திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 3: | Line 3: | ||
தொடக்கம் | தொடக்கம் | ||
திருசங்கர் கம்பெனி என்ற பெயரில் சென்னையிலும் திருநெல்வேலியிலும் புத்தகக் கடை நடத்திய வ.திருவரங்கம் பிள்ளை தன் தம்பி வ.சுப்பையா பிள்ளையோடும், நண்பர் மா.திரவியம் பிள்ளையோடும் சேர்ந்து சைவமும் தமிழும் வளர்ப்பதற்காக 1920 ல் தொடங்கிய திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தனித்தமிழ் இயக்கம் என்னும் பண்பாட்டுச் செயல்பாட்டை முன்னெடுத்த மறைமலையடிகள் தொடர்பால் தனித்தமிழியக்க பதிப்பகமாக மாறியது. ச.சச்சிதானந்தம் பிள்ளை, கா.சு.பிள்ளை போன்ற சைவத் தமிழ் அறிஞர்கள் இதன் ஆலோசகர்களாக இருந்தனர். | |||
தொழில்முறைப் பதிப்பகமாகத் தொடங்கப்பட்டது திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். ரூ.10 மதிப்புக் கொண்ட 5,000 பங்குகளால் ரூ.50,000 திரட்டித் தொழில் முதலீடாக்கி லிமிடெட் கம்பெனி நிறுவனமாகத் தன்னைப் பதிவுசெய்துகொண்டு திருநெல்வேலியில் தொடங்கிய இந்நிறுவனத்திற்கு ஏற்கனவே வ.திருவரங்கம் பிள்ளை சென்னையில் நடத்திவந்த திருசங்கர் கம்பெனி முதல் கிளைநிலையம் ஆனது. வ. திருவரங்கம் பிள்ளைக்குப் பின் வ.சுப்பையா பிள்ளை இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தார். அதன்பின் இரா. முத்துக்குமாரசுவாமி மேலாண் இயக்குநர் ஆனார். தென்னிந்தியா முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள ஒரே பொது நிறுவனமாக இது திகழ்ந்து வருகிறது. தற்போது அதன் மேலாண்மை இயக்குனர் சுப்பையா | |||
1943-ல் கழகம் நடத்திய முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் தேவநேயப் பாவாணர் கலந்துகொண்டு பேசியதாக ஒரு குறிப்பு. உணர்ச்சி கிளர்த்தியதோடு விட்டுவிடாமல் இலக்கிய மாநாடுகளும் நடத்தி, அவற்றில் ஆற்றப்படும் சொற்பொழிவுகளை நூலாக்கித் தமிழியக்கம் நடத்தியது கழகம். தமிழ்க் கூட்டத்தை மட்டுமே அல்லாது சைவக் கூட்டத்தையும் கூட்டியது. சுயமரியாதை இயக்கம் உருவாக்கிய நெருக்கடியே அதற்குக் காரணம். பிராமணர் அல்லாதார் எழுச்சி என்ற பொதுப்புள்ளியில் சுயமரியாதை இயக்கத்தோடு சேர்ந்து நின்றாலும், வைதிகத்தையும் வைணவத்தையும் பகடிக்குள்ளாக்கிய பெரியார் கூடவே சைவத்தையும் பகடிக்குள்ளாக்கியபோது, சைவத் தரப்பின் எதிர்வினையை ஆற்ற வேண்டிக் கழகத்தின் சார்பு அமைப்பான திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்தச் சங்கத்தின் முன்முனைப்பில், 1929-ல் சைவப் பெரியார் தனிக்கூட்டம் நடத்தப்பட்டது. சைவ சமயம் தன்னுடைய அடிப்படைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான கலகத்தை சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்த, அதற்கு மறுவினை ஆற்றுவதில் கழகம் குறிப்பிடத்தக்க கருவியாய் இருந்தது | |||
தேவநேயப் பாவாணர். அவர் எழுதிய ‘இயற்றமிழ் இலக்கணம்’, ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்’, ‘உயர்தரக் கட்டுரை இலக்கணம்’, ‘பழந்தமிழ் ஆட்சி’, ‘முதல் தாய்மொழி’, ‘தமிழ்நாட்டு விளையாட்டுகள்’, ‘வேர்ச்சொல் கட்டுரைகள்’ ஆகிய நூல்களைக் கழகமே வெளியிட்டது. | |||
சிறிய கழகத் தமிழ் அகராதி, பெரிய கழகத் தமிழ் அகராதி, ஆட்சித் துறைத் தமிழ் (அகராதி), சட்டத் தமிழ் (அகராதி), தொகை அகராதி, கழக ஆங்கில தமிழ்க் கையகராதி, கழகச் சிற்றகராதி (ஆங்கிலம்-தமிழ்), கழகப் பழமொழி அகரவரிசை, சிலேடை அகரவரிசை, மேற்கோள் விளக்கக் கதை அகரவரிசை என்று தொடர்ந்தது. | |||
கழகத் தமிழ்க் கையகராதியை 1940-ல் வெளிக்கொண்டு வந்தது கழகம் | |||
1958-ல் கழகத்தால் தொடங்கப்பட்ட மறைமலையடிகள் நூல் நிலையம் தமிழ் ஆய்வுலகுக்கு ஆற்றிய பங்கு அரியது. 1900-க்கு முந்தைய நூற்றுக்கணக்கான பதிப்புகள், அரிய கடிதங்கள், ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நூல்களோடு அது ஓர் ஆவணக் காப்பகமாகவே இருந்ததை அதன் துணை நூலகராகவும் கொஞ்சக் காலம் பணியாற்றிய ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி சுட்டுகிறார். தமிழ் ஆய்வுலகுக்குக் கழகத்தின் மற்றொரு பங்களிப்பு அது நடத்திவந்த ‘செந்தமிழ்ச் செல்வி’ திங்கள் இதழ். அதன் சிறப்புகளைச் சொல்லி இதழை ஆதரிக்குமாறு பெரியார் தனது ‘குடிஅரசு’ ஏட்டில் 1926-ல் எழுதினார். | |||
ஆ.இரா.வேங்கடாசலபதி, திராவிட இயக்கமும் வேளாளரும், காலச்சுவடு பதிப்பகம் |
Revision as of 08:23, 18 February 2022
திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ( 1920) (தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி) தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்த தமிழ்நூல் வெளியீட்டாளர்கள்.திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நுாற்பதிப்புக்கழகம் 1920-ல் திருநெல்வேலியில் வ.திருவரங்கம்பி்ள்ளை, திரவியம்பிள்ளை மற்றும் தமிழ்அறிஞர்களால் தொடங்கப்பட்டது. புத்தக வெளியீட்டுக்கென தென்னிந்தியா முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள ஒரே பொது நிறுவனமாக இது திகழ்ந்து வருகிறது. பெயர் குறிப்பிடுவதுபோல இது மதக்கொள்கை சார்ந்த பதிப்பகம் அல்ல. தமிழாய்வுகள், புனைவுகள், மொழியாக்கங்கள் ஆகியவற்றை ஏராளமாக வெளியிட்டது. சைவம் சாராத கொள்கைகொண்ட தேவநேயப் பாவாணர் போன்றவர்களின் கட்டுரைளையும் இப்பதிப்பகத்தின் இதழ் செந்தமிழ்ச் செல்வி வெளியிட்டது.
தொடக்கம்
திருசங்கர் கம்பெனி என்ற பெயரில் சென்னையிலும் திருநெல்வேலியிலும் புத்தகக் கடை நடத்திய வ.திருவரங்கம் பிள்ளை தன் தம்பி வ.சுப்பையா பிள்ளையோடும், நண்பர் மா.திரவியம் பிள்ளையோடும் சேர்ந்து சைவமும் தமிழும் வளர்ப்பதற்காக 1920 ல் தொடங்கிய திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தனித்தமிழ் இயக்கம் என்னும் பண்பாட்டுச் செயல்பாட்டை முன்னெடுத்த மறைமலையடிகள் தொடர்பால் தனித்தமிழியக்க பதிப்பகமாக மாறியது. ச.சச்சிதானந்தம் பிள்ளை, கா.சு.பிள்ளை போன்ற சைவத் தமிழ் அறிஞர்கள் இதன் ஆலோசகர்களாக இருந்தனர்.
தொழில்முறைப் பதிப்பகமாகத் தொடங்கப்பட்டது திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். ரூ.10 மதிப்புக் கொண்ட 5,000 பங்குகளால் ரூ.50,000 திரட்டித் தொழில் முதலீடாக்கி லிமிடெட் கம்பெனி நிறுவனமாகத் தன்னைப் பதிவுசெய்துகொண்டு திருநெல்வேலியில் தொடங்கிய இந்நிறுவனத்திற்கு ஏற்கனவே வ.திருவரங்கம் பிள்ளை சென்னையில் நடத்திவந்த திருசங்கர் கம்பெனி முதல் கிளைநிலையம் ஆனது. வ. திருவரங்கம் பிள்ளைக்குப் பின் வ.சுப்பையா பிள்ளை இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தார். அதன்பின் இரா. முத்துக்குமாரசுவாமி மேலாண் இயக்குநர் ஆனார். தென்னிந்தியா முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள ஒரே பொது நிறுவனமாக இது திகழ்ந்து வருகிறது. தற்போது அதன் மேலாண்மை இயக்குனர் சுப்பையா
1943-ல் கழகம் நடத்திய முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் தேவநேயப் பாவாணர் கலந்துகொண்டு பேசியதாக ஒரு குறிப்பு. உணர்ச்சி கிளர்த்தியதோடு விட்டுவிடாமல் இலக்கிய மாநாடுகளும் நடத்தி, அவற்றில் ஆற்றப்படும் சொற்பொழிவுகளை நூலாக்கித் தமிழியக்கம் நடத்தியது கழகம். தமிழ்க் கூட்டத்தை மட்டுமே அல்லாது சைவக் கூட்டத்தையும் கூட்டியது. சுயமரியாதை இயக்கம் உருவாக்கிய நெருக்கடியே அதற்குக் காரணம். பிராமணர் அல்லாதார் எழுச்சி என்ற பொதுப்புள்ளியில் சுயமரியாதை இயக்கத்தோடு சேர்ந்து நின்றாலும், வைதிகத்தையும் வைணவத்தையும் பகடிக்குள்ளாக்கிய பெரியார் கூடவே சைவத்தையும் பகடிக்குள்ளாக்கியபோது, சைவத் தரப்பின் எதிர்வினையை ஆற்ற வேண்டிக் கழகத்தின் சார்பு அமைப்பான திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்தச் சங்கத்தின் முன்முனைப்பில், 1929-ல் சைவப் பெரியார் தனிக்கூட்டம் நடத்தப்பட்டது. சைவ சமயம் தன்னுடைய அடிப்படைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான கலகத்தை சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்த, அதற்கு மறுவினை ஆற்றுவதில் கழகம் குறிப்பிடத்தக்க கருவியாய் இருந்தது
தேவநேயப் பாவாணர். அவர் எழுதிய ‘இயற்றமிழ் இலக்கணம்’, ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்’, ‘உயர்தரக் கட்டுரை இலக்கணம்’, ‘பழந்தமிழ் ஆட்சி’, ‘முதல் தாய்மொழி’, ‘தமிழ்நாட்டு விளையாட்டுகள்’, ‘வேர்ச்சொல் கட்டுரைகள்’ ஆகிய நூல்களைக் கழகமே வெளியிட்டது.
சிறிய கழகத் தமிழ் அகராதி, பெரிய கழகத் தமிழ் அகராதி, ஆட்சித் துறைத் தமிழ் (அகராதி), சட்டத் தமிழ் (அகராதி), தொகை அகராதி, கழக ஆங்கில தமிழ்க் கையகராதி, கழகச் சிற்றகராதி (ஆங்கிலம்-தமிழ்), கழகப் பழமொழி அகரவரிசை, சிலேடை அகரவரிசை, மேற்கோள் விளக்கக் கதை அகரவரிசை என்று தொடர்ந்தது.
கழகத் தமிழ்க் கையகராதியை 1940-ல் வெளிக்கொண்டு வந்தது கழகம்
1958-ல் கழகத்தால் தொடங்கப்பட்ட மறைமலையடிகள் நூல் நிலையம் தமிழ் ஆய்வுலகுக்கு ஆற்றிய பங்கு அரியது. 1900-க்கு முந்தைய நூற்றுக்கணக்கான பதிப்புகள், அரிய கடிதங்கள், ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நூல்களோடு அது ஓர் ஆவணக் காப்பகமாகவே இருந்ததை அதன் துணை நூலகராகவும் கொஞ்சக் காலம் பணியாற்றிய ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி சுட்டுகிறார். தமிழ் ஆய்வுலகுக்குக் கழகத்தின் மற்றொரு பங்களிப்பு அது நடத்திவந்த ‘செந்தமிழ்ச் செல்வி’ திங்கள் இதழ். அதன் சிறப்புகளைச் சொல்லி இதழை ஆதரிக்குமாறு பெரியார் தனது ‘குடிஅரசு’ ஏட்டில் 1926-ல் எழுதினார்.
ஆ.இரா.வேங்கடாசலபதி, திராவிட இயக்கமும் வேளாளரும், காலச்சுவடு பதிப்பகம்