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு ஆரையூரில் செல்வத்தம்பி, தவமணிதேவி இணையருக்கு மார்ச் 11, 1978-ல் பிறந்தார். தற்பொழுது ஜேர்மனியில் வசித்து வருகிறார். ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு ஆரையம்பதி சுப்பிரமணியம் வித்தியாலயத்தில் கற்றார். இடைநிலைக் கல்வியை இராமகிருஷ்ண மிஷ்ன் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையிலும் கற்றார். உளவியலில் பட்டயப்படிப்பு முடித்துள்ளார். நாடகம், பாட்டு, கிராமிய நடனம், கைப்பணிக்கலைகள், அறிவிப்பு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்.
இலக்கிய வாழ்க்கை
தாமரைச்செல்வி ஞானகுமார் கவிதைகள் எழுதினார். தினமுரசு பத்திரிகையில் இவரின் முதல் கவிதை வெளியானது. விற்பனைக்கு ஒரு கற்பனை' என்னும் கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.
நூல் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- விற்பனைக்கு ஒரு கற்பனை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Jul-2024, 07:28:37 IST