under review

வேலன் வெறியாட்டு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: {{ready for review}})
Line 17: Line 17:
* [https://nallakurunthokai.blogspot.com/2017/06/362.html 362. தோழி கூற்று: nallakurunthokai]
* [https://nallakurunthokai.blogspot.com/2017/06/362.html 362. தோழி கூற்று: nallakurunthokai]


{{ready for review}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:11, 25 December 2023

வேலன் வெறியாட்டு சங்ககாலப் பாடல்கள் வழி அறியவரும் தமிழர் சடங்கு. இந்தச்சடங்கு பற்றி வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன், வெறிபாடிய காமக்கண்ணியார் ஆகிய புலவர்கள் எழுதிய பாடல்களில் குறிப்பு உள்ளது.

வேலன் வெறியாட்டு பற்றி

தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவி உடல் மெலிந்து சோர்வுறுவதைக் கண்டு அவளின் அன்னை பேய் பீடித்திருக்குமோ என்று கருதி வேலனை வெறியாட்டு பூசை நடத்த அழைக்கிறாள். இது மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சித்திணையில் நடக்கும் சடங்குமுறை. பலவகையான உணவுப் பொருள்களை முருகனுக்குப் படைத்து, சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று பலி கொடுத்து தலைவியின் நெற்றியைத் தடவி அவளின் துன்பத்தைப் போக்கும் சடங்கு.

பாடல்

  • குறுந்தொகை: 362 (குறிஞ்சித்திணை)

முருகயர்ந் துவந்த முதுவாய் வேல
சினவ லோம்புமதி வினவுவ துடையேன்
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு
சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி
வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.