ஜெனீரா தௌபீக் ஹைருன் அமான்
From Tamil Wiki
ஜெனீரா தௌபீக் ஹைருன் அமான் (மே 16, 1967) ஈழத்துப் பெண் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
(1967.05.16) திருகோணமலை, கிண்ணியாவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை தௌபீக்; தாய் அபீபா உம்மா. ஆரம்பக் கல்வி முதல் உயர்தரம் வரை கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். இதே பாடசாலையில் தொடர்ந்து ஆசியர் பணியாற்றினார். திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் இலக்கியம் படைத்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் ஜெனீரா ஹைருல் அமான். தனது ஏழாவது வயதிலேயே இவரின் தந்தையின் ஊக்கம் காரணமாக எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார். இவரின் முதலாவது ஆக்கம் ”எனது பொழுதுபோக்கு” என்ற தலைப்பில் தினகரன் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையாகும். பாடசாலைக் காலத்திலேயே கவிதை, கட்டுரை போன்றவற்றில் ஈடுபாடுகொண்டவராகக் காணப்பட்டார். 1991ஆம் ஆண்டு அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெறும் காலத்தில் ”பாலர் பாடல்” எனும் சிறுவர் இலக்கிய நூலை வெளியிட்டுள்ளார்.
இலக்கிய வாழ்க்கை
விருதுகள்
- திருகோணமலை நூலக சபை விருது, கிண்ணியா பிரதேச செயலகம் இலக்கியத் தாரகை விருது, கிழக்கு மாகாண சாஹித்திய விருது – சிறுவர் இலக்கியம்
நூல் பட்டியல்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.