சரவணன் சந்திரன்: Difference between revisions
(Stub page created) |
(Initial version) |
||
Line 1: | Line 1: | ||
{{being created}} | {{being created}} | ||
[[File:Saravanan-chandran.jpg|thumb|சரவணன் சந்திரன் ]] | |||
= சரவணன் சந்திரன் = | |||
சரவணன் சந்திரன் (1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். நவீன வாழ்வின் நெருக்கடிகள் பற்றி எழுதுவதில் ஆர்வமுள்ள இவர் அஜ்வா, ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். | |||
== பிறப்பு, கல்வி == | |||
கோவில்பட்டியில் 1979 ல் பிறந்த சரவணன் சந்திரன் தன் சிறு வயதை வறுமையோடு கழித்தவர். கல்லூரிப் படிப்பின் போது கல்லூரிகளுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் விளையாட்டு வீரராகப் பங்கெடுத்துள்ளார். | |||
== தனிவாழ்க்கை == | |||
சரவண சந்திரன் ஒரு எழுத்தாளராக மட்டுமின்றி ஊடகவியலாளர், தொலைக்காட்சி இயக்குனர், மீன்கடை உரிமையாளர், விளையாட்டு வீரர், விவசாயி எனப் பல தளங்களில் இயங்குபவர். | |||
== இலக்கிய வாழ்க்கை == | |||
15 ஆண்டுகளுக்கும் மேலாக இதழாளராகப் பணியில் இருந்த சரவணன் சந்திரன் 2015ல் எழுத்தாளராக அறிமுகமானார். முகநூல் குறிப்புகள், பிளாக்கராக இணையத்தில் எழுதியவற்றைத் தொடர்ந்து அச்சு ஊடகத்தை நோக்கிப் பயணித்தவர்களில் கவனத்தை ஈர்த்தவர். தனது அஜ்வா நாவலின் காட்சியொலி முன்னோட்டத்தை சமூக ஊடங்கங்களில் நேரடியாக வெளியிட்டு அதன்மூலம் சமூக ஊடகங்களை அவரது படைப்புகளுக்கான செலவற்ற விளம்பர உத்தியாக பயன்படுத்திக் கொண்டார். | |||
== இலக்கிய இடம், மதிப்பீடு == | |||
தமிழ் புனைவுலகின் பேசப்படாத சில களங்களைக் கையாண்ட வகையில் ஆர்வமூட்டும் படைப்புகளில் அறிய மானுடத் தருணங்களை உருவாக்கியவர் சரவணன் சந்திரன். எழுத்துக்களின் வழியாக சமகாலத்தைப் பதிவு செய்வதோடு கடந்த காலத்தையும் பழமையின் வேர்களையும் தொட முனையும் வேட்கையே தன் எழுத்தின் குறிக்கோள் என்று கூறுபவர். கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அப்பணசாமி, சோ.தர்மன், கோணங்கி, உதயசங்கர் உள்ளிட்டோரை தனது முன்னோடிகளாகக் குறிப்பிடுகிறார். | |||
ரோலக்ஸ் வாட்ச் நாவலைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் சாரு நிவேதிதா "திருகல் மொழி இல்லாமல் சுளுவான நடையில் எழுதப்பட்ட நாவல்" என்கிறார். இளைஞர்கள் உணரும் நவீன உலகின் பதட்டங்களை சரசரவென்று ஆற்றின் குறுக்கே கடக்கும் பாம்பு போல் கதை செல்கிறது" என்றும் குறிப்பிடுகிறார். | |||
முகநூல் பாணி எழுத்தின் சாதகங்களான சரளமான மொழியோட்டம், திருகலற்ற மொழி என்னும் அம்சங்கள் அமையப்பட்டவை சரவணன் சந்திரனின் படைப்புகள் என்று ஜெயமோகன் இவரது படைப்புகளை மதிப்பிடுகிறார். பிற படைப்பாளிகள் போலன்றி தான் சென்றடைந்த இடங்களை உடனே கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் விசைகொண்ட சரவணன் சந்திரன் மேலும் முக்கியமான ஆக்கங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் என்றும் ஜெயமோகன் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். | |||
== படைப்புகள் == | |||
=== நாவல்கள் === | |||
* அஜ்வா | |||
* ரோலக்ஸ் வாட்ச் | |||
* பாவத்தின் சம்பளம் | |||
* பார்பி | |||
* ஐந்து முதலைகளின் கதை | |||
* சுபிட்ச முருகன் | |||
* அத்தாரோ | |||
* லகுடு | |||
* அசோகர், | |||
* எக்ஸ்டஸி | |||
* சுபிட்ச முருகன் | |||
=== கட்டுரைத்தொகுப்பு === | |||
* அன்பும் அறமும் | |||
* மதிகெட்டான் சோலை | |||
* கடலும் மகனும் | |||
* வையிலைவேற் காளை | |||
* தற்செயல்களை விரட்டுகிறவன் | |||
=== சிறுகதைத் தொகுதி === | |||
* வெண்ணிற ஆடை | |||
== உசாத்துணை == | |||
<nowiki>https://minnambalam.com/k/2016/03/26/1458950466</nowiki> | |||
<nowiki>http://charunivedita.online/blog/?p=4356</nowiki> | |||
<nowiki>https://www.jeyamohan.in/115868/</nowiki> | |||
This page is being created by [[User:Rajesharo]] | This page is being created by [[User:Rajesharo]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 05:31, 31 January 2022
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன் (1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். நவீன வாழ்வின் நெருக்கடிகள் பற்றி எழுதுவதில் ஆர்வமுள்ள இவர் அஜ்வா, ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார்.
பிறப்பு, கல்வி
கோவில்பட்டியில் 1979 ல் பிறந்த சரவணன் சந்திரன் தன் சிறு வயதை வறுமையோடு கழித்தவர். கல்லூரிப் படிப்பின் போது கல்லூரிகளுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் விளையாட்டு வீரராகப் பங்கெடுத்துள்ளார்.
தனிவாழ்க்கை
சரவண சந்திரன் ஒரு எழுத்தாளராக மட்டுமின்றி ஊடகவியலாளர், தொலைக்காட்சி இயக்குனர், மீன்கடை உரிமையாளர், விளையாட்டு வீரர், விவசாயி எனப் பல தளங்களில் இயங்குபவர்.
இலக்கிய வாழ்க்கை
15 ஆண்டுகளுக்கும் மேலாக இதழாளராகப் பணியில் இருந்த சரவணன் சந்திரன் 2015ல் எழுத்தாளராக அறிமுகமானார். முகநூல் குறிப்புகள், பிளாக்கராக இணையத்தில் எழுதியவற்றைத் தொடர்ந்து அச்சு ஊடகத்தை நோக்கிப் பயணித்தவர்களில் கவனத்தை ஈர்த்தவர். தனது அஜ்வா நாவலின் காட்சியொலி முன்னோட்டத்தை சமூக ஊடங்கங்களில் நேரடியாக வெளியிட்டு அதன்மூலம் சமூக ஊடகங்களை அவரது படைப்புகளுக்கான செலவற்ற விளம்பர உத்தியாக பயன்படுத்திக் கொண்டார்.
இலக்கிய இடம், மதிப்பீடு
தமிழ் புனைவுலகின் பேசப்படாத சில களங்களைக் கையாண்ட வகையில் ஆர்வமூட்டும் படைப்புகளில் அறிய மானுடத் தருணங்களை உருவாக்கியவர் சரவணன் சந்திரன். எழுத்துக்களின் வழியாக சமகாலத்தைப் பதிவு செய்வதோடு கடந்த காலத்தையும் பழமையின் வேர்களையும் தொட முனையும் வேட்கையே தன் எழுத்தின் குறிக்கோள் என்று கூறுபவர். கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அப்பணசாமி, சோ.தர்மன், கோணங்கி, உதயசங்கர் உள்ளிட்டோரை தனது முன்னோடிகளாகக் குறிப்பிடுகிறார்.
ரோலக்ஸ் வாட்ச் நாவலைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் சாரு நிவேதிதா "திருகல் மொழி இல்லாமல் சுளுவான நடையில் எழுதப்பட்ட நாவல்" என்கிறார். இளைஞர்கள் உணரும் நவீன உலகின் பதட்டங்களை சரசரவென்று ஆற்றின் குறுக்கே கடக்கும் பாம்பு போல் கதை செல்கிறது" என்றும் குறிப்பிடுகிறார்.
முகநூல் பாணி எழுத்தின் சாதகங்களான சரளமான மொழியோட்டம், திருகலற்ற மொழி என்னும் அம்சங்கள் அமையப்பட்டவை சரவணன் சந்திரனின் படைப்புகள் என்று ஜெயமோகன் இவரது படைப்புகளை மதிப்பிடுகிறார். பிற படைப்பாளிகள் போலன்றி தான் சென்றடைந்த இடங்களை உடனே கடந்து முன்னேறிக்கொண்டிருக்கும் விசைகொண்ட சரவணன் சந்திரன் மேலும் முக்கியமான ஆக்கங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார் என்றும் ஜெயமோகன் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
நாவல்கள்
- அஜ்வா
- ரோலக்ஸ் வாட்ச்
- பாவத்தின் சம்பளம்
- பார்பி
- ஐந்து முதலைகளின் கதை
- சுபிட்ச முருகன்
- அத்தாரோ
- லகுடு
- அசோகர்,
- எக்ஸ்டஸி
- சுபிட்ச முருகன்
கட்டுரைத்தொகுப்பு
- அன்பும் அறமும்
- மதிகெட்டான் சோலை
- கடலும் மகனும்
- வையிலைவேற் காளை
- தற்செயல்களை விரட்டுகிறவன்
சிறுகதைத் தொகுதி
- வெண்ணிற ஆடை
உசாத்துணை
https://minnambalam.com/k/2016/03/26/1458950466
http://charunivedita.online/blog/?p=4356
https://www.jeyamohan.in/115868/
This page is being created by User:Rajesharo