கோபால நேசரத்தினம்: Difference between revisions
Manobharathi (talk | contribs) No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
Line 18: | Line 18: | ||
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-jun18/35327-2018-06-19-04-58-56 ஈழத்தில் சமூகப் பண்பாட்டு வரலாற்றுச் சக்திகள்] | * [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-jun18/35327-2018-06-19-04-58-56 ஈழத்தில் சமூகப் பண்பாட்டு வரலாற்றுச் சக்திகள்] | ||
{{ | {{first review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 21:17, 18 April 2022
கோபால நேசரத்தினம் (1927) இலங்கை எழுத்தாளர் ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை எழுதிய சமூகசீர்திருத்த நாவல். சைவப்பிரச்சார நோக்கம் கொண்டது.
எழுத்து, பிரசுரம்
இந்துசாதனம் என்னும் இதழில் 1921-ல் முதல் தொடராக வெளிவந்த நாவல் இது. 1927-ல் நாவலாக வெளிவந்தது. யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலை வெளியீடு.
கதைச்சுருக்கம்
கணவனை இழந்த வள்ளியம்மை தன் மகன் கோபாலனை ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் ஆங்கிலக்கல்விக்காகச் சேர்க்கிறாள். அங்கே குட்டித்தம்பி போதகர் என்பவர் அவனை மதம் மாற்றும் நோக்குடன் தன் மகள் நேசரத்தினத்தை அவனுடன் பழக விடுகிறார். ஆனால் கோபாலன் மதம் மாறாமல் நேசரத்தினத்தை மதம் மாற்றி சைவசமயத்துக்கு கொண்டுவந்து மணந்துகொள்கிறார். குட்டித்தம்பி போதகர் மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவரும் சைவராக மாறுகிறார்
இலக்கிய இடம்
தமிழில் கிறிஸ்தவ மதமாற்றம் மற்றும் மீண்டும் இந்துமதம் திரும்புதல் ஆகியவற்றைப் பற்றி எழுதப்பட்ட முதல் நாவல். அக்கால யாழ்ப்பாணத்தில் ஆங்கிலக்கல்வி, கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் ஆகியவற்றின் நிலையை காட்டுகிறது. ‘பொதுஜனங்கள் இரசிக்கக்கூடியதாய், யாழ்ப்பாண பொதுவழக்கில் பழமொழிகள் மிகுதியாகக் கொண்டதாய் உலகம் பலவிதம் என்ற தலைப்பில் துரைரத்தினம் நேசமணி, கோபால நேசரத்தினம் முதலிய கதைநூல்களை நமக்குத் தந்துள்ள ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளைதான் எழுத்தாளர் என்னும் சொல் தற்காலத்தில் யார் யாரையெல்லாம் குறிக்கிறதோ அவர்களுக்கெல்லாம் முன்னோடியாகக் காட்சியளிக்கிறார்’ என்று கனக செந்திநாதன் ஈழத்து இலக்கியவளர்ச்சி (1964) நூலில் மதிப்பிடுகிறார்.
உசாத்துணை
- மட்டக்களப்பில் அழிக்கப்பட்ட இரு சிவாலயங்கள், ஆய்வு - பொ. நிலாநந்தினி, Proceedings of International Conference on Contemporary Management - 2014 (ICCM - 2014), pp 01-07
- இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி: ம.வே.திருஞானசம்பத்தப்பிள்ளையின் படைப்புகளை முன்வைத்துச்சில குறிப்புகள்..., ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் 'உலகம் பலவிதம்' தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு உரை, வ.ந.கிரிதரன், டொராண்டோ 22.10.17
- இலங்கைத் தமிழர்: வாழ்வும் வகிபாகமும் - பண்டிதர் ம.வே.திருஞானசம்பதப்பிள்ளை, ம.பா. மகாலிங்கசிவம், கொழும்பு தமிழ்ச் சங்கம் வெளியீடு, 2007
- ஈழத்தில் சமூகப் பண்பாட்டு வரலாற்றுச் சக்திகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.