under review

இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1978

From Tamil Wiki
Revision as of 05:50, 31 January 2023 by Logamadevi (talk | contribs)
இலக்கிய சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1978

இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.

இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1978

மாதம் சிறுகதைத் தலைப்பு ஆசிரியர் இதழ்
ஜனவரி சத்தியத்தின் கேள்வி அழகாபுரி அழகப்பன் ஆனந்த விகடன்
பிப்ரவரி மணம் பூமணி பிரக்ஞை
மார்ச் வாசலில் ஒருத்தி பூமணி இதயம் பேசுகிறது
ஏப்ரல் மூன்றாவது விதவை ஜ. பிரதாபன் குமுதம்
மே நெருடலை மீறி நின்று பாலகுமாரன் குமுதம்
ஜூன் நெருப்பு பூமணி குமுதம்
ஜூலை செங்கண்மால் தான் கொண்டுபோனான்! பிரேமா நந்தகுமார் கலைமகள்
ஆகஸ்ட் பகல் நேரப் பறவைகள் ஜெயரதன் தினமணி கதிர்
செப்டம்பர் இப்படியொரு பிரச்சனையா ? எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடன்
அக்டோபர் நிம்மதி கல்யாண வெங்கடேசன் குங்குமம்
நவம்பர் தீர்ப்பு சுதா பாலகிருஷ்ணன் கல்கி
டிசம்பர் பசி மும்தாஜ் யாசீன் செம்மலர்

1978 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதை

1978 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, மும்தாஜ் யாசீன் எழுதிய ‘பசி’ தேர்ந்தெடுக்கப்பட்டது. தி.ஜானகிராமன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை இனியவன்தேர்ந்தெடுத்தார்.

உசாத்துணை


✅Finalised Page