under review

வளவ துரையன்

From Tamil Wiki
Revision as of 14:52, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)
வளவ துரையன்

வளவ. துரையன் (ஜூன் 5, 1949) தமிழில் கதைகள், கட்டுரைகள் எழுதிவரும் எழுத்தாளர். ஆன்மிக, இலக்கியப் பேச்சாளர். சங்கு என்னும் சிற்றிதழின் ஆசிரியர்

பிறப்பு, கல்வி

கடலூர் மாவட்டம் வளவனூர் என்னும் ஊரில் ஜூன் 5, 1949-ல் அ.பரமேஸ்வரன், லலிதா இணையருக்கு பிறந்தார். வளவதுரையனின் இயற்பெயர் பி.சுப்ரமணியன். வளவனூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் படிப்பை முடித்து 1968-ல் தமிழாசிரியர் பயிற்சி பெற்றார்

தனிவாழ்க்கை

தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றார். வளவ துரையன் நவம்பர் 28, 1971-ல் அலர்மேல் மங்கையை மணந்தார். எழிலன், அல்லி, முகிலன் ஆகியோர் குழந்தைகள்.

இலக்கியவாழ்க்கை

திராவிட இயக்க ஆதரவாளராக இருக்கையில் சி.என்.அண்ணாத்துரை பெயரையும் தன் ஊரான வளவனூர் பெயரையும் இணைத்து வளவ துரையன் என பெயர் சூட்டிக்கொண்டார். ’பரிசு வந்திருக்கிறது’ என்னும் சிறுகதை 1969-ல் வெளியாகியது. வளவனூர் திருக்குறட்கழகத்தலைவராக இருந்த அர.இராசாராமன், பேரா. ம.இலெ.தங்கப்பா ஆகியோர் இலக்கியத்தில் முன்னோடிகள். தொடக்கத்தில் திராவிட இயக்க ஆதரவாளராக மரபிலக்கிய ஈடுபாடு கொண்டு மரபுக்கவிதைகள் எழுதிவந்தார். பின்னர் வைணவத்தில் ஆழ்ந்து வைணவ நூல்களுக்கு உரையெழுதினார். நவீன இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டு கதை,கவிதைகள், நாவல்கள் எழுதலானார்

இதழாளர்

வளவதுரையன் சங்கு என்னும் சிற்றிதழை முப்பதாண்டுகளாக நடத்தி வருகிறார். முதலில் மரபுக்கவிதைக்கான இதழாக இருந்தது இப்போது நவீனக் கதைகளையும் கவிதைகளையும் வெளியிடுகிறது

பேச்சாளர்

வளவதுரையன் மேடைப்பேச்சாளர். வைணவ நூல்களை விளக்குவதும் மகாபாரதக் கதை சொல்வதும் மார்கழிமாதம் திருப்பாவை விளக்கமும் தொடர்ந்து செய்துவருகிறார்

அரசியல்

1965-ல் பள்ளியிறுதி வகுப்பு முடித்தபின், 1968-ல் ஆசிரியர் பயிற்சி சேரும்வரை திராவிடமுன்னேற்றக்கழகத்தில் தீவிர ஈடுபாடு. 1967 தேர்தலில் வேட்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்.

விருதுகள்

  • தினமணி கதிர் ஒரு பக்கச் சிறுகதைப் போட்டி - முதல் பரிசு
  • கடலூர் தமிழ்ச்சங்கம் - பாரதிதாசன் விருது
  • கம்பம் பாரதி இலக்கியப் பேரவை - சிறுகதை நூலுக்கு முதல் பரிசு
  • சேலம் கே.ஆர்.ஜி அறக்கட்டளை - சிறுகதை நூலுக்கு முதல் பரிசு
  • தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றம், எட்டயபுரம் பாரதி விழாவில் சிறுகதை நூலுக்கு முதல் பரிசு
  • திருப்பூர் தமிழ்ச் சங்கம் - நாவலுக்கான பரிசு
  • சேலம் எழுத்துக்களம் - தாரைப்புள்ளி அறக்கட்டளை - நாவலுக்கு பரிசு
  • 'சங்கு’ இதழுக்காக தமிழ்நாடு சிற்றிதழ்கள் சங்கம் - நல்லிதழ் விருது
  • கரூர் திருக்குறள் பேரவை, தமிழ் இசைச் சங்கம் - மரபுக்கவிதை நூலுக்கு சிறப்புப் பரிசு
  • சென்னை கவிஞர் தாராபாரதி அறக்கட்டளை - நவீன கவிதை நூலுக்குப் பரிசு
  • சென்னை என்.தங்கமுத்து நினைவு அறக்கட்டளை பரிசு
  • வள்ளியப்பா இலக்கிய வட்டம் - சிறுவர் பாடலுக்குப் பரிசு
  • தமிழ்நாடு கவிஞர்கள் பேரவை,கன்னியம்மாள் கோவிந்தராசு அறக்கட்டளை - கவிதைப்போட்டியில் முதல் பரிசு
  • வேலூர் "இலக்கியம் பேசுகிறது" இதழ் கவிதைப்போட்டியில் முதல் பரிசு
  • ’கண்ணியம்’ இதழ் கவிதைக்காக இரண்டாம் பரிசு
  • புதுவை பாரதி பல்கலைப்பேரவையில் கவிதைக்கான சிறப்புப் பரிசு [ஆறு ஆண்டுகள்]
  • இராஜபாளையம் மணிமேகலை மன்றம் அளித்த சங்கு இதழுக்கு "சீரிதழ் விருது
  • 'சிகரம்’ இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு [2017]
  • புதுச்சேரி பாவலர் பயிற்சிப் பட்டறை மன்றம் அளித்த "மரபு மாமணி விருது"
  • தஞ்சை சிற்றிழ்ப்போராளி 'சுகன்’ நினைவு சங்கு இதழுக்கு விருது [2018]
  • கம்பம் பாரதி இலக்கியப் பேரவை-சிறுகதைத் தொகுப்பு - இரண்டாம் பரிசு [2018]
  • தஞ்சை முனைவர் அறிவுடைநம்பி நினைவு கவிதை நூல் - முதல்பரிசு [2019]
  • சென்னை "கவிதை உறவு"கவிதைத் தொகுப்பு - இரண்டாம் பரிசு [2019]
  • பயணம்" இதழ் கவிதைத்தொகுப்பிற்குப் பரிசு [2019]
  • திருப்பூர் கனவு சிற்றிதழ் சார்பாகப் படைப்பிலக்கிய விருது [2019]
  • கோவை நிலா சிற்றிதழ் - கவிதை நூலுக்கு முதல் பரிசு [2020]

நூல்கள்

சிறுகதைகள்
  • தாயம்மா [2000]
  • தேரு பிறந்த கதை [2005]
  • கூச்சம் [2007]
  • வலையில் மீன்கள் – [2016]
  • சாமி இல்லாத கோயில் [2016]
  • அன்று..இன்று…இனி [2020]
  • வளவ. துரையன் கதைகள் – முழுத்தொகுப்பு [2014]
நாவல்
  • மலைச்சாமி
  • சின்னசாமியின் கதை
  • இரண்டாவது மதகு
பழந்தமிழிலக்கியம்
  • சிகரங்கள் [சங்க இலக்கியக் கட்டுரைகள், 2002]
  • ஐங்குறு நூறு [எளிய உரை, 2019]யம்
சமயம்
  • வைணவ விருந்து [2004]
  • ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்ய வைபவம் [2014]
  • திருக்கோளுர் பெண்பிள்ளை ரகசியம் [எளிய உரை, 2016]
  • சீரங்க நாயகியார் ஊசல் [எளிய உரை, 2018]
  • முத்தொள்ளாயிரம் [எளிய உரை, 2018]
  • பெரியோர் சிந்தனைகள் [வானொலி உரைகள், 2006]
பயணம்
  • முக்திநாத் யாத்திரை [2008]
மரபுக் கவிதை
  • அர. இரசாராமன் ஆற்றுப்படை [1990]
  • பசி மயக்கம் [2009]
  • அருள்மிகு வரதராஜப் பெருமாள் போற்றி [2015]
  • அருள்மிகு ஆஞ்சநேயர் போற்றி [2017]
  • இயற்கைப்பாவை [2019]
நவீன கவிதை
  • விடாத தூறலில் [நவீன கவிதை, 20011]
  • ஒரு சிறு தூறல் [நவீன கவிதை, 2014]
  • அப்பாவின் நாற்காலி [நவீன கவிதை, 2019]
தொகுப்பு நூல்
  • அதிகாரம் இழந்த அதிகாரங்கள் [மரபுக் கவிதைகள்,1998]

உசாத்துணை


✅Finalised Page