பவா செல்லதுரை: Difference between revisions
CashelBloom (talk | contribs) |
CashelBloom (talk | contribs) mNo edit summary |
||
Line 77: | Line 77: | ||
* வெள்ளை யானை – 2021 | * வெள்ளை யானை – 2021 | ||
== கதை சொல்லி == | == கதை சொல்லி == | ||
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பவா செல்லத்துரையை "இந்த நூற்றாண்டின் மாபெரும் கதைசொல்லி"என்று கூறியிருக்கிறார். தன் கதைகளை மட்டுமல்லாமல் தமிழிலும், உலக இலக்கியத்திலும் மிகச் சிறந்த கதைகளை இதற்காகக் கூட்டப்பட்ட மக்களின் முன் அந்தக் கதையையும், தன் வாசிப்பனுபத்தையும் கலந்து கூறுகிறார். பவா அவரது வாழ்நிலத்தின் கதையை, அவர் அறிந்த மனிதர்களின் கதையை கேட்பவர் மனம் நெகிழுமாறு சொல்கிறார். | எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பவா செல்லத்துரையை "இந்த நூற்றாண்டின் மாபெரும் கதைசொல்லி"என்று கூறியிருக்கிறார். தன் கதைகளை மட்டுமல்லாமல் தமிழிலும், உலக இலக்கியத்திலும் மிகச் சிறந்த கதைகளை இதற்காகக் கூட்டப்பட்ட மக்களின் முன் அந்தக் கதையையும், தன் வாசிப்பனுபத்தையும் கலந்து கூறுகிறார். பவா அவரது வாழ்நிலத்தின் கதையை, அவர் அறிந்த மனிதர்களின் கதையை கேட்பவர் மனம் நெகிழுமாறு சொல்கிறார். அவருடைய கதைகளைக் கேட்டு பலர் இலக்கிய வாசிப்பிற்கு நுழைந்தனர் என்று தான் கேட்ட அனுபவத்தை பல கட்டுரைகளில் கூறியுள்ளார். | ||
== மற்றவை == | == மற்றவை == | ||
==== இலக்கிய கலை நிகழ்ச்சிகள் ==== | ==== இலக்கிய கலை நிகழ்ச்சிகள் ==== | ||
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து | பவா செல்லத்துரை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து திருவண்ணாமலையில் களப்பணி, இலக்கியப்பணி, இலக்கியக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் என நூற்றுக்கும் மேலாக நடத்தியுள்ளார். 'முற்றம்' என்ற இலக்கியக் கூட்டத்தை மாதாமாதம் நடத்தி வருகிறார். முக்கிய எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். | ||
==== நட்பு, விருந்தோம்பல் ==== | ==== நட்பு, விருந்தோம்பல் ==== | ||
"எனக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு. பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. பவாவின் அன்பும் நட்புமே என் எழுத்திற்கு எப்போதும் உத்வேகம் அளித்து வருகிறது" என்று நெகிழ்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். | "எனக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு. பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. பவாவின் அன்பும் நட்புமே என் எழுத்திற்கு எப்போதும் உத்வேகம் அளித்து வருகிறது" என்று நெகிழ்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். பவாவின் பலமே அவரது நட்பு வட்டம்தான். தன்னுடைய இலக்கிய உரையாடல்களாலும், அன்பாலும் ஒருங்கிணைந்த தன்னியல்பான பெரும் நண்பர்களின் படை பவாவைச் சுற்றி எப்போதும் இருப்பதைப் பார்க்க முடியும். | ||
பவாவின் பலமே அவரது நட்பு வட்டம்தான். தன்னுடைய இலக்கிய உரையாடல்களாலும், அன்பாலும் ஒருங்கிணைந்த தன்னியல்பான பெரும் நண்பர்களின் படை பவாவைச் சுற்றி எப்போதும் இருப்பதைப் பார்க்க முடியும். | |||
== ஆவணப்படம் == | == ஆவணப்படம் == | ||
ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கத்தில் “பவா என்றொரு கதை சொல்லி” எனும் ஆவணப்படம் வெளிவந்துள்ளது. | ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கத்தில் “பவா என்றொரு கதை சொல்லி” எனும் ஆவணப்படம் வெளிவந்துள்ளது. | ||
Line 91: | Line 88: | ||
இதனை உருவாக்கிய செந்தழல் ரவி, மற்றும்எஸ்கேபி கருணா, ஒளிப்பதிவு செய்த சரவணக்குமார், பட்த்தொகுப்பாளர் தயாளன், | இதனை உருவாக்கிய செந்தழல் ரவி, மற்றும்எஸ்கேபி கருணா, ஒளிப்பதிவு செய்த சரவணக்குமார், பட்த்தொகுப்பாளர் தயாளன், | ||
அவரது குடும்பம், படைப்புகள், அவரது இலக்கிய ஈடுபாடு, நட்புவட்டம், அவர் நடத்திய இலக்கியக் கூட்டங்கள், முகாம்கள், கண்காட்சிகள், அதில் கலந்து கொண்ட ஆளுமைகள், பவா வெளியிட்டுள்ள புத்தகங்கள், பதிப்பகம் என விரிவாகச் சொல்வதற்கு நிறைய இருந்த போதும் படம் பவா என்ற கதை சொல்லியின் ஆளுமை என்ற ஒரு கோணத்தில் மட்டுமே இந்த ஆவணப்படம் அடையாளப்படுத்துகிறது. | |||
அவரது குடும்பம், படைப்புகள், அவரது இலக்கிய ஈடுபாடு, நட்புவட்டம், அவர் நடத்திய இலக்கியக் கூட்டங்கள், முகாம்கள், கண்காட்சிகள், அதில் கலந்து கொண்ட ஆளுமைகள், பவா வெளியிட்டுள்ள புத்தகங்கள், பதிப்பகம் என விரிவாகச் சொல்வதற்கு நிறைய இருந்த போதும் படம் ஒரு கோணத்தில் மட்டுமே | |||
== குறும்படம் == | == குறும்படம் == | ||
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற சிறுகதைத் தொகுப்பில் வரும் ”ஏழுமலை ஜமா” என்னும் சிறுகதையை அவருடைய தோழர் கருப்பு கருணா குறும்படமாகவும் இயக்கியுள்ளார். | நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற சிறுகதைத் தொகுப்பில் வரும் ”ஏழுமலை ஜமா” என்னும் சிறுகதையை அவருடைய தோழர் கருப்பு கருணா குறும்படமாகவும் இயக்கியுள்ளார். |
Revision as of 20:24, 25 May 2022
திருவண்ணாமலையைச் சேர்ந்த பவாசெல்லத்துரை தமிழ் இலக்கிய உலகின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மனித வாழ்வின் அவலங்களை, நெகிழ்ச்சியான தருணங்களை இயல்பாகக் கண்முன் உலவச் செய்யும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆவார். அவர் எழுத்தாளர் மட்டுமன்றி பேச்சாளர், கவிஞர் ,கதைசொல்லி, திரைப்பட நடிகர், பதிப்பாளர், இயற்கை விவசாயி, அரசியலாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். பவா செல்லத்துரை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தலைவர்களில் ஒருவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து திருவண்ணாமலையில் களப்பணி, இலக்கியப்பணி, இலக்கியக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் என நூற்றுக்கும் மேலாக நடத்தியுள்ளார்.
பிறப்பு
பவா. செல்லதுரை ஆசிரியர் தனக்கோட்டி அய்யாவிற்கும், தனம்மாளுக்கும் பதினாறு ஆண்டுகால காத்திருப்பிற்குப் பிறகு 1965 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 27 -ல் திருவண்ணாமலையில் பிறந்தார்.
இளமை,கல்வி
பவா. செல்லதுரை திருவண்ணாமலையிலுள்ள சாரோன் போர்டிங் பள்ளியில் தனது தொடக்ககால பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தொடர்ந்தார். திண்டிவனம் அரசினர் கலைக்கல்லூரியில் பி. காம் பட்டப் படிப்பு பயின்றார். அவருடைய தந்தை ஆசிரியராகப் பணி புரிந்ததால் பவாவின் பள்ளிப் பருவம் பல்வேறு ஊர்களில் கழிந்தது. அந்த அனுபவங்களும், ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்’ நாவலை வாசித்த தாக்கமும் சேர்ந்து அவரை ஒரு நாவலை எழுத வைத்தது. ‘உறவுகள் பேசுகிறது’ என்ற தலைப்பிலான அந்நாவல் திருவண்ணாமலையிலிருந்து வெளிவந்த ‘தீபஜோதி’ இதழில் வெளியானது. அப்போது பவா செல்லத்துரைக்கு வயது 16. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். முதல் நாவல் வெளிவந்த பெருமிதம், சக மாணவர்கள் அளித்த ஊக்கம், ‘வசந்தம்’ என்ற கையெழுத்துப் பிரதி நடத்திய அனுபவம் எல்லாம் சேரவே, அவர் தொடர்ந்து எழுதினார்.
குடும்பம்
திருவண்ணாமலை சாரோன் போர்டிங் பள்ளியில் கலை இலக்கிய மாநாடு நடைபெற்றது. அங்கு கே.வி.ஷைலஜா அவர்களோடு ஏற்பட்ட இலக்கியச் சந்திப்பு, காதலாக மலர்ந்து, இருவரும் 1994 -ல் திருமணம் செய்து கொண்டனர். கே. வி. ஷைலஜா ஒரு மொழிபெயர்ப்பாளராக உள்ளார். மகன் வம்சி, மகள் மானசா இருவருமே வாசிப்பில் ஆர்வமுடையவர்கள். கலை, இலக்கிய, குறும்பட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இலக்கியப் பங்களிப்பு
பவா செல்லதுரைக்கு நண்பர் உதயசங்கருடனான நட்பும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனான தொடர்பும் தீவிர இலக்கிய வாசிப்புக்கு வழிவகுத்தன.. புதுமைப்பித்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், சுந்தர ராமசாமி என தேடித்தேடி வாசித்தார். மேடைகளில் வாசித்த, இதழ்களில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒரு தொகுப்பு வெளியிட்டார். கந்தர்வன் அதற்கு முன்னுரை எழுதினார். கி.ரா., தி.க.சி.,வண்ணநிலவன் எனப் பலரது பாராட்டுக்களை அத்தொகுப்பு பெற்றது. அந்த ஊக்கத்தில் பல சிறுகதைகளையும், கவிதைகளையும் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.கல்கியில் வெளியான 'முகம்' என்ற சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. பவா என்ற இலக்கியவாதியை அச்சிறுகதை உலகுக்கு அடையாளம் காட்டியதுடன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடமாகவும் வைக்கப்பட்டது. தொடர்ந்து வெளியான 'வேறுவேறு மனிதர்கள்' சிறுகதை பரவலாகப் பேசப்பட்டதுடன், காமராஜர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றது.
பவா செல்லதுரைபல இதழ்களில் வெளியான தன் சிறுகதைகளைத் தொகுத்து 'நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை' என்ற நூலாக்கி வெளியிட்டார். அது வரவேற்பைப் பெற்றதுடன், பிரபல எழுத்தாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றது. இந்நூலில் வரும் ”ஏழுமலை ஜமா” என்னும் சிறுகதையை அவருடைய தோழர் கருப்பு கருணா குறும்படமாகவும் இயக்கினார்.நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற சிறுகதைத் தொகுப்பில் வேட்டை, பச்சை இருளன், சத்ரு கதைகள் வாசகர்களின் பரவலான பாராட்டைப் பெற்றவை. பவாவின் இரண்டு கதைகள் ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் ஏழுமலை ஜமா மற்றும் ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் இடம் பெறுகின்றன. பவா செல்லதுரை, கோணங்கி, ராமகிருஷ்ணன் மூவரும் சேர்ந்து ‘தமிழில் யதார்த்தவாத கதைகளை நிராகரிப்பது. பேன்டசியான, மேஜிக்கல் ரியலிச கதைகளை முன்வைப்பது. இதை வெறும் வார்த்தைகளால் அல்லாமல் படைப்பால் முன்வைப்பது’ என்ற முடிவின் உருவம்தான் ‘ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்’ என்ற தமிழ் & இலத்தீன் அமெரிக்க கதைகளின் தொகுப்பு. அந்நூல் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, ச.தமிழ்ச்செல்வன், பவா செல்லதுரை, கே.ஷாஜகான், போப்பு ஆகியோரின் தமிழ்க் கதைகளும், போர்ஹே ஆரம்பித்து, தங்கள் நவீன படைப்புகள் மூலம் உலக வாசகர்களையே பிரமிக்க வைத்துக் கொண்டிருந்த பல லத்தீன் அமெரிக்க படைப்பாளிகளின் கதைகள்வரை அத்தொகுப்பில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டன. பவா செல்லததுரை கதைகள் மட்டுமல்லாமல் கவிதை, கட்டுரை, நாவலும் எழுதியிருக்கிறார். மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் பவாவின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளன.
இலக்கிய விமர்சனம்
மனித வாழ்வின் அவலங்களை, நெகிழ்ச்சியான தருணங்களை தன் கதைகளின் மூலம் இயல்பாகக் கண்முன் உலவச் செய்யும் எழுத்தாளர் பவா செல்லத்துரை.விளிம்பு நிலை மக்களை, அவர்களது வாழ்வியலை, சமூக அமைப்பை உலகறியச் செய்ததில் அவர் சிறுகதைகளுக்கு இடமுண்டு. அதுமட்டுமல்ல வறண்ட நிலப்பரப்பையுடைய கிராமங்களையும் தன்னுடைய கதைகளின் மூலம் நினைவு கூர்கிறார்.
அச்சிறுகதையில் கூத்து வாத்தியார் வாழ்க்கைத் தேவைகளுக்காக என்னென்னவோ செய்தாலும் கூத்துக்கு மீளும் தருணம் சிறப்பாக வந்திருக்கிறது.
இவரது 'ஏழுமலை ஜமா' என்ற சிறுகதை மிக முக்கியமானது. ஒரு கூத்துக் கலைஞனின் அக உணர்வை துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அச்சிறுகதையில் கூத்து வாத்தியார் வாழ்க்கைத் தேவைகளுக்காக என்னென்னவோ செய்தாலும் கூத்துக்கு மீளும் தருணம் சிறப்பாக வந்திருக்கிறது. பல இதழ்களில் வெளியான சிறுகதைகளைத் தொகுத்து 'நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை' என்ற நூலாக்கி வெளியிட்டார். அது வரவேற்பைப் பெற்றதுடன், பிரபல எழுத்தாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றது. '19 டி.எம். சாரோனிலிருந்து' என்ற இவரது தொகுப்பும் மிக முக்கியமானது. இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவை இவரது படைப்புகள். குறிப்பாக 'எல்லா நாளும் கார்த்திகை' தொகுப்பு, ஜெயகாந்தன், பாலுமகேந்திரா, மம்முட்டி, சுந்தர ராமசாமி, பாரதிராஜா, நாசர், வண்ணநிலவன், சா.கந்தசாமி போன்ற நாம் அறிந்த பிரபலங்களின் அறியாத மற்றொரு முகத்தை, அவர்களது அக உலகை, ஆசைகளை, ஏக்கங்களை, எண்ணங்களை மிக விரிவாகக் காட்டுவது. "பரவசம் தோய்ந்த, உணர்ச்சியில் சில்லிட்ட, வியப்பில் பூரித்த, அற்புதத்தில் ஸ்தம்பித்த, வார்த்தைகளால் பவா பேசுகிறார். பவாவின் கண்கள் பத்து வயதுச் சிறுமியின் விழிகள். கிராமத்திலிருந்து பட்டணம் வந்து, பேரடுக்குப் பெருவீடுகளைக் கண்டு திகைத்து நிற்கும் பத்து வயதுக் குழந்தையின் நிர்மலமான ஆச்சரியப் பார்வை அது. உணர்ச்சிகளை ஒளித்துப் போலி பெரிய மனுஷத்தனம் காட்டாத சத்தியத்தின் குரல் அவருடையது. மனித உன்னதங்கள் தன் தொட்டுவிடும் தூரத்தில் நின்றுகொண்டு தன் விகாசத்தை வெளிக்காட்டுகையில் அத் தருணத்தின் பேரொளியைக் கைகளுக்குள் பொத்தி அப்படியே, தொங்கும் உண்மையின் கவிச்சி வாசனையோடு எழுதுகிறார்" என்று பவாவின் எழுத்தை மதிப்பிடுகிறார் பிரபஞ்சன். எழுத்தாளர் ஜெயமோகன்," மகிழ்ச்சியான மனிதராக அறியப்படும் பவாவின் கதைகள் துயரமான மனிதர்களையும், சூழலையும் எழுதிச் செல்வது வியப்பான ஒன்று" என்று மதிப்பிடுகிறார்.
சிறுவயது முதல் தான் கண்டவற்றை, கேட்டவற்றை, அனுபவித்தவற்றை ஒரு பாத்திரமாக நெருங்கியும், சாட்சியாக விலகியும் நின்று வெளிப்படுத்துபவையாக பவா செல்லத்துரையின் படைப்புகள் உள்ளன. அவற்றின் பாசாங்கின்மையும், முகத்தில் அறையும் நிஜமும் வாசகனைத் தாக்குகின்றன. சமூகத்தின் பார்வையில் அரதப் பழசானவர்கள், ஒன்றுக்கும் ஆகாதவர்கள், ஏழை, எளியவர்கள், செல்லாக்காசுகள் என்றெல்லாம் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள் இவரது படைப்புகளில் சிறந்த சொற்சித்திரமாக, மிகச் சிறந்த ஆளுமையாக வெளிப்படுகிறார்கள். வாழ்க்கையின் முன் தங்கள் நிஜ முகத்தைக் காட்டுகிறார்கள். திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாருடனான பவாவின் அனுபவங்கள், அவர்கள் இருவருக்கிடையேயும் இருக்கும் அன்பையும், நட்பையும், பிணைப்பையும் பறைசாற்றுகின்றன. "பவாவின் எழுத்து வாசிப்பவர்களைத் தடுமாற வைக்கிறது. சதா மூளையின் கட்டுப்பாட்டிலிருக்கும் மனதைச் சற்றே இடம்பெயர வைக்கிறது" என்கிறார் எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்.
வெளிவந்துள்ள நூல்கள்
கவிதை
- எஸ்தரும், எஸ்தர் டீச்சரும் – 1989
சிறுகதைத் தொகுப்பு
- நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - 2008
- டொமினிக் -2016
- நீர் மற்றும் கோழி - 2017
கட்டுரைகள்
- 19, டி. எம். சாரோனிலிருந்து 2011
- எல்லா நாளும் கார்த்திகை – 2013
- நிலம் – 2014
- பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல - 2016
- பங்குக்கறியும் பின்னிரவுகளும்- 2018
- மேய்ப்பர்கள்- 2020
நாவல்
- உறவுகள் பேசுகிறது -. - 1989
தொகுத்த புத்தகங்கள்
- கந்தர்வன் கதைகள் – 2012
- ஸ்பானிய சிறகுகளும், வீரவாளும்
- சிறகிசைத்த காலம் – 2013
பிற மொழிகளில் பவா செல்லதுரையின் நூல்கள்
மலையாளம்
சிறுகதை தொகுப்பு
- நட்சத்திரங்கள் ஒளிக்குந்ந கற்ப பாத்ரம் - மலையாளத்தில் திரு.ஸ்டான்லி
- டொமினிக் - மலையாளத்தில் டாக்டர் கே.வெங்கடாசலம்
- தேன் - மலையாளத்தில் பால் சக்கரியா
கட்டுரை
- எல்லா நாளும் கார்த்திகை - மலையாளத்தில் டாக்டர் டி.என். ரகுராம்
ஆங்கிலத்தில் சிறுகதை மற்றும் கட்டுரைகள்
- Dominic - சித்ராஜ் பொன்ராஜ்
- Ruins of the Night - ஜானகி வெங்கட்ராமன்
- From 19 DM Saron - பி. ராம்கோபால்
- Shepherd - டாக்டர் கே. சுப்ரமணியன்
- Shared Meat and Late Nights –2021 டாக்டர். பிரியலக்ஷ்மி
தெலுங்கு
சிறுகதை
- நக்ஷத்தாரலூ தக்குண்ணா அபாயரான்யம் - தெலுங்கு: ஜில்லா பாலாஜி
பெற்ற விருதுகள், பரிசுகள்
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சிறந்த சிறுகதைக்கான விருது - நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
- தமிழக அரசின் சிறந்த கட்டுரைக்கான விருது - எல்லா நாளும் கார்த்திகை
- நொய்யல் இலக்கிய விருது - நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
- சிறந்த நடிகருக்கான விருது 2021 - செந்நாய்
பதிப்பாளர்
பவா செல்லத்துரையும், அவருடைய மனைவியும் எழுத்தாளருமான கே.வி. ஷைலஜாவும் இணைந்து திருவண்ணாமலையில் வம்சி பதிப்பகம் என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி பல நூல்களை வெளியிட்டு வருகின்றனர். சிறுகதை, புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, கவிதை, சிறார் இலக்கியம், திரையுலகம் என 150-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் சீரிய புத்தகங்களைப் பதிப்பித்துள்ளது வம்சி. சிறுகதைப் போட்டிகளை நடத்தி, பரிசளித்து, தொகுப்பாகவும் வெளியிடுகிறது.
திரைப்பட நடிகர்
தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கியவர், இப்போது முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் குணச்சித்திர நடிகராக அறியப்படுகிறார்.
நடித்துள்ள திரைப்படங்கள்
- ஜோக்கர் -2016
- பேரன்பு -2019
- குடிமகன் – 2019
- அமிபா – 2019
- சைக்கோ -2020
- வால்டர் – 2020
- யாதும் ஊரே யாவரும்கேளிர் – 2020
- செந்நாய் - 2020
- வெள்ளை யானை – 2021
கதை சொல்லி
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பவா செல்லத்துரையை "இந்த நூற்றாண்டின் மாபெரும் கதைசொல்லி"என்று கூறியிருக்கிறார். தன் கதைகளை மட்டுமல்லாமல் தமிழிலும், உலக இலக்கியத்திலும் மிகச் சிறந்த கதைகளை இதற்காகக் கூட்டப்பட்ட மக்களின் முன் அந்தக் கதையையும், தன் வாசிப்பனுபத்தையும் கலந்து கூறுகிறார். பவா அவரது வாழ்நிலத்தின் கதையை, அவர் அறிந்த மனிதர்களின் கதையை கேட்பவர் மனம் நெகிழுமாறு சொல்கிறார். அவருடைய கதைகளைக் கேட்டு பலர் இலக்கிய வாசிப்பிற்கு நுழைந்தனர் என்று தான் கேட்ட அனுபவத்தை பல கட்டுரைகளில் கூறியுள்ளார்.
மற்றவை
இலக்கிய கலை நிகழ்ச்சிகள்
பவா செல்லத்துரை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து திருவண்ணாமலையில் களப்பணி, இலக்கியப்பணி, இலக்கியக் கருத்தரங்குகள், பயிலரங்குகள், கண்காட்சிகள் என நூற்றுக்கும் மேலாக நடத்தியுள்ளார். 'முற்றம்' என்ற இலக்கியக் கூட்டத்தை மாதாமாதம் நடத்தி வருகிறார். முக்கிய எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
நட்பு, விருந்தோம்பல்
"எனக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு. பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. பவாவின் அன்பும் நட்புமே என் எழுத்திற்கு எப்போதும் உத்வேகம் அளித்து வருகிறது" என்று நெகிழ்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். பவாவின் பலமே அவரது நட்பு வட்டம்தான். தன்னுடைய இலக்கிய உரையாடல்களாலும், அன்பாலும் ஒருங்கிணைந்த தன்னியல்பான பெரும் நண்பர்களின் படை பவாவைச் சுற்றி எப்போதும் இருப்பதைப் பார்க்க முடியும்.
ஆவணப்படம்
ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கத்தில் “பவா என்றொரு கதை சொல்லி” எனும் ஆவணப்படம் வெளிவந்துள்ளது.
இதனை உருவாக்கிய செந்தழல் ரவி, மற்றும்எஸ்கேபி கருணா, ஒளிப்பதிவு செய்த சரவணக்குமார், பட்த்தொகுப்பாளர் தயாளன்,
அவரது குடும்பம், படைப்புகள், அவரது இலக்கிய ஈடுபாடு, நட்புவட்டம், அவர் நடத்திய இலக்கியக் கூட்டங்கள், முகாம்கள், கண்காட்சிகள், அதில் கலந்து கொண்ட ஆளுமைகள், பவா வெளியிட்டுள்ள புத்தகங்கள், பதிப்பகம் என விரிவாகச் சொல்வதற்கு நிறைய இருந்த போதும் படம் பவா என்ற கதை சொல்லியின் ஆளுமை என்ற ஒரு கோணத்தில் மட்டுமே இந்த ஆவணப்படம் அடையாளப்படுத்துகிறது.
குறும்படம்
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற சிறுகதைத் தொகுப்பில் வரும் ”ஏழுமலை ஜமா” என்னும் சிறுகதையை அவருடைய தோழர் கருப்பு கருணா குறும்படமாகவும் இயக்கியுள்ளார்.
உசாவுத்துணை
https://www.tamilwriters.in/2021/06/blog-post_46.html https://sanjigai.wordpress.com/2013/06/16/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/
https://kanali.in/interview-with-bavachelladurai/
http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12639
https://vallinam.com.my/version2/?p=5645
https://vallinam.com.my/version2/?p=5645
https://tamil.indianexpress.com/literature/bava-chelladurai-writer-story-teller-interview-168212/
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.