being created

ஓஷோ: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 11: Line 11:
== ஆன்மிக வாழ்க்கை ==
== ஆன்மிக வாழ்க்கை ==
ஓஷோ சிறு வயது முதல் தியானத்தில் ஈடுபட்டார். தன் இருபத்து ஒன்று வயதில் (மார்ச் 21, 1953) ஞானம் அடைந்தார். 1966 முதல் முழு நேரமாக ஆன்மிகப்பணியில் ஈடுபட்டார். ஏப்ரல் 14, 1970-ல் தனித்துவமான தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகப்படுத்தினார்.
ஓஷோ சிறு வயது முதல் தியானத்தில் ஈடுபட்டார். தன் இருபத்து ஒன்று வயதில் (மார்ச் 21, 1953) ஞானம் அடைந்தார். 1966 முதல் முழு நேரமாக ஆன்மிகப்பணியில் ஈடுபட்டார். ஏப்ரல் 14, 1970-ல் தனித்துவமான தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகப்படுத்தினார்.
===== புது சந்நியாசம் =====
1970-1974 வரை மும்பையில் வசித்தார். இந்த கால கட்டத்தில் ஸ்ரீ ரஜனீஷ் என்பவரிடம் தீட்சை பெற்றார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட அமைப்பில் அமர்ந்தார். இந்தப் பாதையில் வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமென்ற கொள்கையைக் கொண்ட அமைப்பு.
===== ரஜனீஷ்புரம் =====
ஐக்கிய் அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தின் மத்தியப்பகுதியில் ரஜனீஷ்புரம் என்ற நகரத்தை அமைத்தார். அதில் ஐயாயிரம் பேர் கொண்ட கம்யூன் உருவானது. கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்பட்டபோது உலகம் முழுவதுமிலிருந்து பதினைந்தாயிரம் பேர் பங்கேற்றனர். அதன் செயல்பாட்டுத்தன்மையைப் பற்றிய சர்ச்சையில் அதன் மேல் எதிர்ப்பு உருவாகியது.


செப்டம்பர் 14, 1985-ல் ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும், கம்யூனின் பொறுப்பிலிருந்த சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறினர். கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் அதன்பின் ஈடுபட்டனர். நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைத்தார். அக்டோபர் 28-ல் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் ஓஷோ கைது செய்யப்பட்டார். பன்னிரெண்டு நாட்கள் காவலிலிருந்த ஓஷோவிற்கு ”தாலியம்” என்ற விஷம் கொடுக்கப்பட்டது.


1970 ஜூலையில் மும்பைக்கு வந்த அவர் 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்ட அவர் ஆன்மீக சாதகர்களுக்கு தீட்சை அளித்து சிஷ்யர்களாக்கினார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாதையில் வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமெனச் சொல்கிறார்.
1986-ல் ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வந்தார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுத்தது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் சென்றார். கிரீஸில் தங்க முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தின. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை. 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடை விதித்தன. அவர் வந்திறங்கிவிட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. ஜூலை 29, 1986-ல் இந்தியா பம்பாய்க்குத் திரும்பினார்.
 
== எழுத்து ==
ரஜனீஷ்புரம்
தரிசு நிலமாக பாழடைந்த மத்திய ஓரேகானின் பகுதியில் ரஜனீஷ்புரம் என்ற நகரம் உருப்பெறுகிறது. அதில் 5000 பேர் வசிக்க ஆரம்பிக்கின்றனர். கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்படுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 15,000 பேர் பங்கேற்கின்றனர். வெகு விரைவிலேயே அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ரஜனீஷ்புரம் மிகப் பெரிய அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கிடமான ஒரு ஆன்மீக்குடியிருப்பாக மலர்கிறது. கம்யூனுக்கும் புதுநகருக்கும் அதன் வளர்ச்சியோடு கூடவே எதிர்ப்பும் வலுக்கிறது.
 
கம்யூன் அழிக்கப்படுகிறது
1985 செப் 14ந் தேதி ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும் மற்றும் கம்யூனின் பொறுப்பில் உள்ள சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறுகின்றனர், அவர்கள் செய்த கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான பல செயல்கள் அம்பலமாயின நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைக்கிறார். ஆனால் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் இந்த புகாரை கம்யூனை அழித்துவிட கிடைத்த தங்கமான வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்.
 
அக்டோபர் 28 - எந்தவித கைதி ஆணையின்றி மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியும் உள்ளூர் போலீஸும் சேர்ந்து ஓஷோவையும் மற்றவர்களையும் துப்பாக்கி முனையில் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் கைது செய்கின்றனர். மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு ஓஷோவை மட்டும் பனிரெண்டு நாட்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் பிடித்து வைத்திருக்கின்றனர்.
 
அங்கே சிறையில் இருந்த போதுதான் அவருக்கு ‘தாலியம்' என்ற கொடுமையான விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
உலக சுற்றுப் பயணம்
1986 ஜன, பிப்ர - ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வருகிறார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுக்கிறது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் புறப்படுகிறார்.
 
பிப்ர, மார்ச் - முதல் நாடாக அவர் முப்பது நாட்கள் சுற்றுலா விசாவில் கிரீஸில் தங்குகிறார். ஆனால் பதினெட்டு நாட்களுக்கு பின் மார்ச் 5ந் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிற்குள் கதவை உடைத்து உள்ளே வந்த போலீஸ் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்று அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. அரசாங்கம் மற்றும் சர்ச் ஆகியவையே போலீஸை இந்த செயல் செய்யத் தூண்டின என கிரீஸ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன.
 
இதைத் தொடர்ந்து அவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயண அனுமதி கேட்கவோ, சுற்றுப்பயணமாக செல்லவோ முயற்சிக்கிறார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை.
 
21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன அல்லது அவர் வந்திறங்கி விட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா பம்பாய்க்கு திரும்ப வந்துசேர்கிறார்.
 
ஓஷோ மரணம்
1990 ஜனவரி 19 மாலை 5 மணிக்கு ஓஷோவின் உடலை விட்டு உயிர் பிரிந்தது.[1][2] ஓஷோவின் சமாதி மீது பொறிக்கப்பட்ட பொன்வரிகள்: 'ஓஷோ பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை. பூமி எனும் கிரகத்தில் அவர் பார்வையிட்ட காலம் டிசம்பர் 11,1931- ஜனவரி 19,1990 [3]
 
சொற்பொழிவுகள்
ஓஷோ எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து சொற்பொழிவு நிகழ்த்துபவர்.இவரது சொற்பொழிவுகள் சீடர்களால் எழுதப்பட்டு நூற்களாக வெளிவரப்பெற்றன.
ஓஷோ எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து சொற்பொழிவு நிகழ்த்துபவர்.இவரது சொற்பொழிவுகள் சீடர்களால் எழுதப்பட்டு நூற்களாக வெளிவரப்பெற்றன.
== இலக்கிய வாழ்க்கை ==
== மறைவு ==
== விருதுகள்==
ஜனவரி 19, 1990-ல் ஓஷோ காலமானார். ஓஷோவின் சமாதி மீது ”ஓஷோ பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை.” என்ற வரி பொறிக்கப்பட்டது.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

Revision as of 12:07, 11 March 2024

ஓஷோ

ஓஷோ (ரஜ்னீஷ் சந்திர மோகன்)(பிறப்பு: டிசம்பர் 11, 1931) ஆன்மிகவாதி, சிந்தனையாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். ஓஷோ மத்திய பிரதேசம் மாநிலம் குச்வாடா என்ற சிற்றூரில் டிசம்பர் 11, 1931-ல் பிறந்தார். குச்வாடாவில் தன் தாய் வழி தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தார். பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்தனர். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா சென்றார்.

1956-ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெற்றார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவர்.

பெயர்க்காரணம்

வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்ட 'ஓஷியானிக்' என்ற சொல்லிருந்து தம் பெயர் உருவானதாக ஓஷோ குறிப்பிட்டார். ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து போவது எனப் பொருள். இச்சொல் அனுபவத்தை குறிக்கிறது. ஆனால் அனுபவிப்பவரை குறிக்கவில்லை. எனவே “ஓஷோ” என்ற சொல்லை உருவாக்கினார். கீழைநாடுகளில் இதன் பொருள் ”வானம் பூச்சொரிந்து ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன்” என்பது.

ஆசிரியப்பணி

1957-ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெற்றார். 1958-ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்றார். 1966-ல் வேலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஆன்மிகத்தில் ஈடுபட்டார்.

ஆன்மிக வாழ்க்கை

ஓஷோ சிறு வயது முதல் தியானத்தில் ஈடுபட்டார். தன் இருபத்து ஒன்று வயதில் (மார்ச் 21, 1953) ஞானம் அடைந்தார். 1966 முதல் முழு நேரமாக ஆன்மிகப்பணியில் ஈடுபட்டார். ஏப்ரல் 14, 1970-ல் தனித்துவமான தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகப்படுத்தினார்.

புது சந்நியாசம்

1970-1974 வரை மும்பையில் வசித்தார். இந்த கால கட்டத்தில் ஸ்ரீ ரஜனீஷ் என்பவரிடம் தீட்சை பெற்றார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட அமைப்பில் அமர்ந்தார். இந்தப் பாதையில் வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமென்ற கொள்கையைக் கொண்ட அமைப்பு.

ரஜனீஷ்புரம்

ஐக்கிய் அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தின் மத்தியப்பகுதியில் ரஜனீஷ்புரம் என்ற நகரத்தை அமைத்தார். அதில் ஐயாயிரம் பேர் கொண்ட கம்யூன் உருவானது. கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்பட்டபோது உலகம் முழுவதுமிலிருந்து பதினைந்தாயிரம் பேர் பங்கேற்றனர். அதன் செயல்பாட்டுத்தன்மையைப் பற்றிய சர்ச்சையில் அதன் மேல் எதிர்ப்பு உருவாகியது.

செப்டம்பர் 14, 1985-ல் ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும், கம்யூனின் பொறுப்பிலிருந்த சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறினர். கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் அதன்பின் ஈடுபட்டனர். நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைத்தார். அக்டோபர் 28-ல் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் ஓஷோ கைது செய்யப்பட்டார். பன்னிரெண்டு நாட்கள் காவலிலிருந்த ஓஷோவிற்கு ”தாலியம்” என்ற விஷம் கொடுக்கப்பட்டது.

1986-ல் ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வந்தார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுத்தது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் சென்றார். கிரீஸில் தங்க முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தின. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை. 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடை விதித்தன. அவர் வந்திறங்கிவிட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. ஜூலை 29, 1986-ல் இந்தியா பம்பாய்க்குத் திரும்பினார்.

எழுத்து

ஓஷோ எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதிலளித்து சொற்பொழிவு நிகழ்த்துபவர்.இவரது சொற்பொழிவுகள் சீடர்களால் எழுதப்பட்டு நூற்களாக வெளிவரப்பெற்றன.

மறைவு

ஜனவரி 19, 1990-ல் ஓஷோ காலமானார். ஓஷோவின் சமாதி மீது ”ஓஷோ பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை.” என்ற வரி பொறிக்கப்பட்டது.

நூல் பட்டியல்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.