ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில்: Difference between revisions
Line 78: | Line 78: | ||
== சிற்பங்கள் == | == சிற்பங்கள் == | ||
===== உலோகச் சிற்பங்கள் ===== | |||
====== சோமாஸ்கந்தர் ====== | |||
====== சோமாஸ்கந்தர் அம்மன் ====== | |||
கந்தர் | |||
வள்ளி | |||
தெய்வானை | |||
நந்தி | |||
அம்மன் | |||
நடராஜர் | |||
சிவகாமி அம்மன் | |||
துர்கை அம்மன் | |||
மாணிக்கவாசகர் | |||
சந்திரசேகரர் | |||
சந்திரசேகர அம்மன் | |||
விநாயகர் | |||
பிரதோஷ நாயகர் | |||
பிரதோஷ நாயகர் அம்மன் | |||
சண்டிகேஸ்வரர் | |||
கண்ணப்ப நாயனார் | |||
===== கல் சிற்பங்கள் ===== | |||
====== விநாயகர் ====== | |||
====== சங்கர நாராயணர் ====== | |||
====== தேவியருடன் முருகன் ====== | |||
===== மரச்சிற்பங்கள் ===== | |||
====== தேர்கள் ====== | |||
== வழிபாடு == | == வழிபாடு == | ||
Line 185: | Line 233: | ||
|எமன் | |எமன் | ||
|எருமை | |எருமை | ||
|} | |}ஜலகண்டேஸ்வரர் | ||
சந்திரசூடேஸ்வரர் கோவில் ஜலகண்டேஸ்வரருக்கு வரட்சிக் காலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஜலகண்டேஸ்வரர் சிற்பம் 2 அடி நீள அகலம் கொண்ட தொட்டியில் உள்ளது. சாதாரணமாக 10 குடம் நீரில் நிரம்பும் தொட்டி வரட்சி காலத்தில் 150 குடங்கள் நீர் கொண்டு நிறைத்தால் மட்டுமே நிரம்பும் என சொல்லப்படுகிறது. நிறைத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் வற்றிவிடும். வரட்சிக் காலத்தில் தொட்டி நிறைந்திருக்கும் படி 16 நாட்கள் வைத்திருந்தால் மழை வரும் என்னும் நம்பிக்கை உள்ளது. | |||
== திருவிழாக்கள் == | |||
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் 13 நாட்கள் நடைபெறுகிறது. மேலும் நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை தீப நாள், மகா சங்கராந்தி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. | |||
====== நிகழ்வுகள் ====== | |||
{| class="wikitable" | |||
|+திருவிழா நிகழ்வுகள் | |||
!நாள் | |||
!பொழுது | |||
!நேரம் | |||
!நிகழ்ச்சி | |||
!நடத்துபவர் | |||
|- | |||
| rowspan="2" |1 | |||
|காலை | |||
|11 | |||
|கொடியேற்றம் | |||
|பொது | |||
|- | |||
|இரவு | |||
|9 | |||
|சிம்ம வாகன உற்சவம் | |||
|வேளாள கவுண்டர் குலத்தினர் | |||
|- | |||
| rowspan="2" |2 | |||
|காலை | |||
|7 | |||
|ஏகாதச ருத்ராபிஷேகம் | |||
|வீரசைவ குலத்தினர் | |||
|- | |||
|இரவு | |||
|9 | |||
|மயில் வாகன உற்சவம் | |||
|பொது | |||
|- | |||
|3 | |||
|இரவு | |||
|9 | |||
|அகங்கார நந்தி உற்சவம் | |||
|வீரசைவ குலத்தினர் | |||
|- | |||
|4 | |||
|இரவு | |||
|9 | |||
|நாக வாகன உற்சவம் | |||
|வைஷ்ய குலம் - கொத்த செட்டி மரபினர் | |||
|- | |||
|5 | |||
|இரவு | |||
|9 | |||
|ரிஷப வாகன உற்சவம் | |||
|பொது | |||
|- | |||
| rowspan="4" |6 | |||
|காலை | |||
|11 | |||
|ருத்ராபிஷேகம், புஷ்ப அலங்காரம் | |||
|பொது | |||
|- | |||
|இரவு | |||
|7 | |||
|புஷ்ப சாற்றுப்படி உற்சவம் | |||
|வன்னுகிரி செட்டி குலத்தினர் | |||
|- | |||
|இரவு | |||
|8 | |||
|திருக்கல்யாண உற்சவம் | |||
|அயோத்தியா நகரம் குலத்தினர் | |||
|- | |||
|இரவு | |||
|9 | |||
|யானை வாகன உற்சவம் | |||
|பொது | |||
|- | |||
| rowspan="3" |7 | |||
|காலை | |||
|10 | |||
|தேரோட்டம் | |||
|பொது | |||
|- | |||
|பகல் | |||
|12 | |||
|பிராமண சந்தர்ப்பணை, ஆர்ய-வைஷ்ய சந்தர்பணை | |||
|பொது | |||
|- | |||
|இரவு | |||
|7 | |||
|பிராமண சந்தர்ப்பணை, ஆர்ய-வைஷ்ய சந்தர்பணை | |||
|பொது | |||
|- | |||
|9 | |||
|மாலை | |||
|5 | |||
|வசந்தோற்பவம் | |||
|பொது | |||
|- | |||
| | |||
|இரவு | |||
|7 | |||
|தெப்ப உற்சவம் | |||
|பொது | |||
|- | |||
| | |||
|இரவு | |||
|10 | |||
|குதிரை வாகன உற்சவம் | |||
|பொது | |||
|- | |||
| | |||
|இரவு | |||
|10.30 | |||
|கொடியிறக்கம் | |||
|பொது | |||
|- | |||
|10 | |||
|மாலை | |||
|6 | |||
|ஊர் உற்சவம் | |||
|தமிழ்நாடு மின்சார வாரியம் | |||
|- | |||
|11 | |||
|மாலை | |||
|6 | |||
|புஷ்பசாற்றுப்படி | |||
|பொது | |||
|- | |||
|12 | |||
|இரவு | |||
|7 | |||
|பிரகார உற்சவம் | |||
|பொது | |||
|- | |||
|13 | |||
|இரவு | |||
|7 | |||
|திருவிழா கடைநாள், சயனோற்சவம் | |||
|பொது | |||
|} | |||
== | ====== வீதிஉலா வாகனங்கள் ====== | ||
{| class="wikitable" | |||
|+திருவீதி உலா வாகனங்கள் | |||
!உற்சவ மூர்த்தி | |||
!வாகனம் | |||
|- | |||
|சோமாஸ்கந்தர் | |||
|இராவண வாகனம் | |||
|- | |||
|அம்பாள் | |||
|முத்துப் பல்லக்கு | |||
|- | |||
|விநாயகர் | |||
|முத்துப் பல்லக்கு | |||
|- | |||
|சுப்பிரமணியர் | |||
|முத்துப் பல்லக்கு | |||
|- | |||
|சந்திரசேகர் | |||
|புஷ்பப் பல்லக்கு | |||
|} | |||
== வரலாறு == | == வரலாறு == |
Revision as of 11:37, 11 September 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் மலைமீது அமைந்துள்ள சிவன் கோவில். கிழக்கு நோக்கிய கோவில் மூலவர் லிங்க வடிவ சந்திரசூடேஸ்வரர், அம்மன் பெயர் மரகதாம்பிகை.
இடம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும் இரயில் நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ. தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை-7 அருகில் மலை மீது மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல வாகனங்கள் செல்லும் சாலை, 200 படிகள் கொண்ட நடைபாதை உள்ளன.
பெயர்
கல்வெட்டுகளில் ஊர் பெயர் ஓசூர் என இல்லை. முடிக்கொண்ட சோழமண்டலம், இராசேந்திர சோழ வளாநாடு, முரசு நாடு, சேவிடைப்பாடி என்னும் பெயர்களில் அறியப்படுகிறது. கோவில் அமைந்திருக்கும் மலை விருமாச்சலம், சம்பகாத்ரி, கௌதியா பருவதம் என்னும் புராணப் பெயர்களால் அறியப்படுகிறது.
மூலவர்
மூலவர் லிங்க வடிவ சிவன். சந்திரசூடேஸ்வரர், சூடனதேசீவரர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். கல்வெட்டுகளில் சேவுடை நாயனார் என்னும் பெயர் காணப்படுகிறது. மூலவரின் துணையான அம்மன் மரகதாம்பிகை, பச்சையம்மன், பர்வதாம்மாள் என்ற பெயர்களில் அழைக்கபடுகிறார்.
தொன்மம்
கோவிலைப் பற்றிய சில புராணக்கதைகள் வாய்மொழியாக உள்ளன.
உடும்புக் கதை
தருமதேவன், சிவனை நோக்கி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கடுந்தவம் புரிய சிவன் காட்சியளித்தார். தன்னை சிவனின் வாகனமாக மாற்றும்படி சிவனைக் கேட்டார். சிவன் வரமளிக்க தருமதேவன் தனது வடிவில் மலை ஒன்றை இவ்விடத்தில் உருவாக்கி அதில் தம்பதியாக காட்சியளிக்க கேட்டுக்கொண்டார். சிவன் நந்தி வடிவிலில் மலைய உருவாக்கி பாரவதியை அங்கு வரவழைக்க திருவிளையாடல் ஒன்று புரிந்தார்.
சிவன் மரகத வண்ண வாக் கொண்ட பலவண்ண உடும்பு வேடம் கொண்டு விளையாட்டு காட்டி ஓடினார். பார்வதி அதனைத் துரத்திச் சென்று ஒருக் கட்டத்தில் அதன் வாலைப்பிடிக்க உடல் மரகத வண்ணம் ஆனது(மரகதாம்பிகை, பச்சையம்மன் - பெயர் காரணம்). பார்வதி உடலின் நிறமாற்றம் கண்டு சுதாரிப்பதற்குள் உடும்பு தப்பி ஓடியது. பார்வதியால் பல மலைகள் துரத்தப்பட்டு ஓசூர் மலைக்கு வந்தது. அங்கு தவம் செய்து கொண்டிருந்த இரு முனிவர்களில் ஒருவர் பலவண்ண உடும்பை கண்டு அதனை இன்னொருவருக்கு காட்ட அழைத்தார். சத்தம் கேட்டு உடும்பு தப்பி மறைந்தது. கோபும் கொண்ட பார்வை முனிவர்களை அழைத்தவரை ஊமையாகவும் கேட்டவரை செவிடாகவும் மாற்றினார்.
முனிவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி மனம் வருந்தி பிராத்திக்க சிவன் காட்சிக் கொடுத்து இரு முனிவர்களும் வேடர் குலத்தில் பிறந்து வளர்ந்து வேட்டைக்கு செல்கையில் தான் உடும்பு வடிவில் காட்சிக் கொடுத்து சாப விமோசனம் அழிப்பதாக வாக்களித்தார். பார்வதி ஓடி வந்ததால் ஏற்பட்ட தாகத்தை உணர்ந்து சிவனிடம் நீர் கோர சிவன் மலையில் ஊற்றுக் குளம் ஒன்றை உருவாக்கினார். குளத்து நீரில் பார்வதி கைப்பட்டதும் குளத்து நீர் பச்சை வண்ணம் பெற்றது(பார்வதி நீர் அருந்தியதாக நம்பப்படும் பச்சைக் குளம் ஆலய வளாகத்தில் உள்ளது).
முனிவர்கள் வேடர் பிறந்து வளர்ந்தனர், ஒரு நாள் வேட்டையாட இம்மலைக்கு வருகையில் உடும்பு வடிவில் சிவனைக் கண்டு சாபத்திலிருந்து விடுபட்டனர்.
கோவில் அமைப்பு
சந்திரசூடேஸ்வரர் கோவில் மலை உச்சியில் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் செல்ல மலை அடிவாரத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி சாலையும் சற்று உள்ளே 200 படிகளைக் கொணட நடைபாதையும் உள்ளன. சாலை வழி ராஜ கோபுரத்தின் வலது பக்கத்திலும் நடை பாதை படிகள் ராஜ கோபுரத்தின் முன்னிலும் இணைகின்றன. கோவில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்னும் அமைப்பைக் கொண்டது.
விநாயகர் கோவில்
படிக்கட்டு பாதையின் தெற்கில் வடக்கு நோக்கி விநாயகர் கோவில் உள்ளது, சதுர வடிவ கருவறை, சதுரவடிவ பீடத்தின் மீது விநாயகர் சிற்பம் உள்ளது. எளிமையான கோவில், செங்கற்களாலான சுதைக் கட்டுமானம். அதிட்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்னும் பகுதிகளைக் கொண்டது.
சண்டிகேஸ்வரர் கோவில்
விநாயகர் கோவிலுக்கு மேலே படிக்கட்டு வழியில் சண்டிகேஸ்வரர் கோவில் தெற்கு நோக்கி உள்ளது. கருவறை முன்பு எட்டு தூண்கள் உள்ளன, உயரம் 180 செ.மீ. அகலம் 100 செ. மீ. கொண்டவை. கருவறை அதிட்டானம், சுவர், பிரஸ்தரம், விமானம் என்னும் அமைப்புக் கொண்டது. விமானத்தில் கர்ணக்கூடுகள், நந்திகள் உள்ளன. சண்டிகேஸ்வரர் நின்ற கோலத்தில் உள்ளார். கறுவறை முன் பாதம் மற்றும் பலிபீடம் உள்ளன.
நுழைவாயில் மண்டபம்
படிக்கட்டு பாதை நுழைவாயிலில் மண்டபம் உள்ளது, நான்கு வட்ட வடிவ தூண்களும் இரண்டு சதுர வடிவ தூண்களும் கொண்டது. இருபுறமும் சிறிய அறைகள் உள்ளன. கோயில் வரை 200 கருங்கல் படிகள், சில படிகளில் கல்வெட்டுகள் உள்ளன.
பச்சைக் குளம்
சந்திரசூடேஸ்வரர் மலையின் கீழே மேற்குப் பக்கம் சுற்றிலும் கருங்கல் கட்டுமானத்துடன் கூடிய குளம் உள்ளது. குளத்தின் நீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. குளத்தின் கிழக்கிலும் தெற்கிலும் இரண்டு மண்டபங்கள் உள்ளன. குளத்தின் தெற்கு கரையில் புற்று மற்றும் ஆஞ்சநேயர் , நாகதேவதை சிற்பங்கள் உள்ளன. குளத்தின் மேற்கில் காசி விஸ்வநாதர், கிழக்கில் நடராஜர் கோவில்கள் உள்ளன. குளத்தின் வடக்கில் உடை மாற்றும் அறை உள்ளது. குளத்தின் நடுவில் தூண்கள் கொண்ட மண்டபம் உள்ளது.
தெற்கு மண்டபம்: நான்கு தூண்கள் கொண்டது. 4 பட்டை, 8 பட்டை, 16 பட்டை கொண்ட தூண்கள்.
கிழக்கு மண்டபம்: ஆறு தூண்கள் கொண்டது, 4 பட்டை, 8 பட்டை, 16 பட்டை கொண்ட தூண்கள்.
நடுமண்டபம்: அதிட்டானம் நான்கு தூண்கள் கொண்டது, சுவர்ப் பகுதி எட்டு தூண்கள் கொண்டது, தூண்கள் வட்ட வடிவம். விமானம் சுதையால் ஆனது, வேசரப் பகுதி கொண்டது, நாரி முகம், நந்திம் கர்ணக்கூடுகள் உள்ளன, மகாபத்மத்தில் ஸ்தூபி உள்ளது, ஸ்தூபியில் வெண்கல கலசம் உள்ளது.
நடராஜர் கோவில்: கருங்கல் கட்டுமானம்; தூணில் முத்துமாலை சிற்பம் உள்ளது; மடப்பள்ளி, நவகிரகம், முருகன், மடப்பள்ளி உள்ளன.
ராஜ கோபுரம்
விஜயநகர மேரரசு காலத்தில் கட்டத் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்ட ராஜகோபுரம் இடிக்கப்பட்டு, 112 அடி உயரத்தில் ஏழு நிலைகளுடன் புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டது. 2023-ஆம் ஆண்டு ஜூன் 28-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது,மேற்கு நோக்கி அமைந்தது, உச்சியில் கலசங்கள் உள்ளன.
தெற்கு கோபுரம்
ராஜ கோபுரம் வழி உள்ளே சென்று கோவில் வெளிப்பிரகார மதில்ச் சுவரின் தெற்கு வாயில் வழி செல்கையில் தெற்கு கோபுரம் உள்ளது. தெற்கு கோபுரம் சாலை, பஞ்சரம், கூடு என்னும் உறுப்புகளால் ஆனது. இரண்டு வாயில்கள், ஐந்து நிலைகள் கொண்டது, அதிட்டானம் முதல் பிரஸ்த்தானம் வரை கருங்கல் கட்டுமானம். ஐந்து நிலைகளிலும் விநாயகர், முருகர், ஆலமர்செல்வர், சண்டிகேஸ்வரர், துவாரபாலிகை, அடியவர், யாளி ஆகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. அதிட்டானம் உபபீடம், பத்மம், ஜகதி, விருத்தம், குமுதம், கண்டம், கபோதம், பட்டிகை என்னும் உறுப்புகள் கொண்டது. சுவர்ப்பகுதி வேலைபாடுகளுடைய எட்டு அரைத்தூண்கள் கொண்டது, சிற்பங்கள் இல்லை. பிரஸ்தாரம் வேதிகை, பட்டி, மகரதோரணம், கபோதம், உத்திரம் என்னும் உறுப்புகள் கொண்டது. சாலை என்னும் சிகரத்தின் மீது பத்மம், கண்ணாடிச் சட்டம், அலங்குகள், கட்டுமாலை உள்ளன. கோபுரத்தில் கலசங்கள் இல்லை.
வெளிப்பிரகாரம்
வெளிப்பிராகாரம் பிற்காலத்தில் கட்டப்பட்ட இரண்டு மீட்டர் உயர மதில் சுவரால் சூழப்பட்டுள்ளது. தெற்கு, மேற்கு வாயில்கள் உள்ளன. தெற்கு வாயிலை ராஜ கோபுர வழி தெற்கு வாயிலை வந்தடையும். கிழக்கு வெளிப்பிரகாரத்தில் கருவறை வாசல் எதிரே கொடிமரம் உள்ளது. நான்கு மூலைகளிலும் நாகபந்த அமைப்பு உள்ளன. தென்கிழக்கில் ஊஞ்சல் மண்டபம், வில்வமரம், தென்னைகள் உள்ளன. வடமேற்கில் தண்ணீர் தொட்டி உள்ளது.
திருச்சுற்று
சந்திரசூடேஸ்வர் கோவில் கருவறையைச் சுற்றி நீண்ட திருச்சுற்று பாதை உள்ளது. திருச்சுற்றில் ராஜகணபதி, சண்முகர், சண்டிகேஸ்வரர், பிரம்மா, விஷ்ணு ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன.
கிழக்கு திருச்சுற்று: கருவறைக்கு நேராக பலிபீடம், வடகிழக்கில் நவகிரகங்கள் உள்ளன. கஜலட்சுமி, அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் சிற்பங்கள் உள்ளன. கிழக்குத் திருச்சுற்று 19 தூண்கள் கொண்டது.
தெற்கு திருச்சுற்று: மகமண்டபத்தின் தெற்கு வாயிலின் இருபுறமும் துவாரபாகர் சிற்பங்கள் உள்ளன. நாகலிங்கேஸ்வரர், நாகர் சிற்பங்கள் உள்ளன. கருவறை அருகே எளிமையான ராஜகணபதி சன்னதி உள்ளது. ஜலகண்டேஸ்வரர் பீடம் உள்ளது. தெற்குத் திருச்சுற்று 40 தூண்கள் கொண்டது. .
மேற்கு திருச்சுற்று: மேற்கு திருச்சுற்று 23 தூண்கள் கொண்டது.
வடக்கு திருச்சுற்று: மரகதாம்பிகை கோவில் கருவறை உள்ளது. அம்மன் கருவறை அதிட்டானம், உபபீடம், ஜகதி, குமுதம், கபோதம், பட்டி, கண்டம் என்ற அமைப்பு கொண்டது. சண்டிகேஸ்வரர் சன்னதி, நந்தி, பஞ்சமூர்த்தி லிங்கம் உள்ளது. மூன்று தூண்கள் கொண்டது.
திருச்சுற்று மாளிகை
திருச்சுற்று பாதையை ஒட்டி திருச்சுற்று மாளிகை நடந்து சென்று பரிவார தெய்வங்களை வணங்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு திருச்சுற்று மாளிகையில் குருபரர், பிச்சாண்டவர், காலபைரவர் உள்பட சில தெய்வச் சிற்பங்கள் உள்ளன. கிழக்கு திருச்சுற்று மாளிகையில் நந்தி, ஈசன் மற்றும் தென்கிழக்கில் அக்னி சிற்பங்கள் உள்ளன. தெற்கு திருச்சுற்று மாளிகையில் 16 தூண்கள் மற்றும் தூண்களுக்கு இடையே எமதர்மர், வீரபத்திரர் மற்றும் கஜலட்சுமி சிற்பங்கள் உள்ளன. மேற்கு திருச்சுற்று மாளிகையில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் உள்ளன.
மகாமண்டபம்
சந்திரசூடேஸ்வரர் கோவில் மகாமண்டபம் கிழக்கு மேற்காக ஆறு தூண்களுடன் நீள்சதுர வடிவில் அமைந்துள்ளது. மண்டபத்தின் நடுவில் நந்தி உள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் சிற்பங்கள் நின்ற கோலத்தில் கருவறையை நோக்கியபடி உள்ளன, இடப்பக்கம் சூரியனின் சிற்பம் உள்ளது. மண்டபத்தின் வடக்கு பகுதியில் செவ்வக வடிவ மேடையுடன் உதிராயண மண்டபம் உள்ளது, சிற்பங்கள் இல்லை. மண்டபத்தின் தெற்கே வாயில் உள்ளது.
அர்த்தமண்டபம்
கருவறை முன் சதுர வடிவ அர்த்த மண்டபம் உள்ளது, நான்கு தூண்கள் கொண்டது. தூண்கள் கீழ்பகுதி 4 பட்டையும் அடுத்தடுத்த பகுதிகள் 8, 16 பட்டைகள் கொண்டுள்ளன. தூண்கள் இடை, கலசம், குடம், இதழ், பத்மம், பலகை, போதிகை என்னும் உறுப்புகள் கொண்டது. மண்டப வாயில் 180 செ.மீ. உயரமும் 160 செ.மீ. அகலமும் கொண்டது. வாயிலில் நாகபந்தம், தாமரை இலை ஆகிய சிற்பங்கள் உள்ளன.
மூலவர் கருவறை
கிழக்கு நோக்கியது, சதுர வடிவம் , 5 அடி நீள அகலம் கொண்டது. மூலவர் லிங்க வடிவ சந்திரசூடேஸ்வரர் என்னும் சிவன். லிங்கத்தின் ஆவுடையார் வெளியில் தெரியவில்லை, மேற்பரப்பில் பிரபை ஆவுடையார் வெள்ளித் தகடு கொண்டுள்ளது. கருவறையின் எதிரே நீள்சதுர வடிவ சிறிய நந்தி மண்டபம் உள்ளது. மண்டபத்தின் வாயில் பூவேலைபாடுகள் கொண்ட பித்தளை தகட்டால் பொதியப்பட்டுள்ளது.
சிற்பங்கள்
உலோகச் சிற்பங்கள்
சோமாஸ்கந்தர்
சோமாஸ்கந்தர் அம்மன்
கந்தர்
வள்ளி
தெய்வானை
நந்தி
அம்மன்
நடராஜர்
சிவகாமி அம்மன்
துர்கை அம்மன்
மாணிக்கவாசகர்
சந்திரசேகரர்
சந்திரசேகர அம்மன்
விநாயகர்
பிரதோஷ நாயகர்
பிரதோஷ நாயகர் அம்மன்
சண்டிகேஸ்வரர்
கண்ணப்ப நாயனார்
கல் சிற்பங்கள்
விநாயகர்
சங்கர நாராயணர்
தேவியருடன் முருகன்
மரச்சிற்பங்கள்
தேர்கள்
வழிபாடு
தினசரி வழிபாடுகள்
சந்திரசூடேஸ்வரர் கோவில் வழிபாடுகள் காலை 6 மணிக்கு தொடங்குகிறது.
பொழுது | நேரம் | பூஜை |
---|---|---|
காலை | 8 | கால சந்தியாகம் |
மதியம் | 11 | உச்சிகால பூஜை |
மாலை | 6 | சாயரட்சை |
தீப உபச்சாரங்கள்
சந்திரசூடேஸ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மன் இருவருக்கும் 16 வகை தீபாராதனைகள் நடைபெறுகின்றன.
எண் | உபச்சார வகை |
---|---|
1 - 5 | பஞ்ச தீபங்கள் |
6 | ரத ஆரத்தி |
7 | நட்சத்திர ஆரத்தி |
8 | மயூர தீபம் |
9 | நாக தீபம் |
10 | சிம்மவாகன தீபம் |
11 | நந்தி தீபம் |
12 | புருஷ தீபம் |
13 | சாமர தீபம் |
14 | சத்கர தீபம்(கொடை) |
15 | அருந்த தீபம் |
16 | வஸ்தீர ஆரத்தி |
நவசண்டி யாகம்
மரகதாம்பிகை அம்மனுக்கு வருடம் தோறும் ஆடி மாதம் அனைத்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுகளில் நவசண்டி யாகம் நடைபெறுகிறது. அம்மனுக்கு ஸ்ரீ சக்கர பிரதிஷ்ட்டை உண்டு.
நம்பிக்கைகள்
சந்த்திரசூடேஸ்வரர் கோவிலில் ஒரு மண்டலம்(48 நாட்கள்) ருத்திராபிஷேகம் தொடர்ந்து செய்தால் நினைத்த காரியங்கள் நடைபெறும் என்னும் நம்பிக்கை உள்ளது.
சிறப்புகள்
அஷ்டதிக் பாலகர்கள்
சந்திரசூடேஸ்வரர் கோவிலில் அஷ்டதிக் பாலகர்களுக்கு தனித்தனி உருவங்களும், வாகனங்களும் உள்ளன.
பாலகர் உருவம் | வாகனம் |
---|---|
இந்திரன் | யானை |
ஈசாணன் | எருது |
வாயு | மான் |
வருணன் | முதலை |
குபேரன் | குதிரை |
நிருதி | மனிதன் |
அக்னி | ஆடு |
எமன் | எருமை |
ஜலகண்டேஸ்வரர்
சந்திரசூடேஸ்வரர் கோவில் ஜலகண்டேஸ்வரருக்கு வரட்சிக் காலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஜலகண்டேஸ்வரர் சிற்பம் 2 அடி நீள அகலம் கொண்ட தொட்டியில் உள்ளது. சாதாரணமாக 10 குடம் நீரில் நிரம்பும் தொட்டி வரட்சி காலத்தில் 150 குடங்கள் நீர் கொண்டு நிறைத்தால் மட்டுமே நிரம்பும் என சொல்லப்படுகிறது. நிறைத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் வற்றிவிடும். வரட்சிக் காலத்தில் தொட்டி நிறைந்திருக்கும் படி 16 நாட்கள் வைத்திருந்தால் மழை வரும் என்னும் நம்பிக்கை உள்ளது.
திருவிழாக்கள்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் 13 நாட்கள் நடைபெறுகிறது. மேலும் நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை தீப நாள், மகா சங்கராந்தி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
நிகழ்வுகள்
நாள் | பொழுது | நேரம் | நிகழ்ச்சி | நடத்துபவர் |
---|---|---|---|---|
1 | காலை | 11 | கொடியேற்றம் | பொது |
இரவு | 9 | சிம்ம வாகன உற்சவம் | வேளாள கவுண்டர் குலத்தினர் | |
2 | காலை | 7 | ஏகாதச ருத்ராபிஷேகம் | வீரசைவ குலத்தினர் |
இரவு | 9 | மயில் வாகன உற்சவம் | பொது | |
3 | இரவு | 9 | அகங்கார நந்தி உற்சவம் | வீரசைவ குலத்தினர் |
4 | இரவு | 9 | நாக வாகன உற்சவம் | வைஷ்ய குலம் - கொத்த செட்டி மரபினர் |
5 | இரவு | 9 | ரிஷப வாகன உற்சவம் | பொது |
6 | காலை | 11 | ருத்ராபிஷேகம், புஷ்ப அலங்காரம் | பொது |
இரவு | 7 | புஷ்ப சாற்றுப்படி உற்சவம் | வன்னுகிரி செட்டி குலத்தினர் | |
இரவு | 8 | திருக்கல்யாண உற்சவம் | அயோத்தியா நகரம் குலத்தினர் | |
இரவு | 9 | யானை வாகன உற்சவம் | பொது | |
7 | காலை | 10 | தேரோட்டம் | பொது |
பகல் | 12 | பிராமண சந்தர்ப்பணை, ஆர்ய-வைஷ்ய சந்தர்பணை | பொது | |
இரவு | 7 | பிராமண சந்தர்ப்பணை, ஆர்ய-வைஷ்ய சந்தர்பணை | பொது | |
9 | மாலை | 5 | வசந்தோற்பவம் | பொது |
இரவு | 7 | தெப்ப உற்சவம் | பொது | |
இரவு | 10 | குதிரை வாகன உற்சவம் | பொது | |
இரவு | 10.30 | கொடியிறக்கம் | பொது | |
10 | மாலை | 6 | ஊர் உற்சவம் | தமிழ்நாடு மின்சார வாரியம் |
11 | மாலை | 6 | புஷ்பசாற்றுப்படி | பொது |
12 | இரவு | 7 | பிரகார உற்சவம் | பொது |
13 | இரவு | 7 | திருவிழா கடைநாள், சயனோற்சவம் | பொது |
வீதிஉலா வாகனங்கள்
உற்சவ மூர்த்தி | வாகனம் |
---|---|
சோமாஸ்கந்தர் | இராவண வாகனம் |
அம்பாள் | முத்துப் பல்லக்கு |
விநாயகர் | முத்துப் பல்லக்கு |
சுப்பிரமணியர் | முத்துப் பல்லக்கு |
சந்திரசேகர் | புஷ்பப் பல்லக்கு |
வரலாறு
கல்வெட்டுகள்
உசாத்துணை
- ஓசூர், பெ. திருமால், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2018.
- சந்திரசூடேஸ்வரர் கோவில் - தினமலர் கோவில்கள்
- சந்திரசூடேஸ்வரர் கோவில் - கிருஷ்ணகிரி மாவட்ட வலைத்தளம்
- சந்திரசூடேஸ்வரர் கோவில் - shaivam.org
- Chandrachoodeshvarar Temple - ishtadevata.com
இணைப்புகள்
- சந்திரசூடேஸ்வரர் கோவில் - காணொளி , நியூஸ் 7 தமிழ்
- சந்திர சூடேஸ்வரர் கோவில் - காணொளி, வசந்த் டி.வி.
- ராஜகோபுரம் - காணொளி, ஓம்சூர் ஸ்டுடியோ
- ராஜக்கோபுரக் கும்பாபிஷேகம் - காணொளிச் செய்தி, பக்தி நியூஸ் 7 தமிழ்
- ராஜக்கோபுரக் கும்பாபிஷேகம் - செய்தி, மாலைமலர்
- ராஜக்கோபுரக் கும்பாபிஷேகம் - செய்தி, தினமலர்
- அழியும் நிலையில் கல்வெட்டுகள் - செய்தி, தினத்தந்தி
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.