under review

சு.பசுபதி

From Tamil Wiki
Revision as of 18:37, 9 May 2022 by Kavitha (talk | contribs)
பசுபதி
சங்கச்சுரங்கம்

பேராசிரியர் சு.பசுபதி (செப்டெம்பர் 21, 1940) தமிழ் இலக்கிய ஆவணச் சேகரிப்பாளர், கல்வியாளர், இணைய விவாதங்களில் தமிழிலக்கிய வரலாறு குறித்து எழுதுபவர்.

பிறப்பு, கல்வி

சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு செப்டெம்பர் 21, 1940-ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி ( வடகிளை, தியாகராய நகர்)யில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி. ஐ.ஐ.டி.(மதராஸ்) ஆகியவற்றில் பட்டப்படிப்பை முடித்து யேல் பல்கலைக் கழகத்தில் ( நியூ ஹேவன், கனெக்டிகட், அமெரிக்கா) முனைவர் படிப்பை முடித்தார். பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார். தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராசிரியர் பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை

பசுபதி 1980ல் ஜயாவை மணந்தார். ஒரு மகள், வாணி. ஐ.ஐ.டி(மதராஸ்), யேல் பல்கலைக் கழகம், டொராண்டோ பல்கலைக் கழகம் ( கனடா) ஆகியவற்றில் பணியாற்றினார்.

இலக்கியவாழ்க்கை

பசுபதியின் முதல் கவிதை தமிழணங்கு 1982-ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. உ.வே.சாமிநாதையர், சி.சுப்ரமணிய பாரதியார், கல்கி, தேவன் ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். பசுபதி நடத்தும் பசு பதிவுகள் என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பு.http://groups.google.ca/group/yAppulagam என்னும் இணையக் குழுமத்திலும் எழுதிவருகிறார்.

நூல்கள்

  • கவிதை இயற்றிக் கலக்கு
  • சங்கச் சுரங்கம் – மூன்று பகுதிகள்
  • சொல்லயில்

உசாத்துணை


✅Finalised Page