under review

108 சிவ தாண்டவ விளக்கம்-சக்ரமண்டலம்

From Tamil Wiki
சக்ரமண்டலம் (வளைப்பு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - சக்ரமண்டலம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று சக்ரமண்டலம். தமிழில் இது 'வளைப்பு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்தி மூன்றாவது கரணம்.

சிவனின் ஆடல்

முன்பாவது, பின்பாவது கைகால் நுனிகளைப் பூமியில் ஊன்றி, உடல் வளைத்து, சக்கரத்தின் வட்டம் போல இருந்து ஆடுவது சக்ரமண்டலம்.

உசாத்துணை


✅Finalised Page