under review

108 சிவ தாண்டவ விளக்கம்-விவிர்த்தம்

From Tamil Wiki
விவிர்த்தம் (திருப்பகம்)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - விவிர்த்தம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று விவிர்த்தம். தமிழில் இது 'திருப்பகம்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்தொன்றாவது கரணம்.

சிவனின் ஆடல்

இடது காலையும், தன் உடலையும் சிறிது வளைத்துத் தூக்கி, கைகளை இருமருங்கும் விசிறி, பிரமரி ஹஸ்தமாக வைத்து நிருத்தம் செய்வது விவிர்த்தம்.

உசாத்துணை


✅Finalised Page