புலவியுள் புலம்பல்(பெருந்திணை): Difference between revisions
No edit summary |
(; Added info on Finalised date) |
||
| (One intermediate revision by one other user not shown) | |||
| Line 18: | Line 18: | ||
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214662-19946 பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்] | [https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214662-19946 பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{ | {{Finalised}} | ||
{{Fndt|23-Jul-2025, 21:07:23 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 03:44, 24 July 2025
புலவியுள் புலம்பல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெருந்திணைக் காதல் கொண்ட தலைவி ஊடலால் வருந்துதலைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அழகிய வளையல்களை அணிந்த பெண், ஊடலால் தலைவனின் மாலையை அறுத்து ஆற்றாளாய்த் தனிமையுறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
நல்வளை மடந்தை நல்தார் பரிந்து
புலவி ஆற்றாள் புலம்பிற்றன்று(கொளு 16.8 )
வெண்பா
ஓங்கிய வேலான் பணியவும் ஒள்ளிழை
தாங்காள் வரைமார்பின் தார் பரிந்து - ஆங்கே
அடும்படர் மூழ்கி அமைமென்தோள் வாட
நெடும் பெருங்கண் நீந்தின காண் (313)
பொருள்: வேலினை உடைய தலைவன் அவளது ஊடலைத் தணிக்க வணங்கியும், தன் சினத்தை அடக்காதவளாய் அவனுடைய மாலையை அறுத்து எறிந்து அதனால் ஏற்பட்ட துயரத்தால் அவள் கண்கள் கண்ணீரில் மிதக்கின்றன.
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Jul-2025, 21:07:23 IST