being created

ஏ.சமி. சுலைமா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:சுலைமா சமி.png|thumb|சுலைமா சமி]]
[[File:சுலைமா சமி.png|thumb|சுலைமா சமி]]
ஏ.சமி. சுலைமா (சுலைமா சமி) ஈழத்துப் பெண் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல் குழந்தைகளுக்கான கதைகள் எழுதினார்.  
ஏ.சமி. சுலைமா (சுலைமா சமி) ஈழத்துப் பெண் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல் குழந்தைகளுக்கான கதைகள் எழுதினார்.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== பிறப்பு, கல்வி ==
ஏ.சமி. சுலைமா இலங்கை களுத்துறை, தர்காநகரில் அப்துல் சமி, உம்மு தமீமா இணையருக்குப் பிறந்தார். மாவனல்லை கிரிகதெனியாவில் வசிக்கிறார். களுத்துறை தர்கா நகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் கற்றார். இதே பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.  
ஏ.சமி. சுலைமா இலங்கை களுத்துறை, தர்காநகரில் அப்துல் சமி, உம்மு தமீமா இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர். மாவனல்லை கிரிகதெனியாவில் வசிக்கிறார். களுத்துறை தர்கா நகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் கற்றார். இதே பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
== தனிவாழ்க்கை ==
ஏ.சமி. சுலைமா ஏ.சீ.எம். இக்பால் மௌலவியை மணந்தார். மகள் இன்ஷிராவும் எழுத்தாளர். மகன் அஷ்பாக் அகமத் ஓவியர்.
== ஊடகத்துறை ==
== ஊடகத்துறை ==
இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எழுதினார். இந்நிகழ்ச்சியின் பிரதி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.  
இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எழுதினார். இந்நிகழ்ச்சியின் பிரதி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.  
Line 25: Line 27:
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%8F.%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF,_%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D சுலைமா சமி: noolaham]
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%8F.%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF,_%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D சுலைமா சமி: noolaham]
* [https://poongavanam100.blogspot.com/2013/02/blog-post_903.html திருமதி. சுலைமா சமி அவர்களுடனான நேர்காணல்: poongavanam: வெலிகம ரிம்ஸா முஹம்மத்]
* [https://poongavanam100.blogspot.com/2013/02/blog-post_903.html திருமதி. சுலைமா சமி அவர்களுடனான நேர்காணல்: poongavanam: வெலிகம ரிம்ஸா முஹம்மத்]
 
* திருமதி. சுலைமா சமி அவர்களுடனான நேர்காணல்: எஸ் பாயிஸா அலி: tamilauthors


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:59, 6 May 2024

சுலைமா சமி

ஏ.சமி. சுலைமா (சுலைமா சமி) ஈழத்துப் பெண் எழுத்தாளர். சிறுகதைகள், நாவல் குழந்தைகளுக்கான கதைகள் எழுதினார்.

பிறப்பு, கல்வி

ஏ.சமி. சுலைமா இலங்கை களுத்துறை, தர்காநகரில் அப்துல் சமி, உம்மு தமீமா இணையருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர். மாவனல்லை கிரிகதெனியாவில் வசிக்கிறார். களுத்துறை தர்கா நகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் கற்றார். இதே பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

ஏ.சமி. சுலைமா ஏ.சீ.எம். இக்பால் மௌலவியை மணந்தார். மகள் இன்ஷிராவும் எழுத்தாளர். மகன் அஷ்பாக் அகமத் ஓவியர்.

ஊடகத்துறை

இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை எழுதினார். இந்நிகழ்ச்சியின் பிரதி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

ஏ.சமி. சுலைமா பதினோராவது வயதில் துணுக்கொன்றை தினகரன் பத்திரிகைக்கு எழுதினார். அது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல் ஆகியத்துறைகளில் ஈடுபாடுகொண்டார். இவரின் ஆக்கம் ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமி இதழ்களிலும் வெளிவந்துள்ளன. வைகறைப் பூக்கள், மனச்சுமைகள், திசைமாறிய தீர்மானங்கள், உண்டியல் ஆகிய சிறுகதைத்தொகுதிகளையும் ஊற்றை மறந்த நதிகள் என்ற நாவலும், நந்தவனப் பூக்கள் என்ற சிறார் நூலும் வெளிவந்தது. இவரின் ஆறு நூல்களில் நந்தவனப் பூக்கள் சிறுவர் இலக்கிய நூலை கல்வி அமைச்சு பாடசாலை நூலகப் புத்தகமாக அங்கீகரித்தது.

விருதுகள்

  • 2008-ல் இந்தியாவின் நர்கிஸ் சஞ்சிகையும், மல்லாரிப் பதிப்பகமும் இணைந்து நடத்திய சர்வதேச இஸ்லாமிய நாவல் போட்டியில் இவரது ”ஊற்றை மறந்த நதிகள்” நாவலுக்கு சிறப்புப்பரிசு கிடைத்தது.
  • 2002-ல் கொழும்பில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இலக்கிய பங்களிப்புக்கான விருது.
  • அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் 2008-ல் கலாஜோதி பட்டம் பெற்றார்.
  • 2014-ல் அகில இலங்கை கவிஞர்களின் சம்மேளனத்தால் காவிய பிரதீப பட்டம் பெற்றார்.

நூல் பட்டியல்

நாவல்
  • ஊற்றை மறந்த நதிகள் (2009)
சிறுகதைத்தொகுப்பு
  • வைகறைப் பூக்கள் (1987)
  • மனச்சுமைகள் (1988)
  • திசைமாறிய தீர்மானங்கள் (2003)
  • உண்டியல் (2018)
சிறுவர் இலக்கியம்
  • நந்தவனப் பூக்கள் (2015)

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.