மீ. சுப்ரமணிய ஐயர்: Difference between revisions

From Tamil Wiki
(Moved to Standardised)
No edit summary
Line 39: Line 39:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2kupd#book1/3 தமிழ்ப்புலவர் வரிசை: சு.அ. ராமசாமிப்புலவர்]
{{Standardised}}
{{First Review Completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 18:41, 9 April 2022

மீ. சுப்ரமணிய ஐயர் (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். இராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் வெண்பாக்களாக எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் மீனாட்சி சுந்தரம் ஐயருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ்க்கல்வியை சுப்பராயர், செந்நெற்குடி வீமகவியிடமும் கற்றார். இவரை ஆசிரியராகக் கொண்டு பல மாணவர்கள் பாடங்களைக் கற்றனர்.

மாணவர்கள்
  • வேங்கடராமைய்யர்
  • வெ.இ. இராமசாமி ஐயர்
  • வினைதீர்த்தான் ஆசாரி
  • சொ. முத்தையா பிள்ளை

இலக்கிய வாழ்க்கை

செய்யுள்கள் பல இயற்றினார். கம்பராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் வெண்பாக்களாகப் பாடினார். க.வீ.அள.மு. இராம நாதன் செட்டியார் இந்நூலை அச்சில் பதிப்பித்தார்.

பாடல் நடை

அயோத்தியா காண்டம் சூழ்வினைப்படலம்

மன்னவன்சொல் அன்றேல் மறுப்பனோ நின்பணியென்
பின்னவன் றன் செல்வமியான் பெற்றதன்றோ - என்னவிதின்
செல்வாம் வன்மின்றே சேரவிடை தாவென்றான்
சொல்வாள் மலர்தாள் துதித்து

சிறப்புப்பாயிரம் பாடியவர்கள்

  • இராமசந்திர சாஸ்திரிகள்
  • கிரீச பாகவதர்
  • வீமசேஷ கவிராயர்
  • ஆவுடையார் கோயில் க. சுப்ரமணிய ஐயர்
  • வெ. இராமசாமி ஐயர்
  • பரமேசுரக் குருக்கள்
  • வினைதீர்த்தான் ஆசாரி
  • சொ. முத்தையபிள்ளை
  • வேங்கட்டராமையார்

நூல் பட்டியல்

  • இராமாயணம் வெண்பா
  • துர்க்காம்பாள் பதிகம்

உசாத்துணை

Template:First Review Completed