under review

சூஃபித்துவம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected typo errors;)
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 4: Line 4:
சூஃபித்துவம் அல்லது தஸவ்வுஃப் என்பதை இஸ்லாமிய மறைஞானம் (Islamic Mysticism) எனலாம். சூபித்துவத்தை பயிற்சிசெய்பவர்கள் 'சூஃபிக்கள்' (Muslim mystic) என்று அழைக்கப்பட்டனர். சூஃபி என்பது அரபுச் சொல்.   
சூஃபித்துவம் அல்லது தஸவ்வுஃப் என்பதை இஸ்லாமிய மறைஞானம் (Islamic Mysticism) எனலாம். சூபித்துவத்தை பயிற்சிசெய்பவர்கள் 'சூஃபிக்கள்' (Muslim mystic) என்று அழைக்கப்பட்டனர். சூஃபி என்பது அரபுச் சொல்.   


* சூஃபி என்ற அரபுச் சொல் தூய்மை என்பதைக் குறிக்கும் ”ஸஃபா” என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.  
* சூஃபி என்ற அரபுச் சொல் தூய்மை என்பதைக் குறிக்கும் "ஸஃபா" என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.  
* ஆரம்பகால இஸ்லாமிய இறைநிலையாளர்கள் அணிந்த கம்பளி ஆடைகள்(சூஃப்) அல்லது கடினமான ஆடை என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதினர். "சூஃபி  என்பவர் கம்பளியை அணிந்த உயர்ந்த தூய்மையானவர்" என அல்-ருஹபாரி கருதினார்.  
* ஆரம்பகால இஸ்லாமிய இறைநிலையாளர்கள் அணிந்த கம்பளி ஆடைகள்(சூஃப்) அல்லது கடினமான ஆடை என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதினர். "சூஃபி  என்பவர் கம்பளியை அணிந்த உயர்ந்த தூய்மையானவர்" என அல்-ருஹபாரி கருதினார்.  
* அஹ்லுஸ்ஸுப்பா (நீண்டஇருக்கையிலுள்ள மக்கள்) என்ற வார்த்தையிலிருந்து சூஃபிசம் என்ற சொல் தோற்றம் பெற்றதாக சில அறிஞர்கள் கருதினர். அஹ்லுஸ்ஸுப்பா என்போர் இரவும் பகலும் தியானத்தில் ஈடுபட்டிருந்த முகம்மது நபியின் திண்ணைத் தோழர்கள்.
* அஹ்லுஸ்ஸுப்பா (நீண்டஇருக்கையிலுள்ள மக்கள்) என்ற வார்த்தையிலிருந்து சூஃபிசம் என்ற சொல் தோற்றம் பெற்றதாக சில அறிஞர்கள் கருதினர். அஹ்லுஸ்ஸுப்பா என்போர் இரவும் பகலும் தியானத்தில் ஈடுபட்டிருந்த முகம்மது நபியின் திண்ணைத் தோழர்கள்.
Line 27: Line 27:
* கடவுளுக்கு நெருக்கமான மனநிலையை உருவாக்க 'சாமா' எனப்படும் இசை பாராயணங்களை பிரபலமாக்கினர்.
* கடவுளுக்கு நெருக்கமான மனநிலையை உருவாக்க 'சாமா' எனப்படும் இசை பாராயணங்களை பிரபலமாக்கினர்.
* சிஷ்டிகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்பினர். ஆட்சியாளர்கள், பிரபுக்களின் நிறுவனத்தைத் தவிர்த்தனர்.
* சிஷ்டிகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்பினர். ஆட்சியாளர்கள், பிரபுக்களின் நிறுவனத்தைத் தவிர்த்தனர்.
* சூஃபிக்களை இந்திய மரபில் சித்தர்களுக்குச் சமானமானவர்கள் எனலாம். கட்டற்ற வாழ்க்கை, அமைப்புக்குள் சிக்காத ஆன்மீகம், தத்துவ நோக்குகள் கொண்டவர்கள். ஆனால் சித்தர்களிடம் மருத்துவம் ரசவாதம் போன்ற சில அறிவியல் கூறுகள் உண்டு. அவை சூ·பிகளிடம் இல்லை. சித்தர்களில் நாத்திகர்கள் உண்டு, சூ·பிக்களில் இல்லை. நிஜாமுதீன் அவுலியா யோக சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டார். அதனால் யோகிகள் அவரை ஒரு சித் அல்லது 'சரியானவர்' என்று அழைத்தனர்.
* சூஃபிக்களை இந்திய மரபில் சித்தர்களுக்குச் சமானமானவர்கள் எனலாம். கட்டற்ற வாழ்க்கை, அமைப்புக்குள் சிக்காத ஆன்மீகம், தத்துவ நோக்குகள் கொண்டவர்கள். ஆனால் சித்தர்களிடம் மருத்துவம் ரசவாதம் போன்ற சில அறிவியல் கூறுகள் உண்டு. அவை சூ.பிகளிடம் இல்லை. சித்தர்களில் நாத்திகர்கள் உண்டு, சூ.பிக்களில் இல்லை. நிஜாமுதீன் அவுலியா யோக சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டார். அதனால் யோகிகள் அவரை ஒரு சித் அல்லது 'சரியானவர்' என்று அழைத்தனர்.


== வரலாறு ==
== வரலாறு ==
சூஃபித்துவம் பெர்சியாவில் பொ.யு. 7-ம் நூற்றாண்டில் தோன்றியது. இஸ்லாத்தில் ஒரு தாராளவாத சீர்திருத்த இயக்கமாக இருந்தது. ஆனால் இஸ்லாமிய மதத்தின் ஒரு பிரிவு அல்ல. குர்ஆனிலிருந்து நேரடியாக பெறப்பட்ட கருத்துக்களுடன் தொடர்ச்சியாக ஓதல், தியானம் மற்றும் அனுபவத்தைப் பெறுதல் போன்றவையே சூஃபிசத்தால் செயற்படுத்தப்பட்டு, இஸ்லாமிய மறைஞானம் என பரவலாக அறியப்பட்டது. இந்தப் பாரம்பரியமானது முதலாவதாக இஸ்லாத்தின் நான்காவது ஆட்சியாளர் கலீபா அலியிடமிருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக ஜுனைத் அல்-பக்தாதி ஊடாக தொடரும் ஒன்று என அலி-ஹுஜ்விரி என்ற சூஃபி கருதினார்.
சூஃபித்துவம் பெர்சியாவில் பொ.யு. 7-ம் நூற்றாண்டில் தோன்றியது. இஸ்லாத்தில் ஒரு தாராளவாத சீர்திருத்த இயக்கமாக இருந்தது. ஆனால் இஸ்லாமிய மதத்தின் ஒரு பிரிவு அல்ல. குர்ஆனிலிருந்து நேரடியாக பெறப்பட்ட கருத்துக்களுடன் தொடர்ச்சியாக ஓதல், தியானம் மற்றும் இறையனுபவத்தைப் பெறுதல் போன்றவையே சூஃபிசத்தால் செயற்படுத்தப்பட்டு, இஸ்லாமிய மறைஞானம் என பரவலாக அறியப்பட்டது. இந்தப் பாரம்பரியமானது முதலாவதாக இஸ்லாத்தின் நான்காவது ஆட்சியாளர் கலீபா அலியிடமிருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக ஜுனைத் அல்-பக்தாதி ஊடாக தொடரும் ஒன்று என அலி-ஹுஜ்விரி என்ற சூஃபி கருதினார்.


பிற சமயங்களைப் போலவே இஸ்லாமிலும் மறைஞானத்தை அறிந்து இறைவனை அடைய ’தஸவ்வுஃப்’ என்ற அமைப்பு உருவானது. இது நியோ பிளேட்டோனிஸத்திலிருந்து பிறந்தது என அறிஞர்கள் கருதினர். ஆரிய நாகரிகத்தொடர்பால் உருவானது எனச் சில அறிஞர்கள் கருதினர். பிற மதங்கள், தத்துவங்கள் ஆகியவற்றில் தொடர்பில்லாமல் தன்னியல்பாய் உருவானதாகச் சிலர் கருதினர்.
பிற சமயங்களைப் போலவே இஸ்லாமிலும் மறைஞானத்தை அறிந்து இறைவனை அடைய 'தஸவ்வுஃப்' என்ற அமைப்பு உருவானது. இது நியோ பிளேட்டோனிஸத்திலிருந்து பிறந்தது என அறிஞர்கள் கருதினர். ஆரிய நாகரிகத்தொடர்பால் உருவானது எனச் சில அறிஞர்கள் கருதினர். பிற மதங்கள், தத்துவங்கள் ஆகியவற்றில் தொடர்பில்லாமல் தன்னியல்பாய் உருவானதாகச் சிலர் கருதினர்.


சூஃபிக்கள் வரலாற்று ரீதியில் வேறுபட்ட 'தரீக்கா' அல்லது வழிமுறைகளைச் சார்ந்தவர்களாக உள்ளனர். தரீக்காக்கள் என்பவை இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் வரை சென்றடையக்கூடிய நேரடி சங்கிலித்தொடரைக் கொண்ட பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட குழுக்கள்.  இந்தக் குழுக்கள் ஆன்மீக அமர்வுகளுக்காக ("மஜ்லிஸ்") வேண்டி ஸாவியா, ஸன்கா, தக்கியா என்று அறியப்படுகின்ற இடங்களில் ஒன்று கூடுகின்றனர். அவர்கள் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இஹ்ஸானுக்காக (சம்பூரணத்தன்மை) போராடுகின்றனர். "இறைவனை வணங்கும்போது நீர் அவனை பார்க்கும் நிலையில் வணங்கவேண்டும். அப்படி உம்மால் பார்க்க முடியாவிட்டால், அவன் உன்னைப் பார்க்கிறான் என்ற நிலையில் வணங்கவேண்டும்." ஒரு சூபி இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில், அபூபக்கர்(ரலி) அவர்களைப் போல் தொங்கிக்கொண்டிருக்கின்றார் என்று மௌலானா ரூமி கூறுகின்றார். சூபிகள் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை அல்-இன்ஸான் அல்-காமில், அதாவது இறைவனின் அறநெறிக்கு உதாரணமான முதன்மையான பூரணத்துவ மனிதர் என்று அழைக்கின்றனர். மேலும், இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களைத் தமது முதன்மையான தலைவராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் அவர்கள் கருதினர்.
சூஃபிக்கள் வரலாற்று ரீதியில் வேறுபட்ட 'தரீக்கா' அல்லது வழிமுறைகளைச் சார்ந்தவர்களாக உள்ளனர். தரீக்காக்கள் என்பவை இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் வரை சென்றடையக்கூடிய நேரடி சங்கிலித்தொடரைக் கொண்ட பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட குழுக்கள்.  இந்தக் குழுக்கள் ஆன்மீக அமர்வுகளுக்காக ("மஜ்லிஸ்") வேண்டி ஸாவியா, ஸன்கா, தக்கியா என்று அறியப்படுகின்ற இடங்களில் ஒன்று கூடுகின்றனர். அவர்கள் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இஹ்ஸானுக்காக (சம்பூரணத்தன்மை) போராடுகின்றனர். "இறைவனை வணங்கும்போது நீர் அவனை பார்க்கும் நிலையில் வணங்கவேண்டும். அப்படி உம்மால் பார்க்க முடியாவிட்டால், அவன் உன்னைப் பார்க்கிறான் என்ற நிலையில் வணங்கவேண்டும்." ஒரு சூபி இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில், அபூபக்கர்(ரலி) அவர்களைப் போல் தொங்கிக்கொண்டிருக்கின்றார் என்று மௌலானா ரூமி கூறுகின்றார். சூபிகள் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை அல்-இன்ஸான் அல்-காமில், அதாவது இறைவனின் அறநெறிக்கு உதாரணமான முதன்மையான பூரணத்துவ மனிதர் என்று அழைக்கின்றனர். மேலும், இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களைத் தமது முதன்மையான தலைவராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் அவர்கள் கருதினர்.
Line 60: Line 60:
* ஷத்தாரியா
* ஷத்தாரியா
==== சிஸ்டி சில்சிலா ====
==== சிஸ்டி சில்சிலா ====
பொ.யு. 1192-ல் [[குவாஜா மொய்னுதீன் சிஷ்டி]] (கரிப் நவாஸ்) என்பவரால் இந்தியாவில் சிஸ்டி வரிசை நிறுவப்பட்டது. லாகூர், டெல்லியில் தங்கிய பின் இறுதியாக 1206-ல் அஜ்மீருக்குச் சென்றார். பொ.யு. 1235-ல் அவரது கல்லறையை அப்போதைய சுல்தான் முகமது துக்ளக் பார்வையிட்டார் அதன் பிறகு மசூதி மற்றும் குவிமாடம் 15-ம் நூற்றாண்டில் மால்வாவின் முகம்மது கல்ஜியால் அமைக்கப்பட்டது. அதன்பின் அக்பரின் ஆதரவைப் பெற்றது. குதுப் உத்தின் பக்தியார் காக்கி டெல்லி சுல்தானியர் இல்டுமிஷின் ஆதரவைப் பெற்றார். அவரின் நினைவாக குதுப் மினாரை இல்டுமிஷ் நிறுவினார்.ஃபரித்-உத்-தின் கஞ்ச்-இ-ஷகர் (பொ.யு. 1175 - 1265), நிஜாமுதீன் அவுலியா (பொ.யு.1238 1325), நசிருதீன் முகம்மது, ஷேக் புர்ஹானுதீன் காரிப் (13-ம் நூற்றாண்டில் தக்காணத்தில் சிஸ்டி வரிசையை நிறுவினார்), முஹம்மது பண்டா நவாஸ் (பிஜாப்பூர் பிராந்தியத்தின் டெக்கான் நகரம்) ஆகியோர் பிற சிஸ்டிக்கள்.
பொ.யு. 1192-ல் [[குவாஜா மொய்னுதீன் சிஷ்டி]] (கரிப் நவாஸ்) என்பவரால் இந்தியாவில் சிஸ்டி வரிசை நிறுவப்பட்டது. லாகூர், டெல்லியில் தங்கிய பின் இறுதியாக 1206-ல் அஜ்மீருக்குச் சென்றார். பொ.யு. 1235-ல் அவரது கல்லறையை அப்போதைய சுல்தான் முகமது துக்ளக் பார்வையிட்டார் அதன் பிறகு மசூதி மற்றும் குவிமாடம் 15-ம் நூற்றாண்டில் மால்வாவின் முகம்மது கல்ஜியால் அமைக்கப்பட்டது. அதன்பின் அக்பரின் ஆதரவைப் பெற்றது. குதுப் உத்தின் பக்தியார் காக்கி டெல்லி சுல்தானியர் இல்டுமிஷின் ஆதரவைப் பெற்றார். அவரின் நினைவாக குதுப் மினாரை இல்டுமிஷ் நிறுவினார்.ஃபரித்-உத்-தின் கஞ்ச்-இ-ஷகர் (பொ.யு. 1175 - 1265), நிஜாமுதீன் அவுலியா (பொ.யு.1238 - 1325), நசிருதீன் முகம்மது, ஷேக் புர்ஹானுதீன் காரிப் (13-ம் நூற்றாண்டில் தக்காணத்தில் சிஸ்டி வரிசையை நிறுவினார்), முஹம்மது பண்டா நவாஸ் (பிஜாப்பூர் பிராந்தியத்தின் டெக்கான் நகரம்) ஆகியோர் பிற சிஸ்டிக்கள்.
==== சுஹ்ரவர்தி சில்சிலா ====  
==== சுஹ்ரவர்தி சில்சிலா ====  
சுஹ்ரவர்தி வரிசை சிஸ்டிகள் இருந்த அதே காலகட்டத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தது. ஆனால் அதன் செயல்பாடுகள் பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் முல்தானில் மட்டுமே இருந்தன. இந்த சில்சிலா பாக்தாத்தில் ஷிஹாபுதீன் சுஹ்ரவர்தி என்பவரால் நிறுவப்பட்டது. இந்தியாவில் பஹாவுதீன் ஜகாரியாவால் நிறுவப்பட்டது. சிஸ்டிகளைப் போலல்லாமல், சுஹ்ரவர்திகள் சுல்தான்களிடமிருந்து பராமரிப்பு மானியங்களை ஏற்றுக்கொண்டு அரசியலில் தீவிரமாகப் பங்குகொண்டனர். ஒரு சூஃபி சொத்து, அறிவு மற்றும் ஹால்(மாய ஞானம்) ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று சுஹ்ரவர்திகள் நம்பினர். அவர்கள் அதிகப்படியான சிக்கனங்கள் மற்றும் சுய-உணர்வுகளை ஆதரிக்கவில்லை.
சுஹ்ரவர்தி வரிசை சிஸ்டிகள் இருந்த அதே காலகட்டத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தது. ஆனால் அதன் செயல்பாடுகள் பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் முல்தானில் மட்டுமே இருந்தன. இந்த சில்சிலா பாக்தாத்தில் ஷிஹாபுதீன் சுஹ்ரவர்தி என்பவரால் நிறுவப்பட்டது. இந்தியாவில் பஹாவுதீன் ஜகாரியாவால் நிறுவப்பட்டது. சிஸ்டிகளைப் போலல்லாமல், சுஹ்ரவர்திகள் சுல்தான்களிடமிருந்து பராமரிப்பு மானியங்களை ஏற்றுக்கொண்டு அரசியலில் தீவிரமாகப் பங்குகொண்டனர். ஒரு சூஃபி சொத்து, அறிவு மற்றும் ஹால்(மாய ஞானம்) ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று சுஹ்ரவர்திகள் நம்பினர். அவர்கள் அதிகப்படியான சிக்கனங்கள் மற்றும் சுய-உணர்வுகளை ஆதரிக்கவில்லை.
Line 68: Line 68:
நக்ஷ்பந்திகள் ஷரியா சட்டத்தை அதன் தூய வடிவில் கடைப்பிடித்தனர். அனைத்து பித்தாக்களையும் (மதத்தில் புதுமைகள்) கண்டனம் செய்தனர். சாமா (மத இசை) மற்றும் புனிதர்களின் கல்லறைகளுக்கு யாத்திரை செய்யும் நடைமுறைக்கு எதிராகவும் இருந்தனர். சிர்ஹிண்டியின் மரணத்திற்குப் பிறகு இந்த ஒழுங்குமுறை ஷா வலியுல்லாவின் தலைமையில் பழமைவாத அணுகுமுறையும், மிர்சா மசார் ஜான்-இ-ஜஹான் தலைமையில் தாராளவாத அணுகுமுறையும் கொண்டு பிரிந்தது.
நக்ஷ்பந்திகள் ஷரியா சட்டத்தை அதன் தூய வடிவில் கடைப்பிடித்தனர். அனைத்து பித்தாக்களையும் (மதத்தில் புதுமைகள்) கண்டனம் செய்தனர். சாமா (மத இசை) மற்றும் புனிதர்களின் கல்லறைகளுக்கு யாத்திரை செய்யும் நடைமுறைக்கு எதிராகவும் இருந்தனர். சிர்ஹிண்டியின் மரணத்திற்குப் பிறகு இந்த ஒழுங்குமுறை ஷா வலியுல்லாவின் தலைமையில் பழமைவாத அணுகுமுறையும், மிர்சா மசார் ஜான்-இ-ஜஹான் தலைமையில் தாராளவாத அணுகுமுறையும் கொண்டு பிரிந்தது.
==== காத்ரி சில்சிலா ====  
==== காத்ரி சில்சிலா ====  
ஷேக் அப்துல் காதர், அவரது மகன்கள் ஷேக் நியாமத்துல்லா, முகமது முஹம்மது ஜிலானி, மியான் மிர் ஆகியோர் முகலாய ஆட்சியின் போது காத்ரி சில்சிலாவை நிறுவினர். இது பஞ்சாபில் பிரபலமாக இருந்தது. மற்றொரு பிரபலமான துறவி ஷா படக்ஷானி. முகலாய இளவரசி ஜஹானாரா, அவரது சகோதரர் தாரா இந்த சில்சிலாவின் சீடர்கள். காத்ரிக்கள் ”வஹ்தத்-அல்-வஜூத்” (இருப்பின் ஒற்றுமை) என்ற கருத்தை நம்பினார். அதாவது கடவுளும் அவருடைய படைப்பும் ஒன்று. இவர்கள் புனிதர்கள் மரபுவழிக் கூறுகளை நிராகரித்தனர்.
ஷேக் அப்துல் காதர், அவரது மகன்கள் ஷேக் நியாமத்துல்லா, முகமது முஹம்மது ஜிலானி, மியான் மிர் ஆகியோர் முகலாய ஆட்சியின் போது காத்ரி சில்சிலாவை நிறுவினர். இது பஞ்சாபில் பிரபலமாக இருந்தது. மற்றொரு பிரபலமான துறவி ஷா படக்ஷானி. முகலாய இளவரசி ஜஹானாரா, அவரது சகோதரர் தாரா இந்த சில்சிலாவின் சீடர்கள். காத்ரிக்கள் "வஹ்தத்-அல்-வஜூத்" (இருப்பின் ஒற்றுமை) என்ற கருத்தை நம்பினார். அதாவது கடவுளும் அவருடைய படைப்பும் ஒன்று. இவர்கள் புனிதர்கள் மரபுவழிக் கூறுகளை நிராகரித்தனர்.
== தத்துவம் ==
== தத்துவம் ==
சூஃபித்துவம் ஒரு மையம் கொண்ட இயக்கம் அல்ல. அதன் சிறப்பே அது மையமற்றது என்பதுதான். ஆகவே சூஃபித்துவம் எதைச்சொல்கிறது என்பதை ஒரே மையக்கருத்தாகச் சொல்லிவிட முடியாது. அது பல நூற்றாண்டுக்காலம் நீடித்த ஒரு பெரும் உரையாடல். அந்த உரையாடலின் பல்வேறு தளங்களை நாம் இந்திய மரபில் காணமுடியும். ஆரம்பகால சூஃபிக்களில் பலர் இஸ்லாமிய தூய்மைவாதக்குரலை முன்வைத்தனர். பல சூஃபிக்கள் ஆப்கான் பாலைவனப்பழங்குடிகளின் பண்பாட்டுக்குரலாக ஒலித்தனர். மெல்ல மெல்ல அந்த உரையாடல் ஒரு உச்சத்தை அடைந்தது. பிற்காலத்தில் அந்த ஞானமரபு பெரும் வளர்ச்சியை அடைந்து கனிந்தது. சூஃபித்துவம் ஒரு பொதுமக்கள் இயக்கம். நிறுவனம் அல்ல. மக்கள் எவரையெல்லாம் சூஃபிக்களாக காண்கிறார்கள் என்பது எப்போதும் சிக்கலானது. அற்புதங்கள் ஒரு அளவுகோலாக இருந்தன. ஆகவே போர்வீரர்கள், பல்வேறு நாடோடிகள் சூஃபிக்களாக எண்ணப்பட்டனர்.  
சூஃபித்துவம் ஒரு மையம் கொண்ட இயக்கம் அல்ல. அதன் சிறப்பே அது மையமற்றது என்பதுதான். ஆகவே சூஃபித்துவம் எதைச்சொல்கிறது என்பதை ஒரே மையக்கருத்தாகச் சொல்லிவிட முடியாது. அது பல நூற்றாண்டுக்காலம் நீடித்த ஒரு பெரும் உரையாடல். அந்த உரையாடலின் பல்வேறு தளங்களை நாம் இந்திய மரபில் காணமுடியும். ஆரம்பகால சூஃபிக்களில் பலர் இஸ்லாமிய தூய்மைவாதக்குரலை முன்வைத்தனர். பல சூஃபிக்கள் ஆப்கான் பாலைவனப்பழங்குடிகளின் பண்பாட்டுக்குரலாக ஒலித்தனர். மெல்ல மெல்ல அந்த உரையாடல் ஒரு உச்சத்தை அடைந்தது. பிற்காலத்தில் அந்த ஞானமரபு பெரும் வளர்ச்சியை அடைந்து கனிந்தது. சூஃபித்துவம் ஒரு பொதுமக்கள் இயக்கம். நிறுவனம் அல்ல. மக்கள் எவரையெல்லாம் சூஃபிக்களாக காண்கிறார்கள் என்பது எப்போதும் சிக்கலானது. அற்புதங்கள் ஒரு அளவுகோலாக இருந்தன. ஆகவே போர்வீரர்கள், பல்வேறு நாடோடிகள் சூஃபிக்களாக எண்ணப்பட்டனர்.  
Line 81: Line 81:
* கான்கா - சூஃபிகள் வாழ்ந்த இடம், விருந்தோம்பல்
* கான்கா - சூஃபிகள் வாழ்ந்த இடம், விருந்தோம்பல்
* கலீஃபா - சீடர்கள்
* கலீஃபா - சீடர்கள்
* ஜிக்ர் ​​- கடவுளின் பெயரை உச்சரித்தல்
* ஜிக்ர் - கடவுளின் பெயரை உச்சரித்தல்
* தௌபா - தவம்
* தௌபா - தவம்
* ஃபனா - சர்வ வல்லமையுடன் ஆன்மீக இணைவு
* ஃபனா - சர்வ வல்லமையுடன் ஆன்மீக இணைவு
Line 90: Line 90:
* [https://www.youtube.com/watch?v=x1HXXgeKhL8&ab_channel=TheHappiest The Happy Muslim: youtube]
* [https://www.youtube.com/watch?v=x1HXXgeKhL8&ab_channel=TheHappiest The Happy Muslim: youtube]


{{Second review completed}}
 
 
{{Finalised}}
 
{{Fndt|15-Mar-2024, 12:59:35 IST}}
 
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:50, 22 November 2025

சூஃபித்துவம்

சூஃபித்துவம் (தஸவ்வுப்) (Tasawwuf) (பொ.யு 7-ம் நூற்றாண்டு) பெர்சியாவில் தோன்றிய இஸ்லாமிய மதத்தின் பக்தி இயக்கம். இஸ்லாமிய மறைஞானத்தைப் பேசுபொருளாகக் கொண்டது. தாராளவாத சீர்திருத்தங்களை உள்ளடக்கியது. பொ.யு. 11-ம் நூற்றாண்டில் இந்தியாவில் பரவியது. சூஃபித்துவம் ஷரியத் என்ற இஸ்லாமிய சட்டத்தை ஏற்றுக் கொண்டாலும் கடவுளுடன் மனிதனின் நேரடியான பிணைப்பையே முதன்மையாகக் கருதியது அன்பு, சரணடைதல் என்பதை தனிமனிதனுக்கும் கடவுளுக்குமான பிணைப்பாக சூஃபிக்கள் கருதினர்.

பெயர்க்காரணம்

சூஃபித்துவம் அல்லது தஸவ்வுஃப் என்பதை இஸ்லாமிய மறைஞானம் (Islamic Mysticism) எனலாம். சூபித்துவத்தை பயிற்சிசெய்பவர்கள் 'சூஃபிக்கள்' (Muslim mystic) என்று அழைக்கப்பட்டனர். சூஃபி என்பது அரபுச் சொல்.

  • சூஃபி என்ற அரபுச் சொல் தூய்மை என்பதைக் குறிக்கும் "ஸஃபா" என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.
  • ஆரம்பகால இஸ்லாமிய இறைநிலையாளர்கள் அணிந்த கம்பளி ஆடைகள்(சூஃப்) அல்லது கடினமான ஆடை என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதினர். "சூஃபி என்பவர் கம்பளியை அணிந்த உயர்ந்த தூய்மையானவர்" என அல்-ருஹபாரி கருதினார்.
  • அஹ்லுஸ்ஸுப்பா (நீண்டஇருக்கையிலுள்ள மக்கள்) என்ற வார்த்தையிலிருந்து சூஃபிசம் என்ற சொல் தோற்றம் பெற்றதாக சில அறிஞர்கள் கருதினர். அஹ்லுஸ்ஸுப்பா என்போர் இரவும் பகலும் தியானத்தில் ஈடுபட்டிருந்த முகம்மது நபியின் திண்ணைத் தோழர்கள்.
  • சூஃபி என்ற வார்த்தை சோஃபியா(அறிவு) என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டதாக மத்திய கால அறிஞர் அபுரய்ஹான் அல்-பிரூனி குறிப்பிட்டார்.

தொகுப்பு

சூஃபிக்கள் ஏற்கனவே உருவாகியிருந்த ஒரு தரிசனத்தை, தத்துவத்தை, மதத்தை பின்பற்றியவர்கள் அல்ல. தங்கள் போக்கில் தங்கள் ஞானத்தேடலை நிகழ்த்தியவர்கள். நெடுங்காலம் கழித்துத்தான் அவர்களின் சிந்தனைப்போக்குகள் அடையாளம் காணப்பட்டு தொகுக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற உரையாடல்களின் தொகுப்புகள் வழியாக சூஃபித்துவம் பற்றிய பொது வரையறையை உருவாக்க முடியும்.

  • மல்ஃபுசாத் - சூஃபி துறவிகளின் உரையாடல்கள் அல்லது சொற்கள். சூஃபி சில்சிலாக்களால் மால்ஃபுசாத் தொகுக்கப்பட்டது. ஃபவதுல் ஃபவாயித் என்பது நிஜாமுதீன் அவுலியாவின் வாசகங்களின் தொகுப்பு.
  • மக்துபத் - கடிதங்களின் தொகுப்புகள். சூஃபி குருக்கள் எழுதிய கடிதங்கள், அவர்களின் சீடர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள்.
  • தஸ்கிராஸ் - துறவிகளின் வாழ்க்கை வரலாற்றுக் கணக்குகள். இவற்றின் ஆசிரியர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த கட்டளைகளின் முன்னுரிமையை நிலைநிறுத்தவும், அவர்களின் ஆன்மீக வம்சாவளியை மகிமைப்படுத்தவும் முயன்றனர்.

சூஃபியிசத்தின் தன்மைகள்

  • சூஃபிக்கள் சில்சிலாக்கள் என்ற அமைப்பின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டனர்.
  • சூஃபியிசம் எந்த நிலப்பரப்பில் பரவியதோ அதைச் சார்ந்த மதங்கள், நம்பிக்கைகளை உள்ளிழுத்துக் கொண்டது.
  • மனிதகுலத்திற்கான சேவை என்பது கடவுளுக்குச் செய்யும் சேவைக்கு சமம் என்று நம்பினர்.
  • சுய ஒழுக்கம் என்பது உணர்வின் மூலம் கடவுளைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு இன்றியமையாத நிபந்தனையாகக் கருதப்பட்டது.
  • அகத்தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
  • அன்பு, பக்தி, தியானம், நல்ல செயல்கள், பாவங்களுக்காக மனம் திரும்புதல், பிரார்த்தனைகள், யாத்திரை, உண்ணாவிரதம், துறவு ஆகியவற்றை வலியுறுத்தியது.
  • எளிமையான, சிக்கனமான வாழ்க்கை
  • மதமாற்றங்களைச் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
  • கடவுளுக்கு நெருக்கமான மனநிலையை உருவாக்க 'சாமா' எனப்படும் இசை பாராயணங்களை பிரபலமாக்கினர்.
  • சிஷ்டிகள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்பினர். ஆட்சியாளர்கள், பிரபுக்களின் நிறுவனத்தைத் தவிர்த்தனர்.
  • சூஃபிக்களை இந்திய மரபில் சித்தர்களுக்குச் சமானமானவர்கள் எனலாம். கட்டற்ற வாழ்க்கை, அமைப்புக்குள் சிக்காத ஆன்மீகம், தத்துவ நோக்குகள் கொண்டவர்கள். ஆனால் சித்தர்களிடம் மருத்துவம் ரசவாதம் போன்ற சில அறிவியல் கூறுகள் உண்டு. அவை சூ.பிகளிடம் இல்லை. சித்தர்களில் நாத்திகர்கள் உண்டு, சூ.பிக்களில் இல்லை. நிஜாமுதீன் அவுலியா யோக சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டார். அதனால் யோகிகள் அவரை ஒரு சித் அல்லது 'சரியானவர்' என்று அழைத்தனர்.

வரலாறு

சூஃபித்துவம் பெர்சியாவில் பொ.யு. 7-ம் நூற்றாண்டில் தோன்றியது. இஸ்லாத்தில் ஒரு தாராளவாத சீர்திருத்த இயக்கமாக இருந்தது. ஆனால் இஸ்லாமிய மதத்தின் ஒரு பிரிவு அல்ல. குர்ஆனிலிருந்து நேரடியாக பெறப்பட்ட கருத்துக்களுடன் தொடர்ச்சியாக ஓதல், தியானம் மற்றும் இறையனுபவத்தைப் பெறுதல் போன்றவையே சூஃபிசத்தால் செயற்படுத்தப்பட்டு, இஸ்லாமிய மறைஞானம் என பரவலாக அறியப்பட்டது. இந்தப் பாரம்பரியமானது முதலாவதாக இஸ்லாத்தின் நான்காவது ஆட்சியாளர் கலீபா அலியிடமிருந்து ஆரம்பித்து தொடர்ச்சியாக ஜுனைத் அல்-பக்தாதி ஊடாக தொடரும் ஒன்று என அலி-ஹுஜ்விரி என்ற சூஃபி கருதினார்.

பிற சமயங்களைப் போலவே இஸ்லாமிலும் மறைஞானத்தை அறிந்து இறைவனை அடைய 'தஸவ்வுஃப்' என்ற அமைப்பு உருவானது. இது நியோ பிளேட்டோனிஸத்திலிருந்து பிறந்தது என அறிஞர்கள் கருதினர். ஆரிய நாகரிகத்தொடர்பால் உருவானது எனச் சில அறிஞர்கள் கருதினர். பிற மதங்கள், தத்துவங்கள் ஆகியவற்றில் தொடர்பில்லாமல் தன்னியல்பாய் உருவானதாகச் சிலர் கருதினர்.

சூஃபிக்கள் வரலாற்று ரீதியில் வேறுபட்ட 'தரீக்கா' அல்லது வழிமுறைகளைச் சார்ந்தவர்களாக உள்ளனர். தரீக்காக்கள் என்பவை இஸ்லாத்தின் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் வரை சென்றடையக்கூடிய நேரடி சங்கிலித்தொடரைக் கொண்ட பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட குழுக்கள். இந்தக் குழுக்கள் ஆன்மீக அமர்வுகளுக்காக ("மஜ்லிஸ்") வேண்டி ஸாவியா, ஸன்கா, தக்கியா என்று அறியப்படுகின்ற இடங்களில் ஒன்று கூடுகின்றனர். அவர்கள் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இஹ்ஸானுக்காக (சம்பூரணத்தன்மை) போராடுகின்றனர். "இறைவனை வணங்கும்போது நீர் அவனை பார்க்கும் நிலையில் வணங்கவேண்டும். அப்படி உம்மால் பார்க்க முடியாவிட்டால், அவன் உன்னைப் பார்க்கிறான் என்ற நிலையில் வணங்கவேண்டும்." ஒரு சூபி இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில், அபூபக்கர்(ரலி) அவர்களைப் போல் தொங்கிக்கொண்டிருக்கின்றார் என்று மௌலானா ரூமி கூறுகின்றார். சூபிகள் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை அல்-இன்ஸான் அல்-காமில், அதாவது இறைவனின் அறநெறிக்கு உதாரணமான முதன்மையான பூரணத்துவ மனிதர் என்று அழைக்கின்றனர். மேலும், இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களைத் தமது முதன்மையான தலைவராகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் அவர்கள் கருதினர்.

பெரும்பாலும் அனைத்து சூஃபி வழிமுறைகளும் இறைத்தூதர் முஹம்மத் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து இருந்து அவரது மருமகன் அலி(ரலி) ஊடாக ஆரம்பமாகின்றன. எனினும் நக்ஷபந்தி வழிமுறை இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களில் அடிச்சுவட்டிலிருந்து முதலாவது ராஷிதீன் கலீஃபாவான அபூபக்கர்(ரலி) ஊடாக ஆரம்பமாகின்றது. இவ்வழிமுறைகள் சுன்னி இஸ்லாத்தின் நான்கு மத்ஹப்களில் ஒரு மத்ஹப்பை (சட்டத்துறை பிரிவுகள்) தொடருவதுடன் சுன்னி அகீதாவை (நம்பிக்கை கோட்பாடு) பின்பற்றுகின்றன.

அமைப்பு

சூஃபித்துவம் சுன்னி இஸ்லாமின் வரலாற்றிலிருந்து பெறப்பட்டது. இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம். பொ.யு 12-ம் நூற்றாண்டில் சூஃபித்துவம் 12 ஒழுங்குகள் அல்லது 'சில்சிலா'க்களில் ஒழுங்கமைக்கப்பட்டது. ஒரு சில்சிலா பொதுவாக ஒரு முக்கிய ஆன்மீகவாதியால் வழிநடத்தப்பட்டது. அவர் தனது சீடர்களுடன் கான்கா அல்லது விருந்தோம்பலில் வாழ்ந்தார் . ஆசிரியர் அல்லது பிர் அல்லது முர்ஷித் மற்றும் அவரது சீடர்கள் அல்லது முரீதுகளுக்கு இடையேயான தொடர்பு சூஃபி அமைப்பின் முக்கிய பகுதியாகும். ஒவ்வொரு பீரும் தனது பணியைத் தொடர ஒரு வாரிசு அல்லது வாலியைப் பரிந்துரைத்தார். படிப்படியாக, கான்காக்கள் கற்றல் மற்றும் பிரசங்கத்தின் முக்கிய மையங்களாக உருவெடுத்தன. பல சூஃபிகள் தங்கள் கான்காக்களில் சாமா அல்லது இசைக் கூட்டத்தை நடத்தினர். கவ்வாலி(Qawali) என்ற இசைவடிவம் இந்தக் காலகட்டத்தில் வளர்ந்தது.

சூஃபி மரபைப் பின்பற்றுபவர்கள் சூஃபிக்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேறுபட்ட சூபி கட்டளைகளுக்கு அல்லது தரீக்காக்களுக்கு சொந்தக்காரர்கள். தரீக்காக்கள் ஒரு ஆன்மீகத் தலைவரைக் கொண்டு உருவாக்கப்பட்ட சபைகள். சூபிகள் ஆத்மீக அமர்வுகளுக்காக கூடும் இடங்கள் 'ஸாவியா' மற்றும் 'தக்கியா 'என அழைக்கப்படுகின்றன. சூபி தரீக்காக்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றின் மூல கோட்பாடுகள் பெரும்பாலும் இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் மைத்துனர் மற்றும் மருமகனான அலி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தோன்றியிருக்கலாம். நக்ஷபந்தி சூபி கட்டளை இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக முதலாவது கலீபா அபூபக்கர் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி தோற்றம் பெற்றது. பிரபலமான சூஃபி கட்டளைகளாக காதிரிய்யா, பாஅலவிய்யா, சிஸ்திய்யா, ரிபாயி, கல்வதி, மெவ்ளவி, நக்சபந்தி, நியுமதுல்லாயி, காதிரய்யா புத்சிசிய்ய, உவைஸி, ஷாதுலிய்யா, கலந்தரிய்யா, ஸுவாரி காதிரி, சுஹரவர்திய்யா என்பன உள்ளன.

சூஃபி பாதைக்குள் நுழைய குரு அவசியம். குரு-மாணவர் உறவின் வழியாக வளரும் பாதை. குரு உண்மையானவராக இருக்க வேண்டும். இதே சூஃபி வழியிலுள்ள இன்னொரு குருவிடம் இருந்து கற்பிப்பதற்கு முஹம்மது நபி வரையில் செல்லக்கூடிய முறியாத அங்கீகாரத்தையும்(இஜாஸா) பெற்றிருக்க வேண்டும்.

சூஃபி ஆணைகள்

  • பஷாரா - இஸ்லாமிய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தவர்கள்.
  • பெஷாரா - மிகவும் தாராளமாக இருந்தவர்கள்.

பெஷாரா 'மாஸ்ட் கலந்தர்' என்றும் அழைக்கப்பட்டது. அவர்கள் பாபா என்றும் அழைக்கப்படும் அலைந்து திரிந்த துறவிகளை உள்ளடக்கியிருந்தனர்.

இந்தியாவில் சூஃபித்துவம்

பொ.யு. 7-ம் நூற்றாண்டில் சவூதி அரேபியாவிலிருந்து வந்த வணிகர்கள் வடிவில் இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது. அவர்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளுடன் வர்த்தகம் செய்தனர். பொ.யு. 8-ம் நூற்றாண்டில் வடக்கில் முஹம்மது பின் காசிம் படையெடுப்பால் முல்தான், சிந்து பகுதிக்குள் சூஃபி மதம் நுழைந்தது. பொ.யு.11-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தானிய ஆட்சியின் போது தான் சூஃபித்துவம் இந்தியாவில் பரவியது.

இந்தியாவில், யோக தோரணைகள், இசை மற்றும் நடனம் போன்ற பல பூர்வீக இந்தியக் கருத்துக்களை சூஃபிஸம் ஏற்றுக்கொண்டது. சூஃபித்துவம் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் மத்தியில் இருவரிலும் தன்னைப் பின்பற்றுபவர்களைக் கண்டறிந்தது.

சில்சிலாக்கள்
  • சிஸ்டி
  • சுஹ்ரவர்தி
  • கத்ரிரியா
  • நக்ஷ்பந்தி
  • ஷாதுலியா
  • ஷத்தாரியா

சிஸ்டி சில்சிலா

பொ.யு. 1192-ல் குவாஜா மொய்னுதீன் சிஷ்டி (கரிப் நவாஸ்) என்பவரால் இந்தியாவில் சிஸ்டி வரிசை நிறுவப்பட்டது. லாகூர், டெல்லியில் தங்கிய பின் இறுதியாக 1206-ல் அஜ்மீருக்குச் சென்றார். பொ.யு. 1235-ல் அவரது கல்லறையை அப்போதைய சுல்தான் முகமது துக்ளக் பார்வையிட்டார் அதன் பிறகு மசூதி மற்றும் குவிமாடம் 15-ம் நூற்றாண்டில் மால்வாவின் முகம்மது கல்ஜியால் அமைக்கப்பட்டது. அதன்பின் அக்பரின் ஆதரவைப் பெற்றது. குதுப் உத்தின் பக்தியார் காக்கி டெல்லி சுல்தானியர் இல்டுமிஷின் ஆதரவைப் பெற்றார். அவரின் நினைவாக குதுப் மினாரை இல்டுமிஷ் நிறுவினார்.ஃபரித்-உத்-தின் கஞ்ச்-இ-ஷகர் (பொ.யு. 1175 - 1265), நிஜாமுதீன் அவுலியா (பொ.யு.1238 - 1325), நசிருதீன் முகம்மது, ஷேக் புர்ஹானுதீன் காரிப் (13-ம் நூற்றாண்டில் தக்காணத்தில் சிஸ்டி வரிசையை நிறுவினார்), முஹம்மது பண்டா நவாஸ் (பிஜாப்பூர் பிராந்தியத்தின் டெக்கான் நகரம்) ஆகியோர் பிற சிஸ்டிக்கள்.

சுஹ்ரவர்தி சில்சிலா

சுஹ்ரவர்தி வரிசை சிஸ்டிகள் இருந்த அதே காலகட்டத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தது. ஆனால் அதன் செயல்பாடுகள் பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் முல்தானில் மட்டுமே இருந்தன. இந்த சில்சிலா பாக்தாத்தில் ஷிஹாபுதீன் சுஹ்ரவர்தி என்பவரால் நிறுவப்பட்டது. இந்தியாவில் பஹாவுதீன் ஜகாரியாவால் நிறுவப்பட்டது. சிஸ்டிகளைப் போலல்லாமல், சுஹ்ரவர்திகள் சுல்தான்களிடமிருந்து பராமரிப்பு மானியங்களை ஏற்றுக்கொண்டு அரசியலில் தீவிரமாகப் பங்குகொண்டனர். ஒரு சூஃபி சொத்து, அறிவு மற்றும் ஹால்(மாய ஞானம்) ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று சுஹ்ரவர்திகள் நம்பினர். அவர்கள் அதிகப்படியான சிக்கனங்கள் மற்றும் சுய-உணர்வுகளை ஆதரிக்கவில்லை.

நக்ஷ்பந்தி சில்சிலா

நக்ஷ்பந்தி சில்சிலா இந்தியாவில் குவாஜா பஹாவுதீன் நக்ஷ்பந்தி என்பவரால் நிறுவப்பட்டது. பின்னர் அவரது வாரிசுகளான ஷேக் பாக்கி பில்லா மற்றும் ஷேக் அஹ்மத் சிர்ஹிண்டி (1563 - 1624) ஆகியோரால் பிரச்சாரம் செய்யப்பட்டது. அமைதியான தியானத்தைப் பயிற்சி செய்ததால் அமைதியான சூஃபிகள் என்று அழைக்கப்பட்டனர். மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இடையிலான உறவு என்று நம்பிய பிற சூஃபிக்களுக்கு மத்தியில் அடிமை, எஜமானனுக்கு இடைப்பட்ட உறவு என நம்பினர். இவர்கள் முஸ்லிமல்லாதவர்களுக்கு உயர் அந்தஸ்து வழங்குதல், ஜிஸ்யா ஒழிப்பு மற்றும் பசுவதைத் தடை போன்ற அக்பரின் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக இருந்தனர்.

நக்ஷ்பந்திகள் ஷரியா சட்டத்தை அதன் தூய வடிவில் கடைப்பிடித்தனர். அனைத்து பித்தாக்களையும் (மதத்தில் புதுமைகள்) கண்டனம் செய்தனர். சாமா (மத இசை) மற்றும் புனிதர்களின் கல்லறைகளுக்கு யாத்திரை செய்யும் நடைமுறைக்கு எதிராகவும் இருந்தனர். சிர்ஹிண்டியின் மரணத்திற்குப் பிறகு இந்த ஒழுங்குமுறை ஷா வலியுல்லாவின் தலைமையில் பழமைவாத அணுகுமுறையும், மிர்சா மசார் ஜான்-இ-ஜஹான் தலைமையில் தாராளவாத அணுகுமுறையும் கொண்டு பிரிந்தது.

காத்ரி சில்சிலா

ஷேக் அப்துல் காதர், அவரது மகன்கள் ஷேக் நியாமத்துல்லா, முகமது முஹம்மது ஜிலானி, மியான் மிர் ஆகியோர் முகலாய ஆட்சியின் போது காத்ரி சில்சிலாவை நிறுவினர். இது பஞ்சாபில் பிரபலமாக இருந்தது. மற்றொரு பிரபலமான துறவி ஷா படக்ஷானி. முகலாய இளவரசி ஜஹானாரா, அவரது சகோதரர் தாரா இந்த சில்சிலாவின் சீடர்கள். காத்ரிக்கள் "வஹ்தத்-அல்-வஜூத்" (இருப்பின் ஒற்றுமை) என்ற கருத்தை நம்பினார். அதாவது கடவுளும் அவருடைய படைப்பும் ஒன்று. இவர்கள் புனிதர்கள் மரபுவழிக் கூறுகளை நிராகரித்தனர்.

தத்துவம்

சூஃபித்துவம் ஒரு மையம் கொண்ட இயக்கம் அல்ல. அதன் சிறப்பே அது மையமற்றது என்பதுதான். ஆகவே சூஃபித்துவம் எதைச்சொல்கிறது என்பதை ஒரே மையக்கருத்தாகச் சொல்லிவிட முடியாது. அது பல நூற்றாண்டுக்காலம் நீடித்த ஒரு பெரும் உரையாடல். அந்த உரையாடலின் பல்வேறு தளங்களை நாம் இந்திய மரபில் காணமுடியும். ஆரம்பகால சூஃபிக்களில் பலர் இஸ்லாமிய தூய்மைவாதக்குரலை முன்வைத்தனர். பல சூஃபிக்கள் ஆப்கான் பாலைவனப்பழங்குடிகளின் பண்பாட்டுக்குரலாக ஒலித்தனர். மெல்ல மெல்ல அந்த உரையாடல் ஒரு உச்சத்தை அடைந்தது. பிற்காலத்தில் அந்த ஞானமரபு பெரும் வளர்ச்சியை அடைந்து கனிந்தது. சூஃபித்துவம் ஒரு பொதுமக்கள் இயக்கம். நிறுவனம் அல்ல. மக்கள் எவரையெல்லாம் சூஃபிக்களாக காண்கிறார்கள் என்பது எப்போதும் சிக்கலானது. அற்புதங்கள் ஒரு அளவுகோலாக இருந்தன. ஆகவே போர்வீரர்கள், பல்வேறு நாடோடிகள் சூஃபிக்களாக எண்ணப்பட்டனர்.

தாக்கம்

  • இந்தியாவின் பக்தி இயக்கத்தில் தாக்கத்தை செலுத்தியது.
  • இந்திய ஆட்சியாளர்களின் மதக் கண்ணோட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களின் கடமைகளை அவர்களுக்கு நினைவூட்டியது. முகலாயப் பேரரசர் அக்பரின் மதக் கண்ணோட்டம் மற்றும் மதக் கொள்கைகள் சூஃபித்துவத்தின் கீழ் நிறைய வடிவமைக்கப்பட்டன.
  • சூஃபித்துவம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் மக்கள் மீது ஆழமான அரசியல், கலாச்சார மற்றும் சமூக செல்வாக்கைக் கொண்டிருந்தது. ஆன்மீக பேரின்பம் இறுதி நோக்கமாக மாறியது. மேலும் மக்கள் அனைத்து வகையான மரபுவழி, பொய், மத சம்பிரதாயம் மற்றும் பாசாங்குத்தனத்திற்கு எதிராக குரல் எழுப்ப முடியும்.
  • இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு இடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்பை வளர்க்க உதவியது. சூஃபிக்களின் கல்லறைகள் இரு சமூகத்தினருக்கும் பொதுவான புனித யாத்திரை இடங்களாக மாறின.

சூஃபி சொல்லாட்சிகள்

  • சூஃபி, பிர், முர்ஷித் - புனிதர்
  • முரீத் - பின்பற்றுபவர்கள்
  • கான்கா - சூஃபிகள் வாழ்ந்த இடம், விருந்தோம்பல்
  • கலீஃபா - சீடர்கள்
  • ஜிக்ர் - கடவுளின் பெயரை உச்சரித்தல்
  • தௌபா - தவம்
  • ஃபனா - சர்வ வல்லமையுடன் ஆன்மீக இணைவு
  • உர்ஸ் - மரணம்
  • சாமா - இசைக் கூட்டம்

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Mar-2024, 12:59:35 IST