மனவாசகங்கடந்தார்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
Tamizhkalai (talk | contribs) |
||
Line 9: | Line 9: | ||
உண்மை விளக்கம் செய்தான் உற்று” | உண்மை விளக்கம் செய்தான் உற்று” | ||
</poem> | </poem> | ||
இப்பாயிரம் இவ்வாசிரியரை மெய்கண்டாரின் மாணாக்கர் எனக் குறிப்பிடுவதால் சிவஞான சித்தியார் அருளிய அருணந்ந்தி சிவாச்சாரியாரோடு இவர் ஒருசாலை மாணக்கர் ஆவர் என்பது விளங்கும். | இப்பாயிரம் இவ்வாசிரியரை மெய்கண்டாரின் மாணாக்கர் எனக் குறிப்பிடுவதால் சிவஞான சித்தியார் அருளிய அருணந்ந்தி சிவாச்சாரியாரோடு இவர் ஒருசாலை மாணக்கர் ஆவர் என்பது விளங்கும். திருவதிகையில் இவர் பெயரால் தெற்கு வீதியில் ஒரு திருமடம் உள்ளது. இவையன்றி இவரைப் பற்றிய வேறு வரலாறு ஏதும் தெரியவில்லை. இவர் காலம் மெய்கண்டாரின் காலம் பொ.யு..1232-க்கு அருகில் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. | ||
== ஆன்மிக/இலக்கிய வாழ்க்கை == | == ஆன்மிக/இலக்கிய வாழ்க்கை == |
Revision as of 06:29, 9 May 2024
மனவாசகங்கடந்தார்(திருவதிகை மனவாசகங்கடந்தார்) (பொ.யு. 13-ம் நூற்றாண்டு) உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த நூலை இயற்றியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
மனவாசகங்கடந்தார் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் ஏதும் அறியவரவில்லை. இவர் திருவதிகையில் வாழ்ந்தவர். மெய்கண்டாரின் 49 மாணாக்கர்களில் ஒருவர் என்பது பின்வரும் பாயிரச் செய்யுளிலிருந்து அறியவருகிறது.
“மன்னதிகை வாழும் மனவாசங்கடந்தான்
மின்னனைய வாழுவிலுரு மெய்கண்டான் - பன்னுமறை
வண்மை தரும் ஆகமநூல் வைத்த பொருள் வழுவா
உண்மை விளக்கம் செய்தான் உற்று”
இப்பாயிரம் இவ்வாசிரியரை மெய்கண்டாரின் மாணாக்கர் எனக் குறிப்பிடுவதால் சிவஞான சித்தியார் அருளிய அருணந்ந்தி சிவாச்சாரியாரோடு இவர் ஒருசாலை மாணக்கர் ஆவர் என்பது விளங்கும். திருவதிகையில் இவர் பெயரால் தெற்கு வீதியில் ஒரு திருமடம் உள்ளது. இவையன்றி இவரைப் பற்றிய வேறு வரலாறு ஏதும் தெரியவில்லை. இவர் காலம் மெய்கண்டாரின் காலம் பொ.யு..1232-க்கு அருகில் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
ஆன்மிக/இலக்கிய வாழ்க்கை
மனவாசகங்கடந்தார் இயற்றிய சைவசித்தாந்த நூல் உண்மை விளக்கம். சைவ சித்தாந்தத்தில் அறிய வேண்டிய உண்மைகளை விளக்கி கூறுவதால் இப்பெயர் எய்தியது. உண்மை என்பது பதி, பசு பாச உண்மைகளைக் குறிப்பதாகும். பல நூல்களைப் படித்தறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை இந்நூல் இனிய தமிழில் உணர்த்துகிறது. மாணவரான மனவாசகங் கடந்தார் கேள்விகள் எழுப்ப, குருநாதர் மெய்கண்டார், அவ்வினாக்களுக்கு விடை கூறும் விதத்தில் இந்நூல் அமைந்துள்ளது.
.நாடகம் நடிக்கும் ஒரு நடிகன் தான் எந்தச் செயலை நடித்துக் காட்டினும், தன் உண்மை நிலையில் அவன் மாறுபாடூ ஒன்றும் அடையான். இதுபோன்று இறைவனும் தன் செயல்களால் தன் உண்மை நிலையில் ஒரு மாறுபாடூம் இன்றி ். ஒரே பெற்றித்தாய் நிற்பவன் ஆதலின், அவனது செயல்கள், நாடகம் அல்லது நடனம் எனப் பெற்றன. இந்நாடகம் ஊன நடனம், ஞான நடனம், ஆனந்த நடனம் என மூவகைப்படும்
பாடல் நடை
நாற்கோணம் பூமிபுன னண்ணுமதீ யின்பாதி
யேற்குமனல் முக்கோண மெப்போதும் - ஆக்கும்
அறுகோணங் கால்வட்ட மாகாய் மான்மா
வுறுகாய மாமிவற்றா லுற்
உசாத்துணை
உண்மை விளக்கம்-மூலமும் உரையும், ஆர்கைவ் வலைத்தளம்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.