under review

வேட்டகண்ணன்

From Tamil Wiki

வேட்டகண்ணன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் 389-ஆவது பாடலாக உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

வேட்டகண்ணன் வேட்டுவர் குலத்தைச் சேர்ந்தவர். கண்ணன் என்பது இயற்பெயர்.

இலக்கிய வாழ்க்கை

வேட்டகண்ணன் குறுந்தொகையில் 398-ஆவது பாடலைப் பாடினார். இது குறிஞ்சித் திணைப்பாடல்.

பாடல் வழி அறிய வரும் செய்திகள்
  • வேட்டுவர் யானை முதலிய பெருவிலங்குகள் மட்டுமில்லாமல் காடை முதலிய சிறிய பறவைகளையும் வேட்டையாடுவர்.
  • தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்ன தலைவனால் மகிழ்ந்து தன் பணியாட்களுக்கு குறும்பூழ் பறைவையை (காடை) நெய்யில் வறுத்துச் சோற்றுடன் விருந்து படைக்கவேண்டும் என தலைவி மகிழ்வதாக பாடல் உள்ளது.

பாடல் நடை

  • குறுந்தொகை 389 (திணை: குறிஞ்சி)

நெய் கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர்பதம் பெறுக-தோழி! அத்தை
பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர்
'நன்றோ மகனே?' என்றனென்;
'நன்றே போலும்' என்று உரைத்தோனே.

உசாத்துணை


✅Finalised Page