under review

பம்மல் விஜயரங்க முதலியார்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
(19 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
பம்மல் விஜயரங்க முதலியார் (65 வயது) பள்ளிகளுக்கு தேவையான தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டதில் முக்கியப்பங்காற்றினார்.  
[[File:பம்மல் விஜயரங்க முதலியார்.jpg|thumb|பம்மல் விஜயரங்க முதலியார்]]
பம்மல் விஜயரங்க முதலியார் (மார்ச் 1, 1830 - 1890) (மற்ற பெயர்கள்: பம்மல் விசயரங்க முதலியார், பம்மல் விசயரங்கனார்) பள்ளிகளுக்கு தேவையான தமிழ்ப் பாடநூல்களை அச்சிட்டு வெளியிட்டதில் முக்கியப் பங்காற்றினார்.
==பிறப்பு , கல்வி==
விஜயரங்க முதலியார் சென்னையில் மார்ச் 1, 1830 அன்று பிறந்தார். அவர் தந்தையார் பம்மல் ஏகாம்பர முதலியார் ஒரு சாராயக்கடையில் குமாஸ்தாவக் பணிபுரிந்து வந்தவர்.


== பிறப்பு மற்றும் கல்வி ==
சென்னை மாபூஸ்கான்தேவடியிலிருந்த ஒரு தெருப் பள்ளிக்கூடத்தில் தொடக்கக் கல்வி பெற்றார். பச்சையப்ப முதலியார் தொடக்கப்பள்ளியில் இலவசக்கல்வி பெற்றார். அரசு ராஜதானி  உயர்தரக் கலாசாலை (Presidency high School)ஆசிரியராக இருந்த திரு. பவல்துரை அப்பள்ளிக்கு வந்து சிறந்த மாணவர்களை தெரிவு செய்து  ராஜாஸ்தானி பள்ளியில் உயர் நிலைப்பள்ளியில் சேர்த்துக்கொள்வதுண்டு. அவர் விஜயரங்க முதலியாரையும் அவர் தம்பி சோமசுந்தர முதலியாரையும் அப்பள்ளியில் சேர்த்துக்கொண்டார். விஜயரங்க முதலியார் அங்கே பாதிச்சம்பளம் கட்டிபடிப்பை முடித்தார். அக்கல்விநிலையம் பின்னர் ராஜதானிக் கல்லூரியாக மாற்றப்பட்டது.
விஜயரங்க முதலியார் சென்னையில் மார்ச்சு 1, 1830 ஆம் ஆண்டு பிறந்தார். பச்சையப்ப முதலியார் தொடக்கப்பள்ளியில் தொடங்கி சென்னை ராஜாஸ்தானி பள்ளியில் உயர் நிலைப்பள்ளி முடித்தார். பள்ளி இறுதியாண்டுத்தேர்வில் இரண்டாவதாக தேறியதற்க்காக அரசின் பொன் மோதிரம் ஒன்றைப்பரிசாக வென்றார்.


== பணிகள் ==
விஜயரங்க முதலியார் ராஜதானிக் கல்லூரியில் 1851 -ம் ஆண்டு  பிரோபிஷன்ட், (Proficient) தேர்வில் இரண்டாவது வகுப்பில் தேறினார். அவ்வாண்டு ராபர்ட்சன் என்பருடைய ‘அமெரிக்கா சரித்திரம்’ என்னும் நூலை தமிழில் எழுதியதற்காக ஒரு பரிசைப் பெற்றார். பிரோபிஷண்ட் தேர்வில் தேறுபவர்களுக்கு கல்லூரி  பரிசாக அளித்த பொன் மோதிரத்தை  தன் அறுபதாம் ஆண்டு வரையில் விஜயரங்க முதலியார் தன் விரலில் அணிந்திருந்தார்.  விஜயரங்க முதலியார் தமிழில் எழுதிய அமெரிக்க சரித்திரம் பிறகு அச்சிடப்பட்டது.
இவர் 1851 ஆம் ஆண்டு இராபர்ட்சன் என்பவர் எழுதிய அமெரிக்க நாட்டு வரலாற்று நூலை தமிழில் மொழிபெயர்த்து 1852 ஆம் ஆண்டு வெளியிட்டார். இதற்காக பச்சையப்ப முதலியார் பரிசைப்பெற்றார்.
== தனி வாழ்க்கை ==
பம்மல் விஜயரங்க முதலியார் ராஜதானி கல்லூரியிலேயே தமிழாசிரியராகப் பணியாற்றினார்.  மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களுக்கு உதவி ஆய்வாளர் (Deputy Inspector of Schools) ஆக அரசால் நியமிக்கப்பட்டார். அங்கேயிருந்து பிறகு சென்னைக்கு மாற்றப்பட்டார். அக்காலம் ரூபாய் 250 ஊதியம்பெற்றதாக சம்பந்த முதலியார் குறிப்பிடுகிறார். துணை ஆய்வாளர் (Assistant Inspector of Schools) ஆக உயர்த்தப்பட்டார். அதற்கு மாத சம்பளம் ரூபாய் 400.  தன் அறுபதாம் வயதில் 1890-ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.  


இவர் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராக சிலகாலம் பணியாற்றி பின் பள்ளிகளின் துணைக்கண்காணிப்பாளராக மதுரை, திண்டுக்கல் முதலிய ஊர்களில் பணிபுரிந்தார். பின் 1890 வரை சென்னையில் பணி புரிந்து ஓய்வுபெற்றார்.
பம்மல் விஜயரங்க முதலியார் 1850-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் மூலமாக ஒரு மகனும் இரண்டு மகள்களும் பிறந்தனர்அந்த மனைவி மறையவே 1860-ம் ஆண்டு இரண்டாவது மனைவியாக பேடு அப்பாவு முதலியார் என்பவரின் மகள் மாணிக்கவேலு அம்மாளை மணந்தார். அந்த மனைவியில்  நான்கு மகன்களும் நான்கு மகள்களும் பிறந்தார்கள். இறுதி மகன் தமிழ்நாடகத்துறையின் முன்னோடியான [[பம்மல் சம்பந்த முதலியார்|பம்மல் சம்பந்த முதலியார்.]] இவர்கள் ஆச்சாரப்பன் வீதி 70--ம் எண் இல்லத்தில் வாழ்ந்தனர்.
==கல்விப்பணிகள்==
விஜயரங்க முதலியார் சிறு வயதிலேயே ‘உபயுக்த கிரந்தகரண சபை’ என்பதின் உறுப்பினராக இருந்தார்.  அதற்காக பல புத்தகங்களை தமிழில் எழுதி பதிப்பித்தார். இதன் பிறகு பாடசாலைகளுக்கு வேண்டிய புத்தகங்களை அச்சிடுவதற்கும் தமிழ் மொழியில் புதிய புத்தகங்கள் அச்சிடுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட School books and Vernacular Literature Society என்னும் சபையில் தன் வாழ்நாள் முழுக்க உறுப்பினராக இருந்தார். அப்போது பலநூல்களை அவர் வெளியிட்டார். 


== நூல்கள் ==
சென்னையில் அக்காலம் பார்க் பேர் {Park Fair) என்னும்பெயரில் நடத்தப்பட்ட கல்விக்கண்காட்சியின் செயலாளராக  1881--ம் ஆண்டு முதல் 1886--ம் ஆண்டு வரையில் பணியாற்றினார். சென்னையில் விஜய நகர  மகாராஜா ஏற்படுத்திய ஐந்து பெண்கள் பாடசாலைகளுக்கு செயலாளராகப் பணியாற்றினார். சென்னை யூனிவர்சிடி செனெட்டில் (University Senate) உறுப்பினராக தன் வாழ்நாள் முழுக்க இருந்தார். சென்னை பல்கலை தமிழ் மொழித் தேர்வுக்குழு (Board of Examiners for Tamil) உறுப்பினராகவும்  சில வருடங்கள் தலைவராகவும் இருந்தார்.  பச்சையப்பன் கல்லூரி அறங்காவலராகவும் (Trustee of the Patchiappans’ charities) வாழ்நாள் முழுக்க பணியாற்றினார். [[துரைசாமிக் கவிராயர்]] போன்ற பலர் இவருடைய வள்ளல்தன்மையால் பயன்பெற்றனர்.
பள்ளிகளுக்கு தேவையான தமிழ் நூல்களை பதிப்பித்தார் மேலும் பல தமிழ் நூல்கள் வெளிவருவதில் துணைபுரிந்தார். மூன்றாம் வகுப்பு நூல் ஒன்றை அச்சிட்டு வெளியிட்டார்.


== சமுதாயப்பணிகள் ==
== மதப்பணிகள் ==
இவர் சென்னைப்பல்கலைக்கழக உறுப்பினராக சில காலம் பணியாற்றினார். சென்னையில் விஜயநகர மன்னர் உருவாக்கிய நான்கு பெண்கள் பள்ளிகளுக்கு ஊதியமில்லாமல் பணி புரிந்தார். ஆசிரியப்பணி தேரிவுக்குழுவுக்கு சிலகாலம் ஆலோசகராக இருந்தார். தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் பள்ளியில் சில காலம் பணிபுரிந்துள்ளார்.  
பம்மல் விஜயரங்க முதலியார் 1872--ம் ஆண்டு மதுரை திருஞானசம்பந்தஸ்வாமிகள் மடத்தில் சிவதீட்சை பெற்றுக்கொண்டார். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்திற்கும், சென்னையில் பெத்துசென்னை ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் திருவேட்டீச்சுரர் கோவில்களுக்கு அறங்காவலராக இருந்தார்.
==இறப்பு==
விஜயரங்க முதலியார் 1895--ம் ஆண்டு மறைந்தார்.


சென்னை ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் திருவேட்டீச்சுரர் கோவில்களுக்கு தருமகர்த்தாவாக இருந்தார்.
== இலக்கிய இடம் ==
பம்மல் விஜயரங்க முதலியார் தமிழ்ப்புலவர்களை ஆதரித்த வள்ளல் என்னும் நிலையிலும், சைவ மறுமலர்ச்சிக்கு பாடுபட்டவர் என்னும் நிலையிலும், தமிழ்வழிக் கல்விக்கான நூல்களை பதிப்பித்த கல்வியாளர் என்னும் நிலையிலும் வரலாற்று இடம் உடையவர்.  


== இறப்பு ==
== உசாத்துணை ==
இவர் 1895 ஆம் ஆண்டு மறைந்தார்.
[https://www.indianetzone.com/31/pammal_vijayaranga_sambandha_mudaliar_indian_theatre_personality.htm பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார் வரலாறு]
 
[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.pdf/3 என் இளம்பருவச் சரித்திரம் பம்மல் சம்பந்த முதலியார்]
 
 
 
{{Finalised}}
 
{{Fndt|19-Dec-2022, 16:14:00 IST}}
 
 
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:22, 13 June 2024

பம்மல் விஜயரங்க முதலியார்

பம்மல் விஜயரங்க முதலியார் (மார்ச் 1, 1830 - 1890) (மற்ற பெயர்கள்: பம்மல் விசயரங்க முதலியார், பம்மல் விசயரங்கனார்) பள்ளிகளுக்கு தேவையான தமிழ்ப் பாடநூல்களை அச்சிட்டு வெளியிட்டதில் முக்கியப் பங்காற்றினார்.

பிறப்பு , கல்வி

விஜயரங்க முதலியார் சென்னையில் மார்ச் 1, 1830 அன்று பிறந்தார். அவர் தந்தையார் பம்மல் ஏகாம்பர முதலியார் ஒரு சாராயக்கடையில் குமாஸ்தாவக் பணிபுரிந்து வந்தவர்.

சென்னை மாபூஸ்கான்தேவடியிலிருந்த ஒரு தெருப் பள்ளிக்கூடத்தில் தொடக்கக் கல்வி பெற்றார். பச்சையப்ப முதலியார் தொடக்கப்பள்ளியில் இலவசக்கல்வி பெற்றார். அரசு ராஜதானி உயர்தரக் கலாசாலை (Presidency high School)ஆசிரியராக இருந்த திரு. பவல்துரை அப்பள்ளிக்கு வந்து சிறந்த மாணவர்களை தெரிவு செய்து ராஜாஸ்தானி பள்ளியில் உயர் நிலைப்பள்ளியில் சேர்த்துக்கொள்வதுண்டு. அவர் விஜயரங்க முதலியாரையும் அவர் தம்பி சோமசுந்தர முதலியாரையும் அப்பள்ளியில் சேர்த்துக்கொண்டார். விஜயரங்க முதலியார் அங்கே பாதிச்சம்பளம் கட்டிபடிப்பை முடித்தார். அக்கல்விநிலையம் பின்னர் ராஜதானிக் கல்லூரியாக மாற்றப்பட்டது.

விஜயரங்க முதலியார் ராஜதானிக் கல்லூரியில் 1851 -ம் ஆண்டு பிரோபிஷன்ட், (Proficient) தேர்வில் இரண்டாவது வகுப்பில் தேறினார். அவ்வாண்டு ராபர்ட்சன் என்பருடைய ‘அமெரிக்கா சரித்திரம்’ என்னும் நூலை தமிழில் எழுதியதற்காக ஒரு பரிசைப் பெற்றார். பிரோபிஷண்ட் தேர்வில் தேறுபவர்களுக்கு கல்லூரி பரிசாக அளித்த பொன் மோதிரத்தை தன் அறுபதாம் ஆண்டு வரையில் விஜயரங்க முதலியார் தன் விரலில் அணிந்திருந்தார். விஜயரங்க முதலியார் தமிழில் எழுதிய அமெரிக்க சரித்திரம் பிறகு அச்சிடப்பட்டது.

தனி வாழ்க்கை

பம்மல் விஜயரங்க முதலியார் ராஜதானி கல்லூரியிலேயே தமிழாசிரியராகப் பணியாற்றினார். மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களுக்கு உதவி ஆய்வாளர் (Deputy Inspector of Schools) ஆக அரசால் நியமிக்கப்பட்டார். அங்கேயிருந்து பிறகு சென்னைக்கு மாற்றப்பட்டார். அக்காலம் ரூபாய் 250 ஊதியம்பெற்றதாக சம்பந்த முதலியார் குறிப்பிடுகிறார். துணை ஆய்வாளர் (Assistant Inspector of Schools) ஆக உயர்த்தப்பட்டார். அதற்கு மாத சம்பளம் ரூபாய் 400. தன் அறுபதாம் வயதில் 1890-ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

பம்மல் விஜயரங்க முதலியார் 1850-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் மூலமாக ஒரு மகனும் இரண்டு மகள்களும் பிறந்தனர்அந்த மனைவி மறையவே 1860-ம் ஆண்டு இரண்டாவது மனைவியாக பேடு அப்பாவு முதலியார் என்பவரின் மகள் மாணிக்கவேலு அம்மாளை மணந்தார். அந்த மனைவியில் நான்கு மகன்களும் நான்கு மகள்களும் பிறந்தார்கள். இறுதி மகன் தமிழ்நாடகத்துறையின் முன்னோடியான பம்மல் சம்பந்த முதலியார். இவர்கள் ஆச்சாரப்பன் வீதி 70--ம் எண் இல்லத்தில் வாழ்ந்தனர்.

கல்விப்பணிகள்

விஜயரங்க முதலியார் சிறு வயதிலேயே ‘உபயுக்த கிரந்தகரண சபை’ என்பதின் உறுப்பினராக இருந்தார். அதற்காக பல புத்தகங்களை தமிழில் எழுதி பதிப்பித்தார். இதன் பிறகு பாடசாலைகளுக்கு வேண்டிய புத்தகங்களை அச்சிடுவதற்கும் தமிழ் மொழியில் புதிய புத்தகங்கள் அச்சிடுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட School books and Vernacular Literature Society என்னும் சபையில் தன் வாழ்நாள் முழுக்க உறுப்பினராக இருந்தார். அப்போது பலநூல்களை அவர் வெளியிட்டார்.

சென்னையில் அக்காலம் பார்க் பேர் {Park Fair) என்னும்பெயரில் நடத்தப்பட்ட கல்விக்கண்காட்சியின் செயலாளராக 1881--ம் ஆண்டு முதல் 1886--ம் ஆண்டு வரையில் பணியாற்றினார். சென்னையில் விஜய நகர மகாராஜா ஏற்படுத்திய ஐந்து பெண்கள் பாடசாலைகளுக்கு செயலாளராகப் பணியாற்றினார். சென்னை யூனிவர்சிடி செனெட்டில் (University Senate) உறுப்பினராக தன் வாழ்நாள் முழுக்க இருந்தார். சென்னை பல்கலை தமிழ் மொழித் தேர்வுக்குழு (Board of Examiners for Tamil) உறுப்பினராகவும் சில வருடங்கள் தலைவராகவும் இருந்தார். பச்சையப்பன் கல்லூரி அறங்காவலராகவும் (Trustee of the Patchiappans’ charities) வாழ்நாள் முழுக்க பணியாற்றினார். துரைசாமிக் கவிராயர் போன்ற பலர் இவருடைய வள்ளல்தன்மையால் பயன்பெற்றனர்.

மதப்பணிகள்

பம்மல் விஜயரங்க முதலியார் 1872--ம் ஆண்டு மதுரை திருஞானசம்பந்தஸ்வாமிகள் மடத்தில் சிவதீட்சை பெற்றுக்கொண்டார். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்திற்கும், சென்னையில் பெத்துசென்னை ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் திருவேட்டீச்சுரர் கோவில்களுக்கு அறங்காவலராக இருந்தார்.

இறப்பு

விஜயரங்க முதலியார் 1895--ம் ஆண்டு மறைந்தார்.

இலக்கிய இடம்

பம்மல் விஜயரங்க முதலியார் தமிழ்ப்புலவர்களை ஆதரித்த வள்ளல் என்னும் நிலையிலும், சைவ மறுமலர்ச்சிக்கு பாடுபட்டவர் என்னும் நிலையிலும், தமிழ்வழிக் கல்விக்கான நூல்களை பதிப்பித்த கல்வியாளர் என்னும் நிலையிலும் வரலாற்று இடம் உடையவர்.

உசாத்துணை

பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார் வரலாறு

என் இளம்பருவச் சரித்திரம் பம்மல் சம்பந்த முதலியார்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Dec-2022, 16:14:00 IST