under review

நாயகன் நாயகி பாவம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "நாயகன் நாயகி பாவம் (Bridal mysticism) {{Being created}} Category:Tamil Content")
 
(Added First published date)
 
(21 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
நாயகன் நாயகி பாவம் (Bridal mysticism)
{{Read English|Name of target article=Nayaka Nayaki Bhava (Bridal Mysticism)|Title of target article=Nayaka Nayaki Bhava (Bridal Mysticism)}}
நாயகன் நாயகி பாவம்(Bridal mysticism) (பொ.யு 7-9-ம் நூற்றாண்டு) இலக்கிய உத்தி. தமிழின் பக்தி இலக்கிய காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது.
== வரையறை ==
பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனை நாயகனாகவும், தங்களை நாயகியாகவும் பாவித்துப்  இயற்றிய பாடல்கள்  நாயகன் நாயகி பாவம்.
 
== வரலாறு ==
சங்க காலத்தில் அகத்துறையில் காதல், களவு வாழ்க்கை பேசப்பட்டது. ஆண்-பெண் உறவின் பிரிவு, காதல், காமத்தைப் பேசுவதாக அது அமைந்தது.  பொ.யு. மூன்றாம் நூற்றாண்டில் சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர் கைப்பற்றி ஆண்டனர். தொண்டை நாடு பல்லவர் ஆட்சிக்குட்பட்டது. சங்க காலத்திற்குப் பிறகு துறவறம், வீடுபேறு போன்ற சிந்தனைகளை வலியுறுத்திய சமண, பௌத்த சமயங்கள் தமிழ்நாட்டில் எழுந்தன. நீதி நூல்கள் தோன்றின. இக்காலத்தில் வாழ்ந்த காரைகாலம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகியவற்றை இயற்றினார். திருமூலர் திருமந்திரம் இயற்றினார். இவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டன.
 
களப்பிரர் காலத்திற்கு பிறகு சோழர் ஆட்சியில் பொ.யு. 7, 8, 9-ம் நூற்றாண்டுகளில் பக்திச் சிந்தனை மேலோங்கியது. இலக்கியங்களின் பாடுபொருள் பக்தி சார்ந்து உருவாகியது. இறைவனையும் இறையடியாரையும் அது பாடியது. சமயங்களின் பரப்பும் கருவியாக சமய இலக்கியங்கள் தோன்றின. இலக்கியங்களில் நேரடியாகவும் உள்ளீடாகவும் சமயம் சார்ந்த சிந்தனைகள் எழுந்தன. மனிதர்களுக்கிடையேயான உறவை விட கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவே நிலையானதும், புனிதமானதும் என்ற சிந்தனை இருந்தது. பக்தி இலக்கிய காலத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் 'நாயகன் நாயகி பாவம்’ என்பதை இலக்கிய உத்தியாகப் பயன்படுத்தினர்.
== நூல்கள் ==
* நாயகன்-நாயகி பாவத்தை இலக்கிய உத்தியாகப் பயன்படுத்திப் பாடிய பாடல்கள் அடங்கிய நூல்கள்
===== சைவம் =====
* [[பன்னிரு திருமுறை]]
===== வைணவம் =====
* [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்]]
== பண்புகள் ==
* இலக்கிய உத்தியாக இலக்கியத்தில் பயன்படுத்தினர்.
* மன அழுக்கைக் கழுவுவது, உள்ளுணர்வை வெளிப்படுத்துவது, உலக நிலையாமையை உணர்த்துவது, மானிட இனத்தை உயர்த்துவதாக அமைந்தது.
* இறைவன் மீதான உச்சபட்ச அன்பைப் புலப்படுத்தியது.
* காதல் உணர்வு மிகுந்த அகத்துறைப் பாடல்களாக அமைந்தன.
* சங்க அகத்துறை மரபை இப்பாடல்களில் கையாண்டனர்.
* பெண் மடலேறுதல் என்ற விதிவிலக்கும் பயன்படுத்தப்பட்டது.
== உசாத்துணை ==
* [http://www.muthukamalam.com/essay/literature/p123.html தமிழ் பக்தி இலக்கியத்தில் நாயக - நாயகி பாவம்: மு. சங்கர்]
* [https://www.gunathamizh.com/2020/05/blog-post_30.html பக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்: gunathamizh]
 
 
{{Finalised}}
 
{{Fndt|03-Oct-2023, 14:49:53 IST}}




{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 12:05, 13 June 2024

To read the article in English: Nayaka Nayaki Bhava (Bridal Mysticism). ‎

நாயகன் நாயகி பாவம்(Bridal mysticism) (பொ.யு 7-9-ம் நூற்றாண்டு) இலக்கிய உத்தி. தமிழின் பக்தி இலக்கிய காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது.

வரையறை

பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனை நாயகனாகவும், தங்களை நாயகியாகவும் பாவித்துப் இயற்றிய பாடல்கள் நாயகன் நாயகி பாவம்.

வரலாறு

சங்க காலத்தில் அகத்துறையில் காதல், களவு வாழ்க்கை பேசப்பட்டது. ஆண்-பெண் உறவின் பிரிவு, காதல், காமத்தைப் பேசுவதாக அது அமைந்தது. பொ.யு. மூன்றாம் நூற்றாண்டில் சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர் கைப்பற்றி ஆண்டனர். தொண்டை நாடு பல்லவர் ஆட்சிக்குட்பட்டது. சங்க காலத்திற்குப் பிறகு துறவறம், வீடுபேறு போன்ற சிந்தனைகளை வலியுறுத்திய சமண, பௌத்த சமயங்கள் தமிழ்நாட்டில் எழுந்தன. நீதி நூல்கள் தோன்றின. இக்காலத்தில் வாழ்ந்த காரைகாலம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகியவற்றை இயற்றினார். திருமூலர் திருமந்திரம் இயற்றினார். இவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டன.

களப்பிரர் காலத்திற்கு பிறகு சோழர் ஆட்சியில் பொ.யு. 7, 8, 9-ம் நூற்றாண்டுகளில் பக்திச் சிந்தனை மேலோங்கியது. இலக்கியங்களின் பாடுபொருள் பக்தி சார்ந்து உருவாகியது. இறைவனையும் இறையடியாரையும் அது பாடியது. சமயங்களின் பரப்பும் கருவியாக சமய இலக்கியங்கள் தோன்றின. இலக்கியங்களில் நேரடியாகவும் உள்ளீடாகவும் சமயம் சார்ந்த சிந்தனைகள் எழுந்தன. மனிதர்களுக்கிடையேயான உறவை விட கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவே நிலையானதும், புனிதமானதும் என்ற சிந்தனை இருந்தது. பக்தி இலக்கிய காலத்தில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் 'நாயகன் நாயகி பாவம்’ என்பதை இலக்கிய உத்தியாகப் பயன்படுத்தினர்.

நூல்கள்

  • நாயகன்-நாயகி பாவத்தை இலக்கிய உத்தியாகப் பயன்படுத்திப் பாடிய பாடல்கள் அடங்கிய நூல்கள்
சைவம்
வைணவம்

பண்புகள்

  • இலக்கிய உத்தியாக இலக்கியத்தில் பயன்படுத்தினர்.
  • மன அழுக்கைக் கழுவுவது, உள்ளுணர்வை வெளிப்படுத்துவது, உலக நிலையாமையை உணர்த்துவது, மானிட இனத்தை உயர்த்துவதாக அமைந்தது.
  • இறைவன் மீதான உச்சபட்ச அன்பைப் புலப்படுத்தியது.
  • காதல் உணர்வு மிகுந்த அகத்துறைப் பாடல்களாக அமைந்தன.
  • சங்க அகத்துறை மரபை இப்பாடல்களில் கையாண்டனர்.
  • பெண் மடலேறுதல் என்ற விதிவிலக்கும் பயன்படுத்தப்பட்டது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Oct-2023, 14:49:53 IST