being created

நம்பியகப்பொருள்: Difference between revisions

From Tamil Wiki
Line 1: Line 1:
நம்பியகப்பொருள் (பொ.யு. பதிமூன்றாம் நூற்றாண்டு) தொல்காப்பியத்தின் அகத்திணையையை விளக்கிக் கூறும் நூல். அகப்பொருள் இலக்கணத்துக்கென்று உள்ள ஒரு தனிப்பெரும் நூல். 'அகப்பொருள் விளக்கம்' என்றும் அழைக்கப்படுகிறது.
நம்பியகப்பொருள் (பொ.யு. பதிமூன்றாம் நூற்றாண்டு) தொல்காப்பியத்தின் அகத்திணையையை விளக்கிக் கூறும் நூல். அகப்பொருள் இலக்கணத்துக்கென்று உள்ள ஒரு தனிப்பெரும் நூல். 'அகப்பொருள் விளக்கம்' என்றும் அழைக்கப்படுகிறது.
== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==


Line 12: Line 10:


இந்நூல் சிறப்புப்பாயிரத்தோடு தொடங்குகிறது. அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்னும் 5 பகுதிகளில்  252 நூற்பாக்களைக் கொண்டது.
இந்நூல் சிறப்புப்பாயிரத்தோடு தொடங்குகிறது. அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்னும் 5 பகுதிகளில்  252 நூற்பாக்களைக் கொண்டது.
====== அகத்திணையியல் ======
கைக்கிளை -'கைக்கிளை உடையது ஒருதலைக் காமம்'. கைக்கிளை என்பது ஒருதலைக்காமம். தலைவன் தலைவிமாட்டுத் ஒருதலையாய்க் கொள்ளும் அன்பு. சிலபோது தலைவன் மாட்டுத் தலைவியிடமும் தோன்றுவதுண்டு.எனவே இது ஆண்பாற் கைக்கிளை பெண்பாற் கைக்கிளை என இருவகைப்பட்டது.
ஐந்திணை: “ஐந்திணை உடையது அன்புடைக் காமம்';.” ஐந்திணை என்பதனுடைய பொருள் அன்புடைக் காமம் ஆகும். அது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பாலை என்று ஐவகைப்படும்.
பெருந்திணை: “பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்.” இது ஒப்புமை இல்லாத் தலைமக்கள் மாட்டுத் தோன்றுவது. இவ்வொழுக்கம் மிகுதியாகப் பின்பற்றப்பட்டமையால் பெருந்திணை எனப்பட்டது.
====== களவியல் ======


== பாடல் நடை ==
== பாடல் நடை ==

Revision as of 06:58, 6 February 2024

நம்பியகப்பொருள் (பொ.யு. பதிமூன்றாம் நூற்றாண்டு) தொல்காப்பியத்தின் அகத்திணையையை விளக்கிக் கூறும் நூல். அகப்பொருள் இலக்கணத்துக்கென்று உள்ள ஒரு தனிப்பெரும் நூல். 'அகப்பொருள் விளக்கம்' என்றும் அழைக்கப்படுகிறது.

ஆசிரியர்

நம்பியகப்பொருளின் ஆசிரியர் நாற்கவிராசநம்பி. இவர் புளிங்குடி என்ற ஊரைச்சேர்ந்த உய்யவந்தான் என்வரின் மகன்.சமண சமயத்தவர். நம்பி என்பது இயற்பெயர். தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர். ஆசுகவி - மதுரகவி - சித்திரக்கவி - வித்தாரக்கவி என்னும் நால்வகைப் பாக்களும் புனையும் ஆற்றல் உடையவராதலால் ‘நாற்கவிராசன்’ எனப் பெயர் பெற்றார்.

நூல் அமைப்பு

நம்பி தம் அகப்பொருள் நூலுக்கு “அகப்பொருள் விளக்கம்” என்று பெயரிட்டுள்ளார். இவரே நூலுக்கு உரையும் எழுதியுள்ளார். தமது உரையில் பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைச் செய்யுட்களை உதாரணம் காட்டியுள்ளார். இந்நூல் பாண்டியன் குலசேகரன் அவையில் அரங்கேற்றப்பட்டது.

தொல்காப்பியர் வகுத்துரைத்த அகப்பொருள் இலக்கணத்தை மனத்தில் கொண்டு, சங்கப் புலவர் செய்யுட்களில் காணப்பட்ட கூற்றுகளையும் சேர்த்துச் சிந்தித்துச் சூத்திரம் யாத்து உரையும் வகுத்தார் நாற்கவிராச நம்பி என்று, இந்நூலின் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.

இந்நூல் சிறப்புப்பாயிரத்தோடு தொடங்குகிறது. அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்னும் 5 பகுதிகளில் 252 நூற்பாக்களைக் கொண்டது.

அகத்திணையியல்

கைக்கிளை -'கைக்கிளை உடையது ஒருதலைக் காமம்'. கைக்கிளை என்பது ஒருதலைக்காமம். தலைவன் தலைவிமாட்டுத் ஒருதலையாய்க் கொள்ளும் அன்பு. சிலபோது தலைவன் மாட்டுத் தலைவியிடமும் தோன்றுவதுண்டு.எனவே இது ஆண்பாற் கைக்கிளை பெண்பாற் கைக்கிளை என இருவகைப்பட்டது.

ஐந்திணை: “ஐந்திணை உடையது அன்புடைக் காமம்';.” ஐந்திணை என்பதனுடைய பொருள் அன்புடைக் காமம் ஆகும். அது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பாலை என்று ஐவகைப்படும்.

பெருந்திணை: “பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்.” இது ஒப்புமை இல்லாத் தலைமக்கள் மாட்டுத் தோன்றுவது. இவ்வொழுக்கம் மிகுதியாகப் பின்பற்றப்பட்டமையால் பெருந்திணை எனப்பட்டது.

களவியல்

பாடல் நடை

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.