under review

விசுவநாத சாஸ்திரி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(One intermediate revision by one other user not shown)
Line 7: Line 7:
மார்ச் 21, 1828-ல் நிகழந்த சந்திரகிரகணம் விசுவநாத சாஸ்திரி கணித்ததை விட பதினைந்து நிமிடங்கள் முன்னதாகத் தோன்றியது, இருபத்தி நான்கு நிமிடங்கள் அதிகமாக நீடித்தது.
மார்ச் 21, 1828-ல் நிகழந்த சந்திரகிரகணம் விசுவநாத சாஸ்திரி கணித்ததை விட பதினைந்து நிமிடங்கள் முன்னதாகத் தோன்றியது, இருபத்தி நான்கு நிமிடங்கள் அதிகமாக நீடித்தது.
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
விசுவநாத சாஸ்திரி சிற்றிலக்கியங்கள் இயற்றினார். மாவைக்குறவஞ்சி, குருநாதர் கிள்ளைவிடு தூது ஆகியவை குறிப்பிடத்தக்க  படைப்புகள்
விசுவநாத சாஸ்திரி சிற்றிலக்கியங்கள் இயற்றினார். 'மாவைக்குறவஞ்சி', 'குருநாதர் கிள்ளைவிடு தூது' ஆகியவை குறிப்பிடத்தக்க  படைப்புகள்
== விருதுகள் ==
== விருதுகள் ==
* இலங்கைத் அதிபர் விசுவநாத சாஸ்திரிக்கு ’அரச கணிதர்’ பட்டத்தை வழங்கினார்.
* இலங்கைத் அதிபர் விசுவநாத சாஸ்திரிக்கு ’அரச கணிதர்’ பட்டத்தை வழங்கினார்.
Line 21: Line 21:
* [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை]
* [https://noolaham.net/project/10/963/963.html ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0lJxe#book1/140 The Tamil Plutarch: Chitty, Simon Casie: tamildigitallibrary]
* [https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt0lJxe#book1/140 The Tamil Plutarch: Chitty, Simon Casie: tamildigitallibrary]
{{First review completed}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|11-Oct-2023, 05:15:21 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 12:05, 13 June 2024

விசுவநாத சாஸ்திரி (விஸ்வநாதன்) (1756-1835) ஈழத்து தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியங்கள் இயற்றினார். ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

விசுவநாத சாஸ்திரி இலங்கை யாழ்ப்பாணம் அராலியில் நாராயண சாஸ்திரிக்கு மகனாக 1756-ல் பிறந்தார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். ஜோதிடத்திலும் , கணிதத்திலும் தேர்ச்சியுடையவர்.

ஜோதிடம்

இலங்கையில் அக்காலத்தில் கணிக்கப்பட்ட பஞ்சாங்கங்களுள் விசுவநாத சாஸ்திரியால் கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்துக்கு மதிப்பு இருந்தது. தன் குடும்பத்தில் ஒன்பது தலைமுறைகளாக கணிக்கப்பட்டு வந்த வான சாஸ்திரத் தகவல்களைத் தொகுத்தார். இறக்கும்வரை ஆண்டுதோறும் பஞ்சாங்கம் வெளியிட்டார்.

விவாதம்

மார்ச் 21, 1828-ல் நிகழந்த சந்திரகிரகணம் விசுவநாத சாஸ்திரி கணித்ததை விட பதினைந்து நிமிடங்கள் முன்னதாகத் தோன்றியது, இருபத்தி நான்கு நிமிடங்கள் அதிகமாக நீடித்தது.

இலக்கிய வாழ்க்கை

விசுவநாத சாஸ்திரி சிற்றிலக்கியங்கள் இயற்றினார். 'மாவைக்குறவஞ்சி', 'குருநாதர் கிள்ளைவிடு தூது' ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள்

விருதுகள்

  • இலங்கைத் அதிபர் விசுவநாத சாஸ்திரிக்கு ’அரச கணிதர்’ பட்டத்தை வழங்கினார்.

மறைவு

விசுவநாத சாஸ்திரி 1835-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • வண்ணைக் குறவஞ்சி
  • நகுலமலைக் குறவஞ்சி
  • மாவைக் குறவஞ்சி
  • குருநாதர் கிள்ளைவிடு தூது
  • வாக்கிய கரண கிரகணம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Oct-2023, 05:15:21 IST