முத்துராசா குமார்: Difference between revisions
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்) |
|||
(4 intermediate revisions by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=குமார்|DisambPageTitle=[[குமார் (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:முத்துராசா குமார்1.jpg|thumb|முத்துராசா குமார்]] | [[File:முத்துராசா குமார்1.jpg|thumb|முத்துராசா குமார்]] | ||
முத்துராசா குமார் (பிறப்பு: 1992) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், சுயாதீன பத்திரிக்கையாளர், திரைத்துரை எழுத்தாளர். | முத்துராசா குமார் (பிறப்பு: 1992) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், சுயாதீன பத்திரிக்கையாளர், திரைத்துரை எழுத்தாளர். | ||
Line 26: | Line 27: | ||
===== சிறுகதைத் தொகுப்பு ===== | ===== சிறுகதைத் தொகுப்பு ===== | ||
* ஈத்து (2022) | * ஈத்து (2022) | ||
* கொடுக்கு (2025) | |||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
* [https://muthurasa.blogspot.com/ முத்துராசாகுமார்: வலைதளம்] | * [https://muthurasa.blogspot.com/ முத்துராசாகுமார்: வலைதளம்] | ||
Line 34: | Line 37: | ||
*[http://www.vasagasalai.com/kavithaikal-muthurasa-kumar/ கவிதைகள் முத்துராசா குமார்] | *[http://www.vasagasalai.com/kavithaikal-muthurasa-kumar/ கவிதைகள் முத்துராசா குமார்] | ||
*[https://karthikgpakkangal.blogspot.com/2021/01/blog-post_6.html முத்துராசா குமார் கார்த்திக் தமிழன் மதிப்புரை] | *[https://karthikgpakkangal.blogspot.com/2021/01/blog-post_6.html முத்துராசா குமார் கார்த்திக் தமிழன் மதிப்புரை] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:37:01 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category: | [[Category:எழுத்தாளர்]] | ||
[[Category: | [[Category:கவிஞர்]] | ||
[[Category: | [[Category:கட்டுரையாளர்]] |
Latest revision as of 22:59, 9 January 2025
- குமார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குமார் (பெயர் பட்டியல்)
முத்துராசா குமார் (பிறப்பு: 1992) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், சுயாதீன பத்திரிக்கையாளர், திரைத்துரை எழுத்தாளர்.
பிறப்பு, கல்வி
முத்துராசா குமார் மதுரை சோழவந்தான் அருகில் உள்ள தென்கரை கிராமத்தில் 1992-ல் குமார், அமுதா இணையருக்குப் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை முள்ளிப்பள்ளம்அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். உயர்நிலைக்கல்வி அரசஞ்சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி, சோழவந்தானில் பயின்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றார்.
தனி வாழ்க்கை
முத்துராசா குமார் செப்டம்பர் 17, 2023-ல் பத்திரிக்கையாளரான கிருத்திகா சீனிவாசனை மணந்தார். திரைப்படத்துறையில் எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
முத்துராசா குமார் 2010 முதல் கவிதைகள் எழுதிவருகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'பிடி மண்' 2019--ல் சால்ட் மற்றும் தன்னறம் பதிப்பகத்தின் வாயிலாக வெளியானது. இரண்டாவது தொகுப்பு 'நீர்ச்சுழி' 2020--ல் சால்ட் மற்றும் தன்னறம் பதிப்பகத்தின் மூலம் வெளியானது. முத்துராசாகுமாரின் முதல் நாவல் “கங்கு” சால்ட் பதிப்பகத்தின் வழியாக 2023--ல் வெளியானது. தனது இலக்கிய ஆதர்சங்களாக கி. ராஜநாராயணன், வைக்கம் முகமது பஷீர் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். சுயாதீன பத்திரிக்கையாளராக நாளிதழ்கள், இதழ்களில் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
விருதுகள்
- எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது( தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை, 2019)
- தோழர் சுப்புராயலு நினைவு விருது மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் (2019).
- சௌமா இலக்கிய விருது சௌமா கல்வி & சமூக நல அறக்கட்டளை (2020).
- திருப்பூர் இலக்கிய விருது (2021)
- கட்டுரைக்காக ஊடகத்துறையில்'LAADLI' விருது (2018)
இலக்கிய இடம்
”முத்துராசாகுமாரின் கவிதைகள் பெரும்பாலும் பால்யம் சார்ந்தவைகளாகவும், நீருடனான வெவ்வேறு வகை உறவுகளையும் பற்றியவைகளாகவும் உள்ளன. மண்ணின் வாழ்க்கை சார்ந்த சொல்வளம், உள்ளூர்ப் பண்பாட்டு அனுபவங்கள் என்று வளமிக்க கவிதைகளை முத்து ராசா குமாரின் கவிதை தொகுப்புகள் கொண்டிருக்கின்றன” என கவிஞர் ஆசை மதிப்பிடுகிறார்.
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- பிடிமண் (2019, சால்ட் & தன்னறம்)
- நீர்ச்சுழி (2020, சால்ட் & தன்னறம்)
- கழுமரம் (2021)
நாவல்
- கங்கு (2023, சால்ட்)
சிறுகதைத் தொகுப்பு
- ஈத்து (2022)
- கொடுக்கு (2025)
இணைப்புகள்
- முத்துராசாகுமார்: வலைதளம்
- நூல் வெளி: முத்துராசா குமார்: தமிழின் நீர்க் கவிஞன்!
- பிறப்பு-இறப்பு என்னும் காலவெளியில் நிகழ்கிற பரிமாற்றங்கள்தான் ‘ஈத்து’: முத்துராசா குமார்
- ஈத்து – முத்துராசா குமார்: saravananmanickavasagam
- முத்துராசா குமார் கவிதைகள்
- கவிதைகள் முத்துராசா குமார்
- முத்துராசா குமார் கார்த்திக் தமிழன் மதிப்புரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:01 IST