நேமிநாதர்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
||
| Line 9: | Line 9: | ||
* ஜினசேனாவின் ஹரிவம்ச புராணம் | * ஜினசேனாவின் ஹரிவம்ச புராணம் | ||
* நேமிநாத-சரித்ரா - பனை ஓலை கையெழுத்துப் பிரதி - பொ.யு. 1198-1142 - சாந்திநாத பண்டாரா, கம்பாத்தில் பாதுகாக்கப்படுகிறது | * நேமிநாத-சரித்ரா - பனை ஓலை கையெழுத்துப் பிரதி - பொ.யு. 1198-1142 - சாந்திநாத பண்டாரா, கம்பாத்தில் பாதுகாக்கப்படுகிறது | ||
* நேமிநாதர் மீதான ராஜுலின் காதல் ராஜல்-பரஹ்மசாவில் விவரிக்கப்பட்டுள்ளது. (விஜயசந்திரசூரியின் 14- | * நேமிநாதர் மீதான ராஜுலின் காதல் ராஜல்-பரஹ்மசாவில் விவரிக்கப்பட்டுள்ளது. (விஜயசந்திரசூரியின் 14-ம் நூற்றாண்டின் தொடக்கக் கவிதை) | ||
* கல்ப சூத்திரம் | * கல்ப சூத்திரம் | ||
* ராஜசேகர் எழுதிய நேமிநாத பாகு (1344) | * ராஜசேகர் எழுதிய நேமிநாத பாகு (1344) | ||
| Line 15: | Line 15: | ||
* சோம்சுந்தரின் ரங்கசாகர நேமிநாத பாகு (1400) | * சோம்சுந்தரின் ரங்கசாகர நேமிநாத பாகு (1400) | ||
* வினய்ச்சந்திராவின் நேமிநாத சதுஷ்பதிகா (1269) | * வினய்ச்சந்திராவின் நேமிநாத சதுஷ்பதிகா (1269) | ||
* அர்த்த நேமி: "நேமியின் முடிக்கப்படாத வாழ்க்கை", 13- | * அர்த்த நேமி: "நேமியின் முடிக்கப்படாத வாழ்க்கை", 13-ம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க கன்னட கவிஞர்களில் ஒருவரான ஜன்னாவின் முழுமையற்ற காவியம் | ||
== நேமிநாதர் உருவம் == | == நேமிநாதர் உருவம் == | ||
கிருஷ்ணனைப் போலவே கருநீல நிறத்தோலை நேமிநாதர் உடையவராக நம்பப்படுகிறது. அவரது வாழ்க்கைக் கதைகளை சித்தரிக்கும் ஓவியம் பொதுவாக அவரை அடர் நிறத்தில் அடையாளப்படுத்துகிறது. அவரது உருவ அடையாளங்காட்டியானது அவரது சிலைகளுக்கு கீழே செதுக்கப்பட்ட அல்லது முத்திரையிடப்பட்ட சங்கு. சில சமயங்களில், விஷ்ணுவின் உருவப்படத்தைப் போலவே, படாவலி (மத்தியப் பிரதேசம்) அருகே உள்ள தொல்பொருள் தளத்தில் காணப்படும் பொ.யு. 6- | கிருஷ்ணனைப் போலவே கருநீல நிறத்தோலை நேமிநாதர் உடையவராக நம்பப்படுகிறது. அவரது வாழ்க்கைக் கதைகளை சித்தரிக்கும் ஓவியம் பொதுவாக அவரை அடர் நிறத்தில் அடையாளப்படுத்துகிறது. அவரது உருவ அடையாளங்காட்டியானது அவரது சிலைகளுக்கு கீழே செதுக்கப்பட்ட அல்லது முத்திரையிடப்பட்ட சங்கு. சில சமயங்களில், விஷ்ணுவின் உருவப்படத்தைப் போலவே, படாவலி (மத்தியப் பிரதேசம்) அருகே உள்ள தொல்பொருள் தளத்தில் காணப்படும் பொ.யு. 6-ம் நூற்றாண்டு சிற்பத்தைப் போலவே, அவருக்கு அருகில் ஒரு சக்கரமும் காட்டப்படுகிறது. நேமிநாதரைக் காட்டும் கலைப்படைப்புகளில் சில சமயங்களில் அம்பிகா யட்சியும் அடங்கும், ஆனால் அவளது நிறம் தங்கம்/பச்சை/அடர் நீலம் என பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடும்.நேமிநாதரின் ஆரம்பகால உருவம் பொ.யு. 18-ம் நூற்றாண்டின் கன்காலி திலாவைச் சார்ந்தது. | ||
[[File:நேமிநாதர் அடையாளம்.png|thumb|218x218px|நேமிநாதர் அடையாளம்]] | [[File:நேமிநாதர் அடையாளம்.png|thumb|218x218px|நேமிநாதர் அடையாளம்]] | ||
== அடையாளங்கள் == | == அடையாளங்கள் == | ||
Revision as of 09:17, 24 February 2024
நேமிநாதர் சமண சமயத்தின் இருபத்தியிரண்டாவது தீர்த்தங்கரர்.
புராணம்
சமண சமயக் கருத்துக்களின்படி, நேமிநாதர் சித்தராக வாழ்ந்தவர். உலக போகங்களை துறந்து விடுதலை அடைந்தவர். சமுத்திரவிஜயனுக்கும் சிவாதேவிக்கும் யாதவ குலத்தில், சௌரிபுரம் எனும் துவாரகையில் ஆவணி வளர்பிறை ஐந்தாம் நாள் பிறந்தார். இவரது வேறு பெயர் அரிஷ்டநேமி. நேமிநாதரின் கதை சமணமகாபாரதத்தில் உள்ளது. அவர் அந்தக விருஷ்ணிகுலத்தில் பிறந்தவர். துவாரகை கிருஷ்ணனின் ஒன்றுவிட்ட சகோதரர். திருமண நாளன்று நேமிநாதர் திருமண விருந்துக்காக விலங்குகள் கொல்லப்படுவதைக் கண்டு, திருமணத்தையும் விலங்குகளையும் விடுவித்து, துறவியாக உலகைத் துறந்தார். இது பல சமண கலைப்படைப்புகளில் காணப்படுகிறது. ஜைனர்களின் புனித யாத்திரை மையமான ஜூனாகத் அருகே உள்ள கிர்னார் மலையில் அவர் மோட்சம் அடைந்ததாக நம்பப்படுகிறது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்து முனிவர் அரிஷ்ட்நேமி நேமிநாத் என்றும் அரிஷ்டநேமி பிராமணர் என்றும் நேமிநாத் க்ஷத்திரியர் என்றும் ஜைனர்கள் கூறுகின்றனர். மேலும் அவர்களின் காலமும் வேறுபட்டது.
பெயர்க்காரணம்
நேமி என்பதற்கு "விளிம்பு/சக்கரம்/ இடி" மற்றும் நாதா என்பதற்கு "ஆண்டவர்/புரவலர்/பாதுகாவலர்" பொருள். சமண உரையான உத்தரபுராணத்திற்கு ஆச்சார்யா ஹேமச்சந்திரரின் விளக்கத்தின்படி, பண்டைய இந்திய தெய்வமான இந்திரன் சமணத்தின் இருபத்தியிரண்டாவது தீர்த்தங்கரருக்கு நேமிநாதர் என்று பெயரிட்டார். அவர் ஜினாவை "தர்ம சக்கரத்தின் விளிம்பு" என்று கருதினார். ஸ்வேதாம்பர ஜைன நூல்களில், கர்ப்ப காலத்தில் அவரது தாயார் கனவில் 'அரிஷ்டா நகைகளின் சக்கரத்தை' கண்டதால் அரிஷ்டநேமி என்று பெயரிட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இலக்கியம்
- ஜினசேனாவின் ஹரிவம்ச புராணம்
- நேமிநாத-சரித்ரா - பனை ஓலை கையெழுத்துப் பிரதி - பொ.யு. 1198-1142 - சாந்திநாத பண்டாரா, கம்பாத்தில் பாதுகாக்கப்படுகிறது
- நேமிநாதர் மீதான ராஜுலின் காதல் ராஜல்-பரஹ்மசாவில் விவரிக்கப்பட்டுள்ளது. (விஜயசந்திரசூரியின் 14-ம் நூற்றாண்டின் தொடக்கக் கவிதை)
- கல்ப சூத்திரம்
- ராஜசேகர் எழுதிய நேமிநாத பாகு (1344)
- ஜெயசேகரின் நேமிநாத பாகு (1375)
- சோம்சுந்தரின் ரங்கசாகர நேமிநாத பாகு (1400)
- வினய்ச்சந்திராவின் நேமிநாத சதுஷ்பதிகா (1269)
- அர்த்த நேமி: "நேமியின் முடிக்கப்படாத வாழ்க்கை", 13-ம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க கன்னட கவிஞர்களில் ஒருவரான ஜன்னாவின் முழுமையற்ற காவியம்
நேமிநாதர் உருவம்
கிருஷ்ணனைப் போலவே கருநீல நிறத்தோலை நேமிநாதர் உடையவராக நம்பப்படுகிறது. அவரது வாழ்க்கைக் கதைகளை சித்தரிக்கும் ஓவியம் பொதுவாக அவரை அடர் நிறத்தில் அடையாளப்படுத்துகிறது. அவரது உருவ அடையாளங்காட்டியானது அவரது சிலைகளுக்கு கீழே செதுக்கப்பட்ட அல்லது முத்திரையிடப்பட்ட சங்கு. சில சமயங்களில், விஷ்ணுவின் உருவப்படத்தைப் போலவே, படாவலி (மத்தியப் பிரதேசம்) அருகே உள்ள தொல்பொருள் தளத்தில் காணப்படும் பொ.யு. 6-ம் நூற்றாண்டு சிற்பத்தைப் போலவே, அவருக்கு அருகில் ஒரு சக்கரமும் காட்டப்படுகிறது. நேமிநாதரைக் காட்டும் கலைப்படைப்புகளில் சில சமயங்களில் அம்பிகா யட்சியும் அடங்கும், ஆனால் அவளது நிறம் தங்கம்/பச்சை/அடர் நீலம் என பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடும்.நேமிநாதரின் ஆரம்பகால உருவம் பொ.யு. 18-ம் நூற்றாண்டின் கன்காலி திலாவைச் சார்ந்தது.
அடையாளங்கள்
- உடல் நிறம்: கரு நீலம்
- லாஞ்சனம்: சங்கு
- மரம்: மூங்கில் மரம்
- உயரம்: 10 வில் (98 அடி)
- கை: 40
- முக்தியின் போது வயது: 1000 வருடங்கள்
- முதல் உணவு: துவாரவதியின் அரசர் வரதத்தா அளித்த கீர்
- தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 11 (வரதத்தா)
- யட்சன்: சார்வாகா தேவ்
- யட்சினி: கூஷ்மாண்டி தேவி
கோயில்கள்
- கிர்னார் ஜெயின் கோவில்கள்
- திருமலை (ஜெயின் வளாகம்)
- சங்க பசதி, லக்ஷ்மேஸ்வரா
- குல்பக்ஜி
- அரஹந்தகிரி ஜெயின் மடம்
- நெமகிரி
- தில்வாரா கோயில்கள்
- பந்த் தேவால், அரங்க்
- ஓடேகல் பசடி
உசாத்துணை
- Neminath Swami, Encyclopedia of Jainism
- நேமிநாதர்,கிருஷ்ணன்,காந்தி | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
✅Finalised Page