under review

கதை வகுப்பு

From Tamil Wiki
Revision as of 15:01, 9 September 2022 by Santhosh (talk | contribs)
நேசன்.jpg

கதைவகுப்பு ( 1950 -1951) மலேசிய இதழான தமிழ்நேசனில் தொடங்கப்பட்ட கதை வகுப்பு (நவம்பர் 26, 1950 – ஆகஸ்ட் 19, 1951), மலேசிய தமிழ் இலக்கியச் சூழலில் நடத்தப்பட்ட  முதல் சிறுகதை பயிற்சிப் பட்டறையாகும். மலேசிய வாழ்வையும் அதன் சிக்கல்களையும் புனைவுகளில் எழுதக்கூடிய முதல் தலைமுறை எழுத்தாளர்களை இப்பட்டறை உருவாக்கியது.

பின்னணி

சுப. நாராயணன்

தமிழ் நேசன் ஆசிரியரான ஆதி நாகப்பன், 'மலேசியாவில் தமிழ் எழுத்தாளர்கள் இல்லை' என 1949-ல் கடுமையான தாக்குதலை தலையங்கமாக எழுதினார். அது ஒரு விவாதத்தை உருவாக்கியது. ஆதி நாராயணன் லண்டன் சென்றபிறகு சுப. நாராயணன், பைரோஜி நாராயணன் ஆகியோர் இணைந்து 'எழுத்தாளர் வகுப்பை' நவம்பர் 26, 1950-ல் தொடங்கினர்.

சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம், மொழி பெயர்ப்பு, இலக்கணம் என ஒட்டுமொத்தமாக வகுப்பில் பயிற்றுவிக்கப்பட்டாலும், சிறுகதைகளே அதிகம் விமர்சிக்கப்பட்டதால் எழுத்தாளர் வகுப்பு, கதை வகுப்பாகியது. இவ்வகுப்பில் பல மாநிலங்களிருந்து ஆர்வமுள்ளோர் கலந்துக் கொண்டனர். அதில் பலரும் கல்வியாளர்கள். வகுப்பை நடத்தியது சுப. நாராயணன் இவர் தனக்கு கந்தசாமி வாத்தியார் எனும் புனைப்பெயரை வைத்துக்கொண்டார். அவருக்கு உதவியாக பைரோஜி நாராயணன் இருந்தார். அவரும் தனக்கு வானம்பாடியார் எனப் பெயர் இட்டுக்கொண்டார். மேலும் அகோரநாத் பண்டிதர் (பண்டிதர்), பிடாரிக்கண்ணு (விமர்சகர்), பஸ்மாசுரப் பாவலர் (ரசிகர்) என மூன்று கற்பனை கதாபாத்திரங்களை சு.ப.நாராயணன் உருவாக்கிக்கொண்டார்.

நவம்பர் 26, 1950-ல் கதை வகுப்பு எனும் பகுதி தமிழ் நேசனில் ஞாயிறு பதிப்பில் தொடங்கி, ஆக்ஸ்டு 19, 1951 வரை வாரந்தோறும் நீடித்தது. பரிட்சை முடிந்த பிறகும் தொடர்ந்த வகுப்பை கணக்கில் கொண்டால், கதை வகுப்பு ஒன்பது மாத இலக்கிய முயற்சி ஆகும். (ஜூன் 1951 முழுக்க கதை வகுப்பு நடத்தப்படவில்லை)

செயல்பாட்டு முறை

பைரோஜி நாராயணன்

கதை வகுப்புக்கு வந்த எழுத்துப் படிவங்களைத் திருத்தி, தமிழ் நேசனில் வெளியிட்டு, அதில் உள்ள குறைநிறைகளை சுட்டிக்காட்டுவதே இவ்வகுப்பின் நடைமுறையாகும். ஒரு படைப்பு குறித்து கந்தசாமி வாத்தியார், வானம்பாடியாரோடு கற்பனை பாத்திரங்களான பண்டிதர், விமர்சகர், ரசிகர் ஆகிய ஐவருமாக நடத்தும் உரையாடலே அப்படைப்பு குறித்த விமர்சனமாகவும் பாடமாகவும் திகழ்ந்தது. இருவரும் இணைந்து கதை, கவிதை, உரைநடை, நாடகம் என பல்வேறு துறைகளில் பயிற்சியளித்தனர். பிடாரிக்கண்ணு  (விமர்சகர்) எழுத்துத் திருட்டு கண்டுபிடித்தார். அகோரநாத் பண்டிதர் இலக்கணம் பற்றி விளக்கினார்.

தேர்வு

எழுத்தாளர்களுக்கு இந்த கதை வகுப்பின் மூலம் மார்ச் 11, 1951-ல் தேர்வும் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேசனில் ஏப்ரல் 22, 1951-ல் வெளியிடப்பட்டன.

விளைவுகள்

நாராயணர் இருவரின் முயற்சியாலும் எழுத்தாளர் அணி மலாயாவில் உருவானது. இதனால், மலாயாவின் தமிழ் பத்திரிகைகளுக்குத் தோட்டத்துறையினர், ஆசிரியர், மாணவர், மகளிர் என பல்வேறு வாழ்கை நிலைகளைச் சேர்த்த உள்நாட்டு எழுத்தாளர் தன்னார்வலராக எழுத முன் வந்தனர். எதை எழுதினாலும் உள்நாட்டுப் பின்னணியைத் தேடும் ஆர்வத்துக்கு கதை வகுப்பு வித்திட்டது. ஒன்பது மாத கால கட்டத்தில் 36 எழுத்தாளர்களின் 49 கதைகள் தமிழ் நேசனில் பிரசுரிக்கப்பட்டன. மேலும் கு. அழகிரிசாமி, நவம்பர் 1,1952-ல் தமிழ் நேசனில் ஞாயிறு பதிப்பின் பெறுப்பாசிரியராக இணைந்தபோது, அவர் கையில் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளுர் எழுத்தாளர்களின் கதைகள் ஒப்படைக்கப்பட்டன.

மூத்தப் படைப்பாளிகளின் கருத்து

எழுத்தாளர் சை. பீர்முகம்மது "மலேசியத் தமிழ் சிறுகதையின் முனைகள் மழுங்கலாக இருந்த நேரத்தில் இரு நாராயணன்களும் அதன் முளைகளைக் கதை வகுப்பின் மூலம் கூர்மையாக்கினார்கள்" என்கிறார்.

மா. இராமையா தம் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு நூலில் "எதிர்காலத்துக்குப் பயிற்சிக் களமாகவே கதை வகுப்பு அமைந்தது. இன்றைய சிறந்த எழுத்தாளர்களில் சிலர் அங்கே புடம் போட்டவர்கள்தாம்" என்கிறார்

அ. ரெங்கசாமியும் இராம கண்ணபிரானும் கதைவகுப்பு கந்தசாமி வாத்தியார் கதைகளைத் திருத்தி குறைகளைச் சொன்னதன் வழியே தான் பலனடைந்ததாகவும், கதை வகுப்பு மலேசிய சிறுகதை வளர்ச்சிக்கு மிகவும் உதவியதாகவும் பகிர்ந்துள்ளனர். 

பங்களிப்பு

கதை வகுப்பு தமிழகப் படைப்புகளை நம்பிக்கொண்டிருந்த தமிழ் நேசன் நாளிதழுக்கு உள்நாட்டுப் படைப்புகளை வழங்கியது. மலேசியாவில் முன்னோடி விமர்சன முயற்சியாகவும் இக்கதை வகுப்பு கருதப்படுகிறது. இவ்வகுப்பால் பலனடைந்த மா. இராமையா, மா.செ.மாயதேவன் ஆகியோர் இணைந்து 1953-ல் வெளியிட்ட 'இரத்த தானம்'  என்ற தொகுப்பே மலேசியாவிலேயே பிறந்து தமிழ் கற்றவரால் வெளியிடப்பட்ட முதல் சிறுகதை நூல்.

விமர்சனங்கள் 

கதை வகுப்பை ஒட்டி நடத்தப்பட்ட பரிட்சை விமர்சனத்துக்குள்ளானது. பரீட்சை சிறுகதையை ஒட்டி இல்லாமல் மொழி, எழுத்து, ரசனை, மனோதத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல் என பல்வேறு துறைசார்ந்த கேள்விகள் இருந்ததால் பலரும் ஆர்வமாகப் பங்கெடுக்கவில்லை. மேலும் சிறுகதை துறையில் அதுவரை பங்கெடுக்காத பி.ஏ. கிருஷ்ணதாசனுக்கு மேதை எழுத்தாளர் எனக் கவிதைக்காக பட்டம் கொடுத்தது சிறுகதை எழுதிய பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியது. கதை வகுப்பு நடத்திய சுப. நாராயணன் சிறுகதை எழுதும் கலையில் தேர்ந்தவரல்ல என்ற விமர்சனமும் உண்டு.

கதை வகுப்பு பரிட்சையில் தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள் பட்டியல்

மேதை எழுத்தாளர் [3 பேர்]
  1. பி. ஏ. கிருஷ்ணதாசன், தைப்பிங் [கவிதை]
  2. அ. இராமநாதன், சுங்கை சிப்பூட் [கட்டுரை]
  3. சி. மாரியப்பன், காஜாங் [சிறுகதை]
சிறந்த எழுத்தாளர் [23 பேர்]
  1. கே. எம். சின்னப்பன், தனராத்தா, கேமரன் ஹைலன்ட்ஸ்
  2. க. அ. கிருஷ்ணன், கோலாக் கோரோவ், தைபிங்
  3. பெ. மயினர் வீரவர்மா, கட்டி எஸ்டேட், கோல கங்சார்
  4. பெ. மு. இளம்பரிதி, ராஜமூசா, கோல சிலாங்கூர்
  5. அ.க பெரியசாமி, ரிழர்சைடு எஸ்டெட், கோல சிலாங்கூர்
  6. கா. பிச்சைமுத்து, கோல சிலாங்கூர்
  7. எம்.சே.எம். அப்துல் ஜப்பார், கிள்ளான்
  8. மா. அ. பிச்சைமுத்து, பினாங்கு
  9. [ரிங்லட்] கா. பெருமாள், தனராத்த, கேமரன் ஹைலன்ட்ஸ்
  10. சி. சிவசுப்பிரமணியம், லாபு எஸ்டேட், லாபு
  11. சி. வடிவேலு, லாபு டிவிஷன் 2, லாபு
  12. ஆர். பாலகிருஷ்ணன், சேத்துக்கம்பம், தஞ்சரம்புத்தான்
  13. சி. வேலுசுவாமி, ரந்தாவ்
  14. எஸ். சப்தகிரீஸ்வர் சர்மா, சிங்கப்பூர்
  15. பொ. இராமகிருஷ்ணன், கோல கங்சார்
  16. க. முத்தையா, பழைய கம்பம், தஞ்சோங் ரம்புத்தான்
  17. கோ. நாகராஜு, கரோட்டினா எஸ்டேட், நெகிரி செம்பிலான்
  18. கே.பி. நாராயணன் நாயர், புந்தார் எஸ்டேட், கெடா
  19. சா. குருபாதம், கோலாலம்பூர்
  20. மா. பொன்னுசாமி, ஈப்போ
  21. [சபாபர்ணம்] கா.அ.கா அகமது ஜலாலுதின், பினாங்கு
  22. வசோலு, கோலாலம்பூர்
  23. ரெ. முனியாண்டி, சுங்குரும்பை
தேர்ந்த எழுத்தாளர் [19 பேர்]
  1. அ. பழனியப்பன், கோல சிலாங்கூர்
  2. கே. ராஜு, மூவார், ஜொகூர்
  3. எம். அப்துல் மஜீது, மூவார், கொகூர்
  4. துரை கணேசன், கோலாலம்பூர்
  5. ராம. முத்தப்பன், அலோர் ஸ்டார்
  6. கோ. இராசகோபாலன், பெலாம் எஸ்டேட், தென்கெடா
  7. எஸ். ஏ. அப்துல் காதர், கம்பார்
  8. கே. பாலகிருஷ்ணன், பத்து ஆராங்
  9. மா. ராமையா, மூவார், ஜொகூர்
  10. காண்டீபன், கோலாலம்பூர்
  11. அ. த. நாதன், போர்ட் டிக்ஸன்
  12. வை. பார்வதி, ஈப்போ
  13. ஆர். பிலோமினாள், பாகான் செராய்
  14. வ. சரஸ்வதி தேவி, கோலாலம்பூர்
  15. எஸ். புஷ்பலீலா, தஞ்சம் டூவாபிலாஸ் எஸ்டேட், பந்திங்
  16. கு. நா. மீனாஷி, ராஜாமூசா எஸ்டேட், கோல சிலாங்கூர்
  17. எம். சண்பகமலர், ஈப்போ
  18. வீ, ராஜகோபால், தமிழ்நாடு
  19. மருதப்பன், தமிழ்நாடு
நல்ல எழுத்தாளர் [14 பேர்]
  1. ரா. தனபால், கேரி ஐலண்டு
  2. மு. ஆறுமுகம், புந்தார் எஸ்டேட், தென்கெடா
  3. வி. சோமசுந்திரம், போர்ட்டிக்ஸன்
  4. சு.பூ. ஆறுமுகம், தனமேரா எஸ்டேட், போர்டிக்ஸன்
  5. அ. வேளாங்கண்ணி, புக்கிட் பெர்த்தாம் எஸ்டேட், நெகிரி செம்பிலான்
  6. ரா. ரங்கநாதன், பாரிட்
  7. லெ. வடிவேலு, கிர்பி எஸ்டேட், லாபு
  8. கே.கே. மாரியப்ப முதலியார், குவாங்
  9. அ. காபிரியல், மலாக்கா
  10. நா. முத்துசாமி, மூவார், ஜொகூர்
  11. கு. கோபால், மூவார், ஜொகூர்
  12. எஸ். டி. சுகுமாரன், சுங்கை சிப்புட்
  13. ரா. முகேசு, சுங்குரும்பை
  14. இ. மேரி, போர்ட்டிக்ஸன்
ஆர்வ எழுத்தாளர் [18 பேர்]
  1. சொ.சி சுப்ரமணியம், கோல பேரா தோட்டம், தெலுக்கான்சன்
  2. பி. நடராஜு, சென்டாயன் எஸ்டேட், போர்ட்டிக்ஸன்
  3. நா. சுப்ரமணியம், அலோர் ஸ்டார்
  4. அ. ஆறுமுகம், ஈச்சமரம் எஸ்டேட், கோல சிலாங்கூர்
  5. வி.ஜே. சாமுவேல், கோலாலம்பூர்
  6. எஸ். வடிவேல், கோல கங்சார்
  7. வி. சந்திரசேகரன், ரந்தோ
  8. ச. ராமசாமி, தனராத்தா, கேமரன் ஹைலன்ட்ஸ்
  9. கே. ஆர். சின்னத்தம்பி, கோல கங்சார்
  10. பி.ஆர், மாணிக்கம், கிள்ளான்
  11. சு.கி. இராம துரைராஜ், கிள்ளான்
  12. மா. முனியாண்டி, போண்டோக் தஞ்சோங்
  13. எம். மனுவேல், பத்து ஆராங்
  14. க.வே. லீலாவதி, கிளன்மேரி எஸ்டேட்
  15. ருபெல்லா, கோலாலம்பூர்
  16. ரீட்டா ரோஸ்லீன், கோலாலம்பூர்
  17. க. சரஸ்வதி, தம்பின்
  18. சொ. காந்திமதி, சிரம்பான்

உசாத்துணை


✅Finalised Page