அசனா லெப்பை: Difference between revisions
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்) |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=லெப்பை|DisambPageTitle=[[லெப்பை (பெயர் பட்டியல்)]]}} | |||
அசனா லெப்பை (1870 - 1918) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர். தமிழ், அரபு ஆகிய மொழிகளில் செய்யுள்கள் பாடினார். | அசனா லெப்பை (1870 - 1918) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர். தமிழ், அரபு ஆகிய மொழிகளில் செய்யுள்கள் பாடினார். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
Line 31: | Line 32: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:எழுத்தாளர்]] | ||
[[Category:Spc]] | [[Category:Spc]] |
Latest revision as of 11:50, 17 November 2024
- லெப்பை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: லெப்பை (பெயர் பட்டியல்)
அசனா லெப்பை (1870 - 1918) ஈழத்து தமிழ் சிற்றிலக்கியப்புலவர். தமிழ், அரபு ஆகிய மொழிகளில் செய்யுள்கள் பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கை யாழ்ப்பாணன் வண்ணார்பண்ணையில் 1870-ல் சுல்த்தான் முகியித்தீனுக்கு இரண்டாவது மகனாக அசனா லெப்பை பிறந்தார். இலங்கை அரசாங்கத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். முதன்முதலில் முஸ்லிம் சமூகத்திலிருந்து அரசுப்பணியில் சேர்ந்தவர். தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டிருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
அசனா லெப்பை 'திருப்புகழ்ப் பாவணி', 'நவரத்தினத் திருப்புகழ்', 'குதுபு நாயக அனுசாசனம்' ஆகிய நூல்களை எழுதினார். அசளு லெப்பைப் புலவரின் பாடல்கள் ’புகழ்ப் பாவணி’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. இந்நூலுக்கு இவரது நண்பர் மு. சுலைமான் லெப்பை சிறப்புப் பாயிரம் அளித்தார். இந்நூலில் நபிகள் நாயகம்(சல்) அவர்கள்மீது நவரத்தினத் திருப்புகழும், முகியித்தீன் அப்துல் காதிறு ஆண்டவர் மீது ஆசிரிய விருத்தமும், அகமதுல் கபீறுற்றியாகி ஆண்டகை மீது அந்தாதியும், சாகுல் ஹமீது ஆண்டவர் மீது முனுசாத்தும் பாடிச் சேர்க்கப்பட்டன. 'குதுபு நாயக அனுசாசனம்' இருநூற்று நாற்பத்து நான்கு பாடல்களைக் கொண்டது. அசனா லெப்பை புலவர் ரிஃபாயி ஆண்டகையின் புகழையும் பதாயிகு நகரின் சிறப்பையும் விவரிக்கும் 'பதாயிகு பதிற்றுப் பத்து அந்தாதி' நூலை 1890-ல் இயற்றினார்.
அசனா லெப்பை இலங்கையிலும் இந்தியாவிலும் புலவர்கள் பலருடன் தொடர்பு பூண்டிருந்தார். தென்னிந்தியாவைச் சேர்ந்தவரும் மதுரைத் தமிழ்ச் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவருமான குலாம் காதிறு நாவலருடன் நட்பு கொண்டிருந்தார். குலாம் காதிறு நாவலர் இயற்றிய ’ஆரிபு நாயகம்’, ‘நாகூர்ப் புராணம்', 'பிக்குகுமாலை', 'திரிமக்கா திரிபந்தாதி' ஆகிய நூல்களுக்கு சாற்றுகவி எழுதினார்.
மறைவு
அசனா லெப்பை 1918-ம் ஆண்டு காலமானார்.
நூல் பட்டியல்
- திருப்புகழ்ப் பாவணி
- நவரத்தினத் திருப்புகழ்
- குதுபு நாயக அனுசாசனம்
- திருநாகை நிரோட்டக யமகவந்தாதி
- பகுதாதந்தாதி
- பஞ்சமணித்திருப்புகழ்
- சத்தரதனத் திருப்புகழ்
- பதாயிகுப்பதிகம்
- இருபதிச் சிலேடை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:அசனா லெப்பை, சுலுத்தான் முகியித்தீன்: noolaham
- ஈழத்து தமிழ் அறிஞர்கள்: கவிஞர் த. துரைசிங்கம்: உமா பதிப்பகம்: கொழும்பு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
03-Feb-2023, 17:11:37 IST