under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-2013

From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள் தொகுப்பு-2013

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-2013

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜூன் சொர்க்கமே என்றாலும்... ராஜேஷ்குமார் ஓம் சக்தி
ஜூன் ஒருகோடிப் புண்ணியம்! கீதாகுமாரி அமுதசுரபி
ஜூலை இளரத்தம் தி. தா. நாராயணன், செய்யாறு செம்மலர்
ஜூலை பிரிகூலி ஆர். லதா தினமணி கதிர்
ஆகஸ்ட் விடுதலை! விடுதலை! விடுதலை! மைதிலி சம்பத் கலைமகள்
ஆகஸ்ட் ஏன் கலவரம்? பி. சுந்தரராஜன் தினமணி கதிர்
நவம்பர் யார் ஸ்வாமி தஞ்சம்மா? இந்திரா பார்த்தசாரதி கல்கி தீபாவளி மலர்
நவம்பர் மானுடம் வெல்லும்...? இந்துமதி அமுதசுரபி
நவம்பர் பாற்கடலில் பரவசம்! ஶ்ரீனிவாச ராகவன், கே.ஆர் கல்கி தீபாவளி மலர்
நவம்பர் விவேகானந்தன் அய்க்கண் அமுதசுரபி
நவம்பர் மூன்றாம் பால்! சசிகலா பாபு கல்கி
நவம்பர் ஒரு பட்டனைத் தட்டி விட்டா... ஷிவ்ராம் தினமணி கதிர்

2013-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை

2013-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, பி. சுந்தரராஜன் எழுதிய ‘ஏன் கலவரம்?’ தேர்ந்தெடுக்கப்பட்டது. சு. கிருஷ்ணமூர்த்தி இக்கதையைத் தேர்ந்தெடுத்தார்.

உசாத்துணை


✅Finalised Page