under review

ஜாக் பிரிட்ஜர் சாக்கர்

From Tamil Wiki
Revision as of 05:53, 23 June 2022 by Madhusaml (talk | contribs)
ஜாக் சாக்கர்
சாக்கர் நூல்
சாக்கர் ஓவியம்
சாக்கர் ஓவியம்
சாக்கர் ஓவியம்3

ஜாக் பிரிட்ஜர் சாக்கர் (Jack Bridger Chalker) (அக்டோபர் 10, 1918 – நவம்பர் 15, 2014) பிரிட்டிஷ் ஓவியர். சயாம் மரண ரயில்பாதையின் சித்திரங்களை வரைந்தமையால் புகழ்பெற்றவர்.

பார்க்க சயாம் மரண ரயில்பாதை

பிறப்பு, கல்வி

ஜாக் சாக்கர் லண்டனில் ஒரு ரயில்வே நிலைய தலைவரின் மகனாக பிறந்தார். அலைன் பள்ளி, டன்விச்( Alleyn's School , Dulwich) ல் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வரைகலையிலும் வண்ண ஓவியக்கலையிலும் கோல்ட்ஸ்மிர்த் கல்லூரி (Goldsmiths College)யில் பயிற்சி எடுத்தபின் ஜாக் சாக்கர் ராயல் கவின்கலைக் கல்லூரியில் (Royal College of Art, London) சேர்ந்தார். உதவித்தொகைபெறுவதற்கு முன் பிரித்தானிய ராணுவத்தில் சேர்ந்தார்.

போர்க்கைதி வாழ்க்கை

பிரிட்டன் ராணுவத்தில் (Royal Field Artillery) சிங்கப்பூரில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது பிப்ரவரி , 1942-ல் சாக்கர் சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பானிய படைகளிடம் போர்க்கைதியாகச் சிக்கினார். ஜாக் சாக்கர் முதலில் சாங்கை சிறையிலும் பின்னர் உழைப்பு முகாம்களிலும் இருந்தார். 1942-ன் இறுதியில் சயாம் மரண ரயில்பாதை என அழைக்கப்பட்ட பர்மா ரயில்பாதைப் பணிக்கு அனுப்பப்பட்டார்

சயாம் மரண ரயில்பாதையில்

தாய்லாந்தில் காஞ்சனபுரியில் இருந்த உழைப்பு முகாமில் பணியாற்றிய ஜாக் சாக்கர் அங்கே பணியாற்றியவர்கள் அடைந்த சித்திரவதை, ஒடுக்குமுறை, நோய் ஆகியவற்றை சித்தரிக்கும்பொருட்டு ஓவியங்களை வரைந்தார். ராணுவ முகாமில் வெவ்வேறு இடங்களில் இருந்து திருடிய தாள்களையும் கரியையும் கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் அவை. அச்செயல் பிடிபட்டால் மிகக்கடுமையாக தண்டிக்கப்படகூடியது என அறிந்திருந்தும் ஜாக் சாக்கர் 1942 முதல் 1945 வரையிலான காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்ததோடு அவற்றை ரகசியமாக பாதுகாக்கவும் செய்தார்

ஆஸ்திரேலிய மருத்துவர் கர்னல் எட்வர்ட் டன்லப் ( Colonel Edward Dunlop) ஐ கைதிகளுக்கான மருத்துவமனையில் 1944-ல் சந்தித்த ஜாக் சாக்கர் மருத்துவமனையின் கொடிய சூழலை வரைய ஒத்துக்கொண்டார்.

விடுதலை

1945-ல் பிரிட்டிஷ் படைகள் வென்று சிங்கப்பூரைக் கைப்பற்றியபோது ஜாக் சாக்கர் விடுதலை செய்யப்பட்டார். பாங்காங்கில் இருந்த ஆஸ்திரேலிய ராணுவத் தலைமையகத்தில் ஓவியராகப் பணியாற்றினார்.

போர்க்கொடுமை சாட்சியங்கள்

ஜாக் சாக்கரும் பிலிப் மெனின்ஸ்கியும், ஆஷ்லி ஜார்ஜ் ஓல்டும், ரொனால்ட் சியர்ல்யும் வரைந்த சயாம் மரணரயில் பற்றிய ஓவியங்கள் 1945-ல் போர்க்குற்ற விசாரணையின்போது முதன்மையான தடையங்களாகக் கருத்தில் கொள்ளப்பட்டன. டோக்கியோ போர் விசாரணை நீதிமன்றத்தில் (Tokyo War Crimes Tribunal) அவை சமர்ப்பணம் செய்யப்பட்டன. இப்போது அவை ஆஸ்திரேலிய போர் அருங்காட்சியகத்திலும்.(Australian War Memorial) லண்டன், இம்பீரியல் போர் அருங்காட்சியகத்திலும் (Imperial War Museum) உள்ளன. 1995-ல் இந்த ஓவியங்களின் கண்காட்சி ஒன்று ஆஸ்திரேலியாவின் விக்டோரியா ஸ்டேட் நூலகத்தின் சார்பில் மேஜர் ஆர்தர் மூன் சேகரிப்புகள் என்னும் தலைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டது

சாக்கர் ஓவியநூல்

பிற்காலவாழ்க்கை

ஜாக் சாக்கர் 1945-ன் இறுதியில் இங்கிலாந்து திரும்பி 1946-ல் ராயல் கவின்கலைக்கல்லூரியில் கலையில் பட்டம்பெற்றார். செல்ட்டன்ஹாம் பெண்கள் கல்லூரியில் (Cheltenham Ladies College) கலைத்துறை தலைவராகவும் செல்டன்ஹாம் அச்சுக்கலைக் கல்லூரியின் கலை ஆலோசகராகவும் பணியாற்றினார். 1950-ல் அவர் ஃபால்மௌத் கலைக்கல்லூரியில் ( Falmouth College of Art) தலைவரானார். வெஸ்ட் இங்கிலாந்து கலைக்கல்லூரி பிரிஸ்டலில் கலை பயிற்றுநராக 1958 முதல் பணியாற்றினார். அக்கல்லூரி பிரிஸ்டல் பாலிடெக்னிக் கல்லூரியாக 1969-ல் மாறியபோது சாக்கர் அதன் வரைகலைத்துறை தலைவராக ஆனார். 1974 வரை அப்பணியில் இருந்தார்

சாக்கர் மருத்துவ ஓவியராக உடற்கூறுகள் சார்ந்து மருத்துவ நிறுவனங்களுக்காக ஓவியங்கள் வரைந்திருக்கிறார். மருத்துவ ஓவியர் கழகம், கிரேட் பிரிட்டன் ( Society of Medical Artists of Great Britain) அமைப்பின் உறுப்பினராகப் பணியாற்றினார். வெஸ்ட் இங்கிலாந்து பல்கலைக் கழகத்தின் கௌரவப்பட்டம் 2003-ல் அவருக்கு வழங்கப்பட்டது. 2002-ல் சாக்கர் அவருடைய சயாம் மரணரயில்பாதை ஓவியங்களை ஏலத்தில் விட்டது உலகளாவ கவனிக்கப்பட்டது

மறைவு

சாக்கர் நவம்பர் 15, 2014-ல் மறைந்தார்

நூல்கள்

  • Burma Railway Artist (1994)
  • Burma Railway: Images of War (2

உசாத்துணை


✅Finalised Page