கவிதைக்காரன் இளங்கோ: Difference between revisions
(Changed incorrect text: {{ready for review}}) |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
Line 13: | Line 13: | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
கவிதைக்காரன் இளங்கோவின் முதல் கவிதைத் தொகுப்பு "ப்ரைலியில் உறையும் நகரம்" 2014- | கவிதைக்காரன் இளங்கோவின் முதல் கவிதைத் தொகுப்பு "ப்ரைலியில் உறையும் நகரம்" 2014-ல் அன்றைய ஆளுனர் ரோசய்யாவால் ராஜ்பவனில் வெளியிடப்பட்டது. பனிகுல்லா, மோகன் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளது. 360 டிகிரி, கோமாளிகளின் நரகம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ஏழு பூட்டுக்கள் எனும் நாவலும் எழுதினார். திரைமொழிப் பார்வை எனும் கட்டுரை நூலும் வெளிவந்தது. கவிதைக்காரன் இளங்கோ தனது முன்னோடியாக பிரமிள் மற்றும் ஆத்மாநாமை குறிப்பிடுகிறார். | ||
== இலக்கிய இடம் == | == இலக்கிய இடம் == | ||
== நூல்கள் == | == நூல்கள் == |
Revision as of 15:12, 26 March 2024
கவிதைக்காரன் இளங்கோ (இளங்கோ) (பிறப்பு: ) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கவிஞர். இதழாசிரியர். திரைத்துறையில் ஒளிப்பதிவாளராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.
பிறப்பு,கல்வி
கவிதைக்காரன் இளங்கோ இயற்பெயர் இளங்கோ. வடச்சென்னையில் பிறந்தார். தூத்துக்குடி, சென்னையில் பள்ளிக் கல்வி பயின்றார். இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றார். தனியார் திரைப்படக் கல்வியகத்தில் ஓராண்டு ஒளிப்பதிவு பட்டயப் படிப்பு முடித்தார். சென்னையில் வசிக்கிறார்.
அமைப்புப் பணிகள்
- Pure Cinema அமைப்பு நடத்தும் Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்தினார்.
- ‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்ற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தினார்.
திரை வாழ்க்கை
கவிதைக்காரன் இளங்கோ திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணியிலிருந்தார். அதன்பின் உதவி இயக்குநராகவும் சில வருடங்கள் பணி பணியாற்றினார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் (Script Consultant) பங்களிப்பாற்றினார்.
இதழியல்
கவிதைக்காரன் இளங்கோ கணையாழியின் துணையாசிரியராகவும், யாவரும் இணைய இதழின் ஆசிரியராகவும் இருந்தார். 2019 முதல் கணையாழி கலை இலக்கியத் இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
கவிதைக்காரன் இளங்கோவின் முதல் கவிதைத் தொகுப்பு "ப்ரைலியில் உறையும் நகரம்" 2014-ல் அன்றைய ஆளுனர் ரோசய்யாவால் ராஜ்பவனில் வெளியிடப்பட்டது. பனிகுல்லா, மோகன் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளது. 360 டிகிரி, கோமாளிகளின் நரகம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ஏழு பூட்டுக்கள் எனும் நாவலும் எழுதினார். திரைமொழிப் பார்வை எனும் கட்டுரை நூலும் வெளிவந்தது. கவிதைக்காரன் இளங்கோ தனது முன்னோடியாக பிரமிள் மற்றும் ஆத்மாநாமை குறிப்பிடுகிறார்.
இலக்கிய இடம்
நூல்கள்
நாவல்
- ஏழு புட்டுகள் (யாவரும் பதிப்பகம்)
கவிதைத் தொகுப்பு
- ப்ரைலியில் உறையும் நகரம் (யாவரும் பதிப்பகம்)
- 360 டிகிரி (யாவரும் பதிப்பகம்)
- கோமாளிகளின் நரகம் (யாவரும் பதிப்பகம்)
சிறுகதைகள் தொகுப்பு
- பனிகுல்லா (யாவரும் பதிப்பகம்)
- மோகன் (யாவரும் பதிப்பகம்)
கட்டுரை
- திரைமொழிப்பார்வை (யாவரும் பதிப்பகம்)
உசாத்துணை
இணைப்புகள்
- இளங்கோவை பூதம் விழுங்கட்டும்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
- தற்காலத் தமிழ்ப் படங்களில் வண்ணக் குறியீடுகள்: கவிதைக்காரன் இளங்கோ
- எஸ்.ராமகிருஷ்ணன் - நாவல்கள் | கவிதைக்காரன் இளங்கோ: உரை
- எழுத்தாளர் கவிதைக்காரன் இளங்கோ தலைமையுரை | நூல் வெளியீடு | வாசகசாலை: உரை
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.