மித்ரா அழகுவேல்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) |
(Added First published date) |
||
(3 intermediate revisions by 3 users not shown) | |||
Line 20: | Line 20: | ||
{ | {{Finalised}} | ||
{{Fndt|04-Nov-2023, 10:16:51 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:எழுத்தாளர்கள்]] | [[Category:எழுத்தாளர்கள்]] |
Latest revision as of 16:29, 13 June 2024
மித்ரா அழகுவேல் (பிறப்பு: மே 5, 1993) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர். திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் திரைக்கதை வசனம் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
மித்ரா அழகுவேல் தேனியில் அழகுவேல், பாமா இணையருக்கு மூத்த மகளாக மே 5, 1993-ல் பிறந்தார். பள்ளிப்படிப்பை தேனி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் படித்தார். இளங்கலை நிர்வாகவியல் பட்டப்படிப்பை நாமக்கல் கொமாரபாளையத்தில் உள்ள SSM கலை அறிவியல் கல்லூரியில் படித்தார்.
தனிவாழ்க்கை
மித்ரா அழகுவேல் டிசம்பர் 2021-ல் திரைப்பட உதவி இயக்குனர், நடிகரான மிதுன் ராமசாமியைத் திருமணம் செய்து கொண்டார். மித்ரா அழகுவேல் தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
மித்ரா அழகுவேல் கல்லூரி இதழ்களில் கவிதைகள் எழுதினார். அச்சு இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் தொடர்ந்து கதைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். மித்ரா அழகுவேலின் முதல் கவிதைத் தொகுப்பு ’முற்றா இளம்புல்' 2020-ல் வாசகசாலை வெளியீடாக வெளிவந்தது.
இலக்கிய இடம்
"மொழியின் பித்தேறிய நவீன மனதின் கவிதைகள் இவை. மானுட உறவுகள் கொள்ளும் அன்பின் சமகால பண்புகளை இவை பேசுகின்றன. தனித் தீவாய் தன்னை உணரும் மானுடத் தன்னிலை அந்நியமாகி நிற்கும் தன் இருப்பின் உணர்தலை அதன் ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றன. காதலின் பொன் தருணங்களும் காதலின்மையின் தகிப்பான வெம்மையும் இதில் பகிரப்படுகின்றன. கைவிடப்படுதலின் வாதையும் தனித்தலைதலின் அநாதமை இருளில் பொங்கும் விசும்பலும் ஒலித்தாலும் விடியலின் கீற்றுகளுக்காக காத்திருத்தலும் அது குறித்த நம்பிக்கையின் சொற்களுமேகூட நிரம்பியிருக்கின்றன. இந்த மனநிலை ஓர் ஊசல் போல் இருளுக்கும் ஒளிக்கும் மாறி மாறி பயணிப்பதாய் இத்தொகுப்பில் தொனிக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளாய் கவிகளின் நெஞ்சில் உருத் திரண்ட நெடுந் தமிழ் மரபின் வளமார்ந்த பச்சையத்தில் மித்ராவின் மின்னவிற் பொற்பூ ஒளிர்கிறது" என இளங்கோ கிருஷ்ணன் 'மின்னவிர் பொற்பூ’ கவிதைத் தொகுப்பின் பின்னட்டைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- முற்றா இளம்புல் (2020, வாசகசாலை)
- மின்னவிர் பொற்பூ (2022, வாசகசாலை)
சிறுகதைத் தொகுப்பு
- கார்மலி (2021, வாசகசாலை)
உசாத்துணை
- கார்மலி சிறுகதைத் தொகுப்பு பற்றி எழுத்தாளர் விழியன் எழுதியது;
- மின்னவிர் பொற்பூ குறித்து கவிஞர் மஞ்சுளா தேவி எழுதியது;
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-Nov-2023, 10:16:51 IST