ஏ.கரீம். சுஹைதா: Difference between revisions
No edit summary |
|||
Line 12: | Line 12: | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE,_%E0%AE%8F.%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D ஏ.கரீம். சுஹைதா: noolaham] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE,_%E0%AE%8F.%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D ஏ.கரீம். சுஹைதா: noolaham] | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D மர்ஹூம் மஷ்ஹூர் கதைகள்: Noolaham] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D மர்ஹூம் மஷ்ஹூர் கதைகள்: Noolaham] | ||
* மாமன் வரும் நேரத்துல, கவிதாயினி சுஹைதா ஏ. கரீம்: youtube | * [https://www.youtube.com/watch?app=desktop&v=xSgIaMwwyfg&ab_channel=PIRAINILAMEDIA மாமன் வரும் நேரத்துல, கவிதாயினி சுஹைதா ஏ. கரீம்: youtube] | ||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 17:09, 6 May 2024
ஏ.கரீம். சுஹைதா (பிறப்பு: ஜனவரி 28, 1960) ஈழத்துப் பெண் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஏ.கரீம். சுஹைதா இலங்கை திருகோணமலை மூதூர் அக்கரைச்சேனையில் மஸ்ஹுர் ஆலிம், பாத்திமா இணையருக்கு ஜனவரி 28, 1960-ல் பிறந்தார். தந்தை எழுத்தாளர். திருகோணமலை மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தில் பயின்றார். இலங்கை தொலைக்காட்சியில் இஸ்லாமிய கவியரங்குகளில் கலந்துகொண்டார்.
இலக்கிய வாழ்க்கை
ஏ.கரீம். சுஹைதா 1978 முதல் கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதி வருகிறார். இவரின் படைப்புகள் தினகரன், மித்திரன், வீரகேசரி, நவமணி ஆகிய நாளிதழ்களிலும் உள்நாட்டு, வெளிநாட்டு வானொலிகளிலும் வெளியாகின. இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில், மாதர் மஜ்லிஸ் தமிழ் சேவையில் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி, ஒலிமஞ்சரி போன்றவற்றில் இவரின் ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. லண்டன் தமிழ் வானொலி கவிதை நிகழ்விலும் அவுஸ்திரேலிய முஸ்லிம் வானொலி நிகழ்ச்சியிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. தந்தையின் ஆக்கங்களை தொகுப்பாக்கி மொத்தமாக 52 குட்டிக்கதைகளை இணைத்து 2013-ல் ஒரு புத்தமாக மஸ்ஹும் மஸ்ஹுர் கதைகள் எனும் தலைப்பில் வெளியிட்டார்.
விருதுகள்
- 2010-ல் கலைதீபம் பட்டம்
- 2012-ல் திறமைக்கான தேடல் பட்டம்
- கவிக்குயில் பட்டம்
நூல் பட்டியல்
உசாத்துணை
- ஏ.கரீம். சுஹைதா: noolaham
- மர்ஹூம் மஷ்ஹூர் கதைகள்: Noolaham
- மாமன் வரும் நேரத்துல, கவிதாயினி சுஹைதா ஏ. கரீம்: youtube
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.