under review

ச. பூபால பிள்ளை

From Tamil Wiki
Revision as of 12:09, 1 December 2022 by Ramya (talk | contribs) (Created page with "ச. பூபால பிள்ளை (1856-1921) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர். == வாழ்க்கைக் குறிப்பு == ச. பூபால பிள்ளை இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் சதாசிவப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை இணையருக்கு மக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ச. பூபால பிள்ளை (1856-1921) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ச. பூபால பிள்ளை இலங்கை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் சதாசிவப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை இணையருக்கு மகனாகப் பிறந்தார். இளமையில் தனது ஊரிலுள்ள கிறிஸ்தவ மத்திய கல்லூரியில் கல்வி பயின்றார். ஆங்கிலம், தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களையும், புராண இதிகாசங்களையும், சித்தாந்த சாஸ்திரங்களையும் முறையாக ச. வயித்தியலிங்கம் பிள்ளையிடம் பயின்றார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் இவர் அரசாங்க சேவையில் எழுதுவினைஞராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். அரசாங்கக் கட்டட வேலைத் திணைக்களத்தில் சிறப்பியல் உயர்பதவி பெற்றார். 1915இல் அரசாங்கப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

ச. பூபால பிள்ளை தமிழ்மொழி, சைவ சமயம் சார்ந்த நூல்களை எழுதினார். ச. பூபால பிள்ளை எழுதிய பத்து சமய நூல்களை கோவைசெய்து திருமயிலை செ.வெ. ஜம்புலிங்கம் பிள்ளைய 1923இல் வெளியிட்டார்.

மறைவு

ச. பூபால பிள்ளை 1921இல் காலமானார்.

நூல் பட்டியல்

  • திருமுருகர் பதிகம் (1882)
  • சீமந்தனி புராணம் (1884)
  • விநாயகர் மான்மியம் (1905)
  • புளியநகர் ஆனைப்பந்தி விக்னேஸ்வரர் பதிகம் (1905)
  • சிவதோத்திரம்
  • முப்பொருளாராய்ச்சிக் கட்டுரை (1918)
  • அரசடி கணேசர் அகவல் (1920)
  • கணேசர் கலிவெண்பா (1921)
  • தமிழ்வரலாறு

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.