under review

சா.ஆ. அன்பானந்தன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Added First published date)
 
Line 40: Line 40:
* மலேசியாவில் தமிழ்த் தொண்டர்கள் (1987) - டாக்டர் ந.வீ. ஜெயராமன்
* மலேசியாவில் தமிழ்த் தொண்டர்கள் (1987) - டாக்டர் ந.வீ. ஜெயராமன்
* உலகத் தமிழ்க் களஞ்சியம் - 2018
* உலகத் தமிழ்க் களஞ்சியம் - 2018
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|05-Aug-2022, 15:32:21 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]

Latest revision as of 16:46, 13 June 2024

சா.ஆ. அன்பானந்தன்

சா. ஆ. அன்பானந்தன் (இயற்பெயர் சுப்ரமணியம்) (பிப்ரவரி 5, 1939 - மே 20, 1980) மலேசிய எழுத்தாளர். 1966-ல் பினாங்கில் உருவான மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையில் முதல் தலைவராகப் பணியாற்றினார். சமுதாய உணர்வுடன் இயங்கிய இவரது செயலூக்கத்தினால் மலேசியாவில் பல இளைஞர்கள் தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் இணைந்தனர்.

பிறப்பு கல்வி

சா. அ. அன்பானந்தன் பிப்ரவரி 5, 1939-ல் உலுசிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள கோலகுபுபாருவில் பிறந்தார். எல்.சி.இ வரை கல்வியைத் தொடர்ந்தார்.

தனிவாழ்க்கை

1963-ல் தொலைபேசித் துறையில் பணிக்குச் சேர்ந்தார். இவரது மனைவியின் பெயர் லட்சுமி. மகனின் பெயர் அன்புமணி.

இலக்கிய வாழ்க்கை

1972ல் தங்கப்பதக்கம் வென்ற எழுத்தாளராக

சிங்கப்பூரில் வெளிவந்த 'தமிழ் முரசு' இதழின் மாணவர் மணிமன்ற இதழில் 1958-ல் இவரது முதல் கவிதையான 'மாணவனே' பிரசுரமானது. தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம், குறுநாவல் என பல்வேறு துறைகளில் பங்களித்தார். கோவலன், புரட்சிக்கனல், தமிழ்க்கதிர், மணிமுரசன் எனப் பல பெயர்களில் படைப்புகளை எழுதினார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் இவரது 'ஏணிக்கோடு' என்ற சிறுகதை முதல் பரிசைப் பெற்றது. 'மிங்குவான் மலேசியா' எனும் மலாய் இதழில் மொழிப்பெயர்க்கப்பட்டு இதே சிறுகதை வெளிவந்ததோடு சென்னை வானொலியின் தென்கிழக்காசிய ஒலிபரப்பிலும் படிக்கப்பெற்றது. மேலும் இவரது 'ஓடும் பிள்ளை' எனும் சிறுகதை தமிழ் நேசன் பவுன் பரிசு திட்டத்தில் முதல் பரிசு பெற்றது. ஜப்பானியர் ஆட்சி காலத்தில் மலேசியத் தமிழர்கள் பட்ட இன்னல்களைப் பேசும் 'மரவள்ளிகிழங்கு' எனும் குறுநாவலையும் சா. ஆ. அன்பானந்தன் எழுதியுள்ளார்.

'மணிக்குயில்' என்ற இசைப்பாடல் தொகுப்பும் 'நான் யார்' என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

நாடகம்

நாடகத்துறையில் சா. ஆ. அன்பானந்தனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 'புலிக் குகை', 'மணி ஓசை ' ஆகிய இவரது நாடகங்கள் பரிசுகளைப் பெற்றுள்ளன.

நாடக நடிகராக

சா. ஆ. அன்பானந்தன் மேடைகளிலும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்துள்ளார்.

பொதுவாழ்க்கை

சீர்த்திருத்த சிந்தனை கொண்டிருந்த சா.ஆ. அன்பானந்தன் தொடக்கத்தில் செந்தூல் வாலிபர் சங்கத்தில் உறுப்பினரானார். அகில மலாயாத் தமிழர் சங்கம், மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கம், மலேசியக் கலைஞர் இயக்கம் போன்றவற்றில் உறுப்பியம் பெற்று செயலாற்றினார். 60-களில் கோலாலம்பூரில் தமிழ் இளைஞர் மணிமன்றத்தை அமைத்து அதன் தலைமை பொறுப்பில் பணியாற்றினார். 1966-ல் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை அமைந்தபோது அதன் முதல் தேசியத் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966 முதல் 1972 வரை ஆறு ஆண்டுகள் சிறந்த முறையில் நிர்வகித்து வந்தார். நாடு முழுவதும் இயங்கிய 182 மணிமன்றங்களை நிர்வகித்தார்.

மரணம்

மே 26, 1980-ல் தனது 39வது வயதில் மரணமடைந்தார்.

விருதுகள்

மாமன்னரிடமிருந்து AMN, PPN விருதுகள் கிடைத்தன.

நூல்கள்

கவிதை
  • நயனங்கள் 1979 - பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றம்
சிறுகதை
  • காலத்தின் விளக்கு 1979 - பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றம்
  • அவளும் ஒரு தாய்தான் - 2009 - தங்கா தமிழர் சங்கம்
குறுநாவல்
  • மரவள்ளிக்கிழங்கு 1979 - பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றம்
நாடகம்
  • திருப்பம் 1979 - பத்துமலை தமிழ் இளைஞர் மணிமன்றம்
இசைப்பாடல்
  • மணிக்குயில் - 1977- சுங்கைவே தமிழ் இளைஞர் மணிமன்றம்
கட்டுரை
  • நான் யார் - 1979 - சுங்கைவே தமிழ் இளைஞர் மணிமன்றம்
  • புறப்படு தமிழனே - 2008

உசாத்துணை

  • மலேசியாவில் தமிழ்த் தொண்டர்கள் (1987) - டாக்டர் ந.வீ. ஜெயராமன்
  • உலகத் தமிழ்க் களஞ்சியம் - 2018



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Aug-2022, 15:32:21 IST