first review completed

சி. சிவராமமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
டாக்டர் சி. சிவராமமூர்த்தி( களம்பூர் சிவராமமூர்த்தி) (1909–1983) கல்வெட்டாய்வாளர், கலை வரலாற்றாசிரியர், அருங்காட்சியகவியலாளர்,  சமஸ்கிருத அறிஞர்.  நாட்டின் குறிப்பிடத்தக்க கலை வரலாற்றாசிரியர்களில் ஒருவர். இந்திய படிமவியலில்(iconography), குறிப்பாக நடராஜ தத்துவத்தில் அறிஞர். சென்னை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராகவும்,  புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும்  பணிபுரிந்தார். இந்தியக் கலையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டார். இந்தியக் கலை பற்றிய வழிகாட்டி நூல்களும்,  தென்னிந்திய கல்வெட்டுகள் பற்றிய  அடிப்படை நூலையும் எழுதினார். இந்திய அரசின் பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றார்.   
[[File:C.sivaramamurthy.jpg|thumb]]
டாக்டர் சி. சிவராமமூர்த்தி( களம்பூர் சிவராமமூர்த்தி) (1909–1983) கல்வெட்டாய்வாளர், கலை வரலாற்றாசிரியர், அருங்காட்சியகவியலாளர்,  சமஸ்கிருத அறிஞர்.  இந்தியாவின்  குறிப்பிடத்தக்க கலை வரலாற்றாசிரியர்களில் ஒருவர். இந்தியப் படிமவியலில் (iconography), குறிப்பாக நடராஜ தத்துவத்தில் அறிஞர். சென்னை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராகவும்,  புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும்  பணிபுரிந்தார். இந்தியக் கலையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டார். இந்தியக் கலை பற்றிய வழிகாட்டி நூல்களும்,  தென்னிந்திய கல்வெட்டுகள் பற்றிய  அடிப்படை நூலையும் எழுதினார். இந்திய அரசின் பத்மபூஷண், லலித் கலா அகாதெமியின் மிக உயர்ந்த 'ரத்னா'  உட்பட பல விருதுகளைப் பெற்றார். கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவனுக்கு தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமளித்தார்.   


== பிறப்பு, கல்வி ==
==பிறப்பு, கல்வி==
சிவராமமூர்த்தி [[அப்பைய தீட்சிதர்]] பரம்பரையைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் சுந்தர சாஸ்திரிக்கு மகனாகப் பிறந்தார். தந்தை சுந்தர சாஸ்திரி சமஸ்கிருதப் புலவர். 'சுந்தர ராமாயணம்' என்னும் சமஸ்கிருதக் காவியத்தை இயற்றினார்.  
சிவராமமூர்த்தி [[அப்பைய தீட்சிதர்]] பரம்பரையைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் சுந்தர சாஸ்திரிக்கு 1909-ல் பிறந்தார். தந்தை சுந்தர சாஸ்திரி சமஸ்கிருதப் புலவர். 'சுந்தர ராமாயணம்' என்னும் சமஸ்கிருதக் காவியத்தை இயற்றினார்.  


== தனி வாழ்க்கை ==
==தனி வாழ்க்கை==


சிவராமமூர்த்தி  சம்பூர்ணத்தை மணந்தார். இவர்களுக்கு சுந்தரராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி என்ற இரு மகன்கள்.
சிவராமமூர்த்தி  சம்பூர்ணத்தை மணந்தார். இவர்களுக்கு சுந்தரராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி என்ற இரு மகன்கள்.


== அருங்காட்சியகவியல்( Museology) ==
==அருங்காட்சியகவியல்( Museology)==
சி. சிவராமமூர்த்தி, சென்னை அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறையின் காப்பாளராக(curator) அருங்காட்சியகத் துறையில் நுழைந்தார். இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராகப் பணியேற்றார்.  தில்லியில்  இந்திய தேசிய அருங்காட்சியகத்தில்  காப்பாளராகப் பணிபுரிந்த காலத்தில் முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.  [[ஐராவதம் மகாதேவன்|ஐராவதம் மகாதேவனுக்கு]] தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமளித்தார். தொல்லியல் துறை, இந்திய அருங்காட்சியகம் , கல்கத்தா அருங்காட்சியகங்களின் சர்வதேச கவுன்சிலுடன் நெருக்கமாக தொடர்புடைய அவர் அதன் நிர்வாகக் குழுவில் இருந்தார் மற்றும்  இந்திய தேசியக் குழுவின் தலைவராக இருந்தார்.
சி. சிவராமமூர்த்தி, சென்னை அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறையின் காப்பாளராக(curator) அருங்காட்சியகத் துறையில் நுழைந்தார். இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையில் (Archeological Survey of India)  கண்காணிப்பாளராகப் பணியேற்றார்.  கல்கத்தாவிலுள்ள இந்திய அருங்காட்சியகத்தில் (Indian Museum, Kolkatta) தொல்லியல் துறைத் தலைவராக இருந்தார். தில்லியில்  இந்திய தேசிய அருங்காட்சியகத்தின்(The National Museum, New Delhi) காப்பாளராகவும், துணை இயக்குனராகவும் பணியாற்றி அதன் இயக்குனராக உயர்ந்தார். அங்கு பணிபுரிந்த காலத்தில் பல முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்த  இருந்த இந்திய தேசிய அருங்காட்சியகத்திற்கு அடுத்திருந்த  தொழில்துறை அமைச்சகத்தில்  செயலராக இருந்த [[ஐராவதம் மகாதேவன்|ஐராவதம் மகாதேவனுக்கு]] தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமளித்தார்.  


புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் , விலங்கியல் மற்றும் தொல்லியல் மாணவர், ஃபிரடெரிக் ஹென்றி கிரேவ்லி(Frederic Henry Gravely)யுடன்  இணைந்து, 1938 -ல்அருங்காட்சியகத்தின் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களை ஒழுங்கமைத்து பட்டியல் (catalogue) தயாரித்தார். அமராவதி சிற்பங்களின் முதல் முழுமையான, விரிவான பட்டியலைத் (comprehensive catalogue) தயாரித்து, சாஞ்சி மற்றும் ப்ருஹத் புத்த சிற்பங்களாக அவற்றிம் முக்கியத்துவத்தை அடையாளம் காட்டினார் (1942).  
சர்வதேச அருங்காட்சியக சபையின் (International Council of Museums-ICOM) நிர்வாகக்குழுவில் உறுப்பினராகவும்., அதன்  இந்தியப் பிரிவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார்.


== கலை வரலாற்றாய்வு ==
புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் , விலங்கியல் மற்றும் தொல்லியல் மாணவர், ஃபிரடெரிக் ஹென்றி கிரேவ்லி(Frederic Henry Gravely)யுடன்  இணைந்து, 1938 -ல் அருங்காட்சியகத்தின் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களை ஒழுங்கமைத்து பட்டியல் (catalogue)  தயாரித்தார். அமராவதி சிற்பங்களின் முதல் முழுமையான, விரிவான பட்டியலைத் (comprehensive catalogue) தயாரித்து, சாஞ்சி மற்றும் ப்ருஹத் புத்த சிற்பங்களாக அவற்றின் முக்கியத்துவத்தை அடையாளம் காட்டினார் (1942).   


====== கலை, சிந்தனை, இலக்கியத்தில் நடராஜர் ======
==கலை வரலாற்றாய்வு==
ஜவஹர்லால் நேரு நினைவு நிதியம் தொடங்கப்பட்டபோது முதல் நிதிநல்கை(fellowship) வரலாற்றாய்வுக்காக சிவராமமூர்த்திக்கு வழங்கப்பட்டது. நல்கையைப் பயன்படுத்தி  கலை, சிந்தனை, இலக்கியம் என அனைத்து அம்சங்களிலும் சிவனின் நடன வடிவமான நடராஜரைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டு  22 வண்ணத் தகடுகள், 250- க்கும் மேற்பட்ட வண்ணப்படங்களுடன்  412 பக்கங்களில் 'Nataraja in art, thought and literature' என்ற நூலை எழுதினார். நுண்கலைகளின் தெய்வமாக நடராஜர் என்னும் ஆளுமையையும், கருத்தாக்கத்தையும் அதன் காலவெளிகளைக் கடந்த தன்மையையும் எடுத்துக்காட்டி, நாட்டியம், சிவனின் நடனத்தின் முக்கியத்துவம், சிவதாண்டவத்தில் உள்ள கரணங்கள், கிருஷ்ணராக விஷ்ணு வழங்கிய கரணங்கள், வேதத்தில் நடனத்தின்  வேர்கள், இலக்கியத்தில் நடராஜர் உருவம், சிற்ப நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள நடராஜரின் வகைகள் , சிற்பம்,  ஓவியத்தில் நடராஜ வடிவம், இந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நடராஜர் என்னும் கருத்தாக்கம்  ஆகிய முக்கிய தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூல் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முன்னுரையுடன் 1975-ல் வெளிவந்தது.                                  
[[File:Nataraja.jpg|thumb|goodreads.com]]


== கலை/வரலாற்றாய்வு ==
======கலை, சிந்தனை, இலக்கியத்தில் நடராஜர்======
சிற்பங்கள், ஓவியங்கள், நாணயங்களில் மகாகவி காளிதாசரின் காவியங்களின் தாக்கத்தை ஆய்வு செய்து 'Numismatic parallels of Kalidasa' என்ற நூலை எழுதினார். தென்னிந்திய ஓவியக்கலையைப் பற்றிய அவரது நூல்கள் சோழர்கால ஓவியக்கலையைப் பற்றிய புதிய நுண்ணோக்கைக் கொண்டிருந்தன.
ஜவஹர்லால் நேரு நினைவு நிதியம் (Jawaharlal Nehnu memorial Fund) தொடங்கப்பட்டபோது அதன் முதல் நிதிநல்கை(fellowship) வரலாற்றாய்வுக்காக சிவராமமூர்த்திக்கு வழங்கப்பட்டது. நல்கையைப் பயன்படுத்தி  கலை, சிந்தனை, இலக்கியம் என அனைத்து அம்சங்களிலும் சிவனின் நடன வடிவமான நடராஜரைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டு  22 வண்ணத் தகடுகள், 250- க்கும் மேற்பட்ட வண்ணப்படங்களுடன்  412 பக்கங்களில் 'Nataraja in art, thought and literature' என்ற நூலை எழுதினார்.  நுண்கலைகளின் தெய்வமாக நடராஜர் என்னும் ஆளுமையையும், கருத்தாக்கத்தையும் அதன் காலவெளிகளைக் கடந்த தன்மையையும் எடுத்துக்காட்டி, நாட்டியம், சிவனின் நடனத்தின் முக்கியத்துவம், சிவதாண்டவத்தில் உள்ள கரணங்கள், கிருஷ்ணராக விஷ்ணு வழங்கிய கரணங்கள், வேதத்தில் நடனத்தின்  வேர்கள், இலக்கியத்தில் நடராஜர் உருவம், சிற்ப நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள நடராஜரின் வகைகள் , சிற்பம்,  ஓவியத்தில் நடராஜ வடிவம், இந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நடராஜர் என்னும் கருத்தாக்கம்  ஆகிய முக்கிய தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூல் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முன்னுரையுடன் 1975-ல் வெளிவந்தது.                                  


== மதிப்பீடு ==
==கலை/வரலாற்றாய்வு==
'இந்திய அறிவுப் புலத்தின் மாபெரும் சாதனை( a monument to Indian Scholarship) என்று என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார். லலித் கலா அகாதெமியின் மிக உயரிய 'ரத்னா' விருது வழங்கியது. 
[[File:5000years.jpg|thumb|catalogue rouge]]
சிற்பங்கள், ஓவியங்கள், நாணயங்களில் மகாகவி காளிதாசரின் காவியங்களின் தாக்கத்தை ஆய்வு செய்து 'Numismatic parallels of Kalidasaஎன்ற நூலை  எழுதினார்.  


தொல்லியல் ஆய்வாளர் ஆர். நாகசாமி 'சிவராமமூர்த்தி தான் காணும் எந்தவொரு கலைப் படைப்பையும் அடையாளம் கண்டு அதன் காலம், இடம், அப்படைப்பு முன்னிறுத்தும் தத்துவம் என அனைத்தையும் துல்லியமாக அடையாளம் காணும் தன்மை கொண்டவர்" என மதிப்பிடுகிறார்.   
மகாபலிபுரச் சிற்பங்கள், முற்கால சாளுக்கியச்  சிற்பக்கலை, கழுகுமலைச்  சிற்பங்கள், சமண மதம் சார்ந்த சிற்பங்கள், குப்தர்காலத்துக்குப் பின்னான சிற்பக்கலையில் காளிதாசரின் தாக்கம் போன்ற சிற்பக்கலை வரலாற்றாய்வு நூல்களை எழுதினார். இந்தியாவின் வெண்கலச்சிற்பங்கள் பற்றிய ஆய்வுநூலை எழுதினார்தஞ்சைப் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில்களின் சிற்பக்கலை பற்றிய 'The Chola temples: Thanjavur, Gangaikondacholapuram & Darasuram' என்ற நூலை எழுதினார்.


== விருதுகள் ==
இந்திய ஓவியக்கலை, விஜயநகரப்பேரரசின் ஓவியக்கலை போன்ற ஓவியக்கலை ஆய்வுநூல்களையும் எழுதினார். தென்னிந்திய ஓவியக்கலையைப் பற்றிய  அவரது நூல்கள் சோழர்கால ஓவியக்கலையைப் பற்றிய புதிய நுண்ணோக்கைக் கொண்டிருந்தன.


* Campbell memorial gold medel(Royal Asiatic Society-1984)
இத்தாலிய இந்தியவியலாளர் Mario Bussagli யுடன் இணைந்து ஐயாயிரம் ஆண்டுக்கால இந்தியாவின் கலை வரலாற்றை (5000 years of the art of India: with Mario Bussagli) எழுதினார்.
* லலித் கலா அகாதெமியின் ரத்னா விருது (Lalth Kala acdemy fellowship-1965)
 
* பத்மபூஷண் விருது
==விருதுகள்.பரிசுகள்==
*Campbell memorial gold medel(Royal Asiatic Society-1984)
*லலித் கலா அகாதெமியின் ரத்னா விருது (Lalth Kala acdemy fellowship-1965)
*பத்மபூஷண் விருது
* விசித்திர சித்தன் பட்டம்(காஞ்சி சந்திரசேகரேந்திர சுவாமிகள்)
* விசித்திர சித்தன் பட்டம்(காஞ்சி சந்திரசேகரேந்திர சுவாமிகள்)


== மறைவு ==
== மதிப்பீடு==
சிவராமமூர்த்தி 1983-ல் நடராஜரின் அரிய படிமம் ஒன்றைப் பற்றி உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் காலமானார்.  
சி. சிவராமமூர்த்தி இந்தியாவின் தலைசிறந்த கலைவரலாற்றாசிரியர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார். இந்தியப் படிமவியல் பற்றிய அவரது ஆய்வுகள் முக்கியமானவை. லலித் கலா அகாதெமியின் மிக உயரிய 'ரத்னா' விருதைப் பெற்றார்.
 
== படைப்புகள் ==
 
* Mahabalipuram (1952)
* Early Eastern Chalukya Sculpture (1962)
* Indian Epigraphy and South Indian Scripts (1966)
* Nataraja in Art, Thought, and Literature (1974)
* L'Art en Inde (1974)
* Chitrasutra of the Vishnudharmottara (1978)
* Kalugumalai and Early Pandyan Rock-cut Shrines
* Sanskrit Literature and Art: Mirrors of Indian Culture
* La stupa du Barabudur (in French)
* An Album of Indian Sculpture
* Rishis in Indian art and literature
* Royal conquests and cultural migrations in South India and the Deccan
* Vijayanagara paintings
* Numismatic parallels of Kalidasa
* Sculpture inspired by Kalidasa
* Sri Lakshmi in Indian art and thought
* Ramo Vigrahavan dharmah-Rama embodiment of righteousness
* Birds and animals in Indian sculpture
* Sanskrit literature and art
* Mirrors of Indian culture
* Satarudriya – Vibhuti of Siva's Iconography
* Panorama of Jain art
* Shiva
* Ethical fragrance in Indian art and literature
* Indian Painting
* Approach to nature in Indian art and thought
* The art of India
* Expressive Quality of Literary flavour in Art
* Early Andhra Arts and Iconography
* Indian Bronze
* The Chola temples: Thanjavur, Gangaikondacholapuram & Darasuram
* Early eastern Chalukya sculpture
* Harappan Art
* Indian epigraphy and South Indian scripts
* Bhagavatpada-Sri Sankaracharya
* Epigraphical echoes of Kalidasa
* 5000 years of the art of India: with Mario Bussagli
* An Introduction to South Indian Temple Architecture and Sculptures, co-authored with F. H. Gravely
* Illustrations of Indian Sculptures, co-authored with F. H. Gravely
* Guide to the Archaeological Galleries, co-authored with F.H.Gravely
* Notes on Hindu Images, co-authored with F. H. Gravely
 
 
 
 
== உசாத்துணை ==
 
[https://www.indica.today/reviews/indian-painting-sivaramamurti/ Review: Indian Painting (2013) by C. Sivaramamurtiamurti/]
 
[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0019282_Numismatic_parallels_of_Kalidasa.pdf numismatic parallels of Kalidasa- C.Sivaramamurthy, Internet archive]
 
[https://www.newindianexpress.com/cities/chennai/2010/aug/09/sivaramamurti-let-his-art-do-the-talking-176678.html Sivaramamurti let his art do the talking, The Indian Express, August 2010]
 
 
 
 
 
 
 


Nataraja in Art, Thought, and Literature (1974)  நூலை 'இந்திய அறிவுப் புலத்தின் மாபெரும் சாதனை'  ( A monument to Indian Scholarship) என்று என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார். 


தொல்லியல்  ஆய்வாளர் [[ஆர். நாகசாமி]]  "சிவராமமூர்த்தி தான் காணும் எந்தவொரு கலைப் படைப்பையும் அடையாளம் கண்டு அதன் காலம், இடம், அப்படைப்பு முன்னிறுத்தும் தத்துவம் என  அனைத்தையும் துல்லியமாக அடையாளம் காணும் தன்மை கொண்டவர்" என மதிப்பிடுகிறார். 


==விருதுகள்==


*Campbell memorial gold medel(Royal Asiatic Society-1984)
*லலித் கலா அகாதெமியின் ரத்னா விருது (Lalth Kala acdemy fellowship-1965)
*பத்மபூஷண் விருது
*விசித்திர சித்தன் பட்டம்(காஞ்சி சந்திரசேகரேந்திர சுவாமிகள்)


==மறைவு==
சிவராமமூர்த்தி 1983-ல் நடராஜரின் அரிய படிமம் ஒன்றைப் பற்றி உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் காலமானார்.


==படைப்புகள்==


*Mahabalipuram (1952)
*Early Eastern Chalukya Sculpture (1962)
*Indian Epigraphy and South Indian Scripts (1966)
*Nataraja in Art, Thought, and Literature (1974)
*L'Art en Inde (1974)
*Chitrasutra of the Vishnudharmottara (1978)
*Kalugumalai and Early Pandyan Rock-cut Shrines
*Sanskrit Literature and Art: Mirrors of Indian Culture
*La stupa du Barabudur (in French)
*An Album of Indian Sculpture
*Rishis in Indian art and literature
*Royal conquests and cultural migrations in South India and the Deccan
*Vijayanagara paintings
*Numismatic parallels of Kalidasa
*Sculpture inspired by Kalidasa
*Sri Lakshmi in Indian art and thought
*Ramo Vigrahavan dharmah-Rama embodiment of righteousness
*Birds and animals in Indian sculpture
*Sanskrit literature and art
*Mirrors of Indian culture
*Satarudriya – Vibhuti of Siva's Iconography
*Panorama of Jain art
*Shiva
*Ethical fragrance in Indian art and literature
*Indian Painting
*Approach to nature in Indian art and thought
*The art of India
*Expressive Quality of Literary flavour in Art
*Early Andhra Arts and Iconography
*Indian Bronze
*The Chola temples: Thanjavur, Gangaikondacholapuram & Darasuram
*Early eastern Chalukya sculpture
*Harappan Art
*Indian epigraphy and South Indian scripts
*Bhagavatpada-Sri Sankaracharya
*Epigraphical echoes of Kalidasa
*5000 years of the art of India: with Mario Bussagli
*An Introduction to South Indian Temple Architecture and Sculptures, co-authored with F. H. Gravely
*Illustrations of Indian Sculptures, co-authored with F. H. Gravely
*Guide to the Archaeological Galleries, co-authored with F.H.Gravely
*Notes on Hindu Images, co-authored with F. H. Gravely<br />
==உசாத்துணை==


*[https://www.indica.today/reviews/indian-painting-sivaramamurti/ Review: Indian Painting (2013) by C. Sivaramamurtiamurti/]
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0019282_Numismatic_parallels_of_Kalidasa.pdf numismatic parallels of Kalidasa- C.Sivaramamurthy, Internet archive]
*[https://www.newindianexpress.com/cities/chennai/2010/aug/09/sivaramamurti-let-his-art-do-the-talking-176678.html Sivaramamurti let his art do the talking, The Indian Express, August 2010]
*[https://archive.org/details/dli.ministry.25978 Indian Sculpture- C.Sivaramamurthy, archive.org]




{{Being created}}
{{First review completed}}
[[Category: Tamil Content]]
[[Category: Tamil Content]]

Revision as of 10:50, 23 June 2023

C.sivaramamurthy.jpg

டாக்டர் சி. சிவராமமூர்த்தி( களம்பூர் சிவராமமூர்த்தி) (1909–1983) கல்வெட்டாய்வாளர், கலை வரலாற்றாசிரியர், அருங்காட்சியகவியலாளர், சமஸ்கிருத அறிஞர். இந்தியாவின் குறிப்பிடத்தக்க கலை வரலாற்றாசிரியர்களில் ஒருவர். இந்தியப் படிமவியலில் (iconography), குறிப்பாக நடராஜ தத்துவத்தில் அறிஞர். சென்னை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராகவும், புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்தார். இந்தியக் கலையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டார். இந்தியக் கலை பற்றிய வழிகாட்டி நூல்களும், தென்னிந்திய கல்வெட்டுகள் பற்றிய அடிப்படை நூலையும் எழுதினார். இந்திய அரசின் பத்மபூஷண், லலித் கலா அகாதெமியின் மிக உயர்ந்த 'ரத்னா' உட்பட பல விருதுகளைப் பெற்றார். கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவனுக்கு தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமளித்தார்.

பிறப்பு, கல்வி

சிவராமமூர்த்தி அப்பைய தீட்சிதர் பரம்பரையைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் சுந்தர சாஸ்திரிக்கு 1909-ல் பிறந்தார். தந்தை சுந்தர சாஸ்திரி சமஸ்கிருதப் புலவர். 'சுந்தர ராமாயணம்' என்னும் சமஸ்கிருதக் காவியத்தை இயற்றினார்.

தனி வாழ்க்கை

சிவராமமூர்த்தி சம்பூர்ணத்தை மணந்தார். இவர்களுக்கு சுந்தரராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி என்ற இரு மகன்கள்.

அருங்காட்சியகவியல்( Museology)

சி. சிவராமமூர்த்தி, சென்னை அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறையின் காப்பாளராக(curator) அருங்காட்சியகத் துறையில் நுழைந்தார். இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறையில் (Archeological Survey of India) கண்காணிப்பாளராகப் பணியேற்றார். கல்கத்தாவிலுள்ள இந்திய அருங்காட்சியகத்தில் (Indian Museum, Kolkatta) தொல்லியல் துறைத் தலைவராக இருந்தார். தில்லியில் இந்திய தேசிய அருங்காட்சியகத்தின்(The National Museum, New Delhi) காப்பாளராகவும், துணை இயக்குனராகவும் பணியாற்றி அதன் இயக்குனராக உயர்ந்தார். அங்கு பணிபுரிந்த காலத்தில் பல முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்த இருந்த இந்திய தேசிய அருங்காட்சியகத்திற்கு அடுத்திருந்த தொழில்துறை அமைச்சகத்தில் செயலராக இருந்த ஐராவதம் மகாதேவனுக்கு தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமளித்தார்.

சர்வதேச அருங்காட்சியக சபையின் (International Council of Museums-ICOM) நிர்வாகக்குழுவில் உறுப்பினராகவும்., அதன் இந்தியப் பிரிவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார்.

புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் , விலங்கியல் மற்றும் தொல்லியல் மாணவர், ஃபிரடெரிக் ஹென்றி கிரேவ்லி(Frederic Henry Gravely)யுடன் இணைந்து, 1938 -ல் அருங்காட்சியகத்தின் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களை ஒழுங்கமைத்து பட்டியல் (catalogue) தயாரித்தார். அமராவதி சிற்பங்களின் முதல் முழுமையான, விரிவான பட்டியலைத் (comprehensive catalogue) தயாரித்து, சாஞ்சி மற்றும் ப்ருஹத் புத்த சிற்பங்களாக அவற்றின் முக்கியத்துவத்தை அடையாளம் காட்டினார் (1942).

கலை வரலாற்றாய்வு

goodreads.com
கலை, சிந்தனை, இலக்கியத்தில் நடராஜர்

ஜவஹர்லால் நேரு நினைவு நிதியம் (Jawaharlal Nehnu memorial Fund) தொடங்கப்பட்டபோது அதன் முதல் நிதிநல்கை(fellowship) வரலாற்றாய்வுக்காக சிவராமமூர்த்திக்கு வழங்கப்பட்டது. நல்கையைப் பயன்படுத்தி கலை, சிந்தனை, இலக்கியம் என அனைத்து அம்சங்களிலும் சிவனின் நடன வடிவமான நடராஜரைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டு 22 வண்ணத் தகடுகள், 250- க்கும் மேற்பட்ட வண்ணப்படங்களுடன் 412 பக்கங்களில் 'Nataraja in art, thought and literature' என்ற நூலை எழுதினார். நுண்கலைகளின் தெய்வமாக நடராஜர் என்னும் ஆளுமையையும், கருத்தாக்கத்தையும் அதன் காலவெளிகளைக் கடந்த தன்மையையும் எடுத்துக்காட்டி, நாட்டியம், சிவனின் நடனத்தின் முக்கியத்துவம், சிவதாண்டவத்தில் உள்ள கரணங்கள், கிருஷ்ணராக விஷ்ணு வழங்கிய கரணங்கள், வேதத்தில் நடனத்தின் வேர்கள், இலக்கியத்தில் நடராஜர் உருவம், சிற்ப நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள நடராஜரின் வகைகள் , சிற்பம், ஓவியத்தில் நடராஜ வடிவம், இந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நடராஜர் என்னும் கருத்தாக்கம் ஆகிய முக்கிய தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூல் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முன்னுரையுடன் 1975-ல் வெளிவந்தது.

கலை/வரலாற்றாய்வு

catalogue rouge

சிற்பங்கள், ஓவியங்கள், நாணயங்களில் மகாகவி காளிதாசரின் காவியங்களின் தாக்கத்தை ஆய்வு செய்து 'Numismatic parallels of Kalidasa' என்ற நூலை எழுதினார்.

மகாபலிபுரச் சிற்பங்கள், முற்கால சாளுக்கியச் சிற்பக்கலை, கழுகுமலைச் சிற்பங்கள், சமண மதம் சார்ந்த சிற்பங்கள், குப்தர்காலத்துக்குப் பின்னான சிற்பக்கலையில் காளிதாசரின் தாக்கம் போன்ற சிற்பக்கலை வரலாற்றாய்வு நூல்களை எழுதினார். இந்தியாவின் வெண்கலச்சிற்பங்கள் பற்றிய ஆய்வுநூலை எழுதினார். தஞ்சைப் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோவில்களின் சிற்பக்கலை பற்றிய 'The Chola temples: Thanjavur, Gangaikondacholapuram & Darasuram' என்ற நூலை எழுதினார்.

இந்திய ஓவியக்கலை, விஜயநகரப்பேரரசின் ஓவியக்கலை போன்ற ஓவியக்கலை ஆய்வுநூல்களையும் எழுதினார். தென்னிந்திய ஓவியக்கலையைப் பற்றிய அவரது நூல்கள் சோழர்கால ஓவியக்கலையைப் பற்றிய புதிய நுண்ணோக்கைக் கொண்டிருந்தன.

இத்தாலிய இந்தியவியலாளர் Mario Bussagli யுடன் இணைந்து ஐயாயிரம் ஆண்டுக்கால இந்தியாவின் கலை வரலாற்றை (5000 years of the art of India: with Mario Bussagli) எழுதினார்.

விருதுகள்.பரிசுகள்

  • Campbell memorial gold medel(Royal Asiatic Society-1984)
  • லலித் கலா அகாதெமியின் ரத்னா விருது (Lalth Kala acdemy fellowship-1965)
  • பத்மபூஷண் விருது
  • விசித்திர சித்தன் பட்டம்(காஞ்சி சந்திரசேகரேந்திர சுவாமிகள்)

மதிப்பீடு

சி. சிவராமமூர்த்தி இந்தியாவின் தலைசிறந்த கலைவரலாற்றாசிரியர்களில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார். இந்தியப் படிமவியல் பற்றிய அவரது ஆய்வுகள் முக்கியமானவை. லலித் கலா அகாதெமியின் மிக உயரிய 'ரத்னா' விருதைப் பெற்றார்.

Nataraja in Art, Thought, and Literature (1974) நூலை 'இந்திய அறிவுப் புலத்தின் மாபெரும் சாதனை' ( A monument to Indian Scholarship) என்று என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார்.

தொல்லியல் ஆய்வாளர் ஆர். நாகசாமி "சிவராமமூர்த்தி தான் காணும் எந்தவொரு கலைப் படைப்பையும் அடையாளம் கண்டு அதன் காலம், இடம், அப்படைப்பு முன்னிறுத்தும் தத்துவம் என அனைத்தையும் துல்லியமாக அடையாளம் காணும் தன்மை கொண்டவர்" என மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • Campbell memorial gold medel(Royal Asiatic Society-1984)
  • லலித் கலா அகாதெமியின் ரத்னா விருது (Lalth Kala acdemy fellowship-1965)
  • பத்மபூஷண் விருது
  • விசித்திர சித்தன் பட்டம்(காஞ்சி சந்திரசேகரேந்திர சுவாமிகள்)

மறைவு

சிவராமமூர்த்தி 1983-ல் நடராஜரின் அரிய படிமம் ஒன்றைப் பற்றி உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் காலமானார்.

படைப்புகள்

  • Mahabalipuram (1952)
  • Early Eastern Chalukya Sculpture (1962)
  • Indian Epigraphy and South Indian Scripts (1966)
  • Nataraja in Art, Thought, and Literature (1974)
  • L'Art en Inde (1974)
  • Chitrasutra of the Vishnudharmottara (1978)
  • Kalugumalai and Early Pandyan Rock-cut Shrines
  • Sanskrit Literature and Art: Mirrors of Indian Culture
  • La stupa du Barabudur (in French)
  • An Album of Indian Sculpture
  • Rishis in Indian art and literature
  • Royal conquests and cultural migrations in South India and the Deccan
  • Vijayanagara paintings
  • Numismatic parallels of Kalidasa
  • Sculpture inspired by Kalidasa
  • Sri Lakshmi in Indian art and thought
  • Ramo Vigrahavan dharmah-Rama embodiment of righteousness
  • Birds and animals in Indian sculpture
  • Sanskrit literature and art
  • Mirrors of Indian culture
  • Satarudriya – Vibhuti of Siva's Iconography
  • Panorama of Jain art
  • Shiva
  • Ethical fragrance in Indian art and literature
  • Indian Painting
  • Approach to nature in Indian art and thought
  • The art of India
  • Expressive Quality of Literary flavour in Art
  • Early Andhra Arts and Iconography
  • Indian Bronze
  • The Chola temples: Thanjavur, Gangaikondacholapuram & Darasuram
  • Early eastern Chalukya sculpture
  • Harappan Art
  • Indian epigraphy and South Indian scripts
  • Bhagavatpada-Sri Sankaracharya
  • Epigraphical echoes of Kalidasa
  • 5000 years of the art of India: with Mario Bussagli
  • An Introduction to South Indian Temple Architecture and Sculptures, co-authored with F. H. Gravely
  • Illustrations of Indian Sculptures, co-authored with F. H. Gravely
  • Guide to the Archaeological Galleries, co-authored with F.H.Gravely
  • Notes on Hindu Images, co-authored with F. H. Gravely

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.