under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-2010

From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள் தொகுப்பு-2010

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-2010

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜனவரி சதுரங்கம் ஆனந்த் ராகவ் அமுதசுரபி
பிப்ரவரி தரை தொடும் விமானங்கள் ஆனந்த் ராகவ் ஆனந்த விகடன்
மார்ச் கலப்பை செ. செண்பக கண்ணு கல்கி
ஏப்ரல் ஓர் உன்னத தினம் மாதங்கி அமுதசுரபி
மே சிற்பவல்லி ஜெய்விஜய் தினமணி கதிர்
ஜூன் தமிழ் மணம் சீதா ரவி கல்கி
ஜூலை வூடு பாரதி தம்பி ஆனந்த விகடன்
ஆகஸ்ட் அன்றும் இன்றும் அடைக்கலம் பாரதி மைந்தன் ஶ்ரீராமகிருஷ்ண விஜயம்
செப்டம்பர் கரகு பெரி ஜா இராம. முத்து கணேசன் காலச்சுவடு
அக்டோபர் குறையொன்றும் இல்லை! ஜோதிநகர் சிவாஜி கிருஷ்ணா கல்கி
நவம்பர் ஒரு வேளை உணவு பாவண்ணன் வடக்கு வாசல்
டிசம்பர் சுப்ரபாதம் மலர் மன்னன் அமுதசுரபி

2010-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை

2010-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, ஆனந்த் ராகவ் எழுதிய ‘சதுரங்கம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. மு. இராமநாதன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை தமிழ்மகன் தேர்வு செய்தார்.

உசாத்துணை


✅Finalised Page