being created

சி. சிவராமமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 8: Line 8:
சிவராமமூர்த்தி  சம்பூர்ணத்தை மணந்தார். இவர்களுக்கு சுந்தரராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி என்ற இரு மகன்கள்.
சிவராமமூர்த்தி  சம்பூர்ணத்தை மணந்தார். இவர்களுக்கு சுந்தரராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி என்ற இரு மகன்கள்.


== வரலாற்றாய்வு ==
== அருங்காட்சியகவியல்( Museology) ==
சி. சிவராமமூர்த்தி, சென்னை அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறையின் காப்பாளராக(curator) அருங்காட்சியகத் துறையில் நுழைந்தார். இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராகப் பணியேற்றார்.  தில்லியில்  இந்திய தேசிய அருங்காட்சியகத்தில்  காப்பாளராகப் பணிபுரிந்த காலத்தில் முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.  [[ஐராவதம் மகாதேவன்|ஐராவதம் மகாதேவனுக்கு]] தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமளித்தார்.  தொல்லியல் துறை, இந்திய அருங்காட்சியகம் , கல்கத்தா அருங்காட்சியகங்களின் சர்வதேச கவுன்சிலுடன் நெருக்கமாக தொடர்புடைய அவர் அதன் நிர்வாகக் குழுவில் இருந்தார் மற்றும்  இந்திய தேசியக் குழுவின் தலைவராக இருந்தார்.  
சி. சிவராமமூர்த்தி, சென்னை அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறையின் காப்பாளராக(curator) அருங்காட்சியகத் துறையில் நுழைந்தார். இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராகப் பணியேற்றார்.  தில்லியில்  இந்திய தேசிய அருங்காட்சியகத்தில்  காப்பாளராகப் பணிபுரிந்த காலத்தில் முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.  [[ஐராவதம் மகாதேவன்|ஐராவதம் மகாதேவனுக்கு]] தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமளித்தார்.  தொல்லியல் துறை, இந்திய அருங்காட்சியகம் , கல்கத்தா அருங்காட்சியகங்களின் சர்வதேச கவுன்சிலுடன் நெருக்கமாக தொடர்புடைய அவர் அதன் நிர்வாகக் குழுவில் இருந்தார் மற்றும்  இந்திய தேசியக் குழுவின் தலைவராக இருந்தார்.  


புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் , விலங்கியல் மற்றும் தொல்லியல் மாணவர், ஃபிரடெரிக் ஹென்றி கிரேவ்லி(Frederic Henry Gravely)யுடன்  இணைந்து, 1938 -ல்அருங்காட்சியகத்தின் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களை ஒழுங்கமைத்து பட்டியல் (catalogue)  தயாரித்தார்.   
புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் , விலங்கியல் மற்றும் தொல்லியல் மாணவர், ஃபிரடெரிக் ஹென்றி கிரேவ்லி(Frederic Henry Gravely)யுடன்  இணைந்து, 1938 -ல்அருங்காட்சியகத்தின் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களை ஒழுங்கமைத்து பட்டியல் (catalogue)  தயாரித்தார். அமராவதி சிற்பங்களின் முதல் முழுமையான, விரிவான பட்டியலைத் (comprehensive catalogue) தயாரித்து, சாஞ்சி மற்றும் ப்ருஹத் புத்த சிற்பங்களாக அவற்றிம் முக்கியத்துவத்தை அடையாளம் காட்டினார்.   
 
C. Sivaramamurti, renowned art historian and author of the first comprehensive catalogue of Amaravati sculptures, which was published in 1942, holds them as important as the Sanchi and Bharhut Buddhist sculptures    
 
== கலை வரலாற்றாய்வு ==


====== கலை, சிந்தனை, இலக்கியத்தில் நடராஜர் ======
====== கலை, சிந்தனை, இலக்கியத்தில் நடராஜர் ======
Line 21: Line 25:
== விருதுகள் ==
== விருதுகள் ==


Campbell memorial gold medel(Royal Asiatic Society-1984)


விசித்திர சித்தன் பட்டம்(காஞ்சி சந்திரசேகரேந்திர சுவாமிகள்)
== மறைவு ==
== மறைவு ==
சிவராமமூர்த்தி 1983-ல் நடராஜரின் அரிய படிமம் ஒன்றைப் பற்றி உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் காலமானார்.  
சிவராமமூர்த்தி 1983-ல் நடராஜரின் அரிய படிமம் ஒன்றைப் பற்றி உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் காலமானார்.  

Revision as of 05:35, 30 May 2023

டாக்டர் சி. சிவராமமூர்த்தி( களம்பூர் சிவராமமூர்த்தி) (1909–1983) கல்வெட்டாய்வாளர், கலை வரலாற்றாசிரியர், அருங்காட்சியகவியலாளர், சமஸ்கிருத அறிஞர். நாட்டின் குறிப்பிடத்தக்க கலை வரலாற்றாசிரியர்களில் ஒருவர். இந்திய படிமவியலில்(iconography), குறிப்பாக நடராஜ தத்துவத்தில் அறிஞர். சென்னை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராகவும், புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்தார். இந்தியக் கலையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டார். இந்தியக் கலை பற்றிய வழிகாட்டி நூல்களும், தென்னிந்திய கல்வெட்டுகள் பற்றிய அடிப்படை நூலையும் எழுதினார். இந்திய அரசின் பத்மபூஷண் உட்பட பல விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

சிவராமமூர்த்தி அப்பைய தீட்சிதர் பரம்பரையைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் சுந்தர சாஸ்திரிக்கு மகனாகப் பிறந்தார். தந்தை சுந்தர சாஸ்திரி சமஸ்கிருதப் புலவர். 'சுந்தர ராமாயணம்' என்னும் சமஸ்கிருதக் காவியத்தை இயற்றினார்.

தனி வாழ்க்கை

சிவராமமூர்த்தி சம்பூர்ணத்தை மணந்தார். இவர்களுக்கு சுந்தரராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி என்ற இரு மகன்கள்.

அருங்காட்சியகவியல்( Museology)

சி. சிவராமமூர்த்தி, சென்னை அருங்காட்சியகத்தில் தொல்லியல் துறையின் காப்பாளராக(curator) அருங்காட்சியகத் துறையில் நுழைந்தார். இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளராகப் பணியேற்றார். தில்லியில் இந்திய தேசிய அருங்காட்சியகத்தில் காப்பாளராகப் பணிபுரிந்த காலத்தில் முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஐராவதம் மகாதேவனுக்கு தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்கமளித்தார். தொல்லியல் துறை, இந்திய அருங்காட்சியகம் , கல்கத்தா அருங்காட்சியகங்களின் சர்வதேச கவுன்சிலுடன் நெருக்கமாக தொடர்புடைய அவர் அதன் நிர்வாகக் குழுவில் இருந்தார் மற்றும் இந்திய தேசியக் குழுவின் தலைவராக இருந்தார்.

புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் , விலங்கியல் மற்றும் தொல்லியல் மாணவர், ஃபிரடெரிக் ஹென்றி கிரேவ்லி(Frederic Henry Gravely)யுடன் இணைந்து, 1938 -ல்அருங்காட்சியகத்தின் சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களை ஒழுங்கமைத்து பட்டியல் (catalogue) தயாரித்தார். அமராவதி சிற்பங்களின் முதல் முழுமையான, விரிவான பட்டியலைத் (comprehensive catalogue) தயாரித்து, சாஞ்சி மற்றும் ப்ருஹத் புத்த சிற்பங்களாக அவற்றிம் முக்கியத்துவத்தை அடையாளம் காட்டினார்.

C. Sivaramamurti, renowned art historian and author of the first comprehensive catalogue of Amaravati sculptures, which was published in 1942, holds them as important as the Sanchi and Bharhut Buddhist sculptures

கலை வரலாற்றாய்வு

கலை, சிந்தனை, இலக்கியத்தில் நடராஜர்

ஜவஹர்லால் நேரு நினைவு நிதியம் தொடங்கப்பட்டபோது முதல் நிதிநல்கை(fellowship) வரலாற்றாய்வுக்காக சிவராமமூர்த்திக்கு வழங்கப்பட்டது. நல்கையைப் பயன்படுத்தி கலை, சிந்தனை, இலக்கியம் என அனைத்து அம்சங்களிலும் சிவனின் நடன வடிவமான நடராஜரைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டு 22 வண்ணத் தகடுகள், 250- க்கும் மேற்பட்ட வண்ணப்படங்களுடன் 412 பக்கங்களில் 'Nataraja in art, thought and literature' என்ற நூலை எழுதினார். நுண்கலைகளின் தெய்வமாக நடராஜர் என்னும் ஆளுமையையும், கருத்தாக்கத்தையும் அதன் காலவெளிகளைக் கடந்த தன்மையையும் எடுத்துக்காட்டி, நாட்டியம், சிவனின் நடனத்தின் முக்கியத்துவம், சிவதாண்டவத்தில் உள்ள கரணங்கள், கிருஷ்ணராக விஷ்ணு வழங்கிய கரணங்கள், வேதத்தில் நடனத்தின் வேர்கள், இலக்கியத்தில் நடராஜர் உருவம், சிற்ப நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள நடராஜரின் வகைகள் , சிற்பம், ஓவியத்தில் நடராஜ வடிவம், இந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நடராஜர் என்னும் கருத்தாக்கம் ஆகிய முக்கிய தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூல் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் முன்னுரையுடன் 1975-ல் வெளிவந்தது.

மதிப்பீடு

'இந்திய அறிவுப் புலத்தின் மாபெரும் சாதனை' ( a monument to Indian Scholarship) என்று என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நூலின் முன்னுரையில் குறிப்பிட்டார்.

விருதுகள்

Campbell memorial gold medel(Royal Asiatic Society-1984)

விசித்திர சித்தன் பட்டம்(காஞ்சி சந்திரசேகரேந்திர சுவாமிகள்)

மறைவு

சிவராமமூர்த்தி 1983-ல் நடராஜரின் அரிய படிமம் ஒன்றைப் பற்றி உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பால் காலமானார்.

படைப்புகள்

உசாத்துணை

Review: Indian Painting (2013) by C. Sivaramamurtiamurti/

numismatic parallels of Kalidasa- C.Sivaramamurthy, Internet archive

Sivaramamurti let his art do the talking, The Indian Express, August 2010











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.