நப்பூதனார்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
Line 23: | Line 23: | ||
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/3 சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்] | * [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt1k0l3&tag=%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88#book1/3 சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/mullaippattuoruvilakkam.pdf முல்லைப்பாட்டு விளக்கம்: புலவர்.கா.கோவிந்தன்] | * [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/mullaippattuoruvilakkam.pdf முல்லைப்பாட்டு விளக்கம்: புலவர்.கா.கோவிந்தன்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|23-Sep-2023, 06:29:23 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்கள்]] | [[Category:புலவர்கள்]] |
Latest revision as of 16:32, 13 June 2024
நப்பூதனார் (காவிரிப்பூம் பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்) சங்க காலப் புலவர். பத்துப்பாட்டுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முல்லைப்பாட்டு நூலைப் பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
நப்பூதனார் காவிரிப்பூம்பட்டினத்தில் பொன்வணிகர் குடியில் பிறந்தார். காவிரிப்பூம்பட்டினத்தில் புடைத்து உண்ணும் பூதம் இருக்கும் இடம் பூதச்சதுக்கம் என்றழைக்கப்பட்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. அப்பூதத்தை காவிரிப்பூம்பட்டின மக்கள் தெய்வமென வழிபடவும், தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டவும் செய்தனர். நல்பூதனார் என்ற பெயர் நப்பூதனார் என மருவியதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
இலக்கிய வாழ்க்கை
பத்துப்பாட்டில் ஒன்றாகிய முல்லைப்பாட்டைப் பாடினார்.
பாடல் நடை
- முல்லைப்பாட்டு: 13
நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல்
- முல்லைப்பாட்டு: 12-6
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள்; கைய
கொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயார் என்போள்
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: வணிகரிற் புலவர்கள்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-9
- சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: தமிழ் இணைய கல்விக் கழகம்
- முல்லைப்பாட்டு விளக்கம்: புலவர்.கா.கோவிந்தன்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Sep-2023, 06:29:23 IST