18 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்
From Tamil Wiki
தமிழ் இலக்கிய வரலாற்றில் சிற்றிலக்கியங்களும் சமய இலக்கியங்களும் வளர்ந்த காலம் பதினெட்டாம் நூற்றாண்டு. வடமொழியில் இருந்து புராணங்கள் இக்காலகட்டத்தில் அதிகம் மொழிபெயர்ப்பாகின. இஸ்லாமிய, கிறிஸ்தவ இலக்கிய வகைகள் அதிகம் வெளிவந்தன. சதகம், பள்ளு போன்ற சிற்றிலக்கியங்களும், செய்யுள் நாடகங்களும், கீர்த்தனை நாடகங்களும் நொண்டி நாடகங்களும் இக்காலகட்டத்தில் தோன்றின. தமிழ் இலக்கிய வரலாற்றில் அகராதி நூல்கள், அந்தாதி, அம்மானை, உலா, உரைநடை நூல்கள், குறவஞ்சி, கோவை, தூது , பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கியங்களும் அதிகம் தோன்றிய காலம் பதினெட்டாம் நூற்றாண்டாகும்.
பதினெட்டாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள் பட்டியல்
பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.