being created

எஸ். தர்மாம்பாள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 14: Line 14:
சித்த மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு  தானே முயன்று கற்றும், பயிற்சிகள் மேற்கொண்டும் அதில் தேர்ச்சி பெற்றார்.  அவர் சித்தமருத்துவராகப் பணியாற்றத் தொடங்கிய 1930-ஆம் ஆண்டில் அலோபதி மருத்துவர்கள் அதிகம் இருக்கவில்லை.  பெரும் பகுதி மக்கள் சித்தமருத்துவர்களையே தேடி நாடி வந்தனர்.
சித்த மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு  தானே முயன்று கற்றும், பயிற்சிகள் மேற்கொண்டும் அதில் தேர்ச்சி பெற்றார்.  அவர் சித்தமருத்துவராகப் பணியாற்றத் தொடங்கிய 1930-ஆம் ஆண்டில் அலோபதி மருத்துவர்கள் அதிகம் இருக்கவில்லை.  பெரும் பகுதி மக்கள் சித்தமருத்துவர்களையே தேடி நாடி வந்தனர்.


தங்கச் சாலையில் புகழ்பெற்ற  புகழ்பெற்ற சித்த மருத்துவராக  மக்களுக்கு மருத்துவம் செய்தார் டாக்டர் தருமாம்பாள். ஏழை மக்களின் துயர் போக்கும் சேவையாகவே தனது மருத்துவத் தொழிலை அன்னை தருமாம்பாள் தங்கச் சாலையில் செய்து வந்தார்கள். மக்கள் தொடர்பை அதிக அளவு ஏற்படுத்திக் கொடுத்தது.
தங்கச் சாலையில் புகழ்பெற்ற  புகழ்பெற்ற சித்த மருத்துவராக  மக்களுக்கு மருத்துவம் செய்தார் டாக்டர் தருமாம்பாள். ஏழை மக்களின் துயர் போக்கும் சேவையாகவே தனது மருத்துவத் தொழிலை அன்னை தருமாம்பாள் தங்கச் சாலையில் செய்து வந்தார்கள். பல மக்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
 
சென்னை மாநில முதல்வர் மேதகு பனகல் அரசர் நம் நாட்டு மருத்துவப் பிரிவுகள்-(சித்த மருத்துவம், ஆயுர் வைத்தியம், யுனானி மருத்துவம்-) செழித்திட இந்திய மருத்துவப் பள்ளியினை 1925-1926 இல் எக்மோர் பாந்தியன் சாலையில் தோற்றுவித்தார். 330 தங்கச்சாலை டாக்டர் தருமாம்பாளின் நிரந்தர முகவரியாயிற்று.
 
== சமூகப் பணிகள் ==
பெண் விடுதலைக்குக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த டாக்டர் தருமாம்பாள், பல பெண்களுக்குக் கல்வி கற்பதற்கும், கல்லூரிகளில் சேர்ந்திடவும், வேலை வாய்ப்பினைப் பெறுதற்கும் உறுதுணையாக இருந்தார். தமிழ் மாதர் கழகத்தைத் தோற்றுவித்து பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியானார். தமிழ் மாதர் கழகத்தின் தலைவராக, பண்டிதர் நாராயணி அம்மையாரும், செயலாளராக டாக்டர் தருமாம்பாளும் பொறுப்பேற்றுக் பெண்கல்விக்கான முன்னெடுப்புகளைச் செய்தனர். மூடப்பழக்கங்களுக்கு எதிராகப்  பகுத்தறிவுப் பிரச்சாரமும் செய்தார், பல இளம் விதவைகளுக்கு மறுமணம் செய்வித்தார்.  பல இளையவர்களுக்கு சாதி மறுப்புத் திருமணமும் செய்வித்தார்.  





Revision as of 00:53, 8 May 2024

எஸ். தர்மாம்பாள்( சரஸ்வதி, கரந்தை எஸ். தர்மாம்பாள், கரந்தை தர்மாம்பாள்) மருத்துவர், சமூகப் போராளி. முதன்முதலில் தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். திராவிடக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டார்.

பிறப்பு, கல்வி

தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடியில் வாழ்ந்த சாமிநாதன் செட்டியார், பாப்பம்மாள் என்ற நாச்சியார் அம்மையார் இணையருக்கு தருமாம்பாள் 1890-ம் ஆண்டு திருவையாறில் பிறந்தார். இயற்பெயர் சரஸ்வதி.பின்னாளில் தருமாம்பாள் என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தை சாமிநாதன் துணி வியாபாரம் செய்தார்.அவரின் நண்பர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் பிள்ளை.

குழந்தைப் பருவத்திலேயே, தருமாம்பாள் தன் பெற்றோரை இழந்துவிட்டார். லட்சுமி என்ற பெண்னிடம் வளர்ந்தார். என்ற பெண்மணி தான் வளர்த்து வந்தார். பள்ளிக் கல்வி கிட்டவில்லை. வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியனார், மணி திருநாவுக்கரசு ஆகியோரிடம் தமிழும், பண்டித நாராயணி அம்மையாரிடத்தில் தெலுங்கும் கற்றார். ஆங்கிலம், மலையாள மொழிகளில் ஓரளவிற்குத் தேர்ச்சி பெற்றார்.

அவர் சிறுவயது முத நாடகக் கலை மீது பற்று மிகக் கொண்டிருந்தார்.

தனி வாழ்க்கை

தர்மாம்பாள் அக்காலத்தில் நாடகங்களில் நாயகன் பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த குடியேற்றம் முனிசாமி நாயுடுவை சாதி மறுத்து மணந்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் சிலகாலம் நாகப்பட்டினத்தில் வாழ்ந்தார். பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்து எண் 330. தங்கச்சாலையில் வாழ ஆரம்பித்தார்.

சித்த மருத்துவம்

சித்த மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு தானே முயன்று கற்றும், பயிற்சிகள் மேற்கொண்டும் அதில் தேர்ச்சி பெற்றார். அவர் சித்தமருத்துவராகப் பணியாற்றத் தொடங்கிய 1930-ஆம் ஆண்டில் அலோபதி மருத்துவர்கள் அதிகம் இருக்கவில்லை. பெரும் பகுதி மக்கள் சித்தமருத்துவர்களையே தேடி நாடி வந்தனர்.

தங்கச் சாலையில் புகழ்பெற்ற புகழ்பெற்ற சித்த மருத்துவராக மக்களுக்கு மருத்துவம் செய்தார் டாக்டர் தருமாம்பாள். ஏழை மக்களின் துயர் போக்கும் சேவையாகவே தனது மருத்துவத் தொழிலை அன்னை தருமாம்பாள் தங்கச் சாலையில் செய்து வந்தார்கள். பல மக்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

சென்னை மாநில முதல்வர் மேதகு பனகல் அரசர் நம் நாட்டு மருத்துவப் பிரிவுகள்-(சித்த மருத்துவம், ஆயுர் வைத்தியம், யுனானி மருத்துவம்-) செழித்திட இந்திய மருத்துவப் பள்ளியினை 1925-1926 இல் எக்மோர் பாந்தியன் சாலையில் தோற்றுவித்தார். 330 தங்கச்சாலை டாக்டர் தருமாம்பாளின் நிரந்தர முகவரியாயிற்று.

சமூகப் பணிகள்

பெண் விடுதலைக்குக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த டாக்டர் தருமாம்பாள், பல பெண்களுக்குக் கல்வி கற்பதற்கும், கல்லூரிகளில் சேர்ந்திடவும், வேலை வாய்ப்பினைப் பெறுதற்கும் உறுதுணையாக இருந்தார். தமிழ் மாதர் கழகத்தைத் தோற்றுவித்து பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியானார். தமிழ் மாதர் கழகத்தின் தலைவராக, பண்டிதர் நாராயணி அம்மையாரும், செயலாளராக டாக்டர் தருமாம்பாளும் பொறுப்பேற்றுக் பெண்கல்விக்கான முன்னெடுப்புகளைச் செய்தனர். மூடப்பழக்கங்களுக்கு எதிராகப் பகுத்தறிவுப் பிரச்சாரமும் செய்தார், பல இளம் விதவைகளுக்கு மறுமணம் செய்வித்தார். பல இளையவர்களுக்கு சாதி மறுப்புத் திருமணமும் செய்வித்தார்.



சமூகப் பணிகள்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.