மோட்சப்பயண காவியம்: Difference between revisions
(Page Created; Para Added) |
(Added First published date) |
||
(6 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
மோட்சப்பயண காவியம் (1991) ஆங்கிலத்தில் ஜான் | மோட்சப்பயண காவியம் (1991) ஆங்கிலத்தில் ஜான் பன்யன் 1678-ல் எழுதிய பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ் (Pilgrims Progress) நூலைத் தழுவி இயற்றப்பட்ட தமிழ்ச் செய்யுள் வடிவம். இக்காப்பியநூலில் 43 படலங்களும், 600 பாடல்களும் உள்ளன. இதனை இயற்றியவர், முனைவர் ஏ. த. சோதி நாயகம். | ||
== பிரசுரம், வெளியீடு == | == பிரசுரம், வெளியீடு == | ||
ஜான் | ஜான் பன்யன் எழுதிய ‘பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ்’ நூலின் மொழியாக்கமாக, செய்யுள் வடிவில் [[முத்தி வழி அம்மானை|முத்திவழி அம்மானை]], [[இரட்சணிய யாத்திரிகம்]] ஆகிய காப்பிய நூல்கள் எழுதப்பட்டன. அந்த வரிசையில், முனைவர் ஏ. த. சோதி நாயகத்தால் செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட நூல், மோட்சப்பயண காவியம். இந்நூல், 1991-ல், பூம்புகார் பதிப்பகம் மூலம் வெளியானது. | ||
== நூல் அமைப்பு == | == நூல் அமைப்பு == | ||
மோட்சப்பயண காவியம் மூன்று காண்டங்களைக் கொண்டது. அவை | மோட்சப்பயண காவியம் மூன்று காண்டங்களைக் கொண்டது. அவை | ||
* தனிவழிக் காண்டம் | |||
* உண்மைத் துணைக் காண்டம் | |||
* திட நம்பிக்கை துணைக் காண்டம் | |||
இம்மூன்று காண்டங்களிலும் 43 படலங்கள் உள்ளன. இக்காப்பியத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை 600. | |||
====== தனிவழிக் காண்டம் ====== | ====== தனிவழிக் காண்டம் ====== | ||
முதல் காண்டமான தனிவழிக் காண்டத்தில், 16 படலங்கள் அமைந்துள்ளன. அவை, | முதல் காண்டமான தனிவழிக் காண்டத்தில், 16 படலங்கள் அமைந்துள்ளன. அவை, | ||
* காவியச்சுட்டுப் படலம் | |||
* கிறித்தியான் அலம்வந்த படலம் | |||
* சுவிசேடர் முதலாம் சந்திப்புப் படலம் | |||
* பிடிவாதன் இணங்கு நெஞ்சன் குறுக்கட்டுப் படலம் | |||
* நாசவுழை உறு படலம் | |||
* லோக ஞானி சந்திப்புப் படலம் | |||
* சுவிசேடர் இரண்டாம் சந்திப்புப் படலம் | |||
* திட்டிவாசல் உறு படலம் | |||
* வியாக்கியானி வீட்டுக் காட்சிப் படலம் | |||
* பாரம் அகல் படலம் | |||
* வழி புரண்டார் சந்திப்புப் படலம் | |||
* இழந்த சுருள் பெறு படலம் | |||
* சிங்கார மாளிகைப் படலம் | |||
* தாழ்மைப் பள்ளப் படலம் | |||
* மரண நிழல் பள்ளப் படலம் | |||
* ராட்சதர் குகை கடர் படலம் | |||
====== உண்மைத் துணைக் காண்டம் ====== | ====== உண்மைத் துணைக் காண்டம் ====== | ||
உண்மைத் துணைக் காண்டத்தில், ஏழு படலங்கள் உள்ளன. அவை, | உண்மைத் துணைக் காண்டத்தில், ஏழு படலங்கள் உள்ளன. அவை, | ||
* உண்மை சந்திப்புப் படலம் | |||
* வாயாடி குறுக்கீட்டுப் படலம் | |||
* சுவிசேடர் மூன்றாம் சந்திப்புப் படலம் | |||
* மாயாபுரி சந்தை உறு படலம் | |||
* சந்தை அமளிப் படலம் | |||
* நீதி விசாரணைப் படலம் | |||
* உண்மை முடிவுப் படலம் | |||
====== திட நம்பிக்கை துணைக் காண்டம் ====== | ====== திட நம்பிக்கை துணைக் காண்டம் ====== | ||
திட நம்பிக்கை துணைக் காண்டம், 20 படலங்களை உடையது. அவை, | திட நம்பிக்கை துணைக் காண்டம், 20 படலங்களை உடையது. அவை, | ||
* திட நம்பிக்கை சந்திப்புப் படலம் | |||
* உபாயி துணையோர் குறுக்கீட்டுப் படலம் | |||
* திரவிய கிரிஉறு படலம் | |||
* லோத் இல்லாள் சிலைப் படலம் | |||
* பக்க வழி புகு படலம் | |||
* சந்தேகத் துருக்கத் துயர் படலம் | |||
* ஆனந்தமலை இடையர் சந்திப்புப் படலம் | |||
* அறிவீனன் முதலாம் சந்திப்புப் படலம் | |||
* அற்ப விசுவாச சரித்திரப் படலம் | |||
* முகத்துதியாரால் வழி இடறிய படலம் | |||
* நாத்திகன் சந்திப்புப் படலம் | |||
* மயக்கப் புவிஉறு படலம் | |||
* திட நம்பிக்கை இயக்கம் பெற்ற வகைப் படலம் | |||
* அறிவீனன் இரண்டாம் சந்திப்புப் படலம் | |||
* சொற்ப காலம் கதைப் படலம் | |||
* வாழ்க்கை நாடு படலம் | |||
* ஆறு கடர் படலம் | |||
* மோட்ச மகமை அறி படலம் | |||
* பயணிகள் மோட்சம் அடைதல் படலம் | |||
* அறிவீனன் முடிவுப் படலம் | |||
== காப்பியத்தின் கதை == | |||
கிறித்தியானி என்னும் ஆன்மத் தேடல் கொண்ட ஒருவனின் மோட்சப் பிரயாணத்தை அதில் அவன் எதிர்கொள்ளும் பல்வேறு வகைச் சிக்கல்களை, விளக்கிக் கூறுகிறது | கிறித்தியானி என்னும் ஆன்மத் தேடல் கொண்ட ஒருவனின் மோட்சப் பிரயாணத்தை அதில் அவன் எதிர்கொள்ளும் பல்வேறு வகைச் சிக்கல்களை, விளக்கிக் கூறுகிறது மோட்சப்பயண காவிய நூல். | ||
மோட்சப்பயண காவியம் | மோட்சப்பயண காவியம், பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ் மூலநூலில் காணப்படும் மோட்சம் பற்றிய செய்திகளையும் பலதரப்பட்ட மாந்தர்களையும், மோட்சப் பயணியின் அனுபவங்களையும், உரைடையில் இருப்பது போலவே கவிதை நடையில் கூறுகிறது. கடினமான சொற்களுக்குத் தனி விளக்கங்களும், பல்வேறு அடிக்குறிப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன. | ||
== மதிப்பீடு == | |||
மோட்சப்பயண காவியம், எளிய தமிழில் எழுதப்பட்ட காப்பிய நூல். வாசிப்பவர்களுக்கு மென்மேலும் இறைபக்தியும், நம்பிக்கையும் பெருகும் வண்ணம் இக்காப்பிய நூலை இயற்றியுள்ளார், முனைவர் ஏ. த. சோதி நாயகம். உவமை, வருணனை போன்ற இலக்கியச் சிறப்புகளுடன் இக்காப்பிய நூல் அமைந்துள்ளது. | |||
முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன், தனது கிறித்தவக் காப்பியங்கள் நூலில். “எளிய முறையில் மக்கள் இலக்கியமாக மோட்சப்பயண காவியம் அமைந்துள்ளது. இக்காவியத்தின் மற்றொரு சிறப்பினுக்கு ஜான் பனியனை அடியொற்றி எழுதப்பட்டதும் ஒரு காரணமாகும்.” என்று மதிப்பிடுகிறார், | |||
== பாடல்கள் நடை == | == பாடல்கள் நடை == | ||
====== நூல் நோக்கம் ====== | ====== நூல் நோக்கம் ====== | ||
<poem> | |||
நரவுலகு வாழ்ந்திடினும் நல்லொழுக்க மேற்றவனாய் | நரவுலகு வாழ்ந்திடினும் நல்லொழுக்க மேற்றவனாய் | ||
பரவுலகாம் மோட்சமதன் பாதையுறப் பாடேற்றும் | பரவுலகாம் மோட்சமதன் பாதையுறப் பாடேற்றும் | ||
இரவகல எழுஞ்சுடராய் இறுதியினில் குறியடைந்த | இரவகல எழுஞ்சுடராய் இறுதியினில் குறியடைந்த | ||
புரவலனின் நல்லடியான் பயணமது பகர்ந்திடுவேன் | புரவலனின் நல்லடியான் பயணமது பகர்ந்திடுவேன் | ||
நனவுலகில் நாற்றிசையும் நானலைந்த நாளொன்றில் | நனவுலகில் நாற்றிசையும் நானலைந்த நாளொன்றில் | ||
வனவுலகில் துயில்கொள்ள வன்மலையின் கெபி யகத்தே | வனவுலகில் துயில்கொள்ள வன்மலையின் கெபி யகத்தே | ||
கனவுலகில் கண்டவற்றைக் கரிசனையாய் தானிலத்தோர் | கனவுலகில் கண்டவற்றைக் கரிசனையாய் தானிலத்தோர் | ||
மனவுலகில் நிலைபெறவே முனைந்திங்கு இயம்பிடுவேன் | மனவுலகில் நிலைபெறவே முனைந்திங்கு இயம்பிடுவேன் | ||
</poem> | |||
====== கிறித்தியானின் தோற்றம் ====== | ====== கிறித்தியானின் தோற்றம் ====== | ||
<poem> | |||
உடைகந்தை கனப்பளுவை உடையவனாம்ப் புறமுதுகில் | உடைகந்தை கனப்பளுவை உடையவனாம்ப் புறமுதுகில் | ||
புடைநிந்தை முகஞ்சூழப் புத்தகந்தன் கரமுளதாய் | புடைநிந்தை முகஞ்சூழப் புத்தகந்தன் கரமுளதாய் | ||
இடைமந்தை யகல்கன்று இடருறலாய்க் கிறித்தியானும் | இடைமந்தை யகல்கன்று இடருறலாய்க் கிறித்தியானும் | ||
அடைசிந்தை வேதனையால் அலம்வருதல் கண்டுணர்ந்தேன் | அடைசிந்தை வேதனையால் அலம்வருதல் கண்டுணர்ந்தேன் | ||
</poem> | |||
====== சாத்தானின் பண்புகள் ====== | ====== சாத்தானின் பண்புகள் ====== | ||
<poem> | |||
கோலமதாய் உரைத்திடிலோ கொடுஞ்சாத்தான் உடம்பதனின் | கோலமதாய் உரைத்திடிலோ கொடுஞ்சாத்தான் உடம்பதனின் | ||
தோலதுவாய் மீன்செதிளாய் தலைநிகர்வான் சிங்கமதாய்க் | தோலதுவாய் மீன்செதிளாய் தலைநிகர்வான் சிங்கமதாய்க் | ||
காலதுவாய்க் கரடிநிகர் கொடுநாகச் செட்டையொடு | காலதுவாய்க் கரடிநிகர் கொடுநாகச் செட்டையொடு | ||
ஒலமதாய்க் குரலனவன் உள்ளிருந்து நெருப்புமிழ்வான் | ஒலமதாய்க் குரலனவன் உள்ளிருந்து நெருப்புமிழ்வான் | ||
</poem> | |||
====== அழிம்பன் வதை ====== | ====== அழிம்பன் வதை ====== | ||
<poem> | |||
கத்தியுடன் அக்கொடியோன் கொன்றிடவே குறிவைக்கத் | கத்தியுடன் அக்கொடியோன் கொன்றிடவே குறிவைக்கத் | ||
தத்தியிவன் கேடயத்தைத் தானெடுத்துச் சத்துருவைக் | தத்தியிவன் கேடயத்தைத் தானெடுத்துச் சத்துருவைக் | ||
குத்தியவன் புவிசாய்க்கக் கதிகலங்கி மறுகணமே | குத்தியவன் புவிசாய்க்கக் கதிகலங்கி மறுகணமே | ||
கத்தியவன் சிறகடித்துக் கடந்தேகக் கண்டேன்யான் | கத்தியவன் சிறகடித்துக் கடந்தேகக் கண்டேன்யான் | ||
</poem> | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
Line 130: | Line 122: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{Finalised}} | |||
{{Fndt|27-Nov-2023, 05:43:16 IST}} |
Latest revision as of 14:07, 13 June 2024
மோட்சப்பயண காவியம் (1991) ஆங்கிலத்தில் ஜான் பன்யன் 1678-ல் எழுதிய பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ் (Pilgrims Progress) நூலைத் தழுவி இயற்றப்பட்ட தமிழ்ச் செய்யுள் வடிவம். இக்காப்பியநூலில் 43 படலங்களும், 600 பாடல்களும் உள்ளன. இதனை இயற்றியவர், முனைவர் ஏ. த. சோதி நாயகம்.
பிரசுரம், வெளியீடு
ஜான் பன்யன் எழுதிய ‘பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ்’ நூலின் மொழியாக்கமாக, செய்யுள் வடிவில் முத்திவழி அம்மானை, இரட்சணிய யாத்திரிகம் ஆகிய காப்பிய நூல்கள் எழுதப்பட்டன. அந்த வரிசையில், முனைவர் ஏ. த. சோதி நாயகத்தால் செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட நூல், மோட்சப்பயண காவியம். இந்நூல், 1991-ல், பூம்புகார் பதிப்பகம் மூலம் வெளியானது.
நூல் அமைப்பு
மோட்சப்பயண காவியம் மூன்று காண்டங்களைக் கொண்டது. அவை
- தனிவழிக் காண்டம்
- உண்மைத் துணைக் காண்டம்
- திட நம்பிக்கை துணைக் காண்டம்
இம்மூன்று காண்டங்களிலும் 43 படலங்கள் உள்ளன. இக்காப்பியத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை 600.
தனிவழிக் காண்டம்
முதல் காண்டமான தனிவழிக் காண்டத்தில், 16 படலங்கள் அமைந்துள்ளன. அவை,
- காவியச்சுட்டுப் படலம்
- கிறித்தியான் அலம்வந்த படலம்
- சுவிசேடர் முதலாம் சந்திப்புப் படலம்
- பிடிவாதன் இணங்கு நெஞ்சன் குறுக்கட்டுப் படலம்
- நாசவுழை உறு படலம்
- லோக ஞானி சந்திப்புப் படலம்
- சுவிசேடர் இரண்டாம் சந்திப்புப் படலம்
- திட்டிவாசல் உறு படலம்
- வியாக்கியானி வீட்டுக் காட்சிப் படலம்
- பாரம் அகல் படலம்
- வழி புரண்டார் சந்திப்புப் படலம்
- இழந்த சுருள் பெறு படலம்
- சிங்கார மாளிகைப் படலம்
- தாழ்மைப் பள்ளப் படலம்
- மரண நிழல் பள்ளப் படலம்
- ராட்சதர் குகை கடர் படலம்
உண்மைத் துணைக் காண்டம்
உண்மைத் துணைக் காண்டத்தில், ஏழு படலங்கள் உள்ளன. அவை,
- உண்மை சந்திப்புப் படலம்
- வாயாடி குறுக்கீட்டுப் படலம்
- சுவிசேடர் மூன்றாம் சந்திப்புப் படலம்
- மாயாபுரி சந்தை உறு படலம்
- சந்தை அமளிப் படலம்
- நீதி விசாரணைப் படலம்
- உண்மை முடிவுப் படலம்
திட நம்பிக்கை துணைக் காண்டம்
திட நம்பிக்கை துணைக் காண்டம், 20 படலங்களை உடையது. அவை,
- திட நம்பிக்கை சந்திப்புப் படலம்
- உபாயி துணையோர் குறுக்கீட்டுப் படலம்
- திரவிய கிரிஉறு படலம்
- லோத் இல்லாள் சிலைப் படலம்
- பக்க வழி புகு படலம்
- சந்தேகத் துருக்கத் துயர் படலம்
- ஆனந்தமலை இடையர் சந்திப்புப் படலம்
- அறிவீனன் முதலாம் சந்திப்புப் படலம்
- அற்ப விசுவாச சரித்திரப் படலம்
- முகத்துதியாரால் வழி இடறிய படலம்
- நாத்திகன் சந்திப்புப் படலம்
- மயக்கப் புவிஉறு படலம்
- திட நம்பிக்கை இயக்கம் பெற்ற வகைப் படலம்
- அறிவீனன் இரண்டாம் சந்திப்புப் படலம்
- சொற்ப காலம் கதைப் படலம்
- வாழ்க்கை நாடு படலம்
- ஆறு கடர் படலம்
- மோட்ச மகமை அறி படலம்
- பயணிகள் மோட்சம் அடைதல் படலம்
- அறிவீனன் முடிவுப் படலம்
காப்பியத்தின் கதை
கிறித்தியானி என்னும் ஆன்மத் தேடல் கொண்ட ஒருவனின் மோட்சப் பிரயாணத்தை அதில் அவன் எதிர்கொள்ளும் பல்வேறு வகைச் சிக்கல்களை, விளக்கிக் கூறுகிறது மோட்சப்பயண காவிய நூல்.
மோட்சப்பயண காவியம், பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ் மூலநூலில் காணப்படும் மோட்சம் பற்றிய செய்திகளையும் பலதரப்பட்ட மாந்தர்களையும், மோட்சப் பயணியின் அனுபவங்களையும், உரைடையில் இருப்பது போலவே கவிதை நடையில் கூறுகிறது. கடினமான சொற்களுக்குத் தனி விளக்கங்களும், பல்வேறு அடிக்குறிப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு
மோட்சப்பயண காவியம், எளிய தமிழில் எழுதப்பட்ட காப்பிய நூல். வாசிப்பவர்களுக்கு மென்மேலும் இறைபக்தியும், நம்பிக்கையும் பெருகும் வண்ணம் இக்காப்பிய நூலை இயற்றியுள்ளார், முனைவர் ஏ. த. சோதி நாயகம். உவமை, வருணனை போன்ற இலக்கியச் சிறப்புகளுடன் இக்காப்பிய நூல் அமைந்துள்ளது.
முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன், தனது கிறித்தவக் காப்பியங்கள் நூலில். “எளிய முறையில் மக்கள் இலக்கியமாக மோட்சப்பயண காவியம் அமைந்துள்ளது. இக்காவியத்தின் மற்றொரு சிறப்பினுக்கு ஜான் பனியனை அடியொற்றி எழுதப்பட்டதும் ஒரு காரணமாகும்.” என்று மதிப்பிடுகிறார்,
பாடல்கள் நடை
நூல் நோக்கம்
நரவுலகு வாழ்ந்திடினும் நல்லொழுக்க மேற்றவனாய்
பரவுலகாம் மோட்சமதன் பாதையுறப் பாடேற்றும்
இரவகல எழுஞ்சுடராய் இறுதியினில் குறியடைந்த
புரவலனின் நல்லடியான் பயணமது பகர்ந்திடுவேன்
நனவுலகில் நாற்றிசையும் நானலைந்த நாளொன்றில்
வனவுலகில் துயில்கொள்ள வன்மலையின் கெபி யகத்தே
கனவுலகில் கண்டவற்றைக் கரிசனையாய் தானிலத்தோர்
மனவுலகில் நிலைபெறவே முனைந்திங்கு இயம்பிடுவேன்
கிறித்தியானின் தோற்றம்
உடைகந்தை கனப்பளுவை உடையவனாம்ப் புறமுதுகில்
புடைநிந்தை முகஞ்சூழப் புத்தகந்தன் கரமுளதாய்
இடைமந்தை யகல்கன்று இடருறலாய்க் கிறித்தியானும்
அடைசிந்தை வேதனையால் அலம்வருதல் கண்டுணர்ந்தேன்
சாத்தானின் பண்புகள்
கோலமதாய் உரைத்திடிலோ கொடுஞ்சாத்தான் உடம்பதனின்
தோலதுவாய் மீன்செதிளாய் தலைநிகர்வான் சிங்கமதாய்க்
காலதுவாய்க் கரடிநிகர் கொடுநாகச் செட்டையொடு
ஒலமதாய்க் குரலனவன் உள்ளிருந்து நெருப்புமிழ்வான்
அழிம்பன் வதை
கத்தியுடன் அக்கொடியோன் கொன்றிடவே குறிவைக்கத்
தத்தியிவன் கேடயத்தைத் தானெடுத்துச் சத்துருவைக்
குத்தியவன் புவிசாய்க்கக் கதிகலங்கி மறுகணமே
கத்தியவன் சிறகடித்துக் கடந்தேகக் கண்டேன்யான்
உசாத்துணை
- கிறித்தவக் காப்பியங்கள், முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு. முதல் பதிப்பு, 2013.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Nov-2023, 05:43:16 IST